10-28-2005, 02:18 AM
வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி
-சன்னாசி
இந்தக் கவிதையின்
குரல்வளை அறுத்துக்
குருதி குடிப்பதும் மழைவாசங்காணும்
புற்களின் உதட்டு நுனிகளில்
தாவரங்கள் மேய்வதுமெனத்
தரையோடு அறையப்படும்
விழிகளை அறுப்பது
நீ குறுக்காய் ஓடிய வானவில்.
* * *
நாம் குழந்தைகள்
நமக்கேதும் தெரிவதில்லை; இருப்பினும்
அதன் நிறங்களைக் கற்பனை செய்கிறோம்
கொதித்துத் தளரும் பால்மேல் திரளும் ஆடையின்
வன்முறை போதிக்கிறததன் நிறங்களை
நிறங்களை எழுதுகிறோம், நம் விழிகளைத் தாண்டும்
நிறமொன்றை வார்த்தையால் கொணர்கிறோம்
குறிப்பாய்
நமது நோய்க்கென்றொரு
நிறத்தை விளிக்கிறோம்
அந் நிறமொரு ஆடு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹேஹேஹே
என்கிறது
மறுபடி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹே
என்கிறது
ஆட்டுக்குப் பற்கள் முளைக்கின்றன
ஆடற்ற பற்களும்; இவ்வாக்கியத்தை
ஆடற்றவைகளுக்கும் சொல்லமுயன்று
தோல்வியடைகிறேன்.
* * *
இக்கவிதை முடிவுற,
நம்மைப் பிரிக்கும் வானவில்
இரக்கமின்றி அறுக்கிறது வானத்தை
கண்சிமிட்டாமல் கருப்பை அறுக்கும்
ஹிரண்யக் கத்தியொன்றுபோல் அதனொரு
சோப்பு நுரைக்குமிழ் தவறவிடாவொரு
பிரதிபலிப்பு போல்; சோப்பு நுரையெனும்
எதிருன்னதத்தின் அணு பிளந்த வானவில்
சிதைந்து வீழ்கிறது
பொடிகிறது
உன் காலடியில்.
* * *
உனது கண் நீலத்தில்
எறிகின்றேன் என் பாவனைகளை
பிரயத்தனங்களை
எடையுள்ள போலிகளை; நீலம் குழம்பிக்
கருமையடைகிறது குளிரெடுக்கும் காலத்தில்
ஆட்டினொரு கொடூரப் பிளிறல்போல்
பிளிறும் அதன் வாய்க்கு இரண்டங்குலம் முன்
அறையப்பட்ட கண் போல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,
* * *
நமக்கு அனைத்தும் வாக்கியங்கள்
வெடித்துச் சிதறும் சொற்குமிழிகள்
இடையறாது கிறுக்கும் காகிதங்கள்
வெடித்துச் சிதறும் மூளை நரம்புகள்;
பிரயத்தனமில்லா
காலிக் கோர்வைகள்; காலிக் கோர்வைகளில்
வழிந்து நிரம்பும் காளான்கள் இவற்றைப்
பெயர்க்க முனைகையில் அதிர்ந்து
குமைந்து
அவமானப்பட்டுத் தன்வடிவம் குலைத்துச்
சிதறித் தன்னைச் சிதைத்து மடியும்
வானவில்
* * *
இப் பிரயாசைகள் களைக:
பெயர்க்கப்பட்ட விழிகளில் உருக்கி வார்த்த
பீடங்கள் பிரதிபலிக்கின்றன - முன்பும்
பின்னர் பின்பும்
உள் வெளியாகவும்
வெளி யுள்ளாகவும்
கண்களும் அவையான பிறவும்
பரஸ்பரம்
தோண்டிக்கொண்டன.
தோண்டிப் படையலின் உக்கிர அமைதியில்
மௌனத்தைக் கிழிக்கும் வானவில்லை
நோக்குகிறேன்; உன்னை நினைத்துத்
தாண்டுகிறேன்
என்னைக் கடக்கும் வர்ணங்களை
எண்ணத் தொடங்குகிறேன்
* * *
உன்னைக்குறித்துச் சொல்ல விழையும்
ஓர் வார்த்தையின் பாதங்களும்கூட
இருப்பைத் தகர்த்து வழியும்
உகுப்புத் துளிப் பாதுகைகளணிந்து கடக்கின்றன
கருணையின்றி
வில்லின் மறுபுறம்.
நன்றி சன்னாசி http://dystocia.weblogs.us/archives/175
இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.
-சன்னாசி
இந்தக் கவிதையின்
குரல்வளை அறுத்துக்
குருதி குடிப்பதும் மழைவாசங்காணும்
புற்களின் உதட்டு நுனிகளில்
தாவரங்கள் மேய்வதுமெனத்
தரையோடு அறையப்படும்
விழிகளை அறுப்பது
நீ குறுக்காய் ஓடிய வானவில்.
* * *
நாம் குழந்தைகள்
நமக்கேதும் தெரிவதில்லை; இருப்பினும்
அதன் நிறங்களைக் கற்பனை செய்கிறோம்
கொதித்துத் தளரும் பால்மேல் திரளும் ஆடையின்
வன்முறை போதிக்கிறததன் நிறங்களை
நிறங்களை எழுதுகிறோம், நம் விழிகளைத் தாண்டும்
நிறமொன்றை வார்த்தையால் கொணர்கிறோம்
குறிப்பாய்
நமது நோய்க்கென்றொரு
நிறத்தை விளிக்கிறோம்
அந் நிறமொரு ஆடு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹேஹேஹே
என்கிறது
மறுபடி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹே
என்கிறது
ஆட்டுக்குப் பற்கள் முளைக்கின்றன
ஆடற்ற பற்களும்; இவ்வாக்கியத்தை
ஆடற்றவைகளுக்கும் சொல்லமுயன்று
தோல்வியடைகிறேன்.
* * *
இக்கவிதை முடிவுற,
நம்மைப் பிரிக்கும் வானவில்
இரக்கமின்றி அறுக்கிறது வானத்தை
கண்சிமிட்டாமல் கருப்பை அறுக்கும்
ஹிரண்யக் கத்தியொன்றுபோல் அதனொரு
சோப்பு நுரைக்குமிழ் தவறவிடாவொரு
பிரதிபலிப்பு போல்; சோப்பு நுரையெனும்
எதிருன்னதத்தின் அணு பிளந்த வானவில்
சிதைந்து வீழ்கிறது
பொடிகிறது
உன் காலடியில்.
* * *
உனது கண் நீலத்தில்
எறிகின்றேன் என் பாவனைகளை
பிரயத்தனங்களை
எடையுள்ள போலிகளை; நீலம் குழம்பிக்
கருமையடைகிறது குளிரெடுக்கும் காலத்தில்
ஆட்டினொரு கொடூரப் பிளிறல்போல்
பிளிறும் அதன் வாய்க்கு இரண்டங்குலம் முன்
அறையப்பட்ட கண் போல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,
* * *
நமக்கு அனைத்தும் வாக்கியங்கள்
வெடித்துச் சிதறும் சொற்குமிழிகள்
இடையறாது கிறுக்கும் காகிதங்கள்
வெடித்துச் சிதறும் மூளை நரம்புகள்;
பிரயத்தனமில்லா
காலிக் கோர்வைகள்; காலிக் கோர்வைகளில்
வழிந்து நிரம்பும் காளான்கள் இவற்றைப்
பெயர்க்க முனைகையில் அதிர்ந்து
குமைந்து
அவமானப்பட்டுத் தன்வடிவம் குலைத்துச்
சிதறித் தன்னைச் சிதைத்து மடியும்
வானவில்
* * *
இப் பிரயாசைகள் களைக:
பெயர்க்கப்பட்ட விழிகளில் உருக்கி வார்த்த
பீடங்கள் பிரதிபலிக்கின்றன - முன்பும்
பின்னர் பின்பும்
உள் வெளியாகவும்
வெளி யுள்ளாகவும்
கண்களும் அவையான பிறவும்
பரஸ்பரம்
தோண்டிக்கொண்டன.
தோண்டிப் படையலின் உக்கிர அமைதியில்
மௌனத்தைக் கிழிக்கும் வானவில்லை
நோக்குகிறேன்; உன்னை நினைத்துத்
தாண்டுகிறேன்
என்னைக் கடக்கும் வர்ணங்களை
எண்ணத் தொடங்குகிறேன்
* * *
உன்னைக்குறித்துச் சொல்ல விழையும்
ஓர் வார்த்தையின் பாதங்களும்கூட
இருப்பைத் தகர்த்து வழியும்
உகுப்புத் துளிப் பாதுகைகளணிந்து கடக்கின்றன
கருணையின்றி
வில்லின் மறுபுறம்.
நன்றி சன்னாசி http://dystocia.weblogs.us/archives/175
இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.
\" \"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்.. பண்டைய இலக்கியங்கள் கவிதை வடிவிலேயே கிடைத்தன.. அவற்றை விளங்கப்படுத்த ஒரு ஆசானைத் தேட வேண்டியும் இருந்தது.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->