09-30-2005, 10:14 AM
ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா?
[வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2005, 06:27 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
மேற்கத்தைய நாடொன்றின் பாராளுமன்ற அரசியல்வாதியான அவர், தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான கருத்துடையவர். இதனால் எமக்கு எதிரானவர் என்ற தோற்றத்தையே தமிழர்களிடையே அவர் பெற்றிருந்தார். அவரை ஒரு வைபவத்தில் ஏதேச்சையாக சந்தித்து உரையாடிய போது, தமிழர் தரப்பைப் பற்றிக் கதையைத் திருப்பி தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது தமிழர்கள் மொழி வாரியான ஒரு இனம் என்பதையும் மூன்று மதங்களைச் சார்ந்தவர்களே தமிழர்கள் என்றும் குறிப்பிட்ட போது, அவர் அப்படியா? அவர்கள் அல்கொய்தா போன்றவர்கள் என்றும், மத அடிப்படைவாதிகள் போன்றுமல்லவா சிறிலங்கா இராஜதந்திரிகள் எனக்குத் தெரிவித்திருந்தார்கள் என்று ஆச்சரியப்பட்டார். நாங்கள் கதைத்த விடயங்கள் பல தனக்குப் புதியவை என்றார். இதன் பிற்பாடு அவர் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.
இந்த விடயத்தை சிறிலங்கா அரசு தனது பொய்ப் பரப்புரையில் வெற்றி பெற்றது என்று என்னால் நோக்க முடியவில்லை. மாறாக, தமிழர்கள் பற்றிய உண்மைத் தன்மையை மேற்படி அரசியல்வாதி விளங்கிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதோடு அவ்வாறு விளக்குவதற்கான முயற்சிகளை நாமாக தமிழர்கள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றவுணர்வே எனக்கு ஏற்பட்டது.
ஏனெனில் அவர்கள் தங்களது மக்கள், தொகுதி, நாடு, பாதுகாப்பு, கட்சியின் கொள்கை என இன்னோரன்ன பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர்கள். அவ்வாறானவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய பூரண பட்டறிவைக் கொண்டிருப்பார்கள் என்று கருதுவது நியாயமில்லை. ஆனால் இப்போது இங்கிலாந்து என்ற நாட்டின் விவகாரத்திலும் இந்த சிறிய உதாரணமே கன கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதே துரதிஸ்டவசமான உண்மை.
இதன் அர்த்தம் இங்கிலாந்து ஏதோ விடயமறியாத நாடு என்றல்ல. சகலதுமாய் அறிந்துள்ள நாடு தான் என்றாலும், தற்போதைய சமாதான காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய பார்வையேதுமில்லாத நிலையே அதனது என்பதாலேயே இந்த ஒப்பீடு.
இங்கிலாந்து ஏற்கனவே விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள நாடு. ஆதனால் எந்தவித பாதிப்புக்களையும் தமிழர் தரப்புப் பெற்றிருக்கவில்லை. மாறாக அமெரிக்க, இங்கிலாந்துத் தடைகளின் பின்னரேயே தமிழர் தரப்பு மாபெரும் வெற்றிகளைப் பெற்று அனைத்துலகின் பார்வையை தமிழீழத்தின் பக்கம் திருப்பினார்கள். ஆனால் இங்கிலாந்து தற்போது ஐரொப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியில் இருக்கிற காரணத்தாலேயே இதில் நாம் சிரத்தை கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையான இங்கிலாந்து, ஏதோ ஒரு உந்துதலால் ஒரு தீவிர பரிசீலனையற்ற அறிக்கையை வெளியிட்டு, தமிழர்களை அடக்க முனையும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தி வரும் சிங்களத்திற்கு உரமேற்றும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. தடை பற்றிய பரிசீலிப்பையே மேற்கொள்கிறோம் என்ற அறிவிப்பானது அவர்கள் தவறவிடுவதற்கு முன்னரேயே திருத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.
என்ன, ஏது என்ற தீவிர விசாரிப்புத் தன்மையற்ற ஒருதலைப்பட்சமான இந்த அறிவிப்பையே ஈழத்தமிழனின் நிரந்தரத் தலைநிமிர்விற்கான திறவுகோலாக மாற்ற முயன்றால் நிச்சயமாக தமிழர்கள் இந்த விடயத்தில் வெற்றி பெற்றேயாவார்கள்.
இவ்வாறானதொரு அறிக்கை வெளியீட்டிற்கான பின்னணி என்ன என்று பார்த்தால், சிறிலங்கா அரசின் முழு முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற உண்மை யாருக்குமே புலப்படும். ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்டு வைத்திருந்த திட்டத்தை அவர்கள் கதிர்காமரின் கொலையோடு மேற்குலகில் அரங்கேற்றினார்கள்.
<b>கதிர்காமரின் கொலையையடுத்து விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு வலுவாக முன்னெடுத்தது. இந்த நடவடிக்கை மேற்குலகு முழுவதும் உள்ள தனது தூதரகங்களினூடாகவும், கொழும்பிலிருந்து இதற்கென விசேடமாக அனுப்பப்பட்டவர்களாலும் (தமிழின எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட) மேற்கொள்ளப்பட்டன.
[b]சிறிலங்கா அரசு இவ்வாறான பிரச்சாரத்தை முன்னெடுத்த போது, விடுதலைப் புலிகளிற்கெதிரான பல பழைய ஆவணங்களையும் தற்போதைய கிழக்கு வன்முறைக்கு புலிகளே முழுப்பொறுப்பு என்பது போன்ற செய்திகளையும் மேற்குலக, ஐரோப்பிய ஊடகங்களினூடாக பல லட்சம் டொலர்கள் செலவில் பிரசுரித்தும், ஒளிபரப்பியும் இருந்தது</b>.
இவ்வாறு திட்டமிட்டு இதர நாடுகளில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய முற்று முழுதாக முயன்ற சிறிலங்காவோ தங்களது நாட்டில் அவர்களைத் தடை செய்யவில்லை. மாறாக புலிகளுடன் பேசியே நாங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்கிற மாய மந்திரத்தையே தொடர்ந்தும் உச்சரித்து கொண்டே வருகின்றார்கள்.
சிறிலங்கா அரசாங்கமே, இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யாது அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறி வரும் இவ்வேளையில், எதற்காக மேற்குலகில் மாத்திரம் தடையை ஏற்படுத்த சிறிலங்கா அரசு தீவிரமாய் முனைகிறது என்பதை ஆராய இங்கிலாந்து ஏனோ மறந்து விட்டது. இதுவே அந்த அறிக்கை இங்கிலாந்தின் தெளிவான பார்வைக்குட்படாததொன்றாக நாம் கருதுவதற்கான காரணம்.
விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களில் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புக்கள் பற்றியோ அல்லது சமாதான முயற்சிகளைக் குழப்புவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட சதிகள் பற்றியோ இங்கிலாந்து ஒரு முறையாவது பரிசீலிந்திருந்தால் இந்த அறிக்கை வெளியீட்டில் சிறிலங்கா அரசையும் கண்டித்து இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தையை நோக்கிச் செல்லுமாறு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
இம் மாதம் 19 ஆம் திகதி அமெரிக்காவில் உதவிவழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் அவசர கூட்டமொன்று நடைபெற்றது. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளிற்காக தார்மீக பொறுப்பையேற்றுள்ள அமெரிக்கா, ஐப்பான், நோர்வே ஆகிய மேற்படி இணைத்தலைமையானது களநிலைமைகளைப் பரிசீலித்து, சிறிலங்கா அரசு மற்றும் தமிழர் தரப்பு ஆகிய இரு தரப்புக்களையும் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததோடு, இரு தரப்பையும் கண்டித்திருந்தது.
இங்கிலாந்து மேற்படி இணைத் தலைமையின் அறிக்கையைப் பின்பற்றியிருக்க வேண்டும் இல்லாவிடினும், சமாதான காலத்தில் சாதகமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் யுத்தமொன்றிற்கான வழிகளை ஏற்படுத்தியது யார் என்ற அடிப்படையையாவது தள யதார்தத்தை வைத்து ஆராந்திருக்க வேண்டும்.
குரங்குப்பாஞ்சான் முகாமை விவகாரமாக்கி சமாதான முயற்சிகளைக் குழப்பியது யார்?
ஆயுதபாணிகளை உருவாக்கி, அரவணைத்து வைத்து நிழல் யுத்தத்தைத் தொடர்வது யார்?
போர்நிறுத்த ஒப்பந்தம், வட-கிழக்கிற்குப் புனர்வாழ்விற்கான உதவி வழங்கும் நாடுகளின் பங்களிப்பு, ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு என்பவற்றில் தடைகளை ஏற்படுத்துவது யார்? போன்ற ஒரு சில காரணங்களையாவது இங்கிலாந்து கவனத்தில் கொண்டிருந்தால் அது இவ்வறிக்கை வெளியீட்டைத் தவிர்த்திருக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட சிறிலங்காவின் அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் பேரிலான தாக்குதல்களிலிருந்து, நிழல் யுத்தத்தில் இருந்து தப்புவதற்கான, அவற்றைத் தடுப்பதற்கான தற்காப்பையே தமிழர் தரப்பு மேற்கொண்டு வருகிறது. எனவே இங்கிலாந்து தனது அறிக்கையில் குறிப்பிடுகின்ற பயங்கரவாதத்தை (?) தூண்டிவிட்ட சக்தி சிறிலங்கா அரசே என்பதும், தமிழர் தரப்பு அதனை எதிர்கொள்வதற்கான தற்காப்பையே மேற்கொள்கிறார்கள் என்பதும் அதற்குப் புரிய வைக்கப்பட வேண்டிய விடயங்கள்.
ஆகவேதான், தமிழர்களின் வெற்றிக்கான, நியாயத்திற்கான திருப்புமுனையாக இந்த அறிவிப்பை மாற்ற வேண்டிய உடணடிச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனையும் சார்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் தனது சுய அடையாளத்தை இழக்காமல் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இதில் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை அது ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தோடு, காரண காரியங்களை தகுந்த ஆதாரங்களோடு விளக்கும் வல்லமை பெற்ற சக்தியான தமிழர் தரப்பு இந்த விடயத்திலும் தமது இராஜதந்திரப் வழிமுறைப் பேணலை மேற்கொண்டு சிறிலங்காவின் சமாதான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதாரங்களோடு விளக்கி, சிறிலங்கா அரசையே குற்றவாளியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம், ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு போன்ற ஒப்பந்தங்களை சர்வதேச அனுசரணையுடன் தமிழர் தரப்பு மேற்கொண்டதானது, நாம் விரும்பியோ விரும்பாமலோ இதர விடயங்களையும் அவர்களிற்கு விளக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் எம்மைத் தள்ளியுள்ளது. எனவே இந்த முயற்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
அத்தோடு, அனைத்துத் தமிழர்களும், தமிழர்களின் அமைப்புக்களும் இந்தப் பணியை தமது சொந்தப் பணியாக ஏற்று, ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தால் போரே முடிவாக அமையும் என்பதனை விளக்குவதோடு, சிறிலங்காவின் கபடத் தன்மையை வெளிக்கொணரும் செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் வதியும் நாடுகளின் அரசுகளை, வெளியுறவு அமைச்சகங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தியுங்கள். உங்களுக்கு தெரிந்த பிரமுகர்கள், உங்கள் தொழில்நிறுவன அதிபர்கள் என இன்னொரன்ன வழிகளிளெல்லாம் உங்கள் கருத்துக்களை வெளிக்கொணருங்கள். நீங்கள் மாத்திரமல்லாமல் உங்கள் உறவினர்கள் மற்றும் உங்கள் பள்ளிப்பிள்ளைகள் மூலமாகவும் இந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். வெற்றியென்பது எமக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்ற உண்மையை அப்போது உணர்வீர்கள்.
வரலாறு சில சந்தர்ப்பங்களைத் தானாகவே தந்து, இனங்களின் விடுதலைக்கு வழிவகுத்து நிற்கும். அந்த வகையில் தமிழினத்தின் விடுதலைக்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான சந்தர்ப்பத்தை இங்கிலாந்து தானாகவே தந்து நிற்கிறது. போரா? சமாதானமா? தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிவகுக்கும் என்பதனை தீர்மானிக்கின்ற பொறுப்பை இங்கிலாந்தினூடாக அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மேற்குலகிற்கும் வழங்கி நிற்கிறது.
எனவே தடையகற்றல் என்பதே போரற்ற நிரந்தர சமாதானத்தையேற்படுத்தும் என்பதையும், தடையேற்பட்டால் போரே நிரந்த சமாதானத்தைப் பிறப்பிக்கும் என்பதையும் விளக்க வேண்டிய தார்மீகக் கடமையில் நாமும் இணைவோம். இன்றே செயற்படுவோம்.
அதிருப்தி மனுக்களை அனுப்ப வேண்டிய முகவரிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்.
www.puthinam.com
[வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2005, 06:27 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
மேற்கத்தைய நாடொன்றின் பாராளுமன்ற அரசியல்வாதியான அவர், தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான கருத்துடையவர். இதனால் எமக்கு எதிரானவர் என்ற தோற்றத்தையே தமிழர்களிடையே அவர் பெற்றிருந்தார். அவரை ஒரு வைபவத்தில் ஏதேச்சையாக சந்தித்து உரையாடிய போது, தமிழர் தரப்பைப் பற்றிக் கதையைத் திருப்பி தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது தமிழர்கள் மொழி வாரியான ஒரு இனம் என்பதையும் மூன்று மதங்களைச் சார்ந்தவர்களே தமிழர்கள் என்றும் குறிப்பிட்ட போது, அவர் அப்படியா? அவர்கள் அல்கொய்தா போன்றவர்கள் என்றும், மத அடிப்படைவாதிகள் போன்றுமல்லவா சிறிலங்கா இராஜதந்திரிகள் எனக்குத் தெரிவித்திருந்தார்கள் என்று ஆச்சரியப்பட்டார். நாங்கள் கதைத்த விடயங்கள் பல தனக்குப் புதியவை என்றார். இதன் பிற்பாடு அவர் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.
இந்த விடயத்தை சிறிலங்கா அரசு தனது பொய்ப் பரப்புரையில் வெற்றி பெற்றது என்று என்னால் நோக்க முடியவில்லை. மாறாக, தமிழர்கள் பற்றிய உண்மைத் தன்மையை மேற்படி அரசியல்வாதி விளங்கிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதோடு அவ்வாறு விளக்குவதற்கான முயற்சிகளை நாமாக தமிழர்கள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றவுணர்வே எனக்கு ஏற்பட்டது.
ஏனெனில் அவர்கள் தங்களது மக்கள், தொகுதி, நாடு, பாதுகாப்பு, கட்சியின் கொள்கை என இன்னோரன்ன பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர்கள். அவ்வாறானவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய பூரண பட்டறிவைக் கொண்டிருப்பார்கள் என்று கருதுவது நியாயமில்லை. ஆனால் இப்போது இங்கிலாந்து என்ற நாட்டின் விவகாரத்திலும் இந்த சிறிய உதாரணமே கன கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதே துரதிஸ்டவசமான உண்மை.
இதன் அர்த்தம் இங்கிலாந்து ஏதோ விடயமறியாத நாடு என்றல்ல. சகலதுமாய் அறிந்துள்ள நாடு தான் என்றாலும், தற்போதைய சமாதான காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய பார்வையேதுமில்லாத நிலையே அதனது என்பதாலேயே இந்த ஒப்பீடு.
இங்கிலாந்து ஏற்கனவே விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள நாடு. ஆதனால் எந்தவித பாதிப்புக்களையும் தமிழர் தரப்புப் பெற்றிருக்கவில்லை. மாறாக அமெரிக்க, இங்கிலாந்துத் தடைகளின் பின்னரேயே தமிழர் தரப்பு மாபெரும் வெற்றிகளைப் பெற்று அனைத்துலகின் பார்வையை தமிழீழத்தின் பக்கம் திருப்பினார்கள். ஆனால் இங்கிலாந்து தற்போது ஐரொப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியில் இருக்கிற காரணத்தாலேயே இதில் நாம் சிரத்தை கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையான இங்கிலாந்து, ஏதோ ஒரு உந்துதலால் ஒரு தீவிர பரிசீலனையற்ற அறிக்கையை வெளியிட்டு, தமிழர்களை அடக்க முனையும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தி வரும் சிங்களத்திற்கு உரமேற்றும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. தடை பற்றிய பரிசீலிப்பையே மேற்கொள்கிறோம் என்ற அறிவிப்பானது அவர்கள் தவறவிடுவதற்கு முன்னரேயே திருத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.
என்ன, ஏது என்ற தீவிர விசாரிப்புத் தன்மையற்ற ஒருதலைப்பட்சமான இந்த அறிவிப்பையே ஈழத்தமிழனின் நிரந்தரத் தலைநிமிர்விற்கான திறவுகோலாக மாற்ற முயன்றால் நிச்சயமாக தமிழர்கள் இந்த விடயத்தில் வெற்றி பெற்றேயாவார்கள்.
இவ்வாறானதொரு அறிக்கை வெளியீட்டிற்கான பின்னணி என்ன என்று பார்த்தால், சிறிலங்கா அரசின் முழு முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற உண்மை யாருக்குமே புலப்படும். ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்டு வைத்திருந்த திட்டத்தை அவர்கள் கதிர்காமரின் கொலையோடு மேற்குலகில் அரங்கேற்றினார்கள்.
<b>கதிர்காமரின் கொலையையடுத்து விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு வலுவாக முன்னெடுத்தது. இந்த நடவடிக்கை மேற்குலகு முழுவதும் உள்ள தனது தூதரகங்களினூடாகவும், கொழும்பிலிருந்து இதற்கென விசேடமாக அனுப்பப்பட்டவர்களாலும் (தமிழின எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட) மேற்கொள்ளப்பட்டன.
[b]சிறிலங்கா அரசு இவ்வாறான பிரச்சாரத்தை முன்னெடுத்த போது, விடுதலைப் புலிகளிற்கெதிரான பல பழைய ஆவணங்களையும் தற்போதைய கிழக்கு வன்முறைக்கு புலிகளே முழுப்பொறுப்பு என்பது போன்ற செய்திகளையும் மேற்குலக, ஐரோப்பிய ஊடகங்களினூடாக பல லட்சம் டொலர்கள் செலவில் பிரசுரித்தும், ஒளிபரப்பியும் இருந்தது</b>.
இவ்வாறு திட்டமிட்டு இதர நாடுகளில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய முற்று முழுதாக முயன்ற சிறிலங்காவோ தங்களது நாட்டில் அவர்களைத் தடை செய்யவில்லை. மாறாக புலிகளுடன் பேசியே நாங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்கிற மாய மந்திரத்தையே தொடர்ந்தும் உச்சரித்து கொண்டே வருகின்றார்கள்.
சிறிலங்கா அரசாங்கமே, இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யாது அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறி வரும் இவ்வேளையில், எதற்காக மேற்குலகில் மாத்திரம் தடையை ஏற்படுத்த சிறிலங்கா அரசு தீவிரமாய் முனைகிறது என்பதை ஆராய இங்கிலாந்து ஏனோ மறந்து விட்டது. இதுவே அந்த அறிக்கை இங்கிலாந்தின் தெளிவான பார்வைக்குட்படாததொன்றாக நாம் கருதுவதற்கான காரணம்.
விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களில் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புக்கள் பற்றியோ அல்லது சமாதான முயற்சிகளைக் குழப்புவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட சதிகள் பற்றியோ இங்கிலாந்து ஒரு முறையாவது பரிசீலிந்திருந்தால் இந்த அறிக்கை வெளியீட்டில் சிறிலங்கா அரசையும் கண்டித்து இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தையை நோக்கிச் செல்லுமாறு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
இம் மாதம் 19 ஆம் திகதி அமெரிக்காவில் உதவிவழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் அவசர கூட்டமொன்று நடைபெற்றது. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளிற்காக தார்மீக பொறுப்பையேற்றுள்ள அமெரிக்கா, ஐப்பான், நோர்வே ஆகிய மேற்படி இணைத்தலைமையானது களநிலைமைகளைப் பரிசீலித்து, சிறிலங்கா அரசு மற்றும் தமிழர் தரப்பு ஆகிய இரு தரப்புக்களையும் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததோடு, இரு தரப்பையும் கண்டித்திருந்தது.
இங்கிலாந்து மேற்படி இணைத் தலைமையின் அறிக்கையைப் பின்பற்றியிருக்க வேண்டும் இல்லாவிடினும், சமாதான காலத்தில் சாதகமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் யுத்தமொன்றிற்கான வழிகளை ஏற்படுத்தியது யார் என்ற அடிப்படையையாவது தள யதார்தத்தை வைத்து ஆராந்திருக்க வேண்டும்.
குரங்குப்பாஞ்சான் முகாமை விவகாரமாக்கி சமாதான முயற்சிகளைக் குழப்பியது யார்?
ஆயுதபாணிகளை உருவாக்கி, அரவணைத்து வைத்து நிழல் யுத்தத்தைத் தொடர்வது யார்?
போர்நிறுத்த ஒப்பந்தம், வட-கிழக்கிற்குப் புனர்வாழ்விற்கான உதவி வழங்கும் நாடுகளின் பங்களிப்பு, ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு என்பவற்றில் தடைகளை ஏற்படுத்துவது யார்? போன்ற ஒரு சில காரணங்களையாவது இங்கிலாந்து கவனத்தில் கொண்டிருந்தால் அது இவ்வறிக்கை வெளியீட்டைத் தவிர்த்திருக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட சிறிலங்காவின் அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் பேரிலான தாக்குதல்களிலிருந்து, நிழல் யுத்தத்தில் இருந்து தப்புவதற்கான, அவற்றைத் தடுப்பதற்கான தற்காப்பையே தமிழர் தரப்பு மேற்கொண்டு வருகிறது. எனவே இங்கிலாந்து தனது அறிக்கையில் குறிப்பிடுகின்ற பயங்கரவாதத்தை (?) தூண்டிவிட்ட சக்தி சிறிலங்கா அரசே என்பதும், தமிழர் தரப்பு அதனை எதிர்கொள்வதற்கான தற்காப்பையே மேற்கொள்கிறார்கள் என்பதும் அதற்குப் புரிய வைக்கப்பட வேண்டிய விடயங்கள்.
ஆகவேதான், தமிழர்களின் வெற்றிக்கான, நியாயத்திற்கான திருப்புமுனையாக இந்த அறிவிப்பை மாற்ற வேண்டிய உடணடிச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனையும் சார்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் தனது சுய அடையாளத்தை இழக்காமல் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இதில் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை அது ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தோடு, காரண காரியங்களை தகுந்த ஆதாரங்களோடு விளக்கும் வல்லமை பெற்ற சக்தியான தமிழர் தரப்பு இந்த விடயத்திலும் தமது இராஜதந்திரப் வழிமுறைப் பேணலை மேற்கொண்டு சிறிலங்காவின் சமாதான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதாரங்களோடு விளக்கி, சிறிலங்கா அரசையே குற்றவாளியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம், ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு போன்ற ஒப்பந்தங்களை சர்வதேச அனுசரணையுடன் தமிழர் தரப்பு மேற்கொண்டதானது, நாம் விரும்பியோ விரும்பாமலோ இதர விடயங்களையும் அவர்களிற்கு விளக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் எம்மைத் தள்ளியுள்ளது. எனவே இந்த முயற்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
அத்தோடு, அனைத்துத் தமிழர்களும், தமிழர்களின் அமைப்புக்களும் இந்தப் பணியை தமது சொந்தப் பணியாக ஏற்று, ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தால் போரே முடிவாக அமையும் என்பதனை விளக்குவதோடு, சிறிலங்காவின் கபடத் தன்மையை வெளிக்கொணரும் செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் வதியும் நாடுகளின் அரசுகளை, வெளியுறவு அமைச்சகங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தியுங்கள். உங்களுக்கு தெரிந்த பிரமுகர்கள், உங்கள் தொழில்நிறுவன அதிபர்கள் என இன்னொரன்ன வழிகளிளெல்லாம் உங்கள் கருத்துக்களை வெளிக்கொணருங்கள். நீங்கள் மாத்திரமல்லாமல் உங்கள் உறவினர்கள் மற்றும் உங்கள் பள்ளிப்பிள்ளைகள் மூலமாகவும் இந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். வெற்றியென்பது எமக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்ற உண்மையை அப்போது உணர்வீர்கள்.
வரலாறு சில சந்தர்ப்பங்களைத் தானாகவே தந்து, இனங்களின் விடுதலைக்கு வழிவகுத்து நிற்கும். அந்த வகையில் தமிழினத்தின் விடுதலைக்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான சந்தர்ப்பத்தை இங்கிலாந்து தானாகவே தந்து நிற்கிறது. போரா? சமாதானமா? தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிவகுக்கும் என்பதனை தீர்மானிக்கின்ற பொறுப்பை இங்கிலாந்தினூடாக அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மேற்குலகிற்கும் வழங்கி நிற்கிறது.
எனவே தடையகற்றல் என்பதே போரற்ற நிரந்தர சமாதானத்தையேற்படுத்தும் என்பதையும், தடையேற்பட்டால் போரே நிரந்த சமாதானத்தைப் பிறப்பிக்கும் என்பதையும் விளக்க வேண்டிய தார்மீகக் கடமையில் நாமும் இணைவோம். இன்றே செயற்படுவோம்.
அதிருப்தி மனுக்களை அனுப்ப வேண்டிய முகவரிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்.
www.puthinam.com

