Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களுக்கு வலி உணர்வு அதிகம் ஏன்?
#1
பெண்களை மெல்லியர் என்று இலக்கணங்கள் சொல்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் ஒரு சின்ன வலியை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டை ஒரு வழி பண்ணி விடுவார்கள். இதற்கு காரணம் என்ன?

ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு உணர்ச்சி நரம்புகள் அதிகமாக காணப்படுகின்றன. பெண் முகத்தில், ஒரு சதுர சென்டி மீட்டர் பரப்பில் 34 நரம்பு இழைகள் உள்ளன. ஆண்களுக்கு 17 நரம்பிழைகள் மட்டுமே உள்ளன. பெண்கள் அதிகப்படியான வலி உணர்வை வெளிப்படுத்துவதற்கு இதுதான் காரணம். வலியை தாங்கிக் கொள்வதில் ஆண்களுக்கு சமூக மற்றும் உளவியல் ரீதியான பல விஷயங்கள் பக்க பலமாக உள்ளன. பெண்களுக்கு இப்படி இல்லை. அவர்களுக்கு வலியை பொறுத்துக் கொள்ளும் தன்மை குறைவு.

பெண்களுக்கே உhpத்தான இந்த பலவீனத்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை டெக்னிக் ஆகியவற்றில் மாற்றங்களை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் பெண்களின் வலி உணர்வை ஓரளவுக்கு மட்டுப்படுத்த முடியும்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளில் பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
தினகரன்.கொம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)