04-26-2006, 06:44 AM
தாக்குதல் தொடர்ந்தால் பதில் தாக்குதல்: புலிகள் எச்சரிக்கை
திருமலையில் முப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்பு இராணுவத் தாக்குதல்கள் நடத்த நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளதாவது:
திருகோணமலையில் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆர்ட்டிலரிகளாலும் பீரங்கிகளாலும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதல் நீடித்தால் தற்பாதுகாப்பு இராணுவத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர் என்றார் புலித்தேவன்.
திருமலை நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன்,
தற்போதும் நடைமுறைப்படுத்தக் கூடிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எந்த ஒருதரப்பும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை. ஆனால் யுத்த நிறுத்தம் இப்போது இல்லை என்றார் அவர்.
சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறுகையில்,
இது ஒரு கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைதான். இதைத் தடுக்கலாம். மீண்டு மீண்டும் எண்ணிக்கையின்றி படைத்தரப்பினர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றார்.
http://www.eelampage.com/?cn=25780
திருமலையில் முப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்பு இராணுவத் தாக்குதல்கள் நடத்த நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளதாவது:
திருகோணமலையில் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆர்ட்டிலரிகளாலும் பீரங்கிகளாலும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதல் நீடித்தால் தற்பாதுகாப்பு இராணுவத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர் என்றார் புலித்தேவன்.
திருமலை நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன்,
தற்போதும் நடைமுறைப்படுத்தக் கூடிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எந்த ஒருதரப்பும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை. ஆனால் யுத்த நிறுத்தம் இப்போது இல்லை என்றார் அவர்.
சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறுகையில்,
இது ஒரு கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைதான். இதைத் தடுக்கலாம். மீண்டு மீண்டும் எண்ணிக்கையின்றி படைத்தரப்பினர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றார்.
http://www.eelampage.com/?cn=25780

