Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சுட்டுக்கொலை.
#1
ஞாயிறு 08-01-2006 17:25 மணி தமிழீழம் [நிருபர் தவச்செல்வன்]

பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சுட்டுக்கொலை.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் இன்று பிற்பகல் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லபட்டடுள்ளார்.

சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இவருடைய வெதுப்பகத்திற்குள் பிரவேசித்த ஆயுதாரிகள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வெதுப்பக உரிமையாளர் பெயர் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.தாக்குதலை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களே நடத்தியிருப்தாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணமும் இதுவரை அறியமுடியவில்லை.



பதிவு
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவ உளவாளி சுட்டுக்கொலை

யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவ உளவாளியான சின்னராசா இராசையா (வயது 47) இன்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.


பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளரான சின்னராசா இராசையா மீது வெதுப்பகத்திற்குள் வலுவில் உள்நுழைந்த அடையாளம் தெரியாதவர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்த வெதுப்பகம், சிறிலங்கா இராணுவத்தின் 52-4 ஆம் படையணியின் தலைமையகத்துக்கு 100 மீற்றர் அருகாமையிலும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது.

சின்னரா இராசையாவின் உடலை மந்திகையில் உள்ள பருத்தித்துறை அரச மருத்துவமனைக்கு சிறிலங்கா காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

கடந்த 2 நாளில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்டுள்ள 3 ஆவது துப்பாக்கிச் சூடு இது. கடந்த வியாழக்கிழமை இரவு ஈ.பி.டி.பி. ஆதரவாளரான மதன், சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஐயாத்துரை பாஸ்கரன் ஆகியோர் பருத்தித்துறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)