Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிறப்பும் இறப்பும் (God does not play dice)
#1
நான் ஏற்கனவே கடவுளைப் பற்றிய ஒரு பதிவெழுதியிருந்தேன். ஆனால் அது முற்றிலும் சினிமாவைச் சார்ந்தது. அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் இங்கு எடுத்தாள ஆசைப்படுகிறேன்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

ஒரு ஊரில் வயதான ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக மாடியில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அவரது மனைவி கீழே ஏதோ பலகாரம் செய்து கொண்டிருக்கிறார். வாசம் அவரது மூக்கை துளைக்கிறது. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று இவருக்கு ஆசை. உடனே மனைவியைக் கூப்பிடுகிறார். மனைவியிடமிருந்து பதிலேதுமில்லை. இவரால் ஆசையை அடக்கமுடியவில்லை. கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி கீழே இறங்கி சமையலறை வரை வந்து விடுகிறார்.

நோய்வாய் பட்ட கணவனை சமையலறையில் பார்த்ததும் மனைவிக்கு பதட்டம். எதற்காக கீழே இறங்கி வந்தீர்கள் எனக் கேட்கிறார். பலகாரம் சாப்பிட வந்ததாக கூறுகிறார். இந்த பலகாரம் வேறு விஷயத்திற்காக வைத்திருப்பதாகவும் அதனைத் தொடக்கூடாது என்று சொல்கிறார். வயோதிகருக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. எதற்காக வைத்திருக்கிறாய் என மனைவியிடம் கேட்கிறார். அதற்கு மனைவியும் நாளைக்கு அவர் இறந்து விடுவார் என்று மருத்துவர் சொன்னதாகவும் அவருக்கு இஷ்டமான பலகாரங்களை ஈமச்சடங்கில் வைக்க வேண்டுமென்பதால் இந்த பலகாரத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்ட உடனே அந்த வயோதிகர் இறந்து விடுகிறார்.

உயிருடன் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதில்லை என்பதற்காக சொல்லப்பட்ட துணுக்கு. ஆனால் அதில் இன்னொரு நல்ல கருத்தும் அடங்கியிருக்கிறது. மனிதன் மரணப்படுக்கையில் இருந்தாலும் அவனது ஆசைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான்.

எல்லோருக்கும் ஐன்ஸ்டீனைப் பற்றி தெரியும். மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது இவரும் ஒரு சராசரி மனிதனைப் போல் தன் ஆசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் இவரது ஆசை விசித்திரமானது. ஆசைப்படுவதிலும் இவருக்கு நிகர் இவரே. மரணப்படுக்கையில் இருக்கும் பொழுதும் தன் மூக்கு கண்ணாடி, தன் கருவிகள் மற்றும் தன் அண்மைக்கால சமன்பாடுகளைத் தான் இவர் கேட்டார். நினைவு வருவதும் போவதுமாக இருக்கிறது. அந்த நிலையிலும் கண்டுபிடிப்புகளில் சிறந்ததென்று இவர் நினைத்த "கடவுளின் மூளையை" வெளிப்படுத்தும் ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தினார்.


எனக்கு கடவுளின் எண்ணங்கள் தெரிய வேண்டும் (I want to know God's thoughts). இது தான் இவரது கடைசி ஆசை. இந்த ஆசையைப் பற்றி இவர் முன்னமே சொல்லியிருந்தார். "அனைத்துமே கடவுளின் எண்ணங்கள் தான் மற்றவை எல்லாம் வெறும் விவரங்கள் தான். (I want to know God's thoughts – the rest are mere details). இந்த ஒரு ஆசையினாலே இவர் அறிவியல் அறிஞர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தார். தனக்கு 20 வயதிருக்கும் பொழுது அறிவியல் உலகில் முத்திரை பதிக்க இவர் முயற்சி செய்து கொண்டிருந்த காலம். 1905 ஆம் வருடம் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்த வருடம். இவரது ஆய்வறிக்கைகள் உலகை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு சான்றாக அமைந்தன.

சார்பியல் கோட்பாடு (Theory of relativity): E=mc2 என்பதை இவர் கண்டுபிடித்து வெளியிட்ட ஆண்டு. உலகிலுள்ள அனைத்து சடப்பொருள் எல்லாம் மூலக்கூறுகளால் ஆனவை என்று சொன்னார். (All matter is composed of molecules). அந்த காலத்தில் நேரம் என்பது வரம்பற்ற மாறாத ஒன்றாக கருதப்பட்ட காலம். அந்த காலத்தில் தான் நேரம் என்பது நாம் பயணிக்கும் வேகத்தைச் சார்ந்ததென்று E=mc2 என்னும் சமன்பாட்டினால் நிரூபித்தார். இன்றளவும் கணிதத்திலும் சரி அறிவியலிலும் சரி மிக உயர்வாக கருதப்படும் சமன்பாடு இது.

பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் பொதுப்படையான சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார் (Theory of general relativity). நியூட்டன் தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்றாலும் அதற்கு என்ன காரணம் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐன்ஸ்டீன் தனது பொதுப்படையான சார்பியல் தத்துவத்தில் புவி ஈர்ப்பு விசை என்பது நேரத்தையும் வெளியையும் பொருட்கள் வளைப்பதால் வருவது என்று கூறினார். (bending of time and space by massive objects). இது 1919ஆம் ஆண்டு வானூலார்களால் சூரிய கிரகணமன்று நிரூபிக்கப்பட்டது.

பின்னர் இவர் துளியம் விசையியல் (quantum mechanics) பற்றிய ஆய்வறிக்கைக்காக நோபல் பரிசு பெற்றதும் நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் 1920 ஆம் ஆண்டு நீல்ஸ் போர், ஸ்க்ராடிஞ்சர், ஹெய்சன்பர்க் ஆகிய ஆய்வாளர்களால் ஐன்ஸ்டீனின் துளியம் பற்றிய ஆராய்ச்சி பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அவர்கள் சொன்ன விஷயம் இது தான் உலகில் எதையுமே தீர்மானமாக சொல்ல முடியாது, ஒரு பொருளின் வேகத்தைச் சரியாக சொல்லலாமே ஒழிய அதன் நிலையை சரியாக சொல்ல முடியாது. (speed of a particle but not its position). ஐன்ஸ்டீன் "கடவுள் என்னும் ஒரு பெரிய சக்தி" தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தீர்க்கமாக நம்பினார். அதன் மூலம் உலகிலுள்ள எல்லாவற்றையும் கணித சமன்பாடுகள் மூலம் எளிதாக விளக்கி விடலாம் என்றும் பெரிதும் நம்பினார். அதனால் இவர் மற்ற கருத்தாய்வுகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டார். அதனாலேயே அடிக்கடி பல்வேறு ஆராய்ச்சியாளர்களுடன் இவருக்கு தர்க்கம் செய்ய வேண்டியதாகி விட்டது.

1920ல் சால்வே கலந்தாய்வில் இந்த தர்க்கம் முற்றியது. நீல்ஸ் போருடன் இவரது அந்த தர்க்கம் தான் இன்றளவும் ஒவ்வொரு மனிதனின் கடவுள் பற்றிய கேள்விகளின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம். அதில் ஐன்ஸ்டீன் சொன்னது "கடவுள் பகடையாடுவதில்லை. அவரின் கணக்கில் எல்லாமே தீர்க்கமானது தான். அதில் வாய்ப்புகளுக்கு இடமில்லை" (God does not play dice, meaning that nothing would be left to chance in the universe). அதற்கு நீல்ஸ் போரும் அவருடன் இருந்த மற்ற ஆராய்ச்சியாளர்களும் சொன்ன பதில் இது தான் "Einstein, stop telling God what to do with his dice".

ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தில் உலகை எப்படியும் ஊகித்து விடலாம். அதற்கு எளிய கணிதச் சமன்பாடுகள் போதுமென்று கூறினார். ஆனால் கடைசி வரை இதை இவரால் நிரூபிக்க முடியாமலேயே போய்விட்டது. ஆனால் இன்றளவும் இயற்பியல் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கும் நிறைய ஆராய்ச்சியாளர்கள் வருவதற்கும் இந்த தத்துவமே காரணம்.

ஒரு வேளை ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தை நிரூபித்திருந்தால் உலகில் இன்று எண்ணற்ற மாற்றங்கள் நடந்திருக்கும். முக்கியமாக நாத்திகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். எப்படியிருப்பினும் மனிதனின் தோற்றத்திற்கான கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க முடியவில்லை. அந்த பதில்களுக்கு மிக அருகில் சென்று வந்தவர் என்பதால் தான் ஐன்ஸ்டீன் இன்றளவும் எல்லோராலும் போற்றப் படுகிறார். ஆசைப்படுபவர்கள் எல்லாரும் இவரைப் போல ஆசைப்பட வேண்டும். இதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசை.

பி.கு.
மனிதனின் கடவுள் நம்பிக்கை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளைத் தேடியதன் விளைவு தான் இந்த பதிவு.

பார்க்க + படிக்க
'Einstein', Peter D Smith, (Life&Times series) Haus Publishing, ISBN 1-904341-15-2

நன்றி>கனேஷ்
.

.
Reply
#2
மிகவும் நல்லதொரு கட்டுரையை இங்கு இணைத்தமைக்கு நன்றி.
<b> .. .. !!</b>
Reply
#3
நன்றி பிருந்தன். நல்லதொரு கட்டுரை. அதில் குறிப்பிட்டது போல் வாழும்போது எதுவும் கிடைக்காது இறந்த பின் அள்ளி கொட்டுவரர்கள். ஐன்ஸ்டினைப்பற்றி அறிய தந்தமைக்கு நன்றி

Reply
#4
பிருந்தன் அண்ணா நல்லாயிருக்கு கட்டுரை நன்றி இங்கு இணைத்தமைக்கு

Reply
#5
ஓம் பிருந்தன் அண்ணா, நீங்கள் உங்கள் கடவுள் நம்பிக்கை சார்ந்த கொள்கையை திருத்திக் கொள்ளுங்கோ சமூகம் தானாக திருந்தும். சமூகத்துக்கு பெருந்தன்மையாக வெட்டி ஒட்டத் தேவையில்லை.
Reply
#6
மேல போட்டிருக்கிற கட்டுரையின் படி பாத்தால்..... ஐன்ஸ்ரைனின்ர கருத்தின் படி.... கடவுள் எண்டுறது வரங்கள் தராது.....அத வணங்குறதாலயோ அதப்பற்றி மனசுருகி வேண்டுறதாலயோ எந்த பிரயோசனமும் இல்லை.... ஏனெண்டால் கடவுள் பகடையாடுவதில்ல....

இன்னொரு முடிவையும் இதில பெற்றுக்கொள்ளலாம்....அது என்னெண்டால் எல்லாம் கணக்கின்ர சமன்பாடுகளால ஊகித்துவிடலாம் எண்டுறது... கணக்கின்ர சமன்பாடுகளால ஊகித்துவிடலாம் எண்டால்.....கடவுளையும் கடவுளின்ர செயற்பாடுகளையும் கூட மாற்றியமைக்கலாம் எண்டுறது....

சோ...மனுசன் தான் கடவுள்....
Reply
#7
poonai_kuddy Wrote:சோ...மனுசன் தான் கடவுள்....

மனிதனே தன்னுடைய தேவைக்காக உருவாக்கி வழங்கிறது எப்படி இதற்கு அப்பால் இருக்க முடியும்? :oops:
Reply
#8
kurukaalapoovan Wrote:ஓம் பிருந்தன் அண்ணா, நீங்கள் உங்கள் கடவுள் நம்பிக்கை சார்ந்த கொள்கையை திருத்திக் கொள்ளுங்கோ சமூகம் தானாக திருந்தும். சமூகத்துக்கு பெருந்தன்மையாக வெட்டி ஒட்டத் தேவையில்லை.

ஜயா நான் ஒரு நாஸ்திகன் அதற்காக மற்றவர் நம்பிக்கைகளை பழிப்பவன் அல்ல, ஊருடன் ஒத்துவாழுகிறேன். இது தப்பா? :wink:
.

.
Reply
#9
ம்ம்ம்ம் அப்பிடியானால் கடைசியில் இந்த மனித உயிருக்கு என்ன நடக்கின்றது? எங்கு இறுதியில் செல்கின்றது?அப்பிடி அiதப்பற்றி ஏதாச்சும் தகவல் இருக்கா? :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#10
நன்றி பிருந்தன். நல்லதொரு கட்டுரை, தொடர்ந்து இப்படியான நல்ல கட்டுரைகளை தாருங்கள்!
Reply
#11
SUNDHAL Wrote:ம்ம்ம்ம் அப்பிடியானால் கடைசியில் இந்த மனித உயிருக்கு என்ன நடக்கின்றது? எங்கு இறுதியில் செல்கின்றது?அப்பிடி அமதப்பற்றி ஏதாச்சும் தகவல் இருக்கா? :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்னைப்பொறுத்தவரைக்கும் உயிர் என்பதே இல்லை, ஒருவிதை முளைக்கிறது வளர்கிறது இறந்து(பட்டுபோகிறது)
ஒரு எறும்பு பிறக்கிறது வளர்கிறது இறந்து போகிறது, இவற்றுக்கு உயிர் இருப்பதாக நம்புகிறோமா, வாழும்காலத்தில் சிலர் நம்பலாம், ஆனால் அவை இறந்தபின்னர் இவைக்கு உயிர் போய்விட்டதாக நம்புகிறோமா? அப்படித்தன் மனிதனும் பிறக்கிறான் வளர்கிறான் இறக்கிறான், உயிர் எங்கே இருக்கிறது இதயத்திலா? மூளையிலா? கை காலிலா?கை கால் இல்லாத மனிதன் வாழ்கிறான், இதயத்திலா? செயற்கை இதயம் மாற்றியவனும் வாழ்கிறான், மூளையிலா? காலப்போக்கில் மாற்று மூளையும் வரலாம், அப்போ உயிர் எங்குதான் இருக்கிறது, மனிதன் இறந்தபின் உயிர் இருந்தால்தானே போவதுக்கு, இளையங்களும், அணுக்களும் அடங்கிய பின்னர் அவனும் அடங்குகிறான், ஒரு உடலுக்கு ஒரு உயிர்தான் என்றால், வெட்டுண்ட பல்லியின் வாலை துடிக்கவைப்பது எது? வெட்டிப்போட்ட மாட்டிறச்சியின் சதை துடிப்பது எப்படி? பாதி பாதி உயிரா? அணுக்கள் அடங்கும்வரை துடிக்கும், அதுபோல்தான் ஒரு மனிதனின் இறப்பும்.
.

.
Reply
#12
சுண்டல்,
உயிரென்று எதைச் சொல்கிறீர்கள்?
அப்படியொன்று இருக்கிறதா?
ஆன்மீகம், மதங்கள் சொல்வது போல "ஆன்மா" என்ற கற்பனைப் பொருள்தான் உயிரா?

இதற்குப் பதிலில்லையென்றால் அவ்வுயிர் எங்கே போகிறதென்று ஏன் ஆராய்ச்சி?
--------------------------------
ஒரு மின்பிறப்பாக்கி செயற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதன் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இப்போது அப்பிறப்பாக்கியிலிருந்து ஏதாவது எங்காவது போனதா? உயிர் என்று அதற்கு ஏதாவது இருந்து அது வெளியேறியதால்தான் அதன் இயக்கம் நின்றதா?
அப்படியிருந்திருந்தால் அதன் இயக்கம் நின்றபின் அவ்வுயிர் எங்கே போனதோ, அங்குத்தான் மனித உயிரும் போகும். Cry
Reply
#13
ஆஆஆ நல்லா இருக்கு விளக்கம் நன்றிகள் அண்ணா....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)