10-29-2005, 04:24 PM
ஓயாத அலைகள் - 02 வலிந்த தாக்குதலில் கிளிநொச்சி படைத்தளத்தை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்டமைக்கு காரணம் தமிழீழ தேசியத் தலைவர் வகுத்த தாக்குதல் வியுூகங்களும் திட்டங்களுமேயாகும். அன்று நடந்த உக்கிரமான சமர் இருதரப்பினருக்கும் சவாலாக அமைந்த அந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் இராணுவ வல்லமையின் வெளிப்பாட்டின் ஒரு கட்டம் எதிரியை திணறடித்திருந்தது.
இவ்வாறு நடந்த அந்த சமருக்கான வேவுத்தகவல்களை பல போராளிகள் முன்னர் வெளிப்படுத்தினர். அன்று அவற்றை நெறிப்படுத்தி நடாத்திய விசேட வேவு அணித் தளபதி கேணல் ஜெயம் இச்சமரில் தாம் கையாண்ட தாக்குதல் வியுூகங்களையும் எவ்வாறு வேவுச் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பதையும் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
வேவு நடவடிக்கையை பொறுத்த வரையில் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஒரு சண்டையை திட்டமிடுவதற்கு முதல் எமக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படுமா என்னும் நோக்குடன் தொடர்ந்து வேவு நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. அந்த வகையில் கிளிநொச்சிப் பகுதியிலும் வேவு நடவடிக்கை நடைபெற்றது. விசேட வேவு அணியினர் வேவு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே மட்டு. அம்பாறை அணியினர் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா.; இந்த நடவடிக்கை மனோ மாஸ்ரரின் தலைமையில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர் தளபதி பால்ராஜ் தனது போராளிகளையும் இப்பகுதி வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தார்.
இவ்வாறு இந்த நடவடிக்கை தொடர்ந்ததனால் கிளிநொச்சி படைத்தளம் தொடர்பான தரவுகள் எமக்கு ஏற்கனவே கிடைத்திருந்தன. ஆனால் அந்தக் காலப்பகுதியில் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் ஜெயசிக்குறுசமர் பெருமெடுப்பில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் வேவு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஆகவே வேவு எனும்பொழுது இராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை கண்காணித்துக் கொண்டிருப்பதும் அந்த சூழல் எவ்வாறிருக்கின்றது. இராணுவத்தினரின் நடவடிக்கை எவ்வாறிருக்கின்றது. எங்களுக்கு சாதகமான பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றது போன்ற விடயங்களைக் காலம் காலமாக வேவு அணிகள் செய்து வந்திருக்கின்றன. அடுத்து அத்தரவுகள் பொறுப்பாளர்கள் மூலமாக தலைவரிடம் கிடைக்கப் பெற்றபின் தேவை கருதி தாக்குதலை மேற்கொள்வதாக அமையும்.
வேவினைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நகர்வும் அவர்கள் சாவை எதிர்பார்த்துத் தான் நகர வேண்டும.; வேவுக்காக சென்று திரும்பி வருவோமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் எதிரி விழிப்பாக பார்த்துக் கொண்டுதான் இருப்பான். ஆனால் நாங்களும் கண்டிப்பாக எதிரியின் காப்பரணில் ஏறவேண்டும் அப்போதுதான் சென்ற பாதையில் எத்தனை காப்பரண்கள் இருக்கின்றன எத்தனை தடைகள் இருக்கின்றன, அந்தத் தடைகளை எவ்வாறு கடந்து போகலாம் என்பவற்றை பார்க்கமுடியும் ஆனால் வேவுப் போராளி அந்தத் தடைகள் அனைத்தையும் வெட்டிக் கொண்டு போக முடியாது. அதை ஒருவகையில் எதிரிக்குத் தெரியாமல் கம்பி வேலிகளையும் கடந்து உள்ளே போக வேண்டும.; கிளிநொச்சியைப் பொறுத்த வரைக்கும் தடயம் இல்லாமல் திரும்பி வருவதென்பது பெரும் துன்பமானது. ஏனெனில் நீர் நிலைகளும், புற்தரைகளும் அதிகம் கொண்ட பகுதி. அவற்றினு}டே தடயமின்றி உள்நுழைவதென்பது கடும் சிரமம்.
இந்த சண்டையிலும் தளபதி பால்ராஜ் உள்நுழைந்த பாதைகள் கூட நாங்கள் பார்த்து உறுதிப்படுத்திய பின் நகர்விற்கு முதல் நாள் பாதைகளை சென்று பார்த்த போது எல்லாம் மாறுபட்டிருந்தது. மீண்டும் புதிதாக பாதை எடுத்துத்தான் நகர்த்தினோம.; ஆனால் விசேட வேவு அணியை பொறுத்த வரையில் ஒரே நாளில் பாதையெடுத்து அமைவுகளை குறித்து சரியாக நகர்த்திய சம்பவங்கள் கிளிநொச்சி சண்டையில் உள்ளது. ஏனெனில் சண்டைக்கான திட்டம் இல்லாத நேரத்திலேயே பாதைகளை எடுத்து உட்செல்ல முடியுமென்ற நிலையில் இருந்தபோது, சண்டைக்கான திட்டம் வகுத்த பின் அந்தப் பாதைகளை பார்த்து உறுதிப்படுத்தச் சென்றபோது முதல் பார்த்தது போல் இருக்கவில்லை. மீண்டும் வேறு பாதைகளைத்தான் எடுத்துக்கொடுத்தோம் ஆனால் ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்த வரையில் திட்டம் வகுத்த ஒரு கிழமைக்குள் வேவு வேலைகளை முடித்துக் கொடுத்தோம். இதற்கு போராளிகள் கடுமையாக உழைத்தார்கள். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட தரவுகள் இருந்தபோது அதைப் பார்த்து உறுதிப்படுத்தப்படும் தரவுகள் ஒரு கிழமைக்குள் நடந்தது. ஆகவே சண்டைக்குத்திட்டமிட்டுப் போகும் போது சண்டையின் போக்கு மாறுபட்டால் அதற்குரிய பொறுப்பு வேவு அணிகளைத்தான் சாரும் ஆகவே இந்த ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்தவரை திட்டங்களின்படி சிறப்பாக நடைபெற்றது.
அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. அதன் திட்டம் கிளிநொச்சியுடன் இணைப்பதாக இருந்தது. அதன்படி இதனை விரைவாக செய்ய முடியுமென்ற நம்பிக்கையில் எதிரி ஜெயசிக்குறுவை தொடங்கியிருந்தான். ஆனால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக எதிரி நினைத்தது போல் இணைக்க முடியவில்லை. அவனது நடவடிக்கை மாங்குளப்பகுதியை நெருங்கியதும் தேசியத் தலைவர் அன்று மாங்குளத்திற்கு பொறுப்பாக இருந்த தளபதி தீபனை கிளிநொச்சிக்கு பொறுப்பாக நியமித்து ஏற்கனவே இத்தளத்தின் மீதிருந்த அவதானிப்பை விட கூடுதலாக அவதானிப்பை மேற்கொள்ளச் செய்தார்.
இதன் பின்னர் கிளிநொச்சி மீதான முதலாவது தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது அதற்கும் விசேட வேவு அணி வேவு செயற்பாட்டில் ஈடுபட்டது. எமது வேவுகளை பொறுத்த வரையில் திடீரென ஒரு திட்டத்தினை வகுத்து வேவு பார்க்கும் போது வேவு அணி பாதைகளை எடுத்து தாக்குதலுக்கான ஒரு பாதையை திறந்து கொடுக்கின்ற அதே நேரம் அந்தப்பாதையினு}டாக எந்தப் படையணி சண்டைக்கு இணைக்கப்படுகின்றதோ அந்தப் படையணிப் போராளிகளையும் இணைத்து செயற்பாட்டில் ஈடுபடுத்துவோம். ஏனெனில் தாக்குதலின் முதல் கட்டத்திற்கான நகர்வை நாங்கள் புூர்த்தி செய்து கொண்டு பாதைகளை காட்டினால் தொடர்ந்து சண்டையில் ஈடுபடப்போவது அந்த அணிகள். ஆனால் பாதையை காட்டி உள்ளே அணிகளை நகர்த்திக் கொண்டு செல்வது விசேட வேவு அணிதான். ஆனால் அந்தப் பாதைக்கு திட்டத்தின்படி எந்த அணி இணைக்கப்படுகிறதோ அந்தப் படையணி தொடர்ந்து சண்டையில் ஈடுபடும்.
ஆனால் வேவு பார்ப்பதென்பது ஒரு நாளில் முடிவடையும் வேலை அல்ல. பல நாட்களை வேவு பார்ப்பதற்காக செலவு செய்யவேண்டும.; அது எமக்கு சாதகமாகவும் அமையும் பாதகமாகவும் அமையும் வேவு அணியினுடைய நடவடிக்கையில் அவர்கள் விடும் சிறிய சிறிய தவறுகளும் அவர்களின் உயிருக்கே பாதகமாக அமையும். அதாவது முதல்நாள் சென்று ஒரு பாதையைப் பார்த்து விட்டு வரும் போது தவறுதலாக ஒரு தடயத்தை விட்டு விட்டு வந்திருந்தால் அல்லது எதிரிக்கு ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட்டு மறுநாள் அந்த இடத்தில் நிலையெடுத்திருப்பானாக இருந்தால் இவர்கள் செல்லும் போது இவர்கள் மீது தாக்குதல் இடம்பெறும். ஆனால் அதை எதிர்பார்த்துத்தான் இவர்கள் போகவும் வேண்டும். அந்த வகையில் ஒரு கரும்புலி அணியினுடைய செயற்பாட்டைவிட ஒரு வித்தியாசமான செயற்பாடாக இவர்களின் செயற்பாடு இருக்கும.; கரும்புலிகள் ஒரு வெற்றிக்காக தமது உயிரையே அர்ப்பணித்து விடுவார்கள். இந்த வேவு அணியினரின் நோக்கம் உயிரை அர்ப்பணிப்பதாக இருக்காது ஆனால் எதிரியினுடைய தாக்குதலை முழுமையாக எதிர்பார்த்தபடி தான் செல்வார்கள் வேவு அணியினுடைய செயற்பாடு இவ்வாறு தான் இருக்கும்.
கிளிநொச்சி ஓயாத அலைகள் 02 இலும் நிறையத் தரவுகள் எங்களிடம் ஏற்கனவே இருந்தது. அத்தரவுகள் அனைத்தையும் வைத்துக் கொண்டுதான் திடீரென தலைவர் ஒரு முடிவை எடுத்தார் கிளிநொச்சியை நாங்கள் கைப்பற்ற வேண்டுமென்று. ஏனெனில் அதற்குமுதல் 1998 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் ஒரு தாக்குதலை செய்து முன்னணிப் பகுதிகளை கைப்பற்றினோம். அத்தாக்குதல் எமக்கு முழு வெற்றியளிக்கவில்லை. அப்போதும் எமது திட்டம் உள்ளே ஒரு அணி நகர்ந்து சென்று குறுக்கறுத்து கட்டவுட் போட்டு நிலை கொண்டு கிளிநொச்சியை கைப்பற்றுவதெனும் நோக்கமிருந்தது. ஆனால் திட்டத்தின்படி வேவுக்கேற்ப ஒரு அணிக்கு பாதையை கொடுத்து அந்த அணி பாதையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் பணியும் சரியாக நடைபெற்றது. ஆனால் மீண்டும் அந்தப் பாதையை எதிரி எதிர்த்தாக்குதல் மூலம் மூடியவுடன் உள்ளே சென்ற அணியைக் கூட வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நடவடிக்கையின் விளைவினை கருத்தில் கொண்டு தான் தலைவர் புதிய திட்டத்தினை வகுத்தார். இந்த சமருக்கு கிளிநொச்சியையும் பரந்தனையும் பிரித்து விட்டால் உள்ளே செல்லும் அணிக்கான வளங்கள் தடைபடாது என்ற நோக்கத்தோடு தான் இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை வகுத்தார். அதற்கான வேவு நடவடிக்கையிலும் விசேட வேவு அணியுடன் சேர்ந்து சாள்ஸ் அன்ரனி அணி அந்தந்த பகுதிகளினு}டே உட்செல்ல வேண்டிய அணிகள் அனைத்தையும் அழைத்து சென்று காட்டினோம்.
இவ்வாறு பாதைகளைக் காட்டியது விசேட வேவு அணிகளே. அதிலே தளபதி பால்ராஜூம் அவரது அணிகளும் உள்நுழைவதற்கான பகுதியில் இரண்டு பாதைகளை எடுத்திருந்தோம.; அதிலே கட் அவுட், கட்ஓப் (கு) என பரந்தனையும் கிளிநொச்சியையும் பிரிக்கும் இடத்தில் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். மேற்குப்பகுதியாக 02 பாதைகளையும் கிழக்கு பகுதியால் 02 பாதைகளையும் எடுத்திருந்தோம் இதனு}டாக அணிகளை நகர்த்தி உள்ளே கட்டவுட், கட் ஓப் (கு). என்பவற்றை அமைத்ததால் அந்தப் பாதைகளை இராணுவத்தினர் மீளக்கைப்பற்ற முயற்சிக்கவில்லை. எதிர்ச் சண்டை பரந்தன் பகுதியில் மட்டும் நடந்தது. ஏனைய பகுதியால் எதிரி தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால் ஏனைய பாதைகள் அனைத்தையுமே மீண்டும் எதிரி கைப்பற்றுவதற்கான கடும் சமர் நடந்து கொண்டிருந்தது.
ஓயாத அலைகள் 02ஐப் பொறுத்தவரை 27 ஆம் திகதி மிகக்கடுமையான சமர் நடந்தது எதிரி எல்லாப் பாதைகளையும் கைப்பற்றி ஒரு சில பாதைகளை மட்டுமே தக்கவைக்கப்பட்ட நிலை இருந்ததினால் அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்ற கேள்விக்குறி இருந்தது. அன்று இரவு தலைவர் தளபதிகள் எல்லோரையும் அழைத்து கதைத்து சரியான திட்டங்களை வகுத்து அந்த நாள் எவ்வாறு சமரை நகர்த்த வேண்டும் என்ற ஒழுங்குபடுத்தல்களைச் செய்தார். அன்று தலைவர் போட்ட திட்டத்தின்படி அடுத்த நாள் அதிகாலையிலேயே சண்டையை ஆரம்பித்தோம். அந்தச் சண்டையிலும் பிரதானமான சமர் நடந்த பகுதி தளபதி தீபன் சென்ற பாதையும் தளபதி ராம் சென்ற பாதையும் ராம் சென்ற பாதையினு}டாகத்தான் கனரக ஆயுதங்களை நகர்த்தி சண்டையில் ஈடுபட்டோம் அதோடுதான் எதிரி பின்வாங்கி. ஓடினான்.
ஓயாத அலைகள் 02-ன் வெற்றியென்பது நாங்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட சமரின் போது ஏற்பட்ட தவறுகளையெல்லாம் கருத்தில் கொண்டு தலைவர் இந்த சமருக்காக அமைத்துத் தந்த திட்டம்தான். ஏனென்றால் இந்த சமரிலும் வழமையாகவே நாங்கள் ஓடுபாதையை இரவில் பிடிப்பதும் காலையில் எதிரி மீண்டும் மூடுவதற்கான முயற்சியை எடுத்து மூடியும் இருக்கிறான். அதே வேலையை இந்த சமரிலும் செய்தான். நாங்கள் இரவு நகர்ந்து போய் பிடித்த பாதைகளை எதிரி மீண்டும் நகர்ந்து வந்து சில பாதைகளை மூடினான். ஆனால் எதிரியை நிலைகுலைய வைத்தது தலைவரின் திட்டம்தான் அது என்னவென்றால் ஊடறுத்து கிளிநொச்சியையும் பரந்தனையும் கூறு போட்டது இந்தத் திட்டத்தை எதிரி எதிர்ப்பார்க்கவில்லை அவர்கள் மறுநாட் காலையில் பாதைகளை மூடி தமது நிலைகளை தக்கவைத்து விட்டோம் என்ற நிலை ஏற்பட்ட போது இந்தப் பகுதியை அவர்களால் உடைக்க முடியாது போனது.
இதனால் கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்கு போகவும் முடியவில்லை ஆனையிறவு இராணுவம் கிளிநொச்சிக்கு வரவும் முடியவில்லை. என்னதான் தமது பகுதியை தக்கவைத்த போதும் இந்த நடவடிக்கையால் உளாPதியாக தாக்கமடைந்து 28 ஆம் திகதி மாலை வரை தப்பியோடத்தான் முயற்சியெடுத்தான். சத்ஜெய படையெடுப்பின் போது விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு நடாத்திய தற்காப்பு எதிர்த்தாக்குதல்களையே எதிர்கொள்ள முடியாமல் மூன்று கட்டங்களாக மூன்று படை அதிகாரிகள் தலைமை தாங்கி ஆக்கிரமிக்குபோதே தாம் விடுதலைப் புலிகளுடன் போரிடும் வல்லமை அற்றவர்கள் என்பதை இராணுவத்தினர் வெளிப்படையாக நிரூபித்து விட்டனர். இருந்த போதும் அன்று முல்லைப் படைத்தள இழப்பினால் ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தால் பலிக்கடாக்களாகவே இராணுவத்தினர் கையாளப்பட்டதன் விளைவாகவே கிளிநொச்சி ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு படைத்தளங்களும் அமைக்கப்பெற்று 2000 இற்கும் மேற்பட்ட துருப்புக்களும் நிறுத்தப்பட்டன. இவர்கள் இங்கு நிறுத்தப்பட்ட நாள் தொடக்கம் அரசாங்கம் இவர்களை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்திருக்கலாம.; ஏனெனில் இவர்களை எவ்வேளையிலும் இழக்க நேரிடும் என்ற உண்மை அரசுக்கு அன்று தெளிவாக தெரிந்திருந்தது. அதை ஓயாத அலைகள் 02 இன் மூலம் புலிகள் மெய்ப்பித்தும் காட்டினர்;.
முற்றும்
--------------------------------------------------------------------------------
சுட்டது தமிழ்நாதத்திலிருந்து
இவ்வாறு நடந்த அந்த சமருக்கான வேவுத்தகவல்களை பல போராளிகள் முன்னர் வெளிப்படுத்தினர். அன்று அவற்றை நெறிப்படுத்தி நடாத்திய விசேட வேவு அணித் தளபதி கேணல் ஜெயம் இச்சமரில் தாம் கையாண்ட தாக்குதல் வியுூகங்களையும் எவ்வாறு வேவுச் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பதையும் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
வேவு நடவடிக்கையை பொறுத்த வரையில் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஒரு சண்டையை திட்டமிடுவதற்கு முதல் எமக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படுமா என்னும் நோக்குடன் தொடர்ந்து வேவு நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. அந்த வகையில் கிளிநொச்சிப் பகுதியிலும் வேவு நடவடிக்கை நடைபெற்றது. விசேட வேவு அணியினர் வேவு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே மட்டு. அம்பாறை அணியினர் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா.; இந்த நடவடிக்கை மனோ மாஸ்ரரின் தலைமையில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர் தளபதி பால்ராஜ் தனது போராளிகளையும் இப்பகுதி வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தார்.
இவ்வாறு இந்த நடவடிக்கை தொடர்ந்ததனால் கிளிநொச்சி படைத்தளம் தொடர்பான தரவுகள் எமக்கு ஏற்கனவே கிடைத்திருந்தன. ஆனால் அந்தக் காலப்பகுதியில் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் ஜெயசிக்குறுசமர் பெருமெடுப்பில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் வேவு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஆகவே வேவு எனும்பொழுது இராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை கண்காணித்துக் கொண்டிருப்பதும் அந்த சூழல் எவ்வாறிருக்கின்றது. இராணுவத்தினரின் நடவடிக்கை எவ்வாறிருக்கின்றது. எங்களுக்கு சாதகமான பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றது போன்ற விடயங்களைக் காலம் காலமாக வேவு அணிகள் செய்து வந்திருக்கின்றன. அடுத்து அத்தரவுகள் பொறுப்பாளர்கள் மூலமாக தலைவரிடம் கிடைக்கப் பெற்றபின் தேவை கருதி தாக்குதலை மேற்கொள்வதாக அமையும்.
வேவினைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நகர்வும் அவர்கள் சாவை எதிர்பார்த்துத் தான் நகர வேண்டும.; வேவுக்காக சென்று திரும்பி வருவோமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் எதிரி விழிப்பாக பார்த்துக் கொண்டுதான் இருப்பான். ஆனால் நாங்களும் கண்டிப்பாக எதிரியின் காப்பரணில் ஏறவேண்டும் அப்போதுதான் சென்ற பாதையில் எத்தனை காப்பரண்கள் இருக்கின்றன எத்தனை தடைகள் இருக்கின்றன, அந்தத் தடைகளை எவ்வாறு கடந்து போகலாம் என்பவற்றை பார்க்கமுடியும் ஆனால் வேவுப் போராளி அந்தத் தடைகள் அனைத்தையும் வெட்டிக் கொண்டு போக முடியாது. அதை ஒருவகையில் எதிரிக்குத் தெரியாமல் கம்பி வேலிகளையும் கடந்து உள்ளே போக வேண்டும.; கிளிநொச்சியைப் பொறுத்த வரைக்கும் தடயம் இல்லாமல் திரும்பி வருவதென்பது பெரும் துன்பமானது. ஏனெனில் நீர் நிலைகளும், புற்தரைகளும் அதிகம் கொண்ட பகுதி. அவற்றினு}டே தடயமின்றி உள்நுழைவதென்பது கடும் சிரமம்.
இந்த சண்டையிலும் தளபதி பால்ராஜ் உள்நுழைந்த பாதைகள் கூட நாங்கள் பார்த்து உறுதிப்படுத்திய பின் நகர்விற்கு முதல் நாள் பாதைகளை சென்று பார்த்த போது எல்லாம் மாறுபட்டிருந்தது. மீண்டும் புதிதாக பாதை எடுத்துத்தான் நகர்த்தினோம.; ஆனால் விசேட வேவு அணியை பொறுத்த வரையில் ஒரே நாளில் பாதையெடுத்து அமைவுகளை குறித்து சரியாக நகர்த்திய சம்பவங்கள் கிளிநொச்சி சண்டையில் உள்ளது. ஏனெனில் சண்டைக்கான திட்டம் இல்லாத நேரத்திலேயே பாதைகளை எடுத்து உட்செல்ல முடியுமென்ற நிலையில் இருந்தபோது, சண்டைக்கான திட்டம் வகுத்த பின் அந்தப் பாதைகளை பார்த்து உறுதிப்படுத்தச் சென்றபோது முதல் பார்த்தது போல் இருக்கவில்லை. மீண்டும் வேறு பாதைகளைத்தான் எடுத்துக்கொடுத்தோம் ஆனால் ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்த வரையில் திட்டம் வகுத்த ஒரு கிழமைக்குள் வேவு வேலைகளை முடித்துக் கொடுத்தோம். இதற்கு போராளிகள் கடுமையாக உழைத்தார்கள். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட தரவுகள் இருந்தபோது அதைப் பார்த்து உறுதிப்படுத்தப்படும் தரவுகள் ஒரு கிழமைக்குள் நடந்தது. ஆகவே சண்டைக்குத்திட்டமிட்டுப் போகும் போது சண்டையின் போக்கு மாறுபட்டால் அதற்குரிய பொறுப்பு வேவு அணிகளைத்தான் சாரும் ஆகவே இந்த ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்தவரை திட்டங்களின்படி சிறப்பாக நடைபெற்றது.
அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. அதன் திட்டம் கிளிநொச்சியுடன் இணைப்பதாக இருந்தது. அதன்படி இதனை விரைவாக செய்ய முடியுமென்ற நம்பிக்கையில் எதிரி ஜெயசிக்குறுவை தொடங்கியிருந்தான். ஆனால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக எதிரி நினைத்தது போல் இணைக்க முடியவில்லை. அவனது நடவடிக்கை மாங்குளப்பகுதியை நெருங்கியதும் தேசியத் தலைவர் அன்று மாங்குளத்திற்கு பொறுப்பாக இருந்த தளபதி தீபனை கிளிநொச்சிக்கு பொறுப்பாக நியமித்து ஏற்கனவே இத்தளத்தின் மீதிருந்த அவதானிப்பை விட கூடுதலாக அவதானிப்பை மேற்கொள்ளச் செய்தார்.
இதன் பின்னர் கிளிநொச்சி மீதான முதலாவது தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது அதற்கும் விசேட வேவு அணி வேவு செயற்பாட்டில் ஈடுபட்டது. எமது வேவுகளை பொறுத்த வரையில் திடீரென ஒரு திட்டத்தினை வகுத்து வேவு பார்க்கும் போது வேவு அணி பாதைகளை எடுத்து தாக்குதலுக்கான ஒரு பாதையை திறந்து கொடுக்கின்ற அதே நேரம் அந்தப்பாதையினு}டாக எந்தப் படையணி சண்டைக்கு இணைக்கப்படுகின்றதோ அந்தப் படையணிப் போராளிகளையும் இணைத்து செயற்பாட்டில் ஈடுபடுத்துவோம். ஏனெனில் தாக்குதலின் முதல் கட்டத்திற்கான நகர்வை நாங்கள் புூர்த்தி செய்து கொண்டு பாதைகளை காட்டினால் தொடர்ந்து சண்டையில் ஈடுபடப்போவது அந்த அணிகள். ஆனால் பாதையை காட்டி உள்ளே அணிகளை நகர்த்திக் கொண்டு செல்வது விசேட வேவு அணிதான். ஆனால் அந்தப் பாதைக்கு திட்டத்தின்படி எந்த அணி இணைக்கப்படுகிறதோ அந்தப் படையணி தொடர்ந்து சண்டையில் ஈடுபடும்.
ஆனால் வேவு பார்ப்பதென்பது ஒரு நாளில் முடிவடையும் வேலை அல்ல. பல நாட்களை வேவு பார்ப்பதற்காக செலவு செய்யவேண்டும.; அது எமக்கு சாதகமாகவும் அமையும் பாதகமாகவும் அமையும் வேவு அணியினுடைய நடவடிக்கையில் அவர்கள் விடும் சிறிய சிறிய தவறுகளும் அவர்களின் உயிருக்கே பாதகமாக அமையும். அதாவது முதல்நாள் சென்று ஒரு பாதையைப் பார்த்து விட்டு வரும் போது தவறுதலாக ஒரு தடயத்தை விட்டு விட்டு வந்திருந்தால் அல்லது எதிரிக்கு ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட்டு மறுநாள் அந்த இடத்தில் நிலையெடுத்திருப்பானாக இருந்தால் இவர்கள் செல்லும் போது இவர்கள் மீது தாக்குதல் இடம்பெறும். ஆனால் அதை எதிர்பார்த்துத்தான் இவர்கள் போகவும் வேண்டும். அந்த வகையில் ஒரு கரும்புலி அணியினுடைய செயற்பாட்டைவிட ஒரு வித்தியாசமான செயற்பாடாக இவர்களின் செயற்பாடு இருக்கும.; கரும்புலிகள் ஒரு வெற்றிக்காக தமது உயிரையே அர்ப்பணித்து விடுவார்கள். இந்த வேவு அணியினரின் நோக்கம் உயிரை அர்ப்பணிப்பதாக இருக்காது ஆனால் எதிரியினுடைய தாக்குதலை முழுமையாக எதிர்பார்த்தபடி தான் செல்வார்கள் வேவு அணியினுடைய செயற்பாடு இவ்வாறு தான் இருக்கும்.
கிளிநொச்சி ஓயாத அலைகள் 02 இலும் நிறையத் தரவுகள் எங்களிடம் ஏற்கனவே இருந்தது. அத்தரவுகள் அனைத்தையும் வைத்துக் கொண்டுதான் திடீரென தலைவர் ஒரு முடிவை எடுத்தார் கிளிநொச்சியை நாங்கள் கைப்பற்ற வேண்டுமென்று. ஏனெனில் அதற்குமுதல் 1998 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் ஒரு தாக்குதலை செய்து முன்னணிப் பகுதிகளை கைப்பற்றினோம். அத்தாக்குதல் எமக்கு முழு வெற்றியளிக்கவில்லை. அப்போதும் எமது திட்டம் உள்ளே ஒரு அணி நகர்ந்து சென்று குறுக்கறுத்து கட்டவுட் போட்டு நிலை கொண்டு கிளிநொச்சியை கைப்பற்றுவதெனும் நோக்கமிருந்தது. ஆனால் திட்டத்தின்படி வேவுக்கேற்ப ஒரு அணிக்கு பாதையை கொடுத்து அந்த அணி பாதையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் பணியும் சரியாக நடைபெற்றது. ஆனால் மீண்டும் அந்தப் பாதையை எதிரி எதிர்த்தாக்குதல் மூலம் மூடியவுடன் உள்ளே சென்ற அணியைக் கூட வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நடவடிக்கையின் விளைவினை கருத்தில் கொண்டு தான் தலைவர் புதிய திட்டத்தினை வகுத்தார். இந்த சமருக்கு கிளிநொச்சியையும் பரந்தனையும் பிரித்து விட்டால் உள்ளே செல்லும் அணிக்கான வளங்கள் தடைபடாது என்ற நோக்கத்தோடு தான் இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை வகுத்தார். அதற்கான வேவு நடவடிக்கையிலும் விசேட வேவு அணியுடன் சேர்ந்து சாள்ஸ் அன்ரனி அணி அந்தந்த பகுதிகளினு}டே உட்செல்ல வேண்டிய அணிகள் அனைத்தையும் அழைத்து சென்று காட்டினோம்.
இவ்வாறு பாதைகளைக் காட்டியது விசேட வேவு அணிகளே. அதிலே தளபதி பால்ராஜூம் அவரது அணிகளும் உள்நுழைவதற்கான பகுதியில் இரண்டு பாதைகளை எடுத்திருந்தோம.; அதிலே கட் அவுட், கட்ஓப் (கு) என பரந்தனையும் கிளிநொச்சியையும் பிரிக்கும் இடத்தில் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். மேற்குப்பகுதியாக 02 பாதைகளையும் கிழக்கு பகுதியால் 02 பாதைகளையும் எடுத்திருந்தோம் இதனு}டாக அணிகளை நகர்த்தி உள்ளே கட்டவுட், கட் ஓப் (கு). என்பவற்றை அமைத்ததால் அந்தப் பாதைகளை இராணுவத்தினர் மீளக்கைப்பற்ற முயற்சிக்கவில்லை. எதிர்ச் சண்டை பரந்தன் பகுதியில் மட்டும் நடந்தது. ஏனைய பகுதியால் எதிரி தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால் ஏனைய பாதைகள் அனைத்தையுமே மீண்டும் எதிரி கைப்பற்றுவதற்கான கடும் சமர் நடந்து கொண்டிருந்தது.
ஓயாத அலைகள் 02ஐப் பொறுத்தவரை 27 ஆம் திகதி மிகக்கடுமையான சமர் நடந்தது எதிரி எல்லாப் பாதைகளையும் கைப்பற்றி ஒரு சில பாதைகளை மட்டுமே தக்கவைக்கப்பட்ட நிலை இருந்ததினால் அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்ற கேள்விக்குறி இருந்தது. அன்று இரவு தலைவர் தளபதிகள் எல்லோரையும் அழைத்து கதைத்து சரியான திட்டங்களை வகுத்து அந்த நாள் எவ்வாறு சமரை நகர்த்த வேண்டும் என்ற ஒழுங்குபடுத்தல்களைச் செய்தார். அன்று தலைவர் போட்ட திட்டத்தின்படி அடுத்த நாள் அதிகாலையிலேயே சண்டையை ஆரம்பித்தோம். அந்தச் சண்டையிலும் பிரதானமான சமர் நடந்த பகுதி தளபதி தீபன் சென்ற பாதையும் தளபதி ராம் சென்ற பாதையும் ராம் சென்ற பாதையினு}டாகத்தான் கனரக ஆயுதங்களை நகர்த்தி சண்டையில் ஈடுபட்டோம் அதோடுதான் எதிரி பின்வாங்கி. ஓடினான்.
ஓயாத அலைகள் 02-ன் வெற்றியென்பது நாங்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட சமரின் போது ஏற்பட்ட தவறுகளையெல்லாம் கருத்தில் கொண்டு தலைவர் இந்த சமருக்காக அமைத்துத் தந்த திட்டம்தான். ஏனென்றால் இந்த சமரிலும் வழமையாகவே நாங்கள் ஓடுபாதையை இரவில் பிடிப்பதும் காலையில் எதிரி மீண்டும் மூடுவதற்கான முயற்சியை எடுத்து மூடியும் இருக்கிறான். அதே வேலையை இந்த சமரிலும் செய்தான். நாங்கள் இரவு நகர்ந்து போய் பிடித்த பாதைகளை எதிரி மீண்டும் நகர்ந்து வந்து சில பாதைகளை மூடினான். ஆனால் எதிரியை நிலைகுலைய வைத்தது தலைவரின் திட்டம்தான் அது என்னவென்றால் ஊடறுத்து கிளிநொச்சியையும் பரந்தனையும் கூறு போட்டது இந்தத் திட்டத்தை எதிரி எதிர்ப்பார்க்கவில்லை அவர்கள் மறுநாட் காலையில் பாதைகளை மூடி தமது நிலைகளை தக்கவைத்து விட்டோம் என்ற நிலை ஏற்பட்ட போது இந்தப் பகுதியை அவர்களால் உடைக்க முடியாது போனது.
இதனால் கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்கு போகவும் முடியவில்லை ஆனையிறவு இராணுவம் கிளிநொச்சிக்கு வரவும் முடியவில்லை. என்னதான் தமது பகுதியை தக்கவைத்த போதும் இந்த நடவடிக்கையால் உளாPதியாக தாக்கமடைந்து 28 ஆம் திகதி மாலை வரை தப்பியோடத்தான் முயற்சியெடுத்தான். சத்ஜெய படையெடுப்பின் போது விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு நடாத்திய தற்காப்பு எதிர்த்தாக்குதல்களையே எதிர்கொள்ள முடியாமல் மூன்று கட்டங்களாக மூன்று படை அதிகாரிகள் தலைமை தாங்கி ஆக்கிரமிக்குபோதே தாம் விடுதலைப் புலிகளுடன் போரிடும் வல்லமை அற்றவர்கள் என்பதை இராணுவத்தினர் வெளிப்படையாக நிரூபித்து விட்டனர். இருந்த போதும் அன்று முல்லைப் படைத்தள இழப்பினால் ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தால் பலிக்கடாக்களாகவே இராணுவத்தினர் கையாளப்பட்டதன் விளைவாகவே கிளிநொச்சி ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு படைத்தளங்களும் அமைக்கப்பெற்று 2000 இற்கும் மேற்பட்ட துருப்புக்களும் நிறுத்தப்பட்டன. இவர்கள் இங்கு நிறுத்தப்பட்ட நாள் தொடக்கம் அரசாங்கம் இவர்களை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்திருக்கலாம.; ஏனெனில் இவர்களை எவ்வேளையிலும் இழக்க நேரிடும் என்ற உண்மை அரசுக்கு அன்று தெளிவாக தெரிந்திருந்தது. அதை ஓயாத அலைகள் 02 இன் மூலம் புலிகள் மெய்ப்பித்தும் காட்டினர்;.
முற்றும்
--------------------------------------------------------------------------------
சுட்டது தமிழ்நாதத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

