10-28-2005, 04:06 PM
நடிகர் நடிகைகள் வீட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் பணம் ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நடிகர்கள் விஜய் விக்ரம் சிம்பு எஸ்.ஜெ. சூர்யா ஜெயம் ரவி விவேக் நடிகைகள் திரிஷா சினேகா இசையமைப் பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் யுவன்சங்கர்ராஜா ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திர சேகரன் விஜய டி.ராஜெந்தர் ஆஸ்கர் ரவிச் சந்திரன் இயக்குநர் ஷங்கர் பாடகர்கள் மனோ சீனிவாஷ் பைனான்சியர்கள் சஞ்சய் தத்வானி சுபாஷ் நாகர் பங்கஜ் மேத்தா ஆகியோர் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது 50 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதி ஆவணங்கள் வீடு மனைகளுக்கான பத்திரங்கள் ரொக்கப்பணம் நகைகள் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வங்கி லாக்கர்களின் சாவிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். வங்கி லாக்கர்கள் திறந்து பார்க்கப்பட்ட பிறகுதான் அவற்றில் எவ்வளவு நகைகள் பணம் ஆவணங்கள் இருக்கி றது என்பது தெரியவரும். அதன் பிறகுதான் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும் என வருமான வரித்துறை தலைமை இயக்குநர் சந்தோஷ் தத்தா தெரிவித்தார்.
நடிகர் நடிகைகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவிகளைக் கொண்டு நேற்று வங்கிகளுக்குச் சென்று லாக்கர்கள் திறந்து பார்க்கப்படும் என்று சந்தோஷ் தத்தா தெரிவித்திருந்தார். ஆனால் மழை காரணமாக வங்கிகளுக்குச் சென்று லாக்கர்களைத் திறந்து பார்க்க முடிய வில்லை என்று வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்தது.
புதன்கிழமை காலை தொடங்கிய அதிரடி சோதனை நேற்று காலை 9 மணி வரை நீடித் தது என்றும் அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சில நடிகர் நடிகைகளின் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப் பட்ட தாகவும் வருமானவரித்துறை வட்டாரம் தெரிவித்தது. இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய தடாலடி சோதனையால் தமிழ்த்திரை உலகம்பெரும் அதிர்ச்சிக்குள் ளானது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை தொடரப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
dinakaran.com
நடிகர்கள் விஜய் விக்ரம் சிம்பு எஸ்.ஜெ. சூர்யா ஜெயம் ரவி விவேக் நடிகைகள் திரிஷா சினேகா இசையமைப் பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் யுவன்சங்கர்ராஜா ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திர சேகரன் விஜய டி.ராஜெந்தர் ஆஸ்கர் ரவிச் சந்திரன் இயக்குநர் ஷங்கர் பாடகர்கள் மனோ சீனிவாஷ் பைனான்சியர்கள் சஞ்சய் தத்வானி சுபாஷ் நாகர் பங்கஜ் மேத்தா ஆகியோர் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது 50 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதி ஆவணங்கள் வீடு மனைகளுக்கான பத்திரங்கள் ரொக்கப்பணம் நகைகள் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வங்கி லாக்கர்களின் சாவிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். வங்கி லாக்கர்கள் திறந்து பார்க்கப்பட்ட பிறகுதான் அவற்றில் எவ்வளவு நகைகள் பணம் ஆவணங்கள் இருக்கி றது என்பது தெரியவரும். அதன் பிறகுதான் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும் என வருமான வரித்துறை தலைமை இயக்குநர் சந்தோஷ் தத்தா தெரிவித்தார்.
நடிகர் நடிகைகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவிகளைக் கொண்டு நேற்று வங்கிகளுக்குச் சென்று லாக்கர்கள் திறந்து பார்க்கப்படும் என்று சந்தோஷ் தத்தா தெரிவித்திருந்தார். ஆனால் மழை காரணமாக வங்கிகளுக்குச் சென்று லாக்கர்களைத் திறந்து பார்க்க முடிய வில்லை என்று வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்தது.
புதன்கிழமை காலை தொடங்கிய அதிரடி சோதனை நேற்று காலை 9 மணி வரை நீடித் தது என்றும் அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சில நடிகர் நடிகைகளின் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப் பட்ட தாகவும் வருமானவரித்துறை வட்டாரம் தெரிவித்தது. இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய தடாலடி சோதனையால் தமிழ்த்திரை உலகம்பெரும் அதிர்ச்சிக்குள் ளானது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை தொடரப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
dinakaran.com

