Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்படையின் Dvora ரோந்து படகை காணவில்லை
#21
<span style='color:red'><b>15 கடற்படையினர் பலியான தாக்குதல் சம்பவம்:

[size=9][சனிக்கிழமை, 7 சனவரி 2006, 18:24 ஈழம்] [புதினம் நிருபர்] </span>

[b]திருகோணமலையில் டோரா படகுடன் 15 சிறிலங்கா கடற்படையினர் பலியான தாக்குதலுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டரிடம் 'புதினம்' ஊடகவியலாளர் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:

கெவுலி முனை (பவுள்முனை) கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பும் இல்லை.

புங்குடுதீவில் தர்சினி என்ற இளம்பெண்ணை சிறிலங்கா கடற்படையினர் கோரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்தனர். அதையடுத்து மன்னாரில் பொங்கியெழும் மக்கள் படையினர் பேசாலையில் சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை தாங்கள் நடத்தியதாக உரிமை கோரினர்.

திருகோணமலையில் 5 அப்பாவித் தமிழ் மாணவர்களை சிறிலங்கா இராணுவம் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றார் தயா மாஸ்டர்.</b>

புதினம்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
சனி 07-01-2006 19:55 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்]

பைபர் கண்ணாடி இழைப் படகே மோதி வெடித்தது உயிர் தப்பிய இரு கடற்படையினரும் தெரிவிப்பு.
இன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளான கடற்படையினரின் படகில் இருந்து காணாமல்போன 13 கடற்படை வீரர்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு கடற்படையினரின் தகவல்படி பைபர் கண்ணாடி இழையிலான படகே தமது படகை மோதி வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படையினரின் தகவல்படி மூதூர் இலகந்தை என்ற இடத்தில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளே தாக்குதலை மேற்கொண்டதாக சிறீலங்கா கடற்பiயினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரின் டோரா படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் என்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மீனவ படகுகளின் மத்தியிலிருந்து படகொன்று டோரா படகு மீது மோதி தாக்கியுள்ளதாக கடற்படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் காணாமல் போன கடற்படை வீரர்களில் இருவர் இன்று முற்பகல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் காணாமல் போயுள்ள மேலும் 13 கடற்படை வீரர்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அவர் கூறினார்.

Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
தூயவன் Wrote:
kurukaalapoovan Wrote:இங்கு பிரச்சனை நிதர்சனம்.கொம் இன் நாற்காலி செய்தியாளர்களின் (ஊடகவியலாளர்களின்) அளவுக்கு அதிகமான கற்பனை.

சிங்களவர்களை மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவர்கள் என்றபோது சிரித்தவர்கள் தாங்களே அதைவிட மேட்டுத்தனமாக நடக்கினம் இல்லை வேண்ணும் எண்டு செய்யீனம். உண்மை எதுவோ? :roll:

அது பிடிக்கவில்லை என்றால் ஏன் பாக்கின்றியள்??


:roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
Quote:இந்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு கடற்படையினரின் தகவல்படி பைபர் கண்ணாடி இழையிலான படகே தமது படகை மோதி வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதுக்குள் எல்லாம் செட்டப் பண்ணிட்டினம் போல
இருக்கே? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
kurukaalapoovan Wrote:இங்கு பிரச்சனை *********** நாற்காலி செய்தியாளர்களின் (ஊடகவியலாளர்களின்) அளவுக்கு அதிகமான கற்பனை.

அவர்(கள்) முன்னர் லங்காபுவத்தில் தானே <b>வேலை பார்த்தார் </b>(<b>கள்</b>) (வேலை செய்யவில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
Reply
#26
Suicide blast kills 15 sailors in Sri Lanka

AFP
Saturday, January 07, 2006 19:42 IST

COLOMBO: Suspected Tamil Tiger rebels blew up a naval gunboat, killing 15 Sri Lankan sailors, in a suicide attack on Saturday that dealt a fresh blow to efforts to save a tottering peace process, officials said.

<b>The rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) deployed a woman cadre to ram an explosives-laden vessel into an Israeli-built Dvora class gunboat just outside the port of Trincomalee, the navy said in a statement. </b>
<b>
"A woman LTTE cadre had been tasked to take on the target," </b>the navy said. "This incident is the latest act of the LTTE to fulfil its undeclared aim of attacking the navy under the guise of fishermen."

"There were two gunboats in the area and one saw the other being attacked," defence ministry spokesman Prasad Samarasinghe said, adding fishermen rescued two sailors from the gunboat.

The attack inflicted the biggest single military loss of life since a truce went into effect in February 2002, defence officials said. President Mahinda Rajapakse huddled in talks with military commanders and called for restraint while taking precautions to prevent further rebel attacks, senior administration officials said.

"There will be no knee-jerk reaction," a senior aide told reporters. However, the private Centre for Policy Alternatives thinktank called the attack a major blow to peacebroker Norway's attempts to salvage the peace process.

"This is a big setback," said the centre's director Sunanda Deshapriya. "The Tigers want to drag the army into fighting and there are some in the defence establishment who may want just that."

Meanwhile, Norway is sending International Development Minister Erik Solheim later this month to try and revive talks between the two parties to save the Oslo-brokered ceasefire.
<b>
?
- . - .</b>
Reply
#27
பெரிய அடிகள் விழுந்தாலும் அரசு உடனடியாக யுத்தத்தை ஆரம்பிக்க முடியாமல் இருக்கின்றது. என்றாலும் ஊடுருவித் தாக்கும் படைகளும் தமது வேலைகளைத் தொடங்கிவிட்டன. எங்குபோய் முடியும்? :roll:
<b> . .</b>
Reply
#28
சர்வதேச மயப்படுத்தப்பட்ட பிரச்சனையாட்டுது அது தான். அரசாங்கமும் அவசர அவசரமாக இராஜதந்திரம் படிக்கிறது.

Sri Lankan Foreign Minister Mangala Samaraweera, visiting Washington, told reporters, "There will come a point when the public could be provoked into action and the government may not be able to control."
எங்கையோ கேட்ட மாதிரி இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

http://asia.news.yahoo.com/060107/afp/0601...7092749top.html
Reply
#29
Quote: 15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
<span style='color:red'>
þÐ ´Õ «ôÀð¼Á¡É ¾¢ð¼Á¢¼ôÀð¼ ´Õ «Ãº À¢ÃÃÁ¡¸§Å ¾Á¢ú þრ¾ó¾¢Ã¢¸Ç¡ø
¦¸¡ûÇôÀθ¢ÈÐ. §¼¡Ã¡ ¦ÅÊò¾¡ø debris ±í§¸?...À¨¼Â¢É÷ þÈ󾡸, ¯¼ø¸û ±í§¸?
¸¡½¡Áø §À¡É 2 §À÷ ¯ÔÕ¼ý Á£ð¸ôÀð¼¡÷¸Ç¡õ. ÒÄ¢¸Ç¢ý ¾ü¦¸¡¨ÄÀ¨¼Â¢ø ¾ôÀ¢
¯Â¢÷ À¢¨Æò¾ ÅÃÄ¡Ú ¯ñ¼¡?...þÐ ´Õ «Ãº À¢Ãþ¢ü¸¡¸ «ôÀ¡Å¢ 5 Á¡½Å÷¸¨Ç ¸¡Ð¸ÙìÌû
¦ÅʨÅòÐ ÀΦ¸¡¨Ä ¦ºö¾¾¡ø ±Øó¾¢ÕìÌõ ±¾¢Ã¢ôÀ¨Ä¨Â ¾½¢Å¢ôÀ¾ü¸¡¸ ¾¢ð¼Á¢¼ôÀð¼Ð.
«¾Å¢¼ ÅÕ¸¢È ¿¡ð¸Ç¢ø §¼¡Ã¡Å¢ý º¢¨¾×¸û ¸¨Ã ´Ðí¸¢É ±ýÚ ¦ºö¾¢ Åó¾¡Öõ «Ð ¬îºÃ¢Â ÀΞü¸øÄ..
Á£ÉÅ÷¸Ç¡ø §¸ð¸ À𼾡õ ¦Àâ Ìñ§¼¡¨º...¾¡í¸§Ç ¦Åʧ¡¨º ´ý¨È ²üÀÎò¾¢ Å¢ðÎ, ¾Á¢ÆÃ¢ý
¦¸¡ó¾Ç¢ìÌõ ¬ò¾¢Ãò¨¾ ¾½¢ôÀ¾ü¸¡ì ¦ºöÂôÀð¼Ð. 1: 10 ratio ÀÊ þýÛõ 50 ºÅô¦Àðʸû À¨¼Â¢Éâý
¯¼ø¸û «¨¼ì¸ôÀΞü¸¡¸ ¸¡òÐ þÕ츢ýÈÉ. </span>
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
Reply
#30
அடடா ஆரம்பிச்சுட்டாங்களா.......? முந்தீ தனரயில் தான் வேண்டினார்கள் இப்ப கடலிலுமா . . . . . .?
Reply
#31
புத்தம் புதிரவன் அண்ணா.. எல்லம் சுத்தப்பொய்யென்று சொல்கின்றார்..

அண்ணா.. உங்களுக்குத்தான் பலதும் தெரிகின்றது.. நீங்களாவது சொல்லுங்கண்ணா.. இந்த டோரா படகு அடித்த கதை உண்மையா?

sanjee05 Wrote:அடடா ஆரம்பிச்சுட்டாங்களா.......? முந்தீ தனரயில் தான் வேண்டினார்கள் இப்ப கடலிலுமா . . . . . .?
8
Reply
#32
தம்பி சும்மா கிடந்த சங்னக ஊதிக்கேடுத்தான் ஆண்டி என்ற மாதிரி என் வானய கிளறாதையும் பிறகு உளறிவிட்டுவிடுவேன்
Reply
#33
ஞாயிறு 08-01-2006 05:10 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]

<b>தாக்குதல் குறித்த விசாரனைகள் முடிவுக்கு வராமல் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்த முடியாது</b> - [b]ஹக்ரூப் ஹொக்லன்ட்.

நேற்று திருகோணமலையில் டோரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று சிறீலங்கா கடற்படையினர் குற்றம் சாட்டினாலும் விசாரணைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று போர் நிறுத்தக்க கண்காணிப்புக் முடிவு செய்ய முடியாது என சிறீலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருகோணமலை கடற்பரப்பில் பயணம் செய்ய சிறீலங்கா கடற்படையினருக்கே மட்டுமோ உரிமை உண்டு விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு இந்த கடற்பரப்பில் சென்றுவர உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் வன்முறைச் சுழல் கட்டுக்கடங்காமல் போவது கண்காணிப் பாளர்களுக்கு பெரும்கவலையைத் தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
<b>புலிகளின் தற்கொலைப் பாணியிலான
தாக்குதல் என்கிறது படைத் தரப்பு</b>

திருமலைக் கடற்படையின் "டோறா' பீரங் கிப் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழமையாகப் புலிகள் கைக்கொள்ளும் தற் கொலைப் பாணியிலான தாக்குதல்களை ஒத்தி ருப்பதால் அவர்கள்மீது சந்தேகம் எழுகிறது.
இப்படித் தெரிவித்திருக்கிறார் இராணு வப் பேச்சாளர் கேணல் பிரசாத் சமரசிங்க.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கடற்படையின் படகு ஒன்று தாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. 2 கடற்படை அதிகாரிகளும் 13 மாலுமிகளும் இருந்திருக் கிறார்கள். அவர்களை அப்பகுதியில் தேடும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின் றன. இதுவரை எவரையும் உயிருடனோ சடல மாகவோ மீட்கவில்லை. இது ஒரு தற்கொலைப் படைத்தாக்குதல் என்றே நாங்கள் நினைக் கின்றோம்.
நாங்கள் போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக ஏற்றுள்ளோம். அதை மீற நாங் கள் விரும்பவில்லை. அமைதி நடவடிக்கை களுக்கு எங்களது முழு ஆதரவும் தொடரும். இது ஒரு தற்கொலைக் தாக்குதலுக்குப் பயன் படுத்தப்பட்ட படகு. இப்பகுதியில் அவர்கள் (புலிகள்) தான் இவ்வாறான படகுகளைப் பயன்படுத்துவர். புலிகள் பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தியிருக் கின்றார்கள். அதனால்தான் புலிகள்மீது எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.


http://www.uthayan.com/pages/news/today/02.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
<b>புலிகளோ பொறுப்பு என்று கூறிவிட
முடியாது என்கிறார் ஹொக்லன்ட்
போர்நிறுத்த மீறல் அல்ல என்றும் கருத்து </b>

திருமலைக் கடலில் நடந்த சம்பவம் தொடர்பாக கடற்படையினர் புலிகள் மீது சந்தேகம் கொண்டிருப்பினும் புலிகள்தான் அதற்குப் பொறுப்பு என்று எங்களால் கூறி விடமுடியாது. இதனை யார் செய்தார்கள் என்று சொல்வது மிகவும் கடினமானது.
இவ்வாறு தெரிவித்தார் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லன்ட்.
திருமலைக் கடலில் கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக அவர் பி.பி. ஸிக்கு கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது@
இதனை யார் செய்தார்கள் என்று கூறுவது மிகவும் கடினம். இப்போதைக்கு எந்தச் சாத்தியப்பாட்டையும் நாங்கள் கூறிவிட முடியாது. என்ன நடந்தது என்பதை முதலில் நாங்கள் பரிசீலிக்கவேண்டும். வழமைபோல நாங்கள் விசாரணைகளை நடத்தவேண்டும். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருந்திருக்கக் கூடும் என்று கடற் படையினர் தரப்பில் சந்தேகம் வெளியிடப் பட்டிருக்கின்றது. அவர்கள் (கடற்படையி னர்) எங்களிடம் முறையிடுகிறார்கள் என் றால் சம்பவத்தின் பின்னணியில் புலிகள் உள்ளனர் என்று அவர்கள் சந்தேகிக்கின்ற னர் என்பது தெளிவு. ஆனால், புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று எங்களால் சொல்ல முடியாது. இந்த விடயத்தைப் போர்நிறுத்த மீறல் என்று நான் அறிவிக்கப்போவதில்லை. ஏற்கனவே இருதரப்புகளிடையேயும் நிலவு கின்ற பிரச்சினைகளில் இதுவும் இன்னொன்று என்றுதான் நினைக்கமுடியும். நிலைமை மிகவும் மோசமடைந்து செல்கின்றது.
என்ன நடந்துள்ளது என்று கண்டறிவதில் நாங்கள் கடற்படையினரின் உதவியைச் சார்ந்திருக்கின்றோம். ஏன் என்றால் நாங்கள் புலிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது இச்சம்பவம் தொடர்பாகத் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
நாம் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. என்றாலும் கண்காணிப்புக் குழுசார்பில் புலி களிடம் தொடர்பு கொள்ளப்பட்டது. சம்ப வம் பற்றித் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் தாம் தெரிந்துகொண்டதாக அவர்கள் கூறுகின்றார்கள். புலிகள் தமக்கும் இத்தாக்கு தலுக்கும் தொடர்பு இல்லை என மறுத்துவிட் டார்கள்.
யார் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கண்டறிவது கஷ்டம் என்று நான் நினைக்கின்றேன்.
கடலுக்குள் மூழ்கி படகுகளின் சேதத் தைப் பார்ப்பதற்கு எங்களிடம் ஆள்கிடை யாது. சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு எங் களிடம் தனியாகப் படகு கிடையாது.
அதற்கெல்லாம் நாங்கள் கடற்படையைத் தான் நம்பியிருக்கின்றோம். ஆனால், மூழ் கிய படகுகளின் சேதங்களை கடற்படையின ரால் வெளியில் கொண்டுவர முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் கண் காணிப்புக் குழுவின் தலைவர்.

http://www.uthayan.com/pages/news/today/03.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
<b>"டோறா' மூழ்கடிப்பு!
13 கடற்படையினர் பலி!
தமக்குத் தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு </b>

இலங்கைக் கடற்படையின் "டோறா' அதிவேகப் பீரங் கிப் படகொன்று நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின்போது மூழ்கியது. திருகோணமலைக் கடற் பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த சமயம் குண்டுகள் பொருத் தப்பட்ட மீன்பிடிப் படகொன்று மோதித் தாக்கியதில் இந் தப் படகு அதிலிருந்த பதினைந்து கடற்படை சிப்பாய் களுடன் அடையாளங்கள் தெரியாமலேயே கடலில் மூழ்கிவிட்டது என்று அறிவிக்கப்படுகிறது.
இது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் என்று இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரி கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அதனை மறுத்திருக் கும் விடுதலைப் புலிகள் இந்தச் சம்பவத்தோடு தமக்குத் தொடர்பு எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறி யிருக்கின்றனர்.
திருமலைக் கடலில் "பவுல் முனைப் பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. மூழ் கிய படகில் இருந்த இரண்டு கடற்படைச் சிப்பாய்கள் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின் றனர். ஏனைய 13 பேரும் காணாமற்போய் விட்டனர் என்று கடற்படை தெரிவித்திருக் கின்றது.
இந்தக் கடற்பகுதியில் அதிகாலையில் பெரும் வெடியோசை ஒன்று கேட்டதென் பதை திருமலைப் பொலீஸாரும் மீனவர் களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். காணா மற்போன கடற்படையினர் அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது. எனினும் அவர்களைத் தேடும் பணி கள் முழுவீச்சில் இடம்பெறுவதாக கடற்படை தெரிவித்தது.
மூழ்கிய "டோறாப்' படகை ஒரு தற் கொலைக் குண்டுதாரி அல்லது குண்டுகள் பொருத்தப்பட்ட வேறொரு படகு மோதியி ருக்கலாம் என்று தாம் நம்புவதாக கடற்படைப் பேச்சாளர் ஜெயந்த பெரேரா தெரிவித்திருக் கின்றார். இந்தப் படகு முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதென்பதை இராணுவப் பேச்சா ளர் கேணல் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத் தினார்.
இந்தப் படகில் இருந்த இரண்டு அதிகாரி கள் உட்பட 15 கடற்படையினரில் இருவர் கடலில் குதித்து நீந்திக்கொண்டிருந்தபோது காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருக்கின்றனர். தாக்குதல் நடந்த விதம் தொடர்பாக அவர்களிடமும் தகவல் பெறப் பட இருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரி வித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசுத் தரப் பில் இருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் நேற்று நள்ளிரவு வரை வெளியிடப் படவில்லை. எனினும் தாக்குதல் தொடர்பாக இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.
திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் இருந்து புறப்பட்ட இரண்டு "டோறாப்' படகு களில் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டி ருக்கின்றது. "டோறாப்' படகை நோக்கி வேக மாக வந்த கண்ணாடி இழைப்பட கொன்றை சோதனையிட கடற்படையினர் முயன்றபோது அந்தப் படகு "டோறா'வுடன் மோதி வெடித் தது என்று கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இரண்டு "டோறாப்' படகுகளும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவற்றில் ஒன்றின் தொடர்பு சாதனங்களில் தகவல் ஒன்று பதிவாகியது எனக் கூறப்படுகின்றது.
"முன்னால் வருகின்ற டோறாப் படகை மோதப்போகிறோம்' என்று சந்தேகத்துக் குரிய கண்ணாடி இழைப் படகில் இருந்து முல்லைத்தீவு சல்லிப் பகுதியில் உள்ள தளம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட தகவலே அது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தகவல் தெரியவந்ததுடன் "டோறா' வில் இருந்த கடற்படையினர் தமது கட்டுப் பாட்டு அறையுடன தொடர்பை ஏற்படுத்தி தாங்கள் எத்தகைய பதில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். சந்தேகத்துக்குரிய அந்தப் படகை சோதனை யிடுமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களுக்கு உத்தரவு வந்தது. அதன்படி படகைச் சோதனைசெய்ய முயன்றபோதே அந்தப் படகு டேறாப் படகுடன் மோதி வெடித்தது என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் வழமையாக நடத்தப்படுகின்ற தற்கொலைத் தாக்குதல் பாணியிலானது என்று பாதுகாப் புத் தரப்பினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி தமக்கு எதுவுமே தெரியாது. அதில் புலி களுக்கு எதுவித சம்பந்தமும் கிடையாது என்று புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்திருக்கிறார்.

http://www.uthayan.com/pages/news/today/01.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)