08-29-2005, 07:34 PM
தமிழீழத் தேசியத் தலைவருக்கு எதிராக சதி: ஜேர்மனியில் ஆனந்தசங்கரி ஒப்புதல் வாக்குமூலம்!!
ஜேர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து பிரபகாரனை விரைவில் அகற்றப் போவதாகவும், வன்னியை சிங்கள இராணுவம் கைப்பற்ற வரைபடம் கொடுத்து காட்டி கொடுத்ததாகவும் தமிழீழத் தேசியக் கொடியை உருவாக்க பிரபாகரனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் தேசத்துரோக பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.
ஆனந்தசங்கரியின் உண்மை முகத்தை எமது படிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவே எமது ஜேர்மன் செய்தியாளர் அனுப்பியுள்ள விவரத்தை முழுவதுமாக தருகிறோம்.
நிகழ்வு விவரம்:
ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் கூட்டம் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் இது நடைபெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கருத்தரங்கில் 40க்கும் குறைவானோரே கலந்து கொண்டனர். இலங்கையின் இன்றைய அரசியல் நிலை என்ற பெயரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைக்கும், தமிழ்மக்களுக்கும் எதிரான கருத்துக்களை ஆனந்தசங்கரி முவைத்தார்.
அவ்வேளைகளில் கூடியிருந்த 40 பேரிலும் பெரும்பானமையானோர் குறுக்கிடுவது அடிக்கடி நிகழ்ந்தது.
தனது உரையை ஆனந்தசங்கரி தொடங்கிய போது உள்நாட்டு, வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும், வெக்ரோன் தொலைக்காட்சியையும் மிகவும் தரக்குறைவாக சாடினார்.
இந்த ஊடகங்கள் தன்னை மதிப்பதில்லை என்பதற்காகவே அவர் சாடியதை அவரது உரை எடுத்துக்காட்டியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனை விட தனக்கே அதிக அக்கறை உள்ளது என்று கூறியதுடன், புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் சந்திரிகாவுடன் பேசி ஒரு மாதத்துக்குள் சமாதானத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்றும் கூறினார்.
இந்தக் கருத்தைக் கேட்ட அரங்கிலிருந்த அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.தொடர்ந்து பேசிய ஆனந்தசங்கரி, புரிந்துனர்வு ஒப்பந்தத்தையும் நோர்வேத் தரப்பின் பிரதிநிதி எரிக் சொல்கைமையும் குறை கூறினார்.
இதுவரை 5,000 ற்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் நடந்ததெனவும், இதில் 2,500 யுத்த மீறல்கள் பாரதூரமற்றதென்றும் 100 யுத்த நிறுத்த மீறல்கள் இராணுவத்தாலும், 2,400 யுத்த நிறுத்த மீறல்கள் விடுதலைப் புலிகளாலும் நடைபெற்றதாகவும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் உனக்கு ரோசமில்லையா, உன் தோல் தடித்து விட்டதா என்று தான் எரிக் சொல்கைமை நோர்வேயில் சந்தித்தபோது கேட்டதாகவும் கூறினார்.
தேசியக் கொடியேற்றம்- யுத்த நிறுத்த மீறலாம்
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தேசியக் கொடி ஏற்றியது ஏன் என்றும் அது பாரிய யுத்த நிறுத்த மீறல் என்றும் தேசியக் கொடியை உருவாக்க புலிகளுக்கு அதிகாரம் தந்தது யார் என்றும் ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பினார்.
இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஆவேசத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டோரில் ஒருவர், 17,000 ற்கும் மேற்பட்ட போராளிகளினது தியாகத்தினால் உருவான தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ, தமிழ்த் தேசிய உருவாக்கத்தையோ விமர்சிக்கும் தகுதியோ அல்லது உரிமையோ உங்களுக்குக் கிடையாது என்றும், அந்த விடயத்தை விடுத்து உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.
தொடர்ந்து ஆனந்தசங்கரி பேசும்போது புலிகளின் தடுப்பு முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் வரி வசூலிப்பதாகவும் இதற்கான அதிகாரத்தை பிரபாகரனுக்கு கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.
கிளிநொச்சி மாவட்டம் தன்னால் உருவாக்கப்பட்டதென்றும், அதனை அபிவிருத்தி செய்வதானால் தன்னிடம் அறிவுரை கேட்க வேண்டுமென்றும் முன்னுக்குப் பின் முரணாகவும் ஆனந்தசங்கரி பேசினார்.
ஆழிப்பேரலை அழிவைப் பற்றிப் பேசும்போது மனிதாபிமானமற்ற முறையில் சிங்களவன் பகுதியென்றும் தமிழன் பகுதியென்றும் இயற்கை அழிவில் அரசியல் லாபம் தேட முற்பட்டார்.
எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாதாம்
பொதுக்கட்டமைப்பை முற்றுமுழுதாக எதிர்த்ததுடன் அந்நிய நாடுகளின் பிடியில் தமிழீழத்தை அடகு வைக்கும் கருத்துகளையும் முன்வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா கூறுபடாமல் இருக்கும் வரை தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன், எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாது என்று ஒரு துரோகத்தனமான வார்த்தையை மேசையில் கையால் அடித்துச் சொன்னார்.
அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் போட்டதும், இளைஞரை உணர்ச்சிவசப்பட வைத்து இரத்தப் பொட்டு வைக்கச் செய்ததும், வாக்களியுங்கள் நாளை தமிழீழம் அமைப்போம் என்று கூறியபோதெல்லாம் இந்தியா ஒத்துழைக்காது என்பது தெரியாமலா இருந்தீர்கள்.
நீங்கள் உங்கள் அரசியல் வங்குரோத்துத்தனத்தால் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினார்.
வன்னியைக் கைப்பற்ற சிங்களவனுக்கு வரைபடம் கொடுத்ததே நான்தான்!
சந்திரிகாவிற்கு யாழ்ப்பாண வரைபடத்தைக் காட்டி புலிகள் ஆனையிறவு முகாமுக்கு அருகில் வெட்டுக்காடு, கௌதாரிமுனை போன்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் தான் எடுத்துக் கூறியதாகக் கூறியபோது ஒருவர் எழுந்து ஐயா ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்திற்கு வன்னியைக் கைப்பற்ற பாதை காட்டிக் கொடுத்தது நீங்கள் தானே என்று கேட்டார்.
நான் நில அளவையாளர் இல்லையென்று ஆனந்தசங்கரி குதர்க்கமாக பதிலளித்தார். மக்களின் தொடரான கேள்விகள் மூலமாகவும், தடுமாற்றத்தின் காரணமாகவும் முதிர்ந்த அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி மூக்குடைபட்ட அரசியல்வாதியாக தலைதொங்கிப் போனார் ஆனந்தசங்கரி.
விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து விரைவில் பிரபாகரன் அகற்றமாம்!எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஓரிரு மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் வேறொருவர் இருப்பார் என்று கூறியபோது அதற்கான வேலையைச் செய்துவிட்டா வந்தீர்கள் என்று மக்கள் ஆவேசமாகக் கேட்டனர்.
முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஆனந்தசங்கரியைப் பார்த்து ஐயா இதுவரை நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் இந்திய- இலங்கை கூட்டுச்சதியால் தமிழீழ தேசியத்தை, தமிழீழ உருவாக்கத்திற்கான கருத்தியலை புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து உடைத்தெறியும் செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று புரிகின்றது என்றும்,
விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், தமிழீழ உருவாக்கத்திற்கு எதிரான கருத்துடைய உங்களைப் போன்றவர்கள் என்றாவது ஓர் நாள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று எச்சரித்தார்.
கூட்டத்தின் முடிவில் ஓர் முதிர்ந்த அரசியல்வாதி என்று கருதப்பட்ட ஒருவரின் தமிழீழ உருவாக்கத்திற்கெதிரான வரலாற்றுத் துரோகத்தனத்தின் முகம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது என்று மக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்..
பி.கு: அனந்தசங்கரியின் இப் பேச்சைப்பார்த்து அவரை வாழ்த்தவிரும்பும் தோழர்கள் தங்கள் மனதுக்குள் பேசிக்கொள்ளவும்..(களத்தை நாறடிக்காதீர்கள்)
_________________
«ôÀʧ Í ¾É¢¨¸ ¦ºöÐ ¯í¸û ¸Õò¨¾ ¦º¡øÖ¸ø
þÃŽý «ñ½¡¨Å þÃÅ¢ø ¦¾¡ó¾Ã× ¦ºö §Åñ¼¡õ
ஜேர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து பிரபகாரனை விரைவில் அகற்றப் போவதாகவும், வன்னியை சிங்கள இராணுவம் கைப்பற்ற வரைபடம் கொடுத்து காட்டி கொடுத்ததாகவும் தமிழீழத் தேசியக் கொடியை உருவாக்க பிரபாகரனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் தேசத்துரோக பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.
ஆனந்தசங்கரியின் உண்மை முகத்தை எமது படிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவே எமது ஜேர்மன் செய்தியாளர் அனுப்பியுள்ள விவரத்தை முழுவதுமாக தருகிறோம்.
நிகழ்வு விவரம்:
ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் கூட்டம் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் இது நடைபெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கருத்தரங்கில் 40க்கும் குறைவானோரே கலந்து கொண்டனர். இலங்கையின் இன்றைய அரசியல் நிலை என்ற பெயரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைக்கும், தமிழ்மக்களுக்கும் எதிரான கருத்துக்களை ஆனந்தசங்கரி முவைத்தார்.
அவ்வேளைகளில் கூடியிருந்த 40 பேரிலும் பெரும்பானமையானோர் குறுக்கிடுவது அடிக்கடி நிகழ்ந்தது.
தனது உரையை ஆனந்தசங்கரி தொடங்கிய போது உள்நாட்டு, வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும், வெக்ரோன் தொலைக்காட்சியையும் மிகவும் தரக்குறைவாக சாடினார்.
இந்த ஊடகங்கள் தன்னை மதிப்பதில்லை என்பதற்காகவே அவர் சாடியதை அவரது உரை எடுத்துக்காட்டியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனை விட தனக்கே அதிக அக்கறை உள்ளது என்று கூறியதுடன், புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் சந்திரிகாவுடன் பேசி ஒரு மாதத்துக்குள் சமாதானத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்றும் கூறினார்.
இந்தக் கருத்தைக் கேட்ட அரங்கிலிருந்த அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.தொடர்ந்து பேசிய ஆனந்தசங்கரி, புரிந்துனர்வு ஒப்பந்தத்தையும் நோர்வேத் தரப்பின் பிரதிநிதி எரிக் சொல்கைமையும் குறை கூறினார்.
இதுவரை 5,000 ற்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் நடந்ததெனவும், இதில் 2,500 யுத்த மீறல்கள் பாரதூரமற்றதென்றும் 100 யுத்த நிறுத்த மீறல்கள் இராணுவத்தாலும், 2,400 யுத்த நிறுத்த மீறல்கள் விடுதலைப் புலிகளாலும் நடைபெற்றதாகவும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் உனக்கு ரோசமில்லையா, உன் தோல் தடித்து விட்டதா என்று தான் எரிக் சொல்கைமை நோர்வேயில் சந்தித்தபோது கேட்டதாகவும் கூறினார்.
தேசியக் கொடியேற்றம்- யுத்த நிறுத்த மீறலாம்
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தேசியக் கொடி ஏற்றியது ஏன் என்றும் அது பாரிய யுத்த நிறுத்த மீறல் என்றும் தேசியக் கொடியை உருவாக்க புலிகளுக்கு அதிகாரம் தந்தது யார் என்றும் ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பினார்.
இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஆவேசத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டோரில் ஒருவர், 17,000 ற்கும் மேற்பட்ட போராளிகளினது தியாகத்தினால் உருவான தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ, தமிழ்த் தேசிய உருவாக்கத்தையோ விமர்சிக்கும் தகுதியோ அல்லது உரிமையோ உங்களுக்குக் கிடையாது என்றும், அந்த விடயத்தை விடுத்து உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.
தொடர்ந்து ஆனந்தசங்கரி பேசும்போது புலிகளின் தடுப்பு முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் வரி வசூலிப்பதாகவும் இதற்கான அதிகாரத்தை பிரபாகரனுக்கு கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.
கிளிநொச்சி மாவட்டம் தன்னால் உருவாக்கப்பட்டதென்றும், அதனை அபிவிருத்தி செய்வதானால் தன்னிடம் அறிவுரை கேட்க வேண்டுமென்றும் முன்னுக்குப் பின் முரணாகவும் ஆனந்தசங்கரி பேசினார்.
ஆழிப்பேரலை அழிவைப் பற்றிப் பேசும்போது மனிதாபிமானமற்ற முறையில் சிங்களவன் பகுதியென்றும் தமிழன் பகுதியென்றும் இயற்கை அழிவில் அரசியல் லாபம் தேட முற்பட்டார்.
எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாதாம்
பொதுக்கட்டமைப்பை முற்றுமுழுதாக எதிர்த்ததுடன் அந்நிய நாடுகளின் பிடியில் தமிழீழத்தை அடகு வைக்கும் கருத்துகளையும் முன்வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா கூறுபடாமல் இருக்கும் வரை தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன், எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாது என்று ஒரு துரோகத்தனமான வார்த்தையை மேசையில் கையால் அடித்துச் சொன்னார்.
அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் போட்டதும், இளைஞரை உணர்ச்சிவசப்பட வைத்து இரத்தப் பொட்டு வைக்கச் செய்ததும், வாக்களியுங்கள் நாளை தமிழீழம் அமைப்போம் என்று கூறியபோதெல்லாம் இந்தியா ஒத்துழைக்காது என்பது தெரியாமலா இருந்தீர்கள்.
நீங்கள் உங்கள் அரசியல் வங்குரோத்துத்தனத்தால் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினார்.
வன்னியைக் கைப்பற்ற சிங்களவனுக்கு வரைபடம் கொடுத்ததே நான்தான்!
சந்திரிகாவிற்கு யாழ்ப்பாண வரைபடத்தைக் காட்டி புலிகள் ஆனையிறவு முகாமுக்கு அருகில் வெட்டுக்காடு, கௌதாரிமுனை போன்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் தான் எடுத்துக் கூறியதாகக் கூறியபோது ஒருவர் எழுந்து ஐயா ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்திற்கு வன்னியைக் கைப்பற்ற பாதை காட்டிக் கொடுத்தது நீங்கள் தானே என்று கேட்டார்.
நான் நில அளவையாளர் இல்லையென்று ஆனந்தசங்கரி குதர்க்கமாக பதிலளித்தார். மக்களின் தொடரான கேள்விகள் மூலமாகவும், தடுமாற்றத்தின் காரணமாகவும் முதிர்ந்த அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி மூக்குடைபட்ட அரசியல்வாதியாக தலைதொங்கிப் போனார் ஆனந்தசங்கரி.
விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து விரைவில் பிரபாகரன் அகற்றமாம்!எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஓரிரு மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் வேறொருவர் இருப்பார் என்று கூறியபோது அதற்கான வேலையைச் செய்துவிட்டா வந்தீர்கள் என்று மக்கள் ஆவேசமாகக் கேட்டனர்.
முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஆனந்தசங்கரியைப் பார்த்து ஐயா இதுவரை நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் இந்திய- இலங்கை கூட்டுச்சதியால் தமிழீழ தேசியத்தை, தமிழீழ உருவாக்கத்திற்கான கருத்தியலை புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து உடைத்தெறியும் செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று புரிகின்றது என்றும்,
விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், தமிழீழ உருவாக்கத்திற்கு எதிரான கருத்துடைய உங்களைப் போன்றவர்கள் என்றாவது ஓர் நாள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று எச்சரித்தார்.
கூட்டத்தின் முடிவில் ஓர் முதிர்ந்த அரசியல்வாதி என்று கருதப்பட்ட ஒருவரின் தமிழீழ உருவாக்கத்திற்கெதிரான வரலாற்றுத் துரோகத்தனத்தின் முகம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது என்று மக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்..
பி.கு: அனந்தசங்கரியின் இப் பேச்சைப்பார்த்து அவரை வாழ்த்தவிரும்பும் தோழர்கள் தங்கள் மனதுக்குள் பேசிக்கொள்ளவும்..(களத்தை நாறடிக்காதீர்கள்)
_________________
«ôÀʧ Í ¾É¢¨¸ ¦ºöÐ ¯í¸û ¸Õò¨¾ ¦º¡øÖ¸ø
þÃŽý «ñ½¡¨Å þÃÅ¢ø ¦¾¡ó¾Ã× ¦ºö §Åñ¼¡õ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

