10-16-2005, 12:04 PM
சங்கதிக்காக சுவிஸிலிருந்து சத்திரியன் -
இலங்கையில் உள்ள தமிழ் ஊடகத்துறையினரை வளைத்து போடும் முயற்;சியில் இந்திய உளவுப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அன்பாகவும், அதட்டலாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இராணுவ ஆய்வாளர் சிவராமின் படுகொலைக்கு பின்னரே இந்த விடயம் வெளித்தெரிய வந்துள்ள போதிலும் அதற்கு முன்னரே இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தினையுடைய ஊடகவியலாளர்களை மிரட்டி பணியவைப்பதற்கு தமிழ் ஆயுதக் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையுடன் தொடர்படைய இந்த குழுவினருக்கு இந்திய உளவுப் பிரிவால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இந்திய உளவுப் பிரிவு தமிழ் ஊடகத்துறையை கட்டுப்படுத்த முயல்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாதது.
கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேற்றப்பட்ட போது அகமகிழந்து போனது இலங்கை உளவுத்துறையல்ல இந்தியாவின் றோ தான்.
காரணம் கருணாவை கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று றோ ஒரு கணக்கு போட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் றோ போட்ட எல்லா கணக்குகள் போலவும் கருணாவின் கணக்கும் பிழைத்து போனது தான் சோகம்
கருணாவையும், கருணாவுடன் சென்றவர்களையும் வைத்து கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என்று இந்தியா போட்ட கணக்கு வெருகலில் விழுந்த அடியுடன் காணாமல் போனது.
இலங்கை உளவுப் பிரிவுடன் கைகோர்த்து றோ நடத்திய ஒப்பரேசனிற்கு கொட்டாவவில் கிடைத்த அடி முற்றுப் புள்ளி வைத்தது. எதிர் தரப்பை தவறாக எடை போடக் கூடாது என்ற செய்தியும் கொட்டாவ சம்பவத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
இதனை அடுத்து தனது நடவடிக்கைகiளில் பல மாற்றங்களை கொண்டு வந்தது இந்திய உளவு பிரிவு. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக தனது நம்பிக்கைக்குரிய ஈ.என்.டி.எல் எப்பையும் கருணா குழுவிற்கு ஆதரவாக களமிறக்கியது
இதன் காரணமாக ஈ.பி.டி.பியிற்கும் கருணாவிற்கும் இடையில் இருந்து உறவு துண்டிக்கப்பட்டது. இது கூட இந்திய உளவுப் பிரிவின் ஒரு இராஜதந்திர நகர்வாகவே நோக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி வேறு எந்த ஒரு அமைப்பும் பலம் பெற்று விடக் கூடாது என்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைதான் கருணா டக்ளஸ் பிரிப்பு என்று தெரியவருகின்றது. ஆனாலும் இந்தியா எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை
இதற்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான் என்பதை இந்தியா புரிந்து கொண்டது
இதனால் விடுதலைப் புலிகள் மீதான மக்களின் ஆதரவை குறைப்பதற்கு மார்க்கம் தேடியது இந்தியா. என்னதான் தனக்கு ஆதரவான தமிழ் குழுக்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளிற்கு எதிரான பரப்புரைகளை இலங்கையிலும் வெளிநாட்டிலும் முன்னெடுத்த போதிலும் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் எந்த மாற்றங்களும் ஏற்படாதமை இந்தியாவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனால் தான் விடுதலைப் புலிகள் மீது மக்கள் ஆதரவு பெருக காரணமாக இருக்கும் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தனது பார்வையை திருப்பியுள்ளது இந்தியா. தமிழ் ஊடகத்துறையை தம் வசப்படுத்த அல்லது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்காத நிலை ஒன்றை ஊடகங்கள் எடுப்பதற்கு இந்தியா இரண்டு விதமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஓன்று இலங்கையில் உள்ள ஊடகங்களை கட்டுப்படுத்தவது மற்றையது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பன்னாட்டு ஊடகங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது.
முதலில் இலங்கையில் உள்ள ஊடகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ கொண்டுவர இந்தியா எடுத்துள்ள முயற்சிகளை பார்க்கலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்வதன் மூலம் ஏனையவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி விட முடியும் என்று இந்தியா கருதியது. இதில் நேரடியாக தலையிடாமல் தப்பித்துக்கொள்ள இலகுவான வழி ஒன்றை தேர்ந்தெடுத்தது
தமிழ் மக்களாலும், இலங்கை அரசாங்கத்தாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட தமிழ் அமைப்பின் உதவியை நாடியது இந்தியா.
உட்கட்சி கொலைகளுக்கு பெயர் பெற்ற அந்த கட்சி கொலைகளை கச்சிதமாக முடிக்கும் என்று இந்தியா கருதியது. இப்போது கொலை செய்யப்பட வேண்டிய ஊடகவியலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கினையே இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்கள் எடுத்துள்ள நிலையில் யாரை குறிவைப்பது என்ற குழப்பம் இந்தியாவிற்கு ஏற்பட்டது.
ஆனால் இந்த குழப்பம் அதிக காலம் நீடிக்கவில்லை இந்தியாவின் இந்த நகர்வுகளை துல்லியமாக தெரிந்து வைத்துள்ள ஊடகவியலாளராக சிவாராம் இந்திய உளவுப் பிரிவால் அடையாளம் காணப்பட்டார். சிவராமிற்கு அனைத்துலக அளவில் கிடைத்திருந்த நன்மதிப்பும் அவருடைய எழுத்தின் வன்மையும் தமிழ் தேசியத்திற்கு எதிர்காலத்தில் மேலும் பலம் சோக்கும் என்று இந்திய புலனாய்வு ஆருடங்கள் அடித்தக் கூறியிருக்க வேண்டும்
அத்துடன் சிவராமின் அடுத்தடுத்த கட்டுரைகளில் இந்தியாவின் நகர்வுகள் பல அம்பலமாகலாம் என்ற எச்சரிக்கையும் இந்திய உளவுப் பிரிவிற்கு கிடைத்திருக்கின்றது.
எனவே தான் சிவாராமை தமது முதலாவது இலக்காக மாற்ற இந்தியா முன்வந்தது. சிவராம் கடத்தபட்டு படுகொலை செய்யப்பட்டவுடன் தமிழ் ஊடகத்துறை கொஞ்சம் ஆடித்தான் போனது. பல முக்கிய ஊடகவியலாளர்களின் செல்பேசிகள் எல்லாம் மௌனித்து போயிருந்தன.
இந்தியா நினைத்தது நடக்க ஆரம்பித்தது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக உரத்து குரல் எழுப்பிய ஊடகவியலாளர்கள் பயப்பட தொடங்கினாhர்கள். ஆனாலும் இது நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை சிவராமின் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.
இப்போது தனிப்பட்ட ஊடகவியலாளர்களை விடவும் ஊடக நிறுவனங்களை இலக்கு வைத்தது இந்தியா. சுடரொளி மீதான தொடர் குண்டு வீச்சுக்கள் மற்றும் கொழும்பில் உள்ள வெக்ரோன் தொலைக்காட்சி நிலையத்தின் கலையகம் சோதனை என்ற பெயரில் இலங்கை அரச புலனாய்வு பிரிவால் துவம்சம் செய்யப்பட்டது - ஆனால் இது செய்தியாக்கப்படவில்லை அல்லது செய்தியாக்கப்படாமல் தடுக்கப்பட்டிருந்தது. இந்த தேடுதலின் போது இந்திய புலனாய்வாளர்களும் உடனிருந்திருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்த தாக்குதல் அச்சுறுத்தல்கள் கொலை பயமுறுத்தல்கள் மூலம் தமிழ் ஊடகத்துறையினர் அடக்கப்பட்டு கொண்டிருக்கையில் தமக்கு நெருக்கமான ஊடகத்துறையினர் மூலம் சில முக்கிய ஊடகவியலாளர்களை வளைத்து போடும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
கொழும்பில் அடிக்கடி இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளால் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்திற்கு கொழும்பில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு பலமாக கவனிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் இரண்டு நன்மைகள் இந்தியாவிற்கு கிடைக்கும். ஒன்று தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்த அல்லது தவறு என்று கூறாமல் இருக்கக் கூடியதாக சில ஊடகவியலாளர்கள் மாற்றப்படுவார்கள்.
மற்றையது தமக்கு நெருக்கமானவர்களாக மாற்றப்படும் இத்தகைய ஊடகவியலாளர்கள் மூலமாக தமிழ் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பதற்கும் தேவைப்படும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும் வழி ஏற்படுத்தப்படும்;.
இந்தியாவின் இந்த நகர்வு குறித்து அதிகம் அக்கறைப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை ஆழமாக நோக்கத்தக்கதுஃ
இதேவேளை வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள ஊடகத்துறை மீதான அணுகுமுறை சற்று வித்தியாசமானது. பொதுவாக வெளிநாடுகளில் செயல்படும் அனைத்து ஊடகங்களும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கினையே கொண்டிருந்தன.
இதனை முறியடிப்பதற்காக இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மாற்று கருத்து என்ற போர்வையில் சில ஊடகங்களை ஏற்படுத்தி அவற்றின் மூலமாக தமிழ் தேசியத்திற்கு எதிரான பரப்புரைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.
இதேவேளை தமிழ் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களுக்குள் ஊடுருவல்களை மேற்கொண்டு அவற்றை சிதைக்கும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது.
இந்திய உளவுப் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் என்பது ஆயுதங்களால் வெற்றி; கொள்ளப்பட முடியாதது என்றாலும் மன உறுதியால் இதனை வெல்லலாம் வெல்வோமா?
http://www.sankathi.net/index.php?option=c...=2990&Itemid=44
இலங்கையில் உள்ள தமிழ் ஊடகத்துறையினரை வளைத்து போடும் முயற்;சியில் இந்திய உளவுப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அன்பாகவும், அதட்டலாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இராணுவ ஆய்வாளர் சிவராமின் படுகொலைக்கு பின்னரே இந்த விடயம் வெளித்தெரிய வந்துள்ள போதிலும் அதற்கு முன்னரே இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தினையுடைய ஊடகவியலாளர்களை மிரட்டி பணியவைப்பதற்கு தமிழ் ஆயுதக் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையுடன் தொடர்படைய இந்த குழுவினருக்கு இந்திய உளவுப் பிரிவால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இந்திய உளவுப் பிரிவு தமிழ் ஊடகத்துறையை கட்டுப்படுத்த முயல்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாதது.
கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேற்றப்பட்ட போது அகமகிழந்து போனது இலங்கை உளவுத்துறையல்ல இந்தியாவின் றோ தான்.
காரணம் கருணாவை கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று றோ ஒரு கணக்கு போட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் றோ போட்ட எல்லா கணக்குகள் போலவும் கருணாவின் கணக்கும் பிழைத்து போனது தான் சோகம்
கருணாவையும், கருணாவுடன் சென்றவர்களையும் வைத்து கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என்று இந்தியா போட்ட கணக்கு வெருகலில் விழுந்த அடியுடன் காணாமல் போனது.
இலங்கை உளவுப் பிரிவுடன் கைகோர்த்து றோ நடத்திய ஒப்பரேசனிற்கு கொட்டாவவில் கிடைத்த அடி முற்றுப் புள்ளி வைத்தது. எதிர் தரப்பை தவறாக எடை போடக் கூடாது என்ற செய்தியும் கொட்டாவ சம்பவத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
இதனை அடுத்து தனது நடவடிக்கைகiளில் பல மாற்றங்களை கொண்டு வந்தது இந்திய உளவு பிரிவு. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக தனது நம்பிக்கைக்குரிய ஈ.என்.டி.எல் எப்பையும் கருணா குழுவிற்கு ஆதரவாக களமிறக்கியது
இதன் காரணமாக ஈ.பி.டி.பியிற்கும் கருணாவிற்கும் இடையில் இருந்து உறவு துண்டிக்கப்பட்டது. இது கூட இந்திய உளவுப் பிரிவின் ஒரு இராஜதந்திர நகர்வாகவே நோக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி வேறு எந்த ஒரு அமைப்பும் பலம் பெற்று விடக் கூடாது என்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைதான் கருணா டக்ளஸ் பிரிப்பு என்று தெரியவருகின்றது. ஆனாலும் இந்தியா எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை
இதற்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான் என்பதை இந்தியா புரிந்து கொண்டது
இதனால் விடுதலைப் புலிகள் மீதான மக்களின் ஆதரவை குறைப்பதற்கு மார்க்கம் தேடியது இந்தியா. என்னதான் தனக்கு ஆதரவான தமிழ் குழுக்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளிற்கு எதிரான பரப்புரைகளை இலங்கையிலும் வெளிநாட்டிலும் முன்னெடுத்த போதிலும் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் எந்த மாற்றங்களும் ஏற்படாதமை இந்தியாவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனால் தான் விடுதலைப் புலிகள் மீது மக்கள் ஆதரவு பெருக காரணமாக இருக்கும் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தனது பார்வையை திருப்பியுள்ளது இந்தியா. தமிழ் ஊடகத்துறையை தம் வசப்படுத்த அல்லது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்காத நிலை ஒன்றை ஊடகங்கள் எடுப்பதற்கு இந்தியா இரண்டு விதமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஓன்று இலங்கையில் உள்ள ஊடகங்களை கட்டுப்படுத்தவது மற்றையது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பன்னாட்டு ஊடகங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது.
முதலில் இலங்கையில் உள்ள ஊடகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ கொண்டுவர இந்தியா எடுத்துள்ள முயற்சிகளை பார்க்கலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்வதன் மூலம் ஏனையவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி விட முடியும் என்று இந்தியா கருதியது. இதில் நேரடியாக தலையிடாமல் தப்பித்துக்கொள்ள இலகுவான வழி ஒன்றை தேர்ந்தெடுத்தது
தமிழ் மக்களாலும், இலங்கை அரசாங்கத்தாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட தமிழ் அமைப்பின் உதவியை நாடியது இந்தியா.
உட்கட்சி கொலைகளுக்கு பெயர் பெற்ற அந்த கட்சி கொலைகளை கச்சிதமாக முடிக்கும் என்று இந்தியா கருதியது. இப்போது கொலை செய்யப்பட வேண்டிய ஊடகவியலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கினையே இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்கள் எடுத்துள்ள நிலையில் யாரை குறிவைப்பது என்ற குழப்பம் இந்தியாவிற்கு ஏற்பட்டது.
ஆனால் இந்த குழப்பம் அதிக காலம் நீடிக்கவில்லை இந்தியாவின் இந்த நகர்வுகளை துல்லியமாக தெரிந்து வைத்துள்ள ஊடகவியலாளராக சிவாராம் இந்திய உளவுப் பிரிவால் அடையாளம் காணப்பட்டார். சிவராமிற்கு அனைத்துலக அளவில் கிடைத்திருந்த நன்மதிப்பும் அவருடைய எழுத்தின் வன்மையும் தமிழ் தேசியத்திற்கு எதிர்காலத்தில் மேலும் பலம் சோக்கும் என்று இந்திய புலனாய்வு ஆருடங்கள் அடித்தக் கூறியிருக்க வேண்டும்
அத்துடன் சிவராமின் அடுத்தடுத்த கட்டுரைகளில் இந்தியாவின் நகர்வுகள் பல அம்பலமாகலாம் என்ற எச்சரிக்கையும் இந்திய உளவுப் பிரிவிற்கு கிடைத்திருக்கின்றது.
எனவே தான் சிவாராமை தமது முதலாவது இலக்காக மாற்ற இந்தியா முன்வந்தது. சிவராம் கடத்தபட்டு படுகொலை செய்யப்பட்டவுடன் தமிழ் ஊடகத்துறை கொஞ்சம் ஆடித்தான் போனது. பல முக்கிய ஊடகவியலாளர்களின் செல்பேசிகள் எல்லாம் மௌனித்து போயிருந்தன.
இந்தியா நினைத்தது நடக்க ஆரம்பித்தது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக உரத்து குரல் எழுப்பிய ஊடகவியலாளர்கள் பயப்பட தொடங்கினாhர்கள். ஆனாலும் இது நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை சிவராமின் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.
இப்போது தனிப்பட்ட ஊடகவியலாளர்களை விடவும் ஊடக நிறுவனங்களை இலக்கு வைத்தது இந்தியா. சுடரொளி மீதான தொடர் குண்டு வீச்சுக்கள் மற்றும் கொழும்பில் உள்ள வெக்ரோன் தொலைக்காட்சி நிலையத்தின் கலையகம் சோதனை என்ற பெயரில் இலங்கை அரச புலனாய்வு பிரிவால் துவம்சம் செய்யப்பட்டது - ஆனால் இது செய்தியாக்கப்படவில்லை அல்லது செய்தியாக்கப்படாமல் தடுக்கப்பட்டிருந்தது. இந்த தேடுதலின் போது இந்திய புலனாய்வாளர்களும் உடனிருந்திருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்த தாக்குதல் அச்சுறுத்தல்கள் கொலை பயமுறுத்தல்கள் மூலம் தமிழ் ஊடகத்துறையினர் அடக்கப்பட்டு கொண்டிருக்கையில் தமக்கு நெருக்கமான ஊடகத்துறையினர் மூலம் சில முக்கிய ஊடகவியலாளர்களை வளைத்து போடும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
கொழும்பில் அடிக்கடி இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளால் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்திற்கு கொழும்பில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு பலமாக கவனிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் இரண்டு நன்மைகள் இந்தியாவிற்கு கிடைக்கும். ஒன்று தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்த அல்லது தவறு என்று கூறாமல் இருக்கக் கூடியதாக சில ஊடகவியலாளர்கள் மாற்றப்படுவார்கள்.
மற்றையது தமக்கு நெருக்கமானவர்களாக மாற்றப்படும் இத்தகைய ஊடகவியலாளர்கள் மூலமாக தமிழ் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பதற்கும் தேவைப்படும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும் வழி ஏற்படுத்தப்படும்;.
இந்தியாவின் இந்த நகர்வு குறித்து அதிகம் அக்கறைப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை ஆழமாக நோக்கத்தக்கதுஃ
இதேவேளை வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள ஊடகத்துறை மீதான அணுகுமுறை சற்று வித்தியாசமானது. பொதுவாக வெளிநாடுகளில் செயல்படும் அனைத்து ஊடகங்களும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கினையே கொண்டிருந்தன.
இதனை முறியடிப்பதற்காக இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மாற்று கருத்து என்ற போர்வையில் சில ஊடகங்களை ஏற்படுத்தி அவற்றின் மூலமாக தமிழ் தேசியத்திற்கு எதிரான பரப்புரைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.
இதேவேளை தமிழ் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களுக்குள் ஊடுருவல்களை மேற்கொண்டு அவற்றை சிதைக்கும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது.
இந்திய உளவுப் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் என்பது ஆயுதங்களால் வெற்றி; கொள்ளப்பட முடியாதது என்றாலும் மன உறுதியால் இதனை வெல்லலாம் வெல்வோமா?
http://www.sankathi.net/index.php?option=c...=2990&Itemid=44
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI


hock: