10-05-2005, 05:42 AM
ஓயாதஅலைகள் 2 கிளிநொச்சிமீட்பு எவ்வாறு.........
ஓயாத அலை 02 தாக்குதலை நடாத்துவதற்கான சிறப்பு வேவுச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வேவு அணிகள் கிளிநொச்சி இராணுவ முகாம்களிற்குள் ஊடுருவி வேவு செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன் மூலம் பெறப்பட்ட பல முக்கிய தரவுகளும் இந்த ஓயாத அலை 02 தாக்குதல் வெற்றிக்கு மூலபலமாகவிருந்தன.
அவ்வாறு வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஓயாத அலைகள் 02 தாக்குதல் நடவடிக்கைக்கான வேவுப்பணியில் அணி ஒன்றுக்குப் பொறுப்பாகவிருந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவரும் தற்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான பிரதாபன் அன்று தாங்கள் எவ்வாறு எதிரியின் முகாமுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும் அங்கு எதிரியின் நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதையும் தாக்குதலுக்கான தகவல்களை எதிரியின் முகாமுக்குள்ளிருந்து எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இவ்வாறு கூறினார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை வேவு பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஏற்கனவே கட்டளைத் தளபதி தீபன் அண்ணாவால் சொல்லப்பட்டது. உள்வேவுக்கான பகுதிகளும் பிரித்து தரப்பட்டன. ஆனால் உள்ளே செல்வதற்கான பாதை இருக்கவில்லை. வெளிலைனைக் (பாதுகாப்பு வேலியை) கடந்து உள்ளே செல்வதற்கான பாதையை நாங்கள் எடுக்கவேண்டிய தேவை இருந்தது.
ஆனையிறவிற்கும் கிளிநொச்சிப்பகுதி மற்றும் பரந்தன் பகுதிகளுக்குள்ளால் உட்செல்வதற்கான பாதை எடுப்பதற்காக ஒரு மாத காலமாக முயற்சி செய்து கொண்டிருந்தோம் பாதை இல்லாததால், கட்டைக்காடு வெற்றிலைக்கேணியுூடாக உள்ளே செல்லுமாறு எமக்கு கட்டளை கிடைத்தது. அங்கு சென்று நீரேரியினு}டாக உட்செல்ல முனைந்த போது அங்கே இரவில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்ததோடு அவதானிப்பும் பலமாக இருந்தது. பிறகு கொம்படி பகுதியால் செல்ல முற்பட்டபோது எதிரியின் தாக்குதலுக்கிலக்காகி திரும்பினோம்.
இந்த வேளையில்தான் கிளிநொச்சி குளத்தினு}டாக மற்றுமொரு அணி எடுத்த பாதையினு}டே உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அங்கும் அந்த அணிக்கு அடி விழுந்து விட்டது. அதனால் குளத்தின் அலை கரையினால் நாங்கள் ஒருபாதை எடுத்து உள்நுழைந்தோம். உள்ளே எங்கு தங்குவது எப்பகுதியால் பயணிப்பது என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் உள்ளே வயல்வெளிகளும் வெளியான பிரதேசமாகவும் இருந்ததால் மறைவான இடம் கிடைக்கவில்லை. அதனால் முதல் நாள் முழுவதும் நாங்கள் தங்குவதற்கான இடங்களைத் தேடி பாதுகாப்பான ஓர் இடத்தை தெரிவு செய்தோம்.
மறுநாள் அதனுள்ளிருந்து திட்டங்களை வகுத்துக் கொண்டு கரடிப்போக்கு சந்திப் பகுதிக்கு வந்தோம் அங்கு தான் கரடிப்போக்கு முகாம் இருந்தது. அது சிறிய பிரதேசத்தைக் கொண்ட முகாமென நினைத்தோம். ஆனால் கரடிப்போக்கிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலை வரைக்கும் அந்த தொடர்முகாம் அமைந்திருந்தது. அங்கிருந்து புகையிரத வீதியினு}டாக குறிப்பிட்ட பகுதியை அவதானித்து விட்டு மறுநாளும் உள்ளேயே தங்கினோம், அடுத்த நாள் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அவதானிப்பை தொடர்ந்தோம். இவ்வாறு அந்த முகாமின் புகையிரத வீதிப் பகுதியின் சுற்றளவை எடுக்க மட்டும் 07 நாட்கள் எடுத்தன. ஏனென்றால் கரடிப் போக்கு சந்தியிலிருந்து பரந்தன் நோக்கி 700 மீற்றரில் இன்னுமொரு இராணுவ முகாமிருந்தது. அந்த முகாமிற்கும் கரடிப்போக்கு முகாமுக்கும் இடையால் இறங்கியே நாங்கள் வேவுபார்க்க வேண்டியிருந்தது.
அந்த ஒரு கிழமை முடிந்ததும் எடுத்த தரவுகளுடன் கட்டளைத்தளபதி தீபன் அண்ணாவிடம் வந்தோம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்களை எமக்கு தந்தார். அதற்கேற்ப நாங்கள் இரண்டாவது முறை உட்புக முயன்ற போது முதல் சென்ற பாதையில் இராணுவத்தின் அவதானிப்பு அணி நிறுத்தப்பட்டிருந்தது.
அதனால் அந்த பாதையிலிருந்து 50 மீற்றர் விலத்தி ஒரு பாதையை எடுத்து உள்ளே சென்றோம் அங்கு திட்டப்படி முதல் கட்டத்தில் விட்ட பகுதியிலிருந்து முகாமின் சுற்றளவை பார்த்தோம். அதன்பிறகு வெளியே வந்து மூன்றாவது முறை உட்சென்று திருநகர் பகுதியில் இருந்த முகாம்களை அவதானித்தோம். பழைய மஞ்சுளா வெதுப்பகத்தடியில் ஒரு முகாமும் 6 ஆம் வாய்க்கால் சந்தியில் ஒரு முகாமும் கோழிப்பண்ணை வீதியில் ஒரு முகாமும் இருந்தன. இவற்றோடு 3 ஆம் வாய்க்கால் வீதியிலும் ஒரு முகாம் இருந்தது. இவை கிளிநொச்சி பிரதான தளத்திற்குரிய பாதுகாப்பு முகாம்களாக அமைந்திருந்தன. இவற்றை நாங்கள் பார்த்த சமகாலத்திலேயே மற்றுமொரு அணி பரந்தன் பகுதியை பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் பார்த்த பகுதியின் முழுமையான தரவும் எடுக்கப்பட்டு விட்டது.
இதற்கிடையில் இரவில் வேலை செய்வது இலகுவாக இருந்தபோதும்; பகலில் உள்ளே தங்குவதென்பது கடினமாகவே இருந்தது. கிளிநொச்சியின் கட்டடப்பகுதிக்குள் இராணுவத்தினர் இருந்தனர்;. ஏனைய பகுதி வெளியானவை. அதனால் நாங்கள் தங்குவதற்காக சில இடங்களை பிரித்து வைத்திருந்தோம். அதாவது 3 ஆம் வாய்க்கால் அருவிக்கருகில் உள்ள சில இடங்களிலும், அடுத்து கோழிப்பண்ணை வீதியின் இடது பக்கத்தில் ஒரு இடத்திலும், திருநகர் சுடலைக்குள்ளிருந்த பற்றைக்குள்ளும் பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடையில் ஒரு பகுதியிலும் தங்குவதற்கான பகுதிகளை பிரித்திருந்தோம்.
வீதியோரமாக நாங்கள் தங்கியிருந்த வேளை பகலில் இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்திருக்கும் அதிலே நாங்கள் சாப்பிடுவதற்குக் கூட பெரும் சிரமமாகவே இருந்தது. ஏனைய பகுதிகளில் இருந்த புற்கள் பற்றைகள் கூட எரிக்கப்பட்டிருந்தன. ஏனென்றால் வேவுக்காக நாங்கள் இறங்கிவிட்டோம் என்பதை எதிரி தெளிவாக உணர்ந்திருந்தான். அதனால் ஒவ்வொரு நாளும் தேடுதலில் ஈடுபட்டே வந்தான். இதனால் கிளிநொச்சியில் இரவு வேளைகளில் வேலை செய்துவிட்டு பகலில் தங்குவதற்காக ஆனையிறவுப்பகுதிக்கு வந்து தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நாங்கள் மூன்று தடவைகள் உள்ளே சென்று ஓரளவு வேலைகளை முடித்திருந்த போதும் சில பகுதிகளின் வேலைகள் நிறைவு பெறவில்லை. எமது திட்டம் கிளிநொச்சிப் பகுதியைக் கட்டம் கட்டமாக பிரித்து மறித்துத் தாக்குதலை மேற்கொள்வதே. எனவே அதற்கான சரியான பகுதிகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் மூன்றாம் நாள் அந்த வேலையை முடிக்க முன் வெளியே வந்துவிட்டு அடுத்த தடவை செல்ல முற்பட்ட போது பாதையில் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன இதனால் மீண்டும் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டினு}டாக உள்ளே வருமாறு கட்டளையிடப்பட்டது. அந்தப்பகுதியால் வருவதற்கு புதிதாக பாதை எடுத்தே வரவேண்டியிருந்தது. அதனால் ஒரு மாதம் அப்பகுதியில் தாமதமானது.
அங்கு நின்ற செம்பியன் வேவு அணியின் பாதையினாலேயே நாம் உள்ளே நுழைந்தோம். ஆனால் நாம் சென்ற அப்பாதை எதிரியின் காப்பரணுக்குள் தான் செல்லும் ஆனால் அந்தக்காப்பரண்களில் இருக்கும் இராணுவம் முன்னுக்கு வந்து நிற்பதால் அந்த அரண்கள் வெறுமையாக இருந்ததால் நாம் அந்தப் பகுதியால் உள்நுழைந்தோம்.
உள்நுழைந்த போதும் ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையுள்ள இராணுவ முகாம்களை கடந்தே வரவேண்டியிருந்தது. அன்று அதிகாலையில் பரந்தன் வீதியைக் கடக்க முடியவில்லை உமையாள்புரப் பகுதி பற்றைக்குள் தங்கிவிட்டோம். அன்று காலைதான் எமக்குத் தெரிந்தது. அப்பகுதியில் இராணுவத்தின் தேடுதல் அதிகமாக நடைபெறும் பிரதேசமென்று. அன்று தேடுதலுக்காக வந்த இராணுவத்தினர் நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். நாய்கள் எங்களை கண்டு குரைக்கத் தொடங்கின. ஆனால் இராணுவம் அதைப் பொருட்படுத்தவில்லை. அன்று இரவு கிளிநொச்சிக்கு வந்து முன்னர் விட்ட மிகுதி வேலையை ஆரம்பித்தோம்.
நான்கு நாட்களுக்குள் வேலையை முடித்துக் கொண்டு தட்டுவன் கொட்டியையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது பதுங்கியிருந்த இராணுவ அணி ஒன்று எங்களைத் தாக்கியது. நாங்களும் திருப்பி தாக்கிக் கொண்டு ஓடினோம். ஒரு போராளி காயப்பட்டு விட அந்த சண்டையோடு வெளியால் வந்து விட்டோம். வந்தவுடன் வெளியில் நின்ற எதிரியின் ஒரு அணியுடனும் சண்டை பிடித்துத்தான் வந்து சேர்ந்தோம்.
இதேவேளையில் பரந்தன் பகுதியில் வேலை செய்த எமது அணியும் அன்று வெளிவர முயற்சி செய்து இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அவர்கள் முட்கள் நிறைந்த பகுதியால் ஓடி மறுநாள் கால்களில் முட்கள் குத்தி நடக்க முடியாத நிலையில் பனை மட்டைகளை வெட்டி காலில் செருப்பு போல கட்டிக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள் எனக் கூறினார்.
சுட்டது தமிழ்நாதத்திலிருந்து
ஓயாத அலை 02 தாக்குதலை நடாத்துவதற்கான சிறப்பு வேவுச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வேவு அணிகள் கிளிநொச்சி இராணுவ முகாம்களிற்குள் ஊடுருவி வேவு செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன் மூலம் பெறப்பட்ட பல முக்கிய தரவுகளும் இந்த ஓயாத அலை 02 தாக்குதல் வெற்றிக்கு மூலபலமாகவிருந்தன.
அவ்வாறு வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஓயாத அலைகள் 02 தாக்குதல் நடவடிக்கைக்கான வேவுப்பணியில் அணி ஒன்றுக்குப் பொறுப்பாகவிருந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவரும் தற்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான பிரதாபன் அன்று தாங்கள் எவ்வாறு எதிரியின் முகாமுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும் அங்கு எதிரியின் நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதையும் தாக்குதலுக்கான தகவல்களை எதிரியின் முகாமுக்குள்ளிருந்து எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இவ்வாறு கூறினார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை வேவு பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஏற்கனவே கட்டளைத் தளபதி தீபன் அண்ணாவால் சொல்லப்பட்டது. உள்வேவுக்கான பகுதிகளும் பிரித்து தரப்பட்டன. ஆனால் உள்ளே செல்வதற்கான பாதை இருக்கவில்லை. வெளிலைனைக் (பாதுகாப்பு வேலியை) கடந்து உள்ளே செல்வதற்கான பாதையை நாங்கள் எடுக்கவேண்டிய தேவை இருந்தது.
ஆனையிறவிற்கும் கிளிநொச்சிப்பகுதி மற்றும் பரந்தன் பகுதிகளுக்குள்ளால் உட்செல்வதற்கான பாதை எடுப்பதற்காக ஒரு மாத காலமாக முயற்சி செய்து கொண்டிருந்தோம் பாதை இல்லாததால், கட்டைக்காடு வெற்றிலைக்கேணியுூடாக உள்ளே செல்லுமாறு எமக்கு கட்டளை கிடைத்தது. அங்கு சென்று நீரேரியினு}டாக உட்செல்ல முனைந்த போது அங்கே இரவில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்ததோடு அவதானிப்பும் பலமாக இருந்தது. பிறகு கொம்படி பகுதியால் செல்ல முற்பட்டபோது எதிரியின் தாக்குதலுக்கிலக்காகி திரும்பினோம்.
இந்த வேளையில்தான் கிளிநொச்சி குளத்தினு}டாக மற்றுமொரு அணி எடுத்த பாதையினு}டே உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அங்கும் அந்த அணிக்கு அடி விழுந்து விட்டது. அதனால் குளத்தின் அலை கரையினால் நாங்கள் ஒருபாதை எடுத்து உள்நுழைந்தோம். உள்ளே எங்கு தங்குவது எப்பகுதியால் பயணிப்பது என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் உள்ளே வயல்வெளிகளும் வெளியான பிரதேசமாகவும் இருந்ததால் மறைவான இடம் கிடைக்கவில்லை. அதனால் முதல் நாள் முழுவதும் நாங்கள் தங்குவதற்கான இடங்களைத் தேடி பாதுகாப்பான ஓர் இடத்தை தெரிவு செய்தோம்.
மறுநாள் அதனுள்ளிருந்து திட்டங்களை வகுத்துக் கொண்டு கரடிப்போக்கு சந்திப் பகுதிக்கு வந்தோம் அங்கு தான் கரடிப்போக்கு முகாம் இருந்தது. அது சிறிய பிரதேசத்தைக் கொண்ட முகாமென நினைத்தோம். ஆனால் கரடிப்போக்கிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலை வரைக்கும் அந்த தொடர்முகாம் அமைந்திருந்தது. அங்கிருந்து புகையிரத வீதியினு}டாக குறிப்பிட்ட பகுதியை அவதானித்து விட்டு மறுநாளும் உள்ளேயே தங்கினோம், அடுத்த நாள் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அவதானிப்பை தொடர்ந்தோம். இவ்வாறு அந்த முகாமின் புகையிரத வீதிப் பகுதியின் சுற்றளவை எடுக்க மட்டும் 07 நாட்கள் எடுத்தன. ஏனென்றால் கரடிப் போக்கு சந்தியிலிருந்து பரந்தன் நோக்கி 700 மீற்றரில் இன்னுமொரு இராணுவ முகாமிருந்தது. அந்த முகாமிற்கும் கரடிப்போக்கு முகாமுக்கும் இடையால் இறங்கியே நாங்கள் வேவுபார்க்க வேண்டியிருந்தது.
அந்த ஒரு கிழமை முடிந்ததும் எடுத்த தரவுகளுடன் கட்டளைத்தளபதி தீபன் அண்ணாவிடம் வந்தோம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்களை எமக்கு தந்தார். அதற்கேற்ப நாங்கள் இரண்டாவது முறை உட்புக முயன்ற போது முதல் சென்ற பாதையில் இராணுவத்தின் அவதானிப்பு அணி நிறுத்தப்பட்டிருந்தது.
அதனால் அந்த பாதையிலிருந்து 50 மீற்றர் விலத்தி ஒரு பாதையை எடுத்து உள்ளே சென்றோம் அங்கு திட்டப்படி முதல் கட்டத்தில் விட்ட பகுதியிலிருந்து முகாமின் சுற்றளவை பார்த்தோம். அதன்பிறகு வெளியே வந்து மூன்றாவது முறை உட்சென்று திருநகர் பகுதியில் இருந்த முகாம்களை அவதானித்தோம். பழைய மஞ்சுளா வெதுப்பகத்தடியில் ஒரு முகாமும் 6 ஆம் வாய்க்கால் சந்தியில் ஒரு முகாமும் கோழிப்பண்ணை வீதியில் ஒரு முகாமும் இருந்தன. இவற்றோடு 3 ஆம் வாய்க்கால் வீதியிலும் ஒரு முகாம் இருந்தது. இவை கிளிநொச்சி பிரதான தளத்திற்குரிய பாதுகாப்பு முகாம்களாக அமைந்திருந்தன. இவற்றை நாங்கள் பார்த்த சமகாலத்திலேயே மற்றுமொரு அணி பரந்தன் பகுதியை பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் பார்த்த பகுதியின் முழுமையான தரவும் எடுக்கப்பட்டு விட்டது.
இதற்கிடையில் இரவில் வேலை செய்வது இலகுவாக இருந்தபோதும்; பகலில் உள்ளே தங்குவதென்பது கடினமாகவே இருந்தது. கிளிநொச்சியின் கட்டடப்பகுதிக்குள் இராணுவத்தினர் இருந்தனர்;. ஏனைய பகுதி வெளியானவை. அதனால் நாங்கள் தங்குவதற்காக சில இடங்களை பிரித்து வைத்திருந்தோம். அதாவது 3 ஆம் வாய்க்கால் அருவிக்கருகில் உள்ள சில இடங்களிலும், அடுத்து கோழிப்பண்ணை வீதியின் இடது பக்கத்தில் ஒரு இடத்திலும், திருநகர் சுடலைக்குள்ளிருந்த பற்றைக்குள்ளும் பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடையில் ஒரு பகுதியிலும் தங்குவதற்கான பகுதிகளை பிரித்திருந்தோம்.
வீதியோரமாக நாங்கள் தங்கியிருந்த வேளை பகலில் இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்திருக்கும் அதிலே நாங்கள் சாப்பிடுவதற்குக் கூட பெரும் சிரமமாகவே இருந்தது. ஏனைய பகுதிகளில் இருந்த புற்கள் பற்றைகள் கூட எரிக்கப்பட்டிருந்தன. ஏனென்றால் வேவுக்காக நாங்கள் இறங்கிவிட்டோம் என்பதை எதிரி தெளிவாக உணர்ந்திருந்தான். அதனால் ஒவ்வொரு நாளும் தேடுதலில் ஈடுபட்டே வந்தான். இதனால் கிளிநொச்சியில் இரவு வேளைகளில் வேலை செய்துவிட்டு பகலில் தங்குவதற்காக ஆனையிறவுப்பகுதிக்கு வந்து தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நாங்கள் மூன்று தடவைகள் உள்ளே சென்று ஓரளவு வேலைகளை முடித்திருந்த போதும் சில பகுதிகளின் வேலைகள் நிறைவு பெறவில்லை. எமது திட்டம் கிளிநொச்சிப் பகுதியைக் கட்டம் கட்டமாக பிரித்து மறித்துத் தாக்குதலை மேற்கொள்வதே. எனவே அதற்கான சரியான பகுதிகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் மூன்றாம் நாள் அந்த வேலையை முடிக்க முன் வெளியே வந்துவிட்டு அடுத்த தடவை செல்ல முற்பட்ட போது பாதையில் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன இதனால் மீண்டும் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டினு}டாக உள்ளே வருமாறு கட்டளையிடப்பட்டது. அந்தப்பகுதியால் வருவதற்கு புதிதாக பாதை எடுத்தே வரவேண்டியிருந்தது. அதனால் ஒரு மாதம் அப்பகுதியில் தாமதமானது.
அங்கு நின்ற செம்பியன் வேவு அணியின் பாதையினாலேயே நாம் உள்ளே நுழைந்தோம். ஆனால் நாம் சென்ற அப்பாதை எதிரியின் காப்பரணுக்குள் தான் செல்லும் ஆனால் அந்தக்காப்பரண்களில் இருக்கும் இராணுவம் முன்னுக்கு வந்து நிற்பதால் அந்த அரண்கள் வெறுமையாக இருந்ததால் நாம் அந்தப் பகுதியால் உள்நுழைந்தோம்.
உள்நுழைந்த போதும் ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையுள்ள இராணுவ முகாம்களை கடந்தே வரவேண்டியிருந்தது. அன்று அதிகாலையில் பரந்தன் வீதியைக் கடக்க முடியவில்லை உமையாள்புரப் பகுதி பற்றைக்குள் தங்கிவிட்டோம். அன்று காலைதான் எமக்குத் தெரிந்தது. அப்பகுதியில் இராணுவத்தின் தேடுதல் அதிகமாக நடைபெறும் பிரதேசமென்று. அன்று தேடுதலுக்காக வந்த இராணுவத்தினர் நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். நாய்கள் எங்களை கண்டு குரைக்கத் தொடங்கின. ஆனால் இராணுவம் அதைப் பொருட்படுத்தவில்லை. அன்று இரவு கிளிநொச்சிக்கு வந்து முன்னர் விட்ட மிகுதி வேலையை ஆரம்பித்தோம்.
நான்கு நாட்களுக்குள் வேலையை முடித்துக் கொண்டு தட்டுவன் கொட்டியையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது பதுங்கியிருந்த இராணுவ அணி ஒன்று எங்களைத் தாக்கியது. நாங்களும் திருப்பி தாக்கிக் கொண்டு ஓடினோம். ஒரு போராளி காயப்பட்டு விட அந்த சண்டையோடு வெளியால் வந்து விட்டோம். வந்தவுடன் வெளியில் நின்ற எதிரியின் ஒரு அணியுடனும் சண்டை பிடித்துத்தான் வந்து சேர்ந்தோம்.
இதேவேளையில் பரந்தன் பகுதியில் வேலை செய்த எமது அணியும் அன்று வெளிவர முயற்சி செய்து இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அவர்கள் முட்கள் நிறைந்த பகுதியால் ஓடி மறுநாள் கால்களில் முட்கள் குத்தி நடக்க முடியாத நிலையில் பனை மட்டைகளை வெட்டி காலில் செருப்பு போல கட்டிக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள் எனக் கூறினார்.
சுட்டது தமிழ்நாதத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

