Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி அவசியமா?
#1
வாரம் ஒரு விடயம் ஆராய்வோம் என்ற கேள்விக்கு பலரின் ஆதரவு கிடைத்தமையால் இந்த வாரம் புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி அவசியமா? என்ற தலைப்பை ஆரம்பிக்கின்றேன்.
நாங்கள் எடுத்துக்கொள்ளும் தலைப்புக்கள் யாராவது ஒருவருக்காவது பிரயோசனப்படவேண்டும். தயவு செய்து யாரும் இங்கு தேவையற்ற உரையாடல்களை வைக்காதீர்கள்.

இந்த தலைப்பை ஒழுங்கு படுத்தி தரவேண்டிய பொறுப்பை எங்கள் மதனிடம் ஒப்படைத்துக்கொண்டு

புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் தமிழ் கற்கவேண்டிய அவசியம் பற்றி பலர் தெரிந்து கொள்வதில்லை சுவிற்சலாந்து நாட்டில் இரண்டு மாநிலங்களில் தமிழ் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன்.
உங்கள் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கூறலாம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
நல்ல தலைப்பு ஆரோக்கியமாக விவாதிக்கலாம்

வியாசன் இந்த தலைப்பை இராவணன் அண்ணாவும் யாழினியும் ஒழுங்குபடுத்தி தருவார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
Quote:இந்த வாரம் புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி அவசியமா?
இந்த வாரம் மட்டுமல்ல. எப்போதும் புலம் பெயர் நாட்டுக்குழந்தைகளுக்கு தமிழ்க் கல்வி அவசியமே!

..
Reply
#4
தமிழ் படிக்கிறதால அந்தக் குழந்தைகள் பெறும் பெறப் போகும் நன்மைகள் என்ன...??!

பிறகு தமிழும் தமிழர்களதல்ல.. திராவிடர்களது.. பார்பர்ணியத்தது மொழி... இந்து சமய ஆதிக்கம் உள்ள மொழி...தென்னிந்திய பின்னணி கொண்டது என்று புறக்கணிப்பதாகச் சொல்லி பாலியல் வக்கிரங்களைக் கொட்டி... நீர் உமது மேதாவித்தனம் மொக்கு மரமண்டை இப்படியான செந்தமிழ் பேசி மட்டுறுத்தினர் சிலரைக் குசி ஏத்தி பார்க்கிறதெண்டா..இதோட எங்கள் கருத்தை நிறுத்திக்கிறம்...! சிலவேளை குருவிகள் கருத்தாட்டாட்டி சில சனம் பதட்டம் அடையாமல் நல்ல கருத்துக்களை வைக்கலாம்.. பார்வையாளரா இருந்து பாப்பம்..! Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:பாலியல் வக்கிரங்களைக் கொட்டி... நீர் உமது மேதாவித்தனம் மொக்கு மரமண்டை இப்படியான செந்தமிழ் பேசி மட்டுறுத்தினர் சிலரைக் குசி ஏத்தி பார்க்கிறதெண்டா..
யாருக்கு இது? கருத்தினை ஆரம்பித்து வைத்த வியாசனுக்கா? அல்லது தட்டச்சு தவறா?

..
Reply
#6
Quote:புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் தமிழ் கற்கவேண்டிய அவசியம் பற்றி பலர் தெரிந்து கொள்வதில்லை சுவிற்சலாந்து நாட்டில் இரண்டு மாநிலங்களில் தமிழ் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன்.
தம்பி இது எண்டால் உண்மைதான் முக்கியமாக குழந்தைகளின் படிப்பில் அக்கரை எடுக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே... ஊரில் இருந்தால் பக்கத்தி வீடடுப் பிள்ளை அங்கை ரீயுசனுக்கு போகுது இஞ்சை ரீயுசனுக்கு போகுது எண்டு சொல்லி பிள்ளைகளை ஓட ஓட விரட்டும் பெற்றோh வெளிநாடு போனதும் பிள்ளைகளின் படிப்பில் அதிகம் அக்கரை எடுப்பதில்லை... இதுக்கு ஒரு காரணம் அளவுக்கதிகமான பணம் பெற்றோரின் கைகளில் பிளங்குவதால் அவர்களுக்கு பிள்ளைகள் படித்துத்தான் சல்ல நிலைக்கு வரவேண்டும் எண்ட எண்ணம் வருவதில்லை.... எத்தனையோ சிறுபிள்ளைகள் தாய் மொழிகூடத் தெரியாமல் இருக்கிறார்கள் எண்டால் இதுக்கு பெற்றோர்கள் தான் காரணம் ஏன் இவர்களுக்கு தமிழ்கூடச் சொல்லிக் கொடுக்க றேரமில்லையா அல்லது தமிழ் படிப்பது நாகரீகக் குறைவு என நினைக்கிறார்களா.....இப்ப இதுக்கு ஆசிரியர் வைச்சு சொல்லிக் கொடுக்க கூடியநிலை வந்து விட்டது...
எங்கை போய் முடியப்போதோ தெரியலையடா சாமி.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
புலம்பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ் நிச்சயமாக அவசியம். வருங்கால தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் மொழி படித்தால் தான் தமிழர் என்கிற அடையாளத்தோட வாழலாம். வெளி நாட்டில் பிள்ளைகளை தமிழ் படிக்காவிட்டால், அடையாளமே இழந்து தமிழ் மொழியும அழிந்து போய் விடும்.
இங்கு தமிழ் மொழி சுவிஸ் பாடசாலைகளில் ஒரு மொழியாக பதிவு செய்யப்படுகிறது. புள்ளித்தாளிலும் தாய்மொழி என்பதில் தமிழ்மொழி படிக்கிற பிள்ளைகளின் புள்ளிகள் பதியப்படுகிறது. இப்படி ஐயோராப்பிய அரசாங்கங்களே எமது மொழியை அங்கீகரித்து அதற்குரிய இடத்தை கொடுக்கும் போது எங்களை போன்ற தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிக்காமல் இருக்கலாமா?
ஆனால் இங்கு இரவு பகல் வேலை செய்வதால் பெற்றோருக்கு நேரம்கிடைப்பதும் கஸ்ரம் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதற்கு.
Reply
#8
இணையத்தில் படித்த சில கருத்துக்கள்

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர் தமிழ் கல்வி நிறுவனங்கள் தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த முயற்சியில் சிலர் இதை வியாபாரமாகவும், சிலர் தமது குறுகிய நோக்கிலும், பலர் பரந்த நோக்கிலும் செயற்படுகின்றனர்.

இந்த முயற்சியில் ஈடுபடும் 99 வீதம் பேர் தமிழ் கல்வி புலம் பெயர்ந்த இந்தக் குழந்தைகளுக்கு, ஏன் தேவை என்பதை புரியாத நிலையில் தமிழைக் கற்பிக்கின்றனர். கற்பிப்போர், பெற்றோர், குழந்தைக்கு ஏன் தமிழைக் கற்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கு சரியான நிலையில் இருந்து இக்கல்வியைப் புகட்டாமையினால், இந்த முயற்சி எதிர்காலத்தில் பலத்த தோல்வியை ஏற்படுத்தும் விடயமாகவுள்ளது.


பொதுவாக இன்று குழந்தைக்கான கல்வி புகட்டலில் பெற்றோரும், கற்பிப்போரும் கடைப்பிடிக்கும் அடிப்படை என்ன எனப் பார்ப்போம்.

1) புலம் பெயர்த்த நாடுகளில் உள்ள மொழி தெரியாத பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையில் ஒரு தொடர்பு பாலமாக தமிழைப் பயன்படுத்தல்.

2) மொழி தெரிந்த, தெரியாத பெற்றோர்கள் ஊரில் உள்ள தமது பெற்றோருடன், உறவினருடன் தொடர்புகொள்ள.

3) நாட்டுக்கு திரும்பிச் செல்ல, என நினைக்கும் ஒரு கணிசமான பகுதியினர்.

4) நாம் தமிழர் எனவே தமிழ் தெரிய வேண்டும் என்போர்.

இந்த வரையறையைத் தாண்டி அல்லது உள்ளடக்கிய தமிழ் கல்வி சிறு அளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் புகட்டப்படுகிறது. இது பரந்த அளவில் புகட்டப்படாமையும், அதை புறக்கணிப்பதும், சிறுமைப்படுத்துவதும் பெரும்பான்மையாக உள்ளது.

இது ஏன்? என்ற கேள்வியின் ஊடாக தமிழ் கல்வி கற்பிக்கும் நோக்கை எடுத்துக்கொள்வோமாயின் அது ஒரு குறுகிய எல்லை கொண்டதாக அமைவது ஒரு அடிப்படையாகும்.

உதாரணமாக பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் ஆங்கிலம் தெரிந்தால், அல்லது வேறு ஒரு பொது மொழி தெரிந்தால், அங்கு தமிழ் கல்வி தேவையற்றது ஆகிவிடுகிறது. இதேபோல் பெற்றோரின் பெற்றோருக்கும் (பேரர்மாருக்கு) அம்மொழி தெரிந்துவிடின் அங்கு தமிழ் மொழி தேவையற்றது ஆகிவிடுகிறது. எனவே தமிழர் தமிழ் கற்கவேண்டும் என்ற கருத்து பின்னர் தேவை அற்தாகிவிடுகின்றது.

அதாவது தமிழ் கற்பிக்கும் நோக்கம் பரந்த அடிப்படையில் ஏன் தேவை என்பதைப் புரிந்து கொள்ளாத வரை இந்த கற்பித்தல் என்பது ஒரு நிலையில் களைத்துப் போன, அவசியமற்ற, நேர விரையோகம் கொண்ட விடையமாக கற்பிப்போருக்கும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் எற்படும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வது அவசரமான விடையமாகும்.

இன்று உலகில் உள்ள ஆயிரக்கணக்காண மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் உலகில் அதிகமாக பேசும் மொழிக் கூட்டத்தினருள் முதல் 15வது இடத்தினுள் உள்ளது. இருந்த போதும் தமிழ் இன்று சமூகத்தின் வாழ்வை தீர்மானிக்கும் ஒரு தனிமனித பொருளாதார ஏற்றத் தாழ்விற்கு பங்களிக்க முடியாத நிலை உள்ளது. அதேவேளை தமிழ் புறக்கணிப்பும் இன்னும் ஒரு அம்சமாகும்.

புலம் பெயர்ந்த நாங்கள் இங்கு தமிழை எமக்கிடையில் பரிமாறுவது கூட அந்த நாட்டு மொழி எந்தளவிற்கு தெரிகிறது என்பதுடன் தொடர்புடைய விடையமாகியுள்ளது. அப்படி உள்ள போது குழந்தைக்கு தமிழ் கற்பிப்பது என்பது கடினமாக உள்ளது. அதுவும் குழந்தை இந்த மண்ணில் பிறந்து இந்த நாட்டு மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளும் போது அக்குழந்தை தமிழைக் கற்கும் தேவை அற்றதாகிறது.

மொழி என்பது ஒரு மக்கள் கூட்டத்துடன் தொடர்பு கொள்ள மட்டுமே இருந்து போது, இன்று உலகில் பொருள் தேடும் விடயத்துடன் தொடர்புடையதாகவும், சீரழிந்தும் உள்ளது. குழந்தைக்கு அந்தத் தேவை இங்குள்ள மொழியால் தீர்க்கப்படும் பட்சத்தில் ஏன் தமிழ் மொழி தேவை என்பது குழந்தையின் நிலையாகிவிடும். தமிழ் மொழி என்பது ஏன் தேவை? என்ற கேள்வியை எழுப்பாத, அதை கற்கை நெறிக்குள் உள்ளாக்காத தமிழ் கல்வி என்பது வரையறுக்கப்பட்ட எல்லையுடன் முடிவிற்கு வரும்.

எம்மைப் பொறுத்தவரையிலும் சரி, குழந்தையைப் பொறுத்த வரையிலும் சரி ஏன் தமிழ் கல்வி தேவை என்று கேட்பின் அது ஒரே ஒரு அடிப்படை விடையத்தை மட்டும் சார்ந்துள்ளது. அது நாம் இங்கு இரண்டாந்தரப் பிரஜை என்பதால் மட்டுமேயாகும். நாம் கறுப்பர்களாக இருப்பது, மூன்றாம் உலகத்தவர்களாக இருப்பது, வறிய நாட்டு மக்களாக இருப்பது என்ற ஒரே ஒரு அடிப்படை மட்டுமே தமிழ் கற்கக் கோருகிறது. அதாவது நான் யார்? எனது சொந்த அடிப்படை என்ன? நாம் ஏன் இங்கு வந்தோம்? ஏன் மூன்றாம் உலக நாடுகள் வறுமையில் உள்ளது? நிற வேற்றுமை என்றால் என்ன? என்ற கேள்விகளில் இருந்தே தமிழ் கற்கும் தேவை எழுகிறது.

நாம் இங்கு இரண்டாந் தரப் பிரஜையாக, வேண்டப்படாத பிரஜையாக உள்ளோம். எம்மீதான நிற, இன, அகதி என்ற போர்வையில் ஒரு தாக்குதலை எல்லாத் துறையிலும் சந்திக்கின்றோம்.

நாம் இந்த மக்கள் கூட்டத்துக்கு ஒரு மனிதனாக அடையாளப் படுத்து முடியாத நிலை மட்டுமே எமது சொந்த அடையாளத்தை தேடவைக்கிறது. அந்த சொந்த அடையாளம் என்பது தமிழை வெறுமனே தெரிந்து கொள்வதனால் மட்டும் தீர்ந்து விடுவதில்லை. தமிழை நான் ஏன் கற்க வேண்டும் என்ற கேள்வியை, குழந்தைக்குப் புகட்டும் போது பெற்றோர் கற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அநேகமாக 99வீதமான பெற்றோர் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரே சூனிய நிலையில் உள்ளனர். சோறு, அதன் கறியைப் பற்றியும், உடுப்பைப் பற்றியும், மலிவு விலைப் பட்டியலைப்பற்றியும்,.. .. ... என எண்ணற்ற விடயத்தை உப்புச் சப்பின்றி கதைக்கும் பெற்றோர் உலகில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி தெரியாது உள்ளனர்.

தமக்கு எதிராக இந்த நாடுகளில் உருவாக்கிவரும் சட்டங்கள், புதிய ஒடுக்கு முறைகளைப் பற்றியும் தெரியாது உள்ளனர். இந்த நிலையில் தான் குழந்தைகள் ஏன் தமிழ் கற்க வேண்டும் என்ற கேள்வியை அவர்கள் முன் கேட்க வேண்டி உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை தமிழ் மொழிக் கல்விக் கூடாக சொல்லாத வரை குழந்தையோ, பெற்றோரோ தமிழ் கல்வி மீதான தேவையான ஆர்வத்தைப் பெற முடியாது.

இன்னும் ஒரு பக்கத்தில் எமது குழந்தைகள் தமிழ் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ தமிழ் சினிமாப் பாடல்களை பாடுகின்றனர். அந்த சொற்களில் சில அர்த்தங்கள் தெரிந்தும், தெரியாத வகையில் அந்தப் பாடல்களை தெரிந்து கொள்கின்றனர்.

இங்கு ஒரு குழந்தை, ஒரு பாடலை, கதையை ரசிக்கின்றது, விரும்புகின்றது என்பது தமிழை கற்க விரும்புகிறது என்று யாரும் கருதி முயற்சி எடுப்பின் அது ஒரு பொய்ப் படமாகவே அது இருக்கும்.

ஆர்வம், விருப்பு என்பது வேவ்வேறு நோக்கத்தைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மீதான ஆர்வம் என்பது அதை ஏன் கற்க வேண்டும் என்ற ஒரே விடையில் மட்டுமே ஏற்பட முடியும்.
<b> . .</b>
Reply
#9
Quote:தமிழ் மீதான ஆர்வம் என்பது அதை ஏன் கற்க வேண்டும் என்ற ஒரே விடையில் மட்டுமே ஏற்பட முடியும்.

இது தான் எனது கருத்தும் கிருபன். தமிழ் கற்பதால் என்ன பயன் என்பதை நாம் உணர்த்த வேண்டும். வெறுமனே தமிழ் கற்பிக்கவேண்டும் என்று சொல்வதாலும், தமிழ் நமது அடையாளம் என்று சொல்வதாலும் பயனில்லை. அது நம்மைப் போன்றவர்களுக்கு சரியாக இருக்கலாம் - ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்து வளரும் நம்மவர் குழந்தைகளுக்கு அதுவல்ல யதார்த்தம். அவர்களுக்கு தமிழால் என்ன நன்மை என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும். அதுதவிர தமிழை வளப்படுத்தவேண்டும் - தமிழ் நவீனமயப்படுத்தப்படவேண்டும்! அதனில் கவர்ச்சி இருக்கவேண்டும்.

மேலும் கருத்தெழுத விருப்பம்தான் - நேரம் அனுமதிககவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்துக்களை முழுமையாக வைக்கின்றேன்.

வியாசன் உங்கள் தலைப்பு ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்தலுக்கு வழிசெய்துள்ளது. நன்றிகள். தொடருங்கள்.


Reply
#10
சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள், பெரும்பாலும் இலங்கையில் காணப்படும் புத்தகங்களை ஒத்திருக்கின்றன, இவை இங்கு வாழும் குழந்தைகளுக்கு தமிழை ஊட்டமுடியுமா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக, கழுதை பொதி சுமக்கும் கதையும், பனை மரத்தைப் பற்றிய கதையும், அவற்றினை நேரில் பார்க்காத குழந்தைகளுக்கு தமிழில் விருப்பத்தை உருவாக்கமாட்டா. எனவே புலம்பெயர் சூழலில் காணப்படுபவற்றையே புத்தகங்களில் புகுத்த வேண்டும்.

மேலும், புலத்தில் உள்ள குழந்தைகளுக்குத் தமிழ் முதல் மொழியா, இரண்டாவது மொழியா என்று யோசிக்கவேண்டும். நாம் சிந்திக்கும்போது எந்தமொழியில் எமக்குள்ளேயே விவாதம் செய்யுகின்றோமோ அதுவே எமது முதல் மொழியாக இருக்கும். ஊரில் பிறந்து வளர்ந்தவர்களுக்குத் தமிழ் முதல் மொழிபோல், இங்கு பிறந்த குழந்தைகளுக்கு, அவர்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள மொழிதான் முதல் மொழியாக இருக்கும் (4 - 5 வயது வரை தமிழில் பேசினாலும், பின் அது சில குழந்தைகளுக்கு மறந்துவிடுகின்றது)

எனவே தமிழை இரண்டாவது மொழியைக் கற்பிக்கும் முறையில் கற்பிக்கவேண்டும்.
<b> . .</b>
Reply
#11
யாரவது புலத்தில் உள்ள சூழலுக்கேற்ப இங்குள்ள பிள்ளைகளைக் கவரும் வண்ணம் புத்தகங்களை வெளியிடலாமே? அப்படி யாரவது வெளியிட்டிருந்தால் அறியத்தரலாமே.கணனி மென் தட்டுக்கள் எதாவது உள்ளனவா?
Reply
#12
Quote:தமிழ் படிக்கிறதால அந்தக் குழந்தைகள் (புலத்தில் உள்ள குழந்தைகள்) பெறும் பெறப் போகும் நன்மைகள் என்ன...??!

இங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ள..இருந்தும்... ஒரு மொழியைக் கற்க வேண்டின்..அது வாழும் சூழலில் கொண்டுள்ள ஆதிக்கம் தாக்கம் பயன்பாடு முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்..அதனடிப்படையில் இங்கு வைக்கப்பட்ட கருத்துக்கள் செம்மையாக மேலே வினவப்பட்ட வினாவிற்கு விடைதரவில்லை...இதே கேள்வியுடன் குறிப்பாக ஆங்கில மொழித்தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் வாழும் பெற்றோரும் குழந்தைகளும் இருக்கின்றனர் என்பதைக் கருத்தாடுபவர்கள் கவனத்தில் கொண்டு வழங்கும் கருத்தில் வெற்றுப்பதங்களுக்குப் பதில் விபரம் தருவது...சிறப்பானதாவும் பயன்மிக்கதாகவும் இருக்கும்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
பரந்துபட்ட அளவில் தமிழ் மொழியின் ஆதிக்கம் இல்லாமையினாலேயே இப்படியான கேள்விகள் எழுகின்றன. ஒரு மொழி பரந்துபட்ட அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் அம்மொழியில் புதுப்புது சொற்களை உருவாக்கி அறிவியல் சம்மந்தமான அனைத்து நூல்களும் அம்மொழியில் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். தற்போது இந்தியாவில் தமிழிற்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பதால் சில நம்பிக்கைதரும் சில விடயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. எமது பிள்ளைகளுக்கு எமது தாய் மொழி கற்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தினால்த்தான் அவர்களும் விரும்பி முழுமனதோடு கற்க முன் வருவார்கள். இதற்கு நாம் இதுவரை என்ன செய்திருக்கின்றோம். மொழிக்கல்விக்கான புத்தகங்களை புலத்தில் வெளியீடுவோர் கூட பணம் பண்ணும் நோக்கிலேயே செயற்படுகின்றார்களே தவிர பிழையான தமிழ்க்கல்வி பிள்ளைகளைச் சென்றடைவதுபற்றி கவலைப்படுவதில்லை. முதலில் பிள்ளைகள் பயப்படுவதே தமிழ்மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கையைப் பார்த்தே. அதனால் உயிர் எழுத்தை குறிப்பிட்ட வயது வரை பின் மெய் எழுத்ஐத குறிப்பிட்ட வயதுவரை அதுபோல் உயிர்மெய் எழுத்தை குறிப்பிட்ட வயதிற்குப்பின் என அட்டவணைப்படுத்தி அவர்கள் பயத்தையும் ஆரம்பத்திலேயே போக்கினால்த்தான் அவர்களும் பயமின்றி படிப்பார்கள். அதுபோல் படிப்பிக்கும் முறைகளிலும் தேவையான மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இவற்றை நாம் நேரத்தோடு செய்யாதுவிட்டால் புலத்தில் எமது 3வது தலைமுறையிடம் தழிழைத் தேடித்தான் பிடிக்க வேண்டும். என்னடா இவன் ஏதோ தலையங்கத்திற்கு ஏதேதோ எல்லாம் எழுதுகின்றானென்று யோசிக்காதீர்கள். ஒரு விடயத்தின் அடிப்படைத் தவறுகளை சிந்திக்காது மேலோட்டமாக விடயத்தை அலசுவதில் எந்தவித பலனுமில்லை. முக்கியமாக எமது பிள்ளைகள் தமிழ்மொழி அறந்திருந்தால்த்தான் உலகமெல்லாம் பரந்து வாழும் எம் உறவினருடனோ அல்லது அவர்களின் பிள்ளைகளுடனோ பேச முடியும். ஆம் தமிழ்தான் அவர்களுக்கு இணைப்பு மொழி. சிலர் கேட்கலாம் ஏன் ஆங்கிலத்தையும் இணைப்பு மொழியாகப் பாவிக்கலாமென்று. ஆனால் ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்றில்லை. அத்தோடு எத்தனை பெற்றோர்களுக்கு சராசரியான ஆங்கில அறிவு உண்டு. எனவே முதலில் நம் பிள்ளைகளிற்கு இலகுவாக தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு வழி சமைப்போம்
Reply
#14
உங்களுடைய கருத்துக்கள் ஏற்புடையவைதான். வசம்புவின் கருத்துடன் நான் ஒத்துப்போகின்றேன். இங்கு புத்தகங்களை வெளியிடுவோர் தங்கiளுடைய புலமையை காண்பிப்பதில்தான் அக்கறை காட்டுகின்றனர். பிள்ளைகளைப்பற்றி அதிகம் அக்கறை காண்பிப்பதில்லை. அவர்களுடைய சுமையை புரிந்து கொள்வதில்லை. உதாரணமாக இங்கு குழந்தைகளுக்கு முதலில் பாடம் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களை விளையாட படம் கீற விட்டுவிடுகின்றார்கள். பிள்ளைகள் இதனால் பாடசாலையை வெறுக்காமல் போவதற்கு விரும்புகின்றார்கள். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்கள் மொழியில் அதிக எழுத்துக்கள் இருப்பது பிள்ளைகளுக்கு மிகவும் சிரமம். அதனால் பிள்ளைகளுக்கு இலகுவான பாடமுறையை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயாத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனம் இருக்கின்றது. ஒருமுறை அவர்களுடைய கூட்டம் ஒன்றுக்கு சென்றபோது அங்கு ஆசிரியர்கள் பலர் குறைபாடுகளை சுட்டிக்காட்டியபோது அவர்கள் அதை திருத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தட்டிக் கழிப்பதில் அதிக கவனம் செலுத்தினர்.

குழந்தைகளை அவர்கள் காணும் பொருட்களின் ஊடாக கற்பித்தலை ஆரம்பித்தல் நன்று இங்கு நாம்காணும் பொருட்களை கொண்டு பாடத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
புகையிரதம் என்ற சொல் தற்போது பாவனைக்குதவாது. புகையிரதம் என்று நாங்கள் சொல்லிக் கொடுத்தால் எங்கு புகை வருகின்றது என்று கேட்கக்கூடிய அறிவான குழந்தைகள் இப்போதைய குழந்தைகள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை வையுங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#15
முதலிலை இந்தத் தலைப்பே தவறு. தமிழ் சிறார்மட்டுமன்றி எந்த ஒரு குழந்தைக்கும் அக்குழந்தை எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழிக் கல்வியென்பது அவர்களது வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்பது உளவியல் வல்லுனர்களினால் கண்டறியப்பட்டு பலநாட்டு அரசுகளினாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கிறதாலைதான் நாங்கள் வாழும் புலம் பெயர் நாடுகளிலையும் எம்மவர் சிறார்களின் தமிழ் மொழிக் கல்விக்கு இந்நாட்டு அரசுகளால் பலவித உதவிகளும் ஊக்குவிப்புகளும் கொடுக்கப்படுகிறது. ஆனபடியால் தமிழ் கல்வி அவசியமா என்பதைவிட்டு தமிழ் கல்வியை எவ்விதம் இலகுவில் குழந்தைகள் விரும்பும் விதத்தில் அவர்களுக்குக் கொடுக்கலாம் என்ற பாதையில் விவாதிப்பது சிறந்ததென நினைக்கிறன்.
10 வருடங்களாக எங்கட தமிழ் குழந்தையளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறவன் என்ற முறையில் சில விசயங்களைச் சொல்லுறன். நான் இருக்கிற ஜேர்மனியைப் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 75 வீதத்துக்கும் அதிகமான எங்கட சிறுவர் 120க்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் மூலம் தமிழ் படிக்கினம். இவர்களின்றை தமிழ் அறிவும் அவர்கள் தமிழ்மொழி பாவனையும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலுள்ள நம்மவர் குழந்தைகளைவிட தரத்தில் சிறந்ததாகவே உள்ளது. ஆரம்பகாலங்களில் ஈழத்தில் பாவளையிலுள்ள அதே பாடப்புத்தகங்களே இங்கும் பாவிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்நிலை மாறி நவீன கற்பித்தல் முறைகளுடனான புலம்பெயர் சிறார் இரண்டாவது மொழியாகத் தமிழை இலகுவில் கற்பதற்குரிய புத்தகங்கள் பாவனைக்கு வந்துவிட்டன. இவற்றின்மூலம் பார்த்தல அல்லது வாசித்தல், கேட்டல், எழுதுதல் ஆகிய மூன்று வழிகளிலும் குழந்தைகள் கல்வி நெறிப்படுத்தப்படுகிறது. இந்தப்புத்தகங்களும் இவற்றின் இணைப்புக்களாக சிறுவகுப்புக்களில் கற்கும் குழந்தைகள் கேட்டற்குரிய ஒலி இறுவெட்டுக்களும் அவர்களை ஓரளவுக்கு விருப்புடன் தமிழ் கற்க உதவுகின்றன.
ஆலையில்லாத ஊரிலை இலுப்பம்புூ சக்கரையாம் என்றதுபோல புலம்பெயர் நாடுகளிலை தமிழைப் போதிக்க தகைமையுடைய ஆசிரியர்கள் இல்லாததாலை இருக்கி மற்றவை அந்த இடத்தை நிரப்ப முற்படுவது பெரும் இடையுூறாக உள்ளதுடன் பல பின்னடைவுகளையும் தருகிறது என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. இவர்களிடம் போதிய தமிழறிவு இல்லாததுமட்டுமன்றி காலவதியாகிப்போன பழைய கற்பித்தல் முறைகளும் மாணவர்களைக் கையாளும்விதங்களும் சிறார்கள் மத்தியில் தமிழ் மீதான ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது. ஒருகாலத்திலை குருகுலமுறையில் குரு சிஸ்யன் கற்பித்தல்முறை இருந்தது. பின்பு ஆசிரியர் மாணவர் என்ற முறை வந்தது. இன்றைய காலத்துக்கு அதுகூட தவறென்று சொல்ல வேணும். தங்களிடம் இல்லாத ஒன்றைத் தேடுபவர்களும் அவர்களுக்குpரிய சரியான பாதையைக் காட்டும் வழிகாட்டி என்பதுவுமே பொருத்தமானதென நினைக்கிறன். நான் பெரும்பாலும் 7 வகுப்புக்கு மேற்பட்ட சிறார் என்பதைவிட இளைஞர்களுக்குத்தான் தமிழ் அறிவுூட்டுகிறேன். எனது வகுப்பிலை ஆசிரியர் மாணவர் என்ற நிலையை தாண்டி நட்புரீதியல்தான் பிள்ளைகள் படிக்கினம். பாடப்பத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு படிக்காமல் அவர்களுக்கு ஈடுபாடுள்ள கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள், சினிமா, பாடல்கள், கவிதை இப்படிப் பலதையும் எடுத்துக் கையாண்டு அவற்றினு}டாக தமிழை ஈடுபாட்டுடன் தேடத் து}ண்டப்படுகிறார்கள். இதனாலை தாங்கள் படிக்கிறதென்று தெரியாமலே அவர்கள் படிக்கிறார்கள். நான் பரீட்சித்தவரையில் இது நல்லபலனையே தந்திருக்கிறது. உதாரணத்திற்கு இன்று என்னிடம் எட்டாம் வகுப்பில் கல்விகற்கும் ஆறுமாணவர்களும் கிட்டத்தட்ட 3ஆண்டுகளுக்குமுன் 5வகுப்பில் என்னுடன் இணையும்போது இவர்களது தமிழ் பரீட்சைப் பெறுபேறுகள் தரம் 3, 4 என்றளவில் இருந்து அடுத்தவகுப்பில்அவர்களதுபெறுபேறுகள் தரம் 2,3 என்ற அளவிற்கு வந்து கடைசியாக இரண்டுமாதங்களுக்கு முன் நடந்த பரீட்சையில் ஏழாம் வகுப்பில் கல்விகற்ற ஆறுவரில் 4 மாணவர்கள் 1தரத்தில் சித்தியடையுமளவிற்கு அவர்களது கல்வித்தரம் உயர்ந்தது பெரு மகிழ்ச்சியாக இருக்கு. இதை இப்ப நான் பந்தாவுக்காகச் சொல்லவரேல்லை இதைப்படிக்கிறவையளிலை தமிழாசான்கள் இருந்தால் தயவுசெய்து அவையளும் இதுமாதிரியான அல்லது இதைவிடச் சிறந்த உத்திகளைத் தேடி பிள்ளைகளை ஈடுபாட்டுடன் படிக்க வழிகாட்டுங்கோ அப்பதான் தமிழ் வாழும்.
Reply
#16
நன்றி அம்பலத்தார் உங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு, நீங்கள் பாவித்த ,பாவிங்கின்ற புத்தகங்களையும் இறுவெட்டுக்களையும் பெறும் வழிகளையும் மேலும் அவை பற்றிய விபரங்களையும் இங்கு பகிர்ந்துகொண்டால், ஜேர்மனியைப் போன்று மற்றைய நாடுகளில் உள்ளோரும் உங்கள் முறமைகளைப் பயன்படித்தி தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கலாம் அல்லவா?
Reply
#17
கனடாவில் அண்மையில் நடைபெற்ற தமிழ்மொழிவாரம் பற்றி தமிழ்நாதத்தில் வந்த கட்டுரைகளிலிருந்து சில துளிகள்.....

தமிழ் வளர்ச்சி என்பதும் தமிழ்ப்பற்று என்பதும் தமிழ்ப் பாதுகாப்பு என்பதும் அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழியை அழியவிடாமல் அடைகாத்து கையளிப்பதில்தான் இருக்கிறது.

நடந்து முடிந்த தமிழ்மொழி வாரம் தமிழ் மக்களிடையே தமிழ் மொழி, பண்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே கொண்டாடப்பட்டது. முக்கியமாக <b>தமிழ்மொழியைப் படிப்பதில் மாணவர்கள் ஏன் பின்நிற்கிறார்கள்? அதற்கான தடைகள் எவை? </b>என்பவற்றைக் கண்டறிந்து அவற்றைக் களைவதே தமிழ்மொழி வாரத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதையொட்டிய பிற குறிக்கோள்களும் இருந்தன. அதற்கு இசையவே தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு என்று முழக்கம் முன்வைக்கப்பட்டது.

<b>மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கு மட்டும் தேவைப்படும் கருவி இல்லை. அதற்கும் மேலாக மொழி என்பது ஒரு இனத்தின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகிய விழுமியங்களையும் வெளிகாட்டும் கருவி ஆகும்.</b>

தமிழ்மொழி என்பது தமிழ்மக்களது வாழ்வியலில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். தமிழ்மொழி தமிழர்களது வாழ்வியலின் சகல துறைகளிலும் தளங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்மொழி வாரம் இந்த இலக்கினைத் தொட்டதா? அதில் வெற்றி கண்டதா? என்பதை மீள் பார்வை செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இதில் கூறப்படும் கருத்துக்களை செரிக்கும் மனப்பாங்கு தொடர்புள்ளவர்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் தமிழ்மொழி வார முதல்நாள் நிகழ்ச்சியே தடுமாற்றத்தோடு தொடங்கியது.

தமிழ்மொழி பயன்பாட்டுக்கு ஊடகங்களின் பங்கு என்ன என்பதைப் பேச வந்த ஊடகவியலாளர்களில் இரண்டொருவர் அந்தப் பங்களிப்பைப் பற்றிப் பேசாமல் தமிழில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கி தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற வேண்டுகோளுக்கு விடை இறுப்பது போல் பேசினார்கள். அவர்கள் முன்வைத்த வாதங்கள் பின்வருமாறு-

1) வடமொழிச் சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழில் இல்லை.

2) தமிழ்மொழி தனித்து நிற்க முடியாது. ஆங்கில மொழியின் செல்வாக்குக் காரணம் அது பிறமொழிகளிடம் ஏராளமான சொற்களைக் கடன் வாங்கி இருப்பதே.

3) தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அது மக்களுக்கு விளங்காது. செய்திகள் மக்களைச் சென்று அடையவேண்டும் என்றால் வடமொழிச் சொற்களை பயன்படுத்தியே ஆக வேண்டும்.

இந்த வாதங்கள் மிகவும் சொத்தையானவை. தங்களுக்கு இருக்கும் தமிழ் அறிவுப் பஞ்சத்தை மூடி மறைக்க பழியைத் தமிழ்மொழி மீது ஏற்றுகிறார்கள். இவர்களுக்கு மறைமலை அடிகளார் 1946 இல் தொடக்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் பற்றிய வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

மறைமலை அடிகளார் தொடக்கி வைத்த தனித்தமிழ் இயக்கத்தை அவருக்குப் பின்வந்த தமிழ்த் தென்றல் திரு. வி..க.பரிதிமாற்கலைஞர்;, திருமதி தி. நீலாம்பிகை அம்மையார், பாவேந்தர் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இரா. இளங்குமாரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் முன்னெடுத்தார்கள். அதன் பயனாக தமிழ் மொழியை மூடியிருந்த அழுக்கு நீக்கப்பட்டு அதன் தூய்மை காக்கப்பட்டது. மொழித் தூய்மைதான் தமிழை என்றுமுள தென்தமிழாக இளமையுடன் வாழவைக்கும். வாழ வைத்திருக்கிறது. மொழித் தூய்மை கெட்டபோதுதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் பிறந்தன..................



தமிழ்மொழி வாரத்தின் தொனிப்பொருள் என்ன தெரியுமா? <b>'தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு</b>" என்பதாகும். அதாவது தமிழ் வாழ்ந்தாலே தமிழர் வாழ்வார் என்பதாகும்.

தமிழ் ஊடகங்களைப் பொறுத்தளவில் தமிழ் வாழ்ந்தாலே அவை வாழ முடியும் என்பது சொல்லாமலே விளங்கும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழை மறந்தால் தமிழ் ஊடகங்கள் மறைந்து விடும். அவற்றுக்கான தேவை இல்லாது போய்விடும். எனவே தமிழின் வாழ்வில் மற்றவர்களைவிட ஊடகவியலாளர்களுக்கே அதிக அக்கறை இருக்க வேண்டும்.

தமிழ் வாழ தமிழ்மொழியை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம், தமிழ்மொழியின் இலக்கிய வளம் பற்றி எடுத்துச் சொல்வோம், தமிழின் தொன்மை பற்றி எழுதுவோம், தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்போம் எனப் பேசுவார்கள் என்றுதான் எவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பேரளவு அப்படி எதுவும் நடைபெறவில்லை.

கலப்புத் தமிழ்தான் பேசுவோம், அப்படிப் பேசினால்தான் நாங்கள் சொல்ல வேண்டிய செய்தி மக்களைப் போய் சேரும் என்று இன்னொரு ஒலிபரப்பாளரும் முன்னைய ஒலிபரப்பாளரை வழிமொழிந்து பேசினார்.

தெரியாமல்தான் கேட்கிறேன், <b>ஆங்கில ஊடகவியலாளர்கள் யாராவது இப்படிப் பேசுகிறார்களா? மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக கலப்பு ஆங்கிலத்தில் பேசுகிறார்களா? பேசத்தான் முடியுமா?</b>

ஆங்கிலமொழி ஒலி, ஒளிப்பாளர்கள் பேசும்போதும் சரி, செய்தி வாசிக்கும் போதும் சரி, இலக்கணத்தோடுதான் பேசுகிறார்கள். இலக்கணத்தோடுதான் எழுதுகிறார்கள். அதுமட்டுமல்ல பேசும் போதும் சொற்களைச் சரியாக உச்சரிப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். இதனால் பிபிசியின் ஒலி, ஒளி பரப்பு ஆங்கிலம் 'அரசியார் ஆங்கிலம்" (Queens English) என்ற சிறப்புப் பெற்று ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

உலகில் இன்று தமிழ்மொழிப் பயன்பாட்டில் முடிந்த மட்டும் தூய தமிழ்ப் பயன்படுதப்படல் வேண்டும் என்பதில் தமிழீழ நிழல் அரசே மிகக் கூடுதலான அக்கறை காட்டி வருகிறது. அதற்காக முனைப்போடு செயல்பட்டும் வருகிறது என்பது வெள்ளிடமலை.

1992 ஆம் ஆண்டிலேயே விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் <b>'மக்கட் பெயர் அகர வரிசை</b>" என்ற நூலை வெயிட்டுத் தூய தமிழ்ப் பெயர்களைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இட்டு வழங்க வழிகாட்டியது. அதனைத் தொடர்ந்து <b>'நடைமுறைத் தமிழ் வழிகாட்டி</b>" என்ற நூல் வெளியிடப்பட்டது. ஏறத்தாழ 1,800 பிறமொழிச் சொற்களுக்கு, பெரும்பாலும் வடமொழிச் சொற்களுக்கு, நேரான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது

இந்த நூலின் முகவுரையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது,

<b>'வட சொற்களும் திசைச் சொற்களுமாகக் காலந்தோறும் தமிழிடையே பிறமொழிச் சொற்கள் எண்ணுக்கணக்கற்று வந்து கலப்பதாலே, தமிழின் தூய்மையும் தனித்தன்மையும் பாழ்பட்டு வருவதனைத் தமிழராகிய நாம் உணர்ந்து கொள்ளாதிருக்கின்றோம். இந்நிலை தொடருமாயின் 'மெல்லத் தமிழினிச் சாகும்" என்பது திண்ணம்.</b> Idea
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)