Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசு யுத்தச்சூழலை வலிந்து உருவாக்குகிறது - சு.ப.தமிழ்ச்செல்வ
#1
நேற்று இடம்பெற்ற இளையோர் அறிவியற்கழகம் திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையினை ஆற்றுகையிலேயே தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவரது உரையில் மனித இனத்தினுடைய அசைவியக்கமே அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசமும் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும்; அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு து}ரத்தில் எதிரியை விரட்டி எங்களுடைய தமிழீழ தேசத்தை மீட்க அவருடைய கவனத்தையும் அக்கறையையும் அவருடைய ஈடுபாட்டையும் செலுத்துகின்றாரோ அதேபோன்று இளைய தலைமுறையையும் புதிய உலக மாற்றத்தோடும் உலகத்தின் வளர்ச்சிப் போக்கோடும் இணைத்து கொண்டு போகின்ற ஒரு போராட்டத்தையும் சம காலத்தில் அவர் கையிலேடுத்து செயற்படுத்தி வருகின்றார் அதனுடைய ஒரு செயற்பாடாகத்தான் எங்களுடைய இந்த அறிவியற்கழகத்தின் தோற்றம் இங்கே கருக்கொண்டிருக்கிறது.

எனக்கு முன்பு குறிப்பிட்ட பொறுப்பாளரின் கூற்றின் அடிப்படையில் தமிழீழ தேசம் முழுவதும் பரவி எங்களுடைய இளைய தலைமுறையை ஆரோக்கியமான அறிவியல் தொழில் நுட்பத்தில் உச்ச வளர்ச்சியை அடைந்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது எமது தலைவரின் அவாஅந்தவகையில் இந்த அறிவியற்கழகம் மிகப்பாரிய வளர்ச்சியை நோக்கி வளர்ந்து செல்ல வேண்டும் இது எல்லாப்பிரதேசத்திற்குள்ளும் இந்த வேலைத்திட்டத்தை பரப்ப வேண்டும் என்ற பல இடங்களிலே பல நிறுவனங்கள் வேறும் பலரினுடைய முயற்சி காரணமாக ஒரளவு செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட அளவில் சரியான திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்ளத ஒரு குறைபாடு இருக்கிறது அதை நாங்கள் இந்த ஆண்டில் எங்களுடைய தலைவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அதற்கும் ஒரு பிரிவை அமைத்து அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வேலைத்திட்த்தை செய்து வருகின்றோம். அந்த வகையில் இந்த அறிவியற்கழகத்தின் வழிகாட்டுதல் இந்த அறிவியற்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் இங்கொரு பெரிய பரந்த அளவிலான ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என நாங்கள் நம்புகின்றோம்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல எங்களுடைய இனத்தை பெறுத்தவரையில் இன்றைக்கு உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றோம்.யூத இனம் ஒருகாலத்தில் உலகெங்கும் பரந்து அகதிகளாக நாடற்றவர்களாக இருந்தார்களோ அதே போன்று எங்களுடைய தமிழ் மக்களும் தமிழீனமும் இன்றைக்கு உலகப் பந்திலே ஒருநாடுஎன்ற அங்கிகாரமில்லாமல் உலகமெங்கும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் எங்களுடைய தலைவரின் காலத்தில் எங்களுடைய தமிழினம் தனது தேசத்தை நீர்மாணிப்தற்கான கணிசமான முன்னேற்றத்தைஅதைநோக்கிய பயணத்திலே கனிசமான து}ரத்தை கடந்திருக்கிறோம்.

இன்னுமொரு கடைசிகட்டத்திலிருக்கிறோம் என்றுதான் நான் குறிப்பிடலாம் ஆகவே அந்த இறுதிக்கட்டத்தை நோக்கி அடுத்த பிறந்த இந்த ஆண்டு நகரப்போகிறது தமிழினத்தின் தலைவிதியை தமிழினத்தின் இருப்பை தமிழினத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் ஆண்டாக இந்தாண்டு நிச்சயமாக இருக்கப்போகிறது ஏனெனில் எங்களுடைய தேசியத்தலைவருடைய மாவீரர் தின கொள்கைப் பிரகடனஉரையில் தெளிவாக எமக்கு சுட்டிக்காட்டியிருக்கிறார் இதுவரை கால அரசியல் வரலாற்றைக்கூறி எங்களுடைய தலைவர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த அடிப்படையில்தான் இந்த ஆண்டு நகரப்போகிறது பாரிய நெருக்கடியை சந்திக்கலாம் இன்றைக்கு சிங்கள தேசம் ஒருவலிந்து ஒரு போர்ச்சூழலை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்கிறது தமிழீழம் எங்கும் ஒரு பயங்கரமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு யுத்தத்தை தொடங்குவதற்கான சகலவிதமான துண்டுதல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய மக்கள் அவ்வளவு துன்பபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே ஒரு யுத்த சூழலையே புதிதாக பதவியேற்ற அரசாங்கம் வலிந்து ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு நெருக்கடிக்கு உட்பட்ட ஆண்டாகவே இருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து ஒரு விடிவை பெற்றுத்தருவதற்கு எமது தலைவர் தயாராகிக் கொண்டு இருக்கிறார். எங்களுடைய மக்களை அதற்கு தயார்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பாரிய யுத்த சூழலுக்குள் இருந்தாலும் எங்களுடைய இளைய தலைமுறையை எந்த விதத்திலும் ஒரு பாதிப்புக்கு உட்படாமலும் அவர்களை உடல் உள hPதியாக ஆரோக்கியத்துடனும் அறிவியல் தொழில்நுட்ப கல்வியியல் மேம்பாட்டையும் அவர்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும். போர்ச்சூழலுக்கு எவ்வாறு முகம் கொடுக்கிறோமோ அதே போல எங்களுடைய பிள்ளைகளின் எதிர் காலத்தையும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்படியான வேலைத்திட்டத்தை மேற்க் கொண்டுள்ளோம்.


எமது இனப் போராட்டம் உலகத்திலே உன்னிப்பாக பார்க்கப்படும் போராட்டம் ஆகும். உலகத்திலே சிறிய இனமாக இருந்தாலும் நாங்கள் செய்கின்ற சாதனைகள், செயற்பாடுகள் உலகத்தை அதிசயிக்க வைப்பதாகத்தான் இருக்கும். என்றும் குறிப்பிட்டார்.

தகவல்:சங்கதி
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)