09-24-2005, 07:40 AM
இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான் - இளந்திரையன
(நமது நிருபர்)
நாம் இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான். ஒரு நாட்டிற்குத் தேவையான 98 வீதமான அலகுகள் எம்மிடம் உள்ளன என்று மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் அவர்கள் லண்டன் சுவிஸ் கலையகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவி வருகின்றது. எங்களுடைய தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக பேரினவாதச் சக்திகளின் கையாட்கள், குறிப்பாகப் படையினருடைய புலனாய்வுத்துறை ஆட்கள் மிக மோசமான யுத்தநிறுத்த மீறல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலை உணர்வு கொண்டவர்களையும், விடுதலைப் பாதையில் பயணிப்பவர்களையும் துன்புறுத்துகின்ற, அச்சுறுத்துகின்ற செயல்களையும்; செய்து வருகின்றனர்.
இதனால் இங்கு சிக்கலான நிலை இருக்கின்றது. ஆனால் இந்த இன்னல்களுக்கு இடையேயும் இங்கே நடைபெறுகின்ற பேரணிகளில், எழுச்சி நிகழ்வுகளில் பங்கேற்றுத் தங்களது உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம்மிடம் படைக்கட்டுமானங்கள் மட்டுமே முன்பு இருந்தன. இப்போது அரசியல் ரீதியான கட்டுமானங்கள், நிர்வாகக் கட்டுமானங்கள், சேவைக் கட்டுமானங்கள் என்று ஒரு நாட்டிற்குத் தேவையான கட்டுமானங்கள் அத்தனையும் இப்போது உள்ளன. ஒரு நாடு தன் இறைமையையும், வெளிப்படுத்துகின்ற வகையில் தாம் ஒரு நாடாக இருப்பதைக் காட்டக் கூடிய 98 சதவீதமான அலகுகளை நாம் இப்போது பெற்று இருக்கின்றோம். அவை நம் நடைமுறையில் இருக்கின்றன.
நாம் இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான். சேவை நிறுவனங்கள், திணைக்களங்கள் எல்லாம் இப்போது எமது நிர்வாகப் பிரதேசத்தில் இயங்கி வருகின்றன. இவற்றைத் தமிழர் தாயகத்தின் இதரப் பகுதிகளிலும் செயற்படுத்த வேண்டியது மட்டும் தான் தேவை.
http://www.battieezhanatham.com/2005/
(நமது நிருபர்)
நாம் இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான். ஒரு நாட்டிற்குத் தேவையான 98 வீதமான அலகுகள் எம்மிடம் உள்ளன என்று மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் அவர்கள் லண்டன் சுவிஸ் கலையகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவி வருகின்றது. எங்களுடைய தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக பேரினவாதச் சக்திகளின் கையாட்கள், குறிப்பாகப் படையினருடைய புலனாய்வுத்துறை ஆட்கள் மிக மோசமான யுத்தநிறுத்த மீறல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலை உணர்வு கொண்டவர்களையும், விடுதலைப் பாதையில் பயணிப்பவர்களையும் துன்புறுத்துகின்ற, அச்சுறுத்துகின்ற செயல்களையும்; செய்து வருகின்றனர்.
இதனால் இங்கு சிக்கலான நிலை இருக்கின்றது. ஆனால் இந்த இன்னல்களுக்கு இடையேயும் இங்கே நடைபெறுகின்ற பேரணிகளில், எழுச்சி நிகழ்வுகளில் பங்கேற்றுத் தங்களது உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம்மிடம் படைக்கட்டுமானங்கள் மட்டுமே முன்பு இருந்தன. இப்போது அரசியல் ரீதியான கட்டுமானங்கள், நிர்வாகக் கட்டுமானங்கள், சேவைக் கட்டுமானங்கள் என்று ஒரு நாட்டிற்குத் தேவையான கட்டுமானங்கள் அத்தனையும் இப்போது உள்ளன. ஒரு நாடு தன் இறைமையையும், வெளிப்படுத்துகின்ற வகையில் தாம் ஒரு நாடாக இருப்பதைக் காட்டக் கூடிய 98 சதவீதமான அலகுகளை நாம் இப்போது பெற்று இருக்கின்றோம். அவை நம் நடைமுறையில் இருக்கின்றன.
நாம் இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான். சேவை நிறுவனங்கள், திணைக்களங்கள் எல்லாம் இப்போது எமது நிர்வாகப் பிரதேசத்தில் இயங்கி வருகின்றன. இவற்றைத் தமிழர் தாயகத்தின் இதரப் பகுதிகளிலும் செயற்படுத்த வேண்டியது மட்டும் தான் தேவை.
http://www.battieezhanatham.com/2005/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&