Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.
#1
குற்றம் கண்டுபிடிக்கும் குணம்

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகிஇ நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து
போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள்
விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய
நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோதுஇ அந்தப் பக்கமாக அவரது
அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு
சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த
தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டுஇ நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்... இந்தப்
பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் 'ஜாக்கிரதை'னு பலகை
வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்... நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம்
பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே
ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டுஇ இன்னொரு கையை சாக்கடைப்
பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.

ஆனால்இ மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக
இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாகஇ அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்
பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர்இ தனது
சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தாஇ என்
தோள்மீது ஏறிஇ முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச்
சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து
வீட்டுக்காரர் மாதிரியோஇ அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில்
பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும்.
தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும்
என்று எதிர் பார்க்காதவர் யாரோஇ அவர்தான் உண்மையில் குறையே இல்லாத
முழுமையான கணவன்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில்இ நாற்காலிஇ
சோபாஇ தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து
வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்புஇ இரண்டு
வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக்
குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர்
கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால்இ அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது
என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி
சொல்வதைவிடஇ முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த
புத்திமதி!

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால்இ இந்த விளையாட்டை உங்கள்
குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்றுஇ இரண்டுஇ மூன்றுஇ நான்குஇ ஐந்துஇ ஆறுஇ ஏழு... என்று வரிசையாகச்
சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?
என்று கேட்டுவிட்டுஇ ஒன்று இரண்டுஇ மூன்று... என எண்ணத் தொடங்குங்கள். ஆறு
என்று சொல்லும்போதேஇ நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும்
சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான்
பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லைஇ பெரியவர்களும் இப்படித்தான்.

அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சரி சுவாமிஇ நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில்
நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன்
குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம்
கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட
வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளைஇ அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால்இ அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.

ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி
விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ
நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால்இ மூதேவிக்குக் கோபம் வந்து தன்
வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால்இ ஸ்ரீதேவி
கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று
தெரியாமல் விழித்த நாரதர்இ யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாகஇ
எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர்இ
"ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு
தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்லஇ மூதேவியுமல்ல... நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#2
nalayiny Wrote:[size=15]குற்றம் கண்டுபிடிக்கும் குணம்

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும்.

அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நம்மில் இப்படியாக எதற்கெடுத்தாலும் குற்றம் காண்பதையே [size=15]ஒரு சிலர் குணமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அதை மாற்றிக் கொண்டு நல்லவற்றை காணும் பக்குவம் எப்போது உருவாகிறதோ, அன்றுதான் விடிவு ஏற்படும்.

[size=15]வாழ்த்துவதற்கெல்லாம் வயது தேவையில்லை.
மனசிருந்தாலே போதும்...............

அன்புடன்
அஜீவன்
Reply
#3
வெள்ளைத்தாளில் இடப்படும் கறுப்புள்ளிதானே எப்போதும் முதலில் கண்களை உறுத்தும். அதுதான் குற்றம் காண்பவர்களிற்கு உரமாக இருக்கின்றது.
என்னதான் செய்துகொள்வது ?
[b] ?
Reply
#4
தனிப்பட்ட ரீதியில் குற்றம் காண்பது வேறு.. பொதுவிசயங்களில் தனிப்பட்டவர்களது பங்களிப்பில் குற்றம் காண்பது வேறு.. இரண்டாவது அவசியமானது.. இன்றேல் குற்றங்களே பொதுவிசயமான ஞாயத்துக்குள்ளாகலாம்.
தமிழ்ச் சங்கத்திலேயே குற்றம் காணும் புலவன் நக்கீரன்தான் தலைமைப்புலவன் என படம்கூட சொல்லுது..
.
Reply
#5
[quote="nalayiny"]குற்றம் கண்டுபிடிக்கும் குணம்

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
[/quote



இது ஆரம்பத்திலேயே குற்றம் கண்டுபிடித்து கட்டுரையை ஆரம்பிக்கிறது.எனவே மெற்கொண்டு படித்து பிரயோசனமில்லை
(கண்ணன் ஸ்ரைல்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#6
<img src='http://images.humanscore.com/images/logonew_01.jpg' border='0' alt='user posted image'>

[size=15]உன்னால் என்ன
செய்ய முடிந்தது
என்பதை வைத்து
உலகம்
உன்னைப்
பார்க்கிறது.............


[size=15]உன்னால் என்ன
செய்ய முடியும்
என்பதை வைத்து
நீ
உலகத்தைப்
பார்க்கிறாய்..................

AJeevan
Reply
#7
அஐPவன் அண்ணாவின் பின்னால் இப்படி ஒரு கவித்திறமை இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. வாழ்த்துக்கள்.
[b] ?
Reply
#8
Karavai Paranee Wrote:அஐPவன் அண்ணாவின் பின்னால் இப்படி ஒரு கவித்திறமை இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. வாழ்த்துக்கள்.

நன்றி
பரணி

<span style='font-size:25pt;line-height:100%'>சந்திப்புகள்
எதிர்பாராதது..........
பிரிவுகள்
நிரந்தரமானது........</span>
Reply
#9
பிரிவுகளைப் பின்தள்ளும் வல்லமை
அன்புக்குமட்டுமே உண்டு.
.
Reply
#10
AJeevan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>சந்திப்புகள்
எதிர்பாராதது..........
பிரிவுகள்
நிரந்தரமானது........</span>

[quote=sOliyAn]பிரிவுகளைப் பின்தள்ளும் வல்லமை
அன்புக்குமட்டுமே உண்டு.

பிரிவுகள்
நிரந்தரமானது

என்று இங்கே குறிக்கப்பட்டிருப்பது
<span style='font-size:25pt;line-height:100%'>மரணத்தை.</span>
Reply
#11
மரணமும் தள்ளிப்போவதுண்டு.. அதனால்தான் காசை கரைத்து வாய்க்குள் விடுகிறார்கள்.. :wink:
.
Reply
#12
sOliyAn Wrote:மரணமும் தள்ளிப்போவதுண்டு.. அதனால்தான் காசை கரைத்து வாய்க்குள் விடுகிறார்கள்.. :wink:

அதுதான் போலை சோழியான் எங்களிலை 90 வீதமான ஆக்கள் சி;ற்றிபாங்கிலை கடனெடுத்திருக்கிறம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#13
sOliyAn Wrote:மரணமும் தள்ளிப்போவதுண்டு.. அதனால்தான் காசை கரைத்து வாய்க்குள் விடுகிறார்கள்.. :wink:

பணம் என்றால்
பிணமும் வாய் திறக்கும்
என்பதை காட்டவா , அப்படி நடக்கிறது...........
<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'>
இந்த ஓட்டம் அதுக்கா?
hop//
Reply
#14
ஓடியோடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப்பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
பணத்துக்காக மனிசன் இங்கே கோப்பை கழுவுறான் ஜீவன் - அவன்
வேலைமுடிஞ்சு மாதம்போனா அப்புறம்தாண்டா யூறோ
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#15
sOliyAn Wrote:ஓடியோடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப்பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
பணத்துக்காக மனிசன் இங்கே கோப்பை கழுவுறான் ஜீவன் - அவன்
வேலைமுடிஞ்சு மாதம்போனா அப்புறம்தாண்டா யூறோ
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<span style='font-size:21pt;line-height:100%'>இவ்வார சுப்பர் நகைச்சுவை.
சிரிப்பு தாங்க முடியல்லயப்பாாாாாாாாாாாாாாாா
நன்றிறீிிிிிிிிிிிிிிிி
MGR இல்லையே........கேட்க
எல்லாம்
நல்ல நேரம்</span>
Reply
#16
ஜீவனுக்கு எங்கே யூறோ

franc
Reply
#17
Ilango Wrote:ஜீவனுக்கு எங்கே யூறோ

franc

இளங்கோ,பாத்து நிக்க சொல்லுங்களேன்.

<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/money.jpg' border='0' alt='user posted image'>
சோழியா ,
காசு மேலயே ஓடுறீங்க
கீழயும் பாருங்கப்பா..............
நம்ப காசு.................
யூறோவுக்கு மாத்தலாம்.
Please [size=18]STOP
யாரப்பா லைசன் குடுத்தது??????????????
Reply
#18
ஏமாத்துறாங்க.. ஏமாத்துறாங்க.. கள்ள காசைக் காட்டி ஏமாத்துறாங்க.. இப்படி சதுரமா ஒரு காசையும் பார்த்ததில்லையே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#19
sOliyAn Wrote:ஏமாத்துறாங்க.. ஏமாத்துறாங்க.. கள்ள காசைக் காட்டி ஏமாத்துறாங்க.. இப்படி சதுரமா ஒரு காசையும் பார்த்ததில்லையே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அது 1944 ஆண்டு பாவிக்கப்பட்ட பழைய பிராங் நோட்டுதான்.
இது இன்று செல்லாக் காசாக தெரியலாம், ஆனால் 10 பிராங்கான இதன் மதிப்பு தற்போது அதைவிட பல மடங்காகும். பழமைவாதிகள் இன்றும் இவற்றை பாதுகாக்கின்றனர்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)