Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜய்காந்த் மௌன விரதம்?
#1
விஜய்காந்த் மௌன விரதம்?



சினிமாவில் யாராவது எறும்பைக் கொன்றாலே இபிகோ செக்ஷன் பிரிவை எல்லாம் சொல்லி வாய் வலிக்க வசனம் பேசும் விஜய்காந்த் குஷ்பு மேட்டரைப் போலவே சுகாசினி விஷயத்திலும் ஆழ்ந்த தியானத்துக்குப் போய்விட்டார்.

இந்த விஷயத்தில் அவரது கருத்து என்னவென்றே தெரியவில்லை. சுகாசினிகுஷ்பு விவகாரத்தில் தமிழ் திரையுலகே வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தலைவரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தன் தலைவருமான விஜய்காந்த் வாய்மூடி மௌனம் காத்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் நலனுக்காகவே கட்சி ஆரம்பித்துள்ளேன்.. தமிழர்களுக்கு ஒன்று என்றால் பிச்சுப்புடுவேன் பிச்சு என்று அடிக்குரலில் மைக்கில் பேசும் விஜய்காந்த் அமைதியில் மூழ்கிவிட்டதன் அர்த்தம் தெரியாமல் கோலிவுட்டும் அரசியல் அரங்கும் ஆச்சரியத்துடன் காத்திருக்கின்றன.

அவரைத் தொடர்பு கொள்ள முயலும் நிருபர்களாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஒரு வேளை அவர் மௌன விரதமோ?

அவர் மட்டுமல்லாமல் அவரது கட்சியினரும் கூட இந்த விஷயத்தில் வாய் திறக்க மறுக்கின்றனர்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)