Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேருவளை - அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம்
#1
<b>பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் </b>
[<i>வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2006</i>

இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசங்களில் காவல்துறையின் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அழுத்கமை தர்காநகரிலுள்ள முஸ்லிம் இனத்தவருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலரை நேற்று முன்நாள் அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

தாங்கள் தொலைபேசியை வாங்கச் சென்றதாக சிங்கள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்துத் தாக்கியதாக விற்பனை நிலையத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து இரு இனத்தவர்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்று பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் மீண்டும் இவ்விருசாராருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று நண்பகல் முதல் பேருவளை மற்றும் அழுத்கம பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

<b><i>தகவல் மூலம்- புதினம்.கொம்</i></b>
"
"
Reply
#2
<b>அழுத்கம - தர்கா நகரில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது.</b>

களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம-தர்கா நகரில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.தர்கா நகரில் நேற்று வர்த்தக நிலையம் ஒன்றில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதேச்த்தில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் பிரதேசத்ததில் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தியதுடன் இன்று அதிகாலை ஆறு மணிக்கு அதனை நீக்கினர்.

இந்த நிலையில் படையினரும் கதவல்துறையினரும் இணைந்து பிரதேச்த்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை தர்கா நகரில் வெதுப்பகம் ஒன்றில் தீபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த தீ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர்.

பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் ஏற்ப்படுவதை தடுக்க வகையில் மேலதிக படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தர்கா நகரில் உள்ள இரண்டு மாடி வர்த்தக மையம் ஒன்று முழுமையாக தீயினால் அழிவடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆத்திரமடைந்த சிலர் தர்கா நகரில் உள்ள பல வர்த்தக மையங்களுக்கு தீவைத்துள்ளதாகவும் அவர்களை கலைக்க காவல்துறையினர். நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

<b><i>தகவல் மூலம்- பதிவு.கொம்</i></b>
"
"
Reply
#3
<b>அளுத்கமவில் பதற்றம் தணிந்தது </b>
இன மோதல்களால் பதற்றம் நிலவிய அளுத்கம பிரதேசத்தில் நிலைமை இயல்புக்குத் திரும்பி உள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


அளுத்கமவில் சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே கடந்த இரு நாள்களாக நடைபெற்ற மோதலில் பலர் படுகாயமடைந்தனர். வர்த்தக நிறுவனங்கள் சேதமடைந்தன.

இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையின் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலதிக சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

அப்பிரதேசங்களை சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ நேற்று பார்வையிட்டார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் நிலைமை தற்போது சீரடைந்து இயல்பு நிலைமைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறினார்.


<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#4
சிங்களவர்களுக்கு யாரோடையும் சொறண்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று இருக்கின்றார்களோ? சிங்கள தேசம் சுதந்திரம் பெறுகின்ற காலத்திலேயும் முஸ்லீம்காரர்களோடு, விவாதம் வைச்சுக் கொண்டிருந்தார்கள். பிறகு மாவனெல்லா, பேருவளை என்று தொடர்ச்சியாக பிரச்சனையாகக் கிடக்குதே!!
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)