02-10-2006, 11:07 PM
மனிதனின் 6-வது அறிவு
மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனை பிரிப்பது 6-வது அறிவு என்பது அறிந்தததே. அந்த 6-வது அறிவாக மூளையை தாரளமாக குறிப்பிடலாம். அந்தளவுக்கு எண்ணிலடங்காத புதிர்கள் நிறைந்த முக்கியமான உறுப்பாக உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இந்த புதிர்களுக்கு விடை காணப்பட்டு வருகிறது.
சில சமயம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடம்பு இயங்குகிறது. இது மூளையின் கை வண்ணம் தான். மூளையின் முன் பகுதியில் உள்ள anterior cingulated cortex என்ற பகுதி சுற்றுப்புற மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் நடக்கும் போது அதற்கேற்றபடி உடம்புக்கு கட்டளை பிறப்பித்து இயக்குகிறது.
எதிர்பாராத விபத்து, முக்கியமான முடிவுகளை எடுப்பது, தவறுகளை உணருதல் என பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இந்த குறிப்பிட்ட ஏசிசி பகுதியில் இயக்கம் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஒரு ஆபத்தில் இருந்து மனிதர்களை தப்பிக்க வைப்பதும், முக்கிய முடிவுகள் எடுப்பதும் இந்த ஏ.சி.சி.யால் கணப் பொழுதில் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இன்னது நடக்கிறது என்பதற்கு முன்பாகவே ஏ.சி.சி. உhpய உத்தரவுகளை பிறப்பித்து விடுவது குறிப்பிடத்தக்கது.
சிக்கலான விஷயங்களில் முடிவு எடுப்பது, சவாலான காரியங்களை செய்வது ஆகிய முக்கியமான கட்டங்களில் ஏ.சி.சி.யின் செயல்பாடு பற்றி அண்மைக் காலமாக மும்முரமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.
மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனை பிரிப்பது 6-வது அறிவு என்பது அறிந்தததே. அந்த 6-வது அறிவாக மூளையை தாரளமாக குறிப்பிடலாம். அந்தளவுக்கு எண்ணிலடங்காத புதிர்கள் நிறைந்த முக்கியமான உறுப்பாக உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இந்த புதிர்களுக்கு விடை காணப்பட்டு வருகிறது.
சில சமயம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடம்பு இயங்குகிறது. இது மூளையின் கை வண்ணம் தான். மூளையின் முன் பகுதியில் உள்ள anterior cingulated cortex என்ற பகுதி சுற்றுப்புற மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் நடக்கும் போது அதற்கேற்றபடி உடம்புக்கு கட்டளை பிறப்பித்து இயக்குகிறது.
எதிர்பாராத விபத்து, முக்கியமான முடிவுகளை எடுப்பது, தவறுகளை உணருதல் என பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இந்த குறிப்பிட்ட ஏசிசி பகுதியில் இயக்கம் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஒரு ஆபத்தில் இருந்து மனிதர்களை தப்பிக்க வைப்பதும், முக்கிய முடிவுகள் எடுப்பதும் இந்த ஏ.சி.சி.யால் கணப் பொழுதில் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இன்னது நடக்கிறது என்பதற்கு முன்பாகவே ஏ.சி.சி. உhpய உத்தரவுகளை பிறப்பித்து விடுவது குறிப்பிடத்தக்கது.
சிக்கலான விஷயங்களில் முடிவு எடுப்பது, சவாலான காரியங்களை செய்வது ஆகிய முக்கியமான கட்டங்களில் ஏ.சி.சி.யின் செயல்பாடு பற்றி அண்மைக் காலமாக மும்முரமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.

