09-25-2005, 12:43 PM
[ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2005, 18:06 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டோக்கியோவில் 2003 ஆம் ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிற்கு அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய நாடுகளைக் கொண்டு இணைத் தலைமை நாடுகள் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவையும் இந்த இணைத் தலைமை நாடுகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகள் கூட்டத்தின் போது அமெரிக்காவில் இருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கே. நட்வர்சிங்கும் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணங்களினால் அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்திய அதிகாரிகள் எவரும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது வெளிப்படையான அழைப்பு அல்ல தனிப்பட்ட அழைப்பே என்று நோர்வே தரப்பினர் கூறியிருக்கக் கூடும்.
இந்தியாவை இணைத் தலைமை நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக நோர்வேக்கு அழுத்தங்கள் தரப்பட்டதாக செய்திகள் கூறுகிறது. வேண்டா வெறுப்பாகவே நோர்வேயும் இந்தியாவையும் அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி, இந்திய அமைச்சர் நட்வர்சிங் திட்டமிட்டபடியான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அக்கூட்டத்தில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
நியூயோர்க்கில் இந்திய அமைச்சர் நட்வர்சிங்கை நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் சந்தித்துப் பேசினாலும் அது இருதரப்பு பேச்சுகள் என்றளவில் இருந்தது.
ஜான் பீற்றர்சுடனான சந்திப்பின் போது சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளைத்தான் மீண்டும் முன்வைத்துள்ளதோடு, படைகளில் சிறார் சேர்ப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
www.puthinam.com
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டோக்கியோவில் 2003 ஆம் ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிற்கு அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய நாடுகளைக் கொண்டு இணைத் தலைமை நாடுகள் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவையும் இந்த இணைத் தலைமை நாடுகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகள் கூட்டத்தின் போது அமெரிக்காவில் இருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கே. நட்வர்சிங்கும் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணங்களினால் அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்திய அதிகாரிகள் எவரும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது வெளிப்படையான அழைப்பு அல்ல தனிப்பட்ட அழைப்பே என்று நோர்வே தரப்பினர் கூறியிருக்கக் கூடும்.
இந்தியாவை இணைத் தலைமை நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக நோர்வேக்கு அழுத்தங்கள் தரப்பட்டதாக செய்திகள் கூறுகிறது. வேண்டா வெறுப்பாகவே நோர்வேயும் இந்தியாவையும் அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி, இந்திய அமைச்சர் நட்வர்சிங் திட்டமிட்டபடியான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அக்கூட்டத்தில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
நியூயோர்க்கில் இந்திய அமைச்சர் நட்வர்சிங்கை நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் சந்தித்துப் பேசினாலும் அது இருதரப்பு பேச்சுகள் என்றளவில் இருந்தது.
ஜான் பீற்றர்சுடனான சந்திப்பின் போது சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளைத்தான் மீண்டும் முன்வைத்துள்ளதோடு, படைகளில் சிறார் சேர்ப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

