06-20-2004, 07:28 PM
<img src='http://www.cia.gov/employment/images/0b_logo_o.jpg' border='0' alt='user posted image'>
உலக வல்லரசை அடுத்து ஆட்சிசெய்யப்போவது யார் என்ற கேள்விக்கு விடை தேடி தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வில்லியம் புஷ்ம் ஜோன் கெரியும் தேர்தல் பிரசாரங்களில் கவனமாய் இருக்க சத்தமில்லாமல் ஒரு சங்கதி நடந்திருக்கிறது அமெரிக்காவில்.அமெரிக்க வல்லாதிக்கத்தின் பலமான தூணாக கருதப்படும் Central Intelligence Agency (C.I.A) என அழைக்கப்படும் மத்திய புலனாய்வு பிரிவின் தலைமைப்பொறுப்பிலிருந்து அதன் தலைமை நிர்வாகி George Tenet பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆட்சியை மட்டுமல்ல உலக நாடுகளின் ஆட்சியை கூட தீர்மானிக்கும் சக்தியாகவும் உலக நாடுகளை ஆட்டிவைக்கும் மந்திரமாகவும்
செயற்படும் (C.I.A) யின் தலைமை நிர்வாகி திடீரென பதவி விலகுவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதற்காகவும் உலக நாடுகளில் இடம்பெறும் முக்கியமான நகர்வுகள் குறித்து அமெரிக்க
ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காகவுமென 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவே பின்பு (C.I.A) என மாற்றம் பெற்றது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை தீhடமானிக்கும் அதிகாரிகளுக்கான புலனாய்வு தகவல்களை வழங்குவதும் இதன் மூலமாக
அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை திட்டங்களை உருவாக்குவதும் இதன் முக்கிய பணிகள்.
முத்திய புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குனர் ஜனாதிபதியின் முக்கிய ஆலொசகராக செயற்படுவதோடு ஜனாதிபதியின் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கும் நபராகவும் விளங்குவார் ஆக மொத்தத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மக்கள் ஒருவரை வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்தாலும் கூட உண்மையில் அமெரிக்காவை வளிநடத்துவது (C.I.A) யும் அதன் தலைமை இயக்குனரும் தான் என்பதே உண்மை.
சரியான நேரத்தில் மிகத்துல்லியமாக வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை வழங்கல் உலகம் முழவதிலும் தேவையான தகவல்களை திரட்டுவதற்குரிய புலனாய்வு நகர்வுகளை திட்டமிடல் இவற்றின் மூலம் அமெரிக்க வல்லாதிக்கத்தை உலக நாடுகள் அனைத்திலும் ஏற்படுத்தல் முதலான முக்கிய பணிகள் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் என்ற பெயர்பத்ததின கீழ் நடத்தப்படுகின்றன.
உலகில் எங்கெல்லாம் பிளவுகளும் குழப்பங்களும் தோன்றுகின்றதோ அங்கெல்லாம் இந்த (C.I.A) யின் தாக்கம் நேரடியாகவோ அன்றி அறைமுகமாகவோ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலகில் அனைத்து நாடுகளிலும் (C.I.A) Agents உலவிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆவர்களை அடையாளம் காண்பது முதலில் கடினம்.ஒரு நாட்டு அரசியலில் பெறமதிக்க ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஒருவர் (C.I.A) யின் Agent ஆக செயற்பட்டுகொண்டிருப்பார் ஆனால் யாருக்கும் அவருடைய இரண்டாவது முகம் தெரிந்திருக்க வாய்பில்லை.குறிப்பிட்ட நாட்டில் அமெரிக்கா கண்வைத்து விட்டால் போதும் அவர் மூலமாகவே தான் விரும்பியதை எல்லாம் சாதித்துக்கொள்ளும்.ஆட்சியில் உள்ள அரசை கவிழ்கவும் முடியும் கட்டுக்கோப்பான அமைப்புகளை பிளவுபடுத்தவும் இதனால் முடியும்.எப்படி இது சாத்தியம் என்றால் இரண்டு
காரணங்களை சொல்லலாம் ஒன்று அமெரிக்காவின் High Technology மற்றையது சுகபோக வாழ்விற்காக எதையும் செய்யத்
துணிந்தவர்களை சரியாக அடையாளம் காணும் திறமை.
இவையிரண்டும் போதும் அமெரிக்கா தான் விரும்பியபடி எல்லாம் உலகத்தை ஆட்டுவிக்க.
இப்படியாய் பலம் படைத்த ஒரு அமைப்பின் உயர் நிலையிலிருந்து ஒருவர் திடீரென
இராஜினாமாச்செய்வதாக அறிவித்துள்ளார் என்றால் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய மர்ம
முடிச்சுக்கள் இலகுவில் அவிழ்க்கப்பட முடியாதவை என்பது தான் உண்மை.
கிரேக்க குடியேற்ற வாசிகளான பெற்றோருக்கு 1953 ஜனவரி மாதம் 5ம் திகதி
அமெரிக்காவின் தலைநகரான நியூயோர்கில் ஜேர்ஜ ரெனட் பிறந்தார்.அமெரிக்காவின் உயர்நிலை பல்கலைக்கழகங்களான Georgetown
மற்றும் Columbia பல்கலைக்களகங்களில் பட்டப மேற்படிப்புகளை இவர் முடித்திருந்தார்.
பில் கிளின்டனின் ஆட்சிக்காலத்தின் முதல் 3 வருடகாலம் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் கடமையாற்றிய இவர்
(C.I.A) யின் உதவி நிர்வாகியாக 95/96 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்ட இவர் பின்னர் 97ம் ஆண்டு முதல் (C.I.A) யின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
97 ம் ஆண்டு முதல் இன்று வரை 7 ஆண்டுகள் (C.I.A) ஐ பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் தலைமை தாங்கி வழிநடத்தியவர் இந்த முடிவிற்க தள்ளப்பட காரணம் எதுவாக இருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செப் 11 அமெரிக்காவின் Image ஐ சரியச்செய்த விமானத்தாக்குதல்களை தடுத்து நிறுத்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தவறிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்ளுக்கான பதில் இதுவரை கூறப்படவில்லை. இதனை அடுத்து எதிர்க்கடச்சிகள் கூட இவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியிருந்தமையும் இங்க நினைவு கூறத்தக்கது. உலகத்கின் மூலை
முடுக்கெல்லாம் முக்கை நழைத்து முகர்ந்து பார்க்கும் (C.I.A) .அமெரிக்க பாதுகாப்பு குறித்து போதுமான அக்கறையை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை அதிகம்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போகின்றார்கள் என்ற தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியமைக்கான காரணம் என்ன ? என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டியவர் George Tenet ஆனால் அவரிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை எனவே தான் அந்த கேள்வி
அவரிடம் கேட்கப்பட முன்பாகவே பதவியை இராஜினாமாச்செய்வதாக அவர் அறிவித்திருக்கவேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.இதிலும் ஒரளவிற்கு உண்மை இருக்கலாம் செப் 11 தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்ற வேளை George Tenet
முன்னாள் புலனாய்வதுறை உயர் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட போது அவர் தெரிவத்த கருத்து அமெரிக்காவை மட்டுமல்ல உலகநாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்தது.செப் 11 போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் அளவிற்கு அமெரிக்க புலனாய்வு பிரிவு மாற்றி அமைக்கப்பட வேண்டுமானால் குறைந்தது 5 ஆண்டுகள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்,அதில் உள்ள
யதார்த்தம் உண்மையானது.என்னதான் பணம் படைத்த செல்வந்த நாடாக தன்னை இனம் காட்டிக்கொண்டாலும் அமெரிக்கா ஒரு பிச்சைக்கார நாடு தான்.அது தனது வளத்தின் பெரும் பகுதியை இராணுவ மேலாதிக்க செயற்பாடுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்காகவுமே செலவிட்டுவருகின்றது. புலனாய்வு பணிகளுக்கு அது செலவிடும் தொகை போதுமானதாக இல்லை எனவே புலனாய்வுத்துறையை நவீனமயப்படுத்தி கட்டி எழுப்ப 5 ஆண்டுகள் தேவைப்படும் என்று அவர் கூறிறது உண்மை தான்.ஆனால் அந்த காரணங்களையும் வியாக்கியானங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் விசாரணைக்குழு இல்லை அது தனது விசாரணைகளை நிறைவு செய்து அது குறித்த அறிக்கையை எதிர்வரம் ஜீலை மாதம் வெளியிடவிருக்கின்றதுஅதில் (C.I.A) யின்
கவனமின்மைக்கும் கண்டுகொள்ளாமைக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு George Tenet யே சாரும் எனவே எதற்கு வம்பு என பதவி பறிக்கப்பட முன் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ள இவர் நினைத்திருக்கலாம். ஈராக் மீதான அமெரிக்க போர் தேவையற்ற ஒன்று என இப்போது பரவலாக குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ள நிலையில் ஈராக் மீதான அமெரிக்க படைநடத்துகைககுரிய காரணங்களை உருவாக்கி மக்களை மயங்கவைத்து ஈராக் போருக்கான ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட் முயற்ச்சிகளின் பின்னணியில் இருந்த முக்கிய நபர் George Tenet.
ஈராக் மீதான அமெரிக்க போர் அமெரிக்க ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவு.துணை ஜனாதிபதி டிக் செனி அமnரிக்க இராஜாங்க அமைச்சர் ரிச்சரட் ஆர்மிடேஜ் வெளியுறவத்துறை அமைச்சர் கொலின் பௌவல பாதுகாப்பு துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் போன்ற மிக முக்கிய அமைச்சர்களுடன் கூட அமெரிக்க ஜனாதிபதி கலந்து பேசவில்லை ஈராக் மீது போர் தொடுக்கப்பட வேண்டும் என்ற தனது சுயலாபம் கருதிய நோக்கத்தையே செயற்படுத்தினார் அதற்கு புலனாய்வு பிரிவுத் தலைவர் George Tenet ம் மிக முக்கிய
காரணம் என அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளர் Woodward எழுதிய நுலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நுல் அமெரிக்காவில் தற்போது ஏற்படுத்தியுள்ள பரபரப்பும் George Tenet ன் பதவி விலகலுக்கான காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அமெரிக்க வல்லாதிக்கத்தின் நிலைகளை வீழ்ச்சியடையச்செய்த செப் 11 தாக்குதல் மற்றும் ஈராக் மீதான பேர் என்பவற்றின் பின்னணியில் மிகமுக்கிய சூத்திரதாரியாக செயற்படப்ட George Tenet இந்த பாதிப்புகளுக்குரிய தார்மீக பொறப்பை ஏற்று பதவி விலகுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு கட்சிகளினது இருவேறு ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர் என்ற பெருமை George Tenet க்கு உண்டு.
இப்போதைய பதவி விலகலுக்கு இந்த அரசியல் கூட ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. George Tenet ன்தவறான வழிநடத்துகையில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தனது செல்வாக்கை இழந்துள்ளார்.எனவே George Tenet வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றி வலும்பெற்று கருத்து முரண்பாடாக வளாந்துவிட்டதாகவும் இதனை அடுத்தே George Tenet பதவிவிலகும் முடிவை அறிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. இதில் கூட உண்மை இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது காரணம் (C.I.A) யின் புதிய தலைவராக பொறுப்பேற்கவிருப்பவர் John McLaughlin தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ற்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் தான் குறிப்பிடாத விடயங்களை அமெரிக்க அதிபர் சேர்த்து வாசித்துள்ளார் என George Tenet பகிரங்கமாக அறிவித்து அமெரிக்க அதிபரை சங்கடத்திற்குள்ளாக்கியதும் இந்த முரண்பாடுகளின் உச்சக்கட்டம் தான் என்று சொல்லப்படுகின்றது. அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் இடம்பெற்ற 16 சொற்கள் கொண்ட வாக்கியம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அந்த வசனத்தின் பொருள் "ஈராக் யுரெனியத்தை ஆபிரிக்காவில் இருந்து கொள்வனவு செய்வதற்கு முயற்சிப்பதாக பிரித்தானிய நம்பகமாக தெரிவித்துள்ளது".என்பது தான் சர்சைக்குரிய அந்த வாசகம்.(C.I.A) யால் எழுதி அதன் தலைமை நிர்வாகியால் சரிபார்க்கப்ட்ட இந்த உரையில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை ஆனால் அமெரிக்க அதிபர் புஷ் தனது உரையில் இதனை சேர்த்திருந்தமை அவருடைய தவறு என்று George Tenet பகிரங்கமாக அறிவித்து பெரும் சர்சையை ஏற்படுத்தினார்.அப்பொழுதே இருவருக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் தோன்றியிருந்ததாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதை தொடர்ந்து மேற்கொள்ளகப்பட்ட அரசியல் அழுத்தங்களால் George Tenet இந்த தவறுக்கான தார்மீக பொறுப்பை தான் ஏற்பதாக அறிவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதும் இது குறித்த விசாரணைக்கு முகம் கொடுத்ததும் அவருக்கு பாரிய தாக்ங்களை ஏற்படுத்திவிட்டதாக கருதப்படுகின்றது.
ஏது எப்படி இருப்பினும் ஜீலை நடுப்பகுதி வரை தனது பதவியில் George Tenet தொடர்வார் என அறிவிக்கப்ட்டுள்ளது.எதிர்வரும் நொவெம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு சாதகமான நிலைகளை பலப்படுத்துவதற்கான முயற்ச்சிகளில் ஒன்றாகவே George Tenet இந்த பதவிவிலகல் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் பயன்படுத்தப்போகின்றார் என்பது மட்டும் மறுக்கப்படமுடியாத உண்மை.
பில் கிளின்டனால் நியமிக்கப்பட்டு பின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திலும் அடித்துச்செல்லப்படால் நின்ற George Tenet எனும் கோபுரம் இப்போது மெல்லச்சரியத்தொடங்கியுள்ளது.இந்த சரிவு அமெரிக்காவில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
sooriyan.com
உலக வல்லரசை அடுத்து ஆட்சிசெய்யப்போவது யார் என்ற கேள்விக்கு விடை தேடி தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வில்லியம் புஷ்ம் ஜோன் கெரியும் தேர்தல் பிரசாரங்களில் கவனமாய் இருக்க சத்தமில்லாமல் ஒரு சங்கதி நடந்திருக்கிறது அமெரிக்காவில்.அமெரிக்க வல்லாதிக்கத்தின் பலமான தூணாக கருதப்படும் Central Intelligence Agency (C.I.A) என அழைக்கப்படும் மத்திய புலனாய்வு பிரிவின் தலைமைப்பொறுப்பிலிருந்து அதன் தலைமை நிர்வாகி George Tenet பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆட்சியை மட்டுமல்ல உலக நாடுகளின் ஆட்சியை கூட தீர்மானிக்கும் சக்தியாகவும் உலக நாடுகளை ஆட்டிவைக்கும் மந்திரமாகவும்
செயற்படும் (C.I.A) யின் தலைமை நிர்வாகி திடீரென பதவி விலகுவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதற்காகவும் உலக நாடுகளில் இடம்பெறும் முக்கியமான நகர்வுகள் குறித்து அமெரிக்க
ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காகவுமென 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவே பின்பு (C.I.A) என மாற்றம் பெற்றது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை தீhடமானிக்கும் அதிகாரிகளுக்கான புலனாய்வு தகவல்களை வழங்குவதும் இதன் மூலமாக
அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை திட்டங்களை உருவாக்குவதும் இதன் முக்கிய பணிகள்.
முத்திய புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குனர் ஜனாதிபதியின் முக்கிய ஆலொசகராக செயற்படுவதோடு ஜனாதிபதியின் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கும் நபராகவும் விளங்குவார் ஆக மொத்தத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மக்கள் ஒருவரை வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்தாலும் கூட உண்மையில் அமெரிக்காவை வளிநடத்துவது (C.I.A) யும் அதன் தலைமை இயக்குனரும் தான் என்பதே உண்மை.
சரியான நேரத்தில் மிகத்துல்லியமாக வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை வழங்கல் உலகம் முழவதிலும் தேவையான தகவல்களை திரட்டுவதற்குரிய புலனாய்வு நகர்வுகளை திட்டமிடல் இவற்றின் மூலம் அமெரிக்க வல்லாதிக்கத்தை உலக நாடுகள் அனைத்திலும் ஏற்படுத்தல் முதலான முக்கிய பணிகள் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் என்ற பெயர்பத்ததின கீழ் நடத்தப்படுகின்றன.
உலகில் எங்கெல்லாம் பிளவுகளும் குழப்பங்களும் தோன்றுகின்றதோ அங்கெல்லாம் இந்த (C.I.A) யின் தாக்கம் நேரடியாகவோ அன்றி அறைமுகமாகவோ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலகில் அனைத்து நாடுகளிலும் (C.I.A) Agents உலவிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆவர்களை அடையாளம் காண்பது முதலில் கடினம்.ஒரு நாட்டு அரசியலில் பெறமதிக்க ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஒருவர் (C.I.A) யின் Agent ஆக செயற்பட்டுகொண்டிருப்பார் ஆனால் யாருக்கும் அவருடைய இரண்டாவது முகம் தெரிந்திருக்க வாய்பில்லை.குறிப்பிட்ட நாட்டில் அமெரிக்கா கண்வைத்து விட்டால் போதும் அவர் மூலமாகவே தான் விரும்பியதை எல்லாம் சாதித்துக்கொள்ளும்.ஆட்சியில் உள்ள அரசை கவிழ்கவும் முடியும் கட்டுக்கோப்பான அமைப்புகளை பிளவுபடுத்தவும் இதனால் முடியும்.எப்படி இது சாத்தியம் என்றால் இரண்டு
காரணங்களை சொல்லலாம் ஒன்று அமெரிக்காவின் High Technology மற்றையது சுகபோக வாழ்விற்காக எதையும் செய்யத்
துணிந்தவர்களை சரியாக அடையாளம் காணும் திறமை.
இவையிரண்டும் போதும் அமெரிக்கா தான் விரும்பியபடி எல்லாம் உலகத்தை ஆட்டுவிக்க.
இப்படியாய் பலம் படைத்த ஒரு அமைப்பின் உயர் நிலையிலிருந்து ஒருவர் திடீரென
இராஜினாமாச்செய்வதாக அறிவித்துள்ளார் என்றால் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய மர்ம
முடிச்சுக்கள் இலகுவில் அவிழ்க்கப்பட முடியாதவை என்பது தான் உண்மை.
கிரேக்க குடியேற்ற வாசிகளான பெற்றோருக்கு 1953 ஜனவரி மாதம் 5ம் திகதி
அமெரிக்காவின் தலைநகரான நியூயோர்கில் ஜேர்ஜ ரெனட் பிறந்தார்.அமெரிக்காவின் உயர்நிலை பல்கலைக்கழகங்களான Georgetown
மற்றும் Columbia பல்கலைக்களகங்களில் பட்டப மேற்படிப்புகளை இவர் முடித்திருந்தார்.
பில் கிளின்டனின் ஆட்சிக்காலத்தின் முதல் 3 வருடகாலம் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் கடமையாற்றிய இவர்
(C.I.A) யின் உதவி நிர்வாகியாக 95/96 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்ட இவர் பின்னர் 97ம் ஆண்டு முதல் (C.I.A) யின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
97 ம் ஆண்டு முதல் இன்று வரை 7 ஆண்டுகள் (C.I.A) ஐ பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் தலைமை தாங்கி வழிநடத்தியவர் இந்த முடிவிற்க தள்ளப்பட காரணம் எதுவாக இருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செப் 11 அமெரிக்காவின் Image ஐ சரியச்செய்த விமானத்தாக்குதல்களை தடுத்து நிறுத்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தவறிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்ளுக்கான பதில் இதுவரை கூறப்படவில்லை. இதனை அடுத்து எதிர்க்கடச்சிகள் கூட இவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியிருந்தமையும் இங்க நினைவு கூறத்தக்கது. உலகத்கின் மூலை
முடுக்கெல்லாம் முக்கை நழைத்து முகர்ந்து பார்க்கும் (C.I.A) .அமெரிக்க பாதுகாப்பு குறித்து போதுமான அக்கறையை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை அதிகம்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போகின்றார்கள் என்ற தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியமைக்கான காரணம் என்ன ? என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டியவர் George Tenet ஆனால் அவரிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை எனவே தான் அந்த கேள்வி
அவரிடம் கேட்கப்பட முன்பாகவே பதவியை இராஜினாமாச்செய்வதாக அவர் அறிவித்திருக்கவேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.இதிலும் ஒரளவிற்கு உண்மை இருக்கலாம் செப் 11 தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்ற வேளை George Tenet
முன்னாள் புலனாய்வதுறை உயர் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட போது அவர் தெரிவத்த கருத்து அமெரிக்காவை மட்டுமல்ல உலகநாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்தது.செப் 11 போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் அளவிற்கு அமெரிக்க புலனாய்வு பிரிவு மாற்றி அமைக்கப்பட வேண்டுமானால் குறைந்தது 5 ஆண்டுகள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்,அதில் உள்ள
யதார்த்தம் உண்மையானது.என்னதான் பணம் படைத்த செல்வந்த நாடாக தன்னை இனம் காட்டிக்கொண்டாலும் அமெரிக்கா ஒரு பிச்சைக்கார நாடு தான்.அது தனது வளத்தின் பெரும் பகுதியை இராணுவ மேலாதிக்க செயற்பாடுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்காகவுமே செலவிட்டுவருகின்றது. புலனாய்வு பணிகளுக்கு அது செலவிடும் தொகை போதுமானதாக இல்லை எனவே புலனாய்வுத்துறையை நவீனமயப்படுத்தி கட்டி எழுப்ப 5 ஆண்டுகள் தேவைப்படும் என்று அவர் கூறிறது உண்மை தான்.ஆனால் அந்த காரணங்களையும் வியாக்கியானங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் விசாரணைக்குழு இல்லை அது தனது விசாரணைகளை நிறைவு செய்து அது குறித்த அறிக்கையை எதிர்வரம் ஜீலை மாதம் வெளியிடவிருக்கின்றதுஅதில் (C.I.A) யின்
கவனமின்மைக்கும் கண்டுகொள்ளாமைக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு George Tenet யே சாரும் எனவே எதற்கு வம்பு என பதவி பறிக்கப்பட முன் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ள இவர் நினைத்திருக்கலாம். ஈராக் மீதான அமெரிக்க போர் தேவையற்ற ஒன்று என இப்போது பரவலாக குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ள நிலையில் ஈராக் மீதான அமெரிக்க படைநடத்துகைககுரிய காரணங்களை உருவாக்கி மக்களை மயங்கவைத்து ஈராக் போருக்கான ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட் முயற்ச்சிகளின் பின்னணியில் இருந்த முக்கிய நபர் George Tenet.
ஈராக் மீதான அமெரிக்க போர் அமெரிக்க ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவு.துணை ஜனாதிபதி டிக் செனி அமnரிக்க இராஜாங்க அமைச்சர் ரிச்சரட் ஆர்மிடேஜ் வெளியுறவத்துறை அமைச்சர் கொலின் பௌவல பாதுகாப்பு துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் போன்ற மிக முக்கிய அமைச்சர்களுடன் கூட அமெரிக்க ஜனாதிபதி கலந்து பேசவில்லை ஈராக் மீது போர் தொடுக்கப்பட வேண்டும் என்ற தனது சுயலாபம் கருதிய நோக்கத்தையே செயற்படுத்தினார் அதற்கு புலனாய்வு பிரிவுத் தலைவர் George Tenet ம் மிக முக்கிய
காரணம் என அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளர் Woodward எழுதிய நுலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நுல் அமெரிக்காவில் தற்போது ஏற்படுத்தியுள்ள பரபரப்பும் George Tenet ன் பதவி விலகலுக்கான காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அமெரிக்க வல்லாதிக்கத்தின் நிலைகளை வீழ்ச்சியடையச்செய்த செப் 11 தாக்குதல் மற்றும் ஈராக் மீதான பேர் என்பவற்றின் பின்னணியில் மிகமுக்கிய சூத்திரதாரியாக செயற்படப்ட George Tenet இந்த பாதிப்புகளுக்குரிய தார்மீக பொறப்பை ஏற்று பதவி விலகுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு கட்சிகளினது இருவேறு ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர் என்ற பெருமை George Tenet க்கு உண்டு.
இப்போதைய பதவி விலகலுக்கு இந்த அரசியல் கூட ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. George Tenet ன்தவறான வழிநடத்துகையில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தனது செல்வாக்கை இழந்துள்ளார்.எனவே George Tenet வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றி வலும்பெற்று கருத்து முரண்பாடாக வளாந்துவிட்டதாகவும் இதனை அடுத்தே George Tenet பதவிவிலகும் முடிவை அறிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. இதில் கூட உண்மை இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது காரணம் (C.I.A) யின் புதிய தலைவராக பொறுப்பேற்கவிருப்பவர் John McLaughlin தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ற்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் தான் குறிப்பிடாத விடயங்களை அமெரிக்க அதிபர் சேர்த்து வாசித்துள்ளார் என George Tenet பகிரங்கமாக அறிவித்து அமெரிக்க அதிபரை சங்கடத்திற்குள்ளாக்கியதும் இந்த முரண்பாடுகளின் உச்சக்கட்டம் தான் என்று சொல்லப்படுகின்றது. அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் இடம்பெற்ற 16 சொற்கள் கொண்ட வாக்கியம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அந்த வசனத்தின் பொருள் "ஈராக் யுரெனியத்தை ஆபிரிக்காவில் இருந்து கொள்வனவு செய்வதற்கு முயற்சிப்பதாக பிரித்தானிய நம்பகமாக தெரிவித்துள்ளது".என்பது தான் சர்சைக்குரிய அந்த வாசகம்.(C.I.A) யால் எழுதி அதன் தலைமை நிர்வாகியால் சரிபார்க்கப்ட்ட இந்த உரையில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை ஆனால் அமெரிக்க அதிபர் புஷ் தனது உரையில் இதனை சேர்த்திருந்தமை அவருடைய தவறு என்று George Tenet பகிரங்கமாக அறிவித்து பெரும் சர்சையை ஏற்படுத்தினார்.அப்பொழுதே இருவருக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் தோன்றியிருந்ததாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதை தொடர்ந்து மேற்கொள்ளகப்பட்ட அரசியல் அழுத்தங்களால் George Tenet இந்த தவறுக்கான தார்மீக பொறுப்பை தான் ஏற்பதாக அறிவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதும் இது குறித்த விசாரணைக்கு முகம் கொடுத்ததும் அவருக்கு பாரிய தாக்ங்களை ஏற்படுத்திவிட்டதாக கருதப்படுகின்றது.
ஏது எப்படி இருப்பினும் ஜீலை நடுப்பகுதி வரை தனது பதவியில் George Tenet தொடர்வார் என அறிவிக்கப்ட்டுள்ளது.எதிர்வரும் நொவெம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு சாதகமான நிலைகளை பலப்படுத்துவதற்கான முயற்ச்சிகளில் ஒன்றாகவே George Tenet இந்த பதவிவிலகல் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் பயன்படுத்தப்போகின்றார் என்பது மட்டும் மறுக்கப்படமுடியாத உண்மை.
பில் கிளின்டனால் நியமிக்கப்பட்டு பின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திலும் அடித்துச்செல்லப்படால் நின்ற George Tenet எனும் கோபுரம் இப்போது மெல்லச்சரியத்தொடங்கியுள்ளது.இந்த சரிவு அமெரிக்காவில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

