Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனாதிபதியும் பொம்மலாட்டமும்
#1
திரு.வேலுப்பிள்ளை பிரபகாரனால் வழங்கப் பட்ட இலங்கை சனாதிபதியென்னும் பதவியில் அமர இருக்கும் மகிந்தர் படப் போகும் பாடு பற்றி ஒரு அலசு அலசுவோம்.

இன்றய பதவியேற்பு நிகழ்வில் என்ன சொல்லி இருகிறார் மகிந்தர்,

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனது அரசாங்கம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்.

பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தாங்கள் தயாரென விடுதலைப் புலிகள் அறிவித்ததும் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

சமாதான நடவடிக்கைகளில் பங்கேற்க வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அத்துடன் யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்கு தொடர்புடையவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

கொலை, கடத்தல், ஆட்சேர்ப்பு இவற்றைத் தடுக்கும் வகையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும். ஒருவருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட பேரழிவான ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

அதாகப் பட்டது இதுவரை காலமும் நடந்த,செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் என்றும் , நோர்வே வெளியேற்றப் பட்டு இந்தியா உள் நுளைக்கப் படும் என்பதுவே இந்த அறிவிப்பின் சாரம்.இதே நேரத்தில் புலிகள் ரணிலைத் தோற்கடிக்க வைத்ததன் மூலம் நோர்வையையும் அதன் பின் உள்ள அமெரிக்கவையும் சமாதான நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றியமை ஆனது அமெரிக்க அரசை சினங்கொள்ள வைத்துள்ளது.இதனயே ராசித சேனாரட்வை ,'பிரபாகரனைப் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று கூற வைத்துள்ளது.

மேற் குறிப்பிட்ட கூற்றானது பிரபாகரனின் காய் நகர்த்தல்களை புரிந்தவர்களுக்கு இலகுவாக விளங்கக் கூடிய ஒன்று.மேன்மைதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான புற நிலைகளை அரசியல் ரீதியாக சிறீலங்காவில் உருவாக்கி விட்டுள்ளதை இவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாதது, இவர்கள் சிக்கி இருக்கும் பொவுத்த இனவாத சாக்கடை ஆனது இவர்களின் கண்களைக் கட்டிப் போட்டிருப்பதனால் ஆகும்.

ஒரு மதி நுட்பமான தளபதி தனது எதிராளிகளைக் கொண்டே தனது இலக்குகளை அடைவதற்கான புற,அக நிலைகளை உருவாக்கி விடுகிறான் என்பது கீழ் உள்ள பிம்ப உருவாக்கம் கட்டுரையை வாசித்தால் இலகுவில் புரியும்.

வரலாற்றை உருவாக்குபவர்கள் வரலாற்று நாயகர்கள்,மற்றெல்லோரும் அதில் சிக்குண்டு அள்ளுப் படும் பொம்மைகள், அனைத்து அதிகாரமும் உடய இலங்கை சனாதிபதி மகிந்தரும் இதில் அடக்கம்.
Reply
#2
நாரதர் சொல்லும் ஊகங்கள் உடனடியாக நடைபெறுமா எண்டதுதான் கேள்விக்குறி ஏனெனில் மகிந்தாவுக்கு எங்கடை பிரச்சனையை விட தனது கூட்டு சக்திகளை திருப்திப்படுத்துவதற்கே ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது மீண்டும் ஜே.வி.பியும் கெல உறுமையவும் பாராளமன்றத்தில் பொது கூட்டமைப்பின் ஆட்சியை தக்க வைக்க முண்டு குடுக்கப் போகிறார்கள் அப்போ அவர்களுக்கு அமைச்சரவையில் சில சில் பதவிகள் குடுக்கவேண்டி வரப்போகிறது இதை அந்த இரு கட்சிகளும் டிமாண்ட் பண்ணி கேக்கப்போகிறார்கள் இவர்களை திருப்திப் படுத்த மகிந்தா முனைந்தால் சுதந்திர கட்சியில் இருப்பவர்கள் விலகிப்போவதுக்கு சாத்தியம் இருக்கு இப்பிடியா இழுபறி நிலை ஏற்படுமானால் பாராளமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் ஒரு பொது தேர்தல் கூடிய விரைவில் ஏற்படும் இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் போது உடனடியாக எமது விடயத்தில் ஈடுபடுவர்களா....................???
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
வணக்கம் முகத்தார் உங்கட கேள்விகளுக்கு பாலகுமார் அண்ணர் வடிவாப் பதில் சொல்லி இருகிறார்,
இது புதினத்தில இருந்து வெட்டி ஒட்டினது.

புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லையா?: க.வே.பாலகுமாரன் விளக்கம்!!
[செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2005, 05:12 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.11.05) ஒளிபரப்பாகிய 'நிலவரம்' நிகழ்ச்சியில் க.வே.பாலகுமாரன் கூறியதாவது:

தேர்தலில் விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சொல்வதற்கு மேற்குலகமும் பி.பி.சி. போன்ற ஊடகங்களும் முயற்சிகள் எடுக்கின்றன.

அவர்களுக்கு இலங்கையினது வரலாறு தெரியாது. 1931 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முதலாவது தேர்தலை- அதாவது டொனாமூரின் பரிந்துரைக்கு அமைய நடந்த தேர்தலை யார் புறக்கணித்தது? தமிழ் மக்கள்தான் புறக்கணித்தார்கள். எதற்காக புறக்கணித்தார்கள்? இலங்கைக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று சிங்கள மக்களின் சார்பாக தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள்.

அதே இனமானது இன்று தங்கள் விடுதலைக்காக தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டார்கள்.

"எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை" என்று கடந்த மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.

ஆழிப்பேரலை வராதிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். அன்று எங்கள் தலைவர் கூறியதை இன்று எங்கள் மக்கள் இந்த தேர்தலினூடாக கூறியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் ஆதரவு என்பது வெற்று காசோலை. ரணில் அதற்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லை. அவரது இராஜதந்திரம் தோல்வியடைந்துவிட்டது.

தமிழ் மக்கள் போருக்கு அஞ்சிவிட்டதாகவும் உண்டு உடுத்து வாழ்ந்தால் போதும் என்று வாழ்பவர்கள் தமிழர்கள் என்று மிக இழிவாகத் தமிழர்களைக் கருதியமைக்கான மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மகிந்தருக்கு நாமும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏனெனில் நிம்மதியான நேர்த்தியான பிறந்த நாளை மகிந்தர் இனிமேல் கொண்டாட முடியுமா என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கிறது.

மகிந்தரை நாங்கள் நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை என்பது வேறுவிடயம். சந்திரிகா, அவரது தம்பியார், ஜே.வி.பி, சிங்கள மக்கள் யாருமே அவரை நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை.

இந்தத் தேர்தல் முடிவு என்பது 2 தேசியங்களின் முடிவாக இருக்கிறது.
தமிழ் மக்கள் வாக்களிக்காமல் இருப்பதன் ஊடாக தங்களது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கிராமப்புற சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவர்கள் அபிலாசைகளை வாக்களித்து வெளிப்படுத்தி உள்ளார்கள்.

மகிந்தர் இப்போது அனைத்துக்குமான வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறார்.

பேரினவாத பூதத்தை-

ஒற்றையாட்சி எதிர்ப்பு கோசத்தை-

அடிப்படைவாத ஆதரவு நிலைப்பாட்டை-

பௌத்த பிற்போக்குத்தனத்தை-

போருக்கான வாய்ப்பை-

அனைத்து மோசமான நிலைகளுக்குமான வாய்ப்புக்களை மகிந்தர் திறந்துவிட்டிருக்கிறார்.தமிழ் மக்களோ அமைதியாக வாக்களிக்காமல் இருந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தேசியத் தலைவரின் சென்ற வருட மாவீரர் நாள் உரையிலேயே சர்வதேச சமூகத்துக்கான செய்தி வெளிப்படையாக வந்திருக்கிறது.

"சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சகதிக்குள் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புக்களும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடக்கு-கிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை" என்று கூறியிருக்கிறார்.. அப்போது சர்வதேச சமூகம் என்ன கூறியது?

"ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தாருங்கள். நிச்சயமாக சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு தீர்வைத் தருவார்கள். ஒரு இடைப்பட்ட தீர்வை பக்குவமாக முன் வைப்போம்" என்றார்கள். ஆனால் அவர்களின் இந்தக் கருத்துக்களுக்கு எதிராகவே சிங்கள மக்கள் வாக்களித்துள்ளார்.

நோர்வேக்காக நாங்கள் உண்மையிலேயே பரிதாப்படுகிறோம். நோர்வேயின் நல்ல நோக்கம் இவ்வளவு மோசமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் போல் மூன்றாம் தரப்பாக உள்வந்து சிங்களத்துக்கு ஆதரவாக ஒருதரப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிங்களம் முயற்சிக்கும் என்பதில் சர்வதேச சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும்.

சிங்களத்துக்கு தமிழர் உரிமைகளை மறுப்பதற்கும் ஒடுக்குவதற்கும்தான் சர்வதேச சமூகம் தேவை. உரிமைகளைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு சர்வதேச சமூகம் தேவை இல்லை.
<span style='font-size:30pt;line-height:100%'>இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச சமூகம் தலையிட்டதே திறந்த பொருளாதாரக் கொள்கைக்காகத்தான். </span>இந்த அடிப்படையையே சிங்களம் மறுத்திருக்கிற போது சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகிறது?

சிங்களத்திலே இருப்பது பௌத்த பேரினவாத அடிப்படைவாதம். இதன் வெளிப்பாடுதான் மகிந்தர். இதற்கு ஒரு அழுத்தத்தை சர்வதேச சமூகம் அளிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு மறதி அதிகம் இல்லை. "இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது" என்று கடந்த மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த அரசியல் வெறுமை யாரால் உருவாக்கப்பட்டது? ரணிலின் அமைதிப் பேச்சுவார்த்தைகளால்தான் உருவாக்கப்பட்டது.

தமிழர்களை அரவணைத்து வாழவும் தயாரில்லை-பிரிந்து செல்ல வாழவிடுவதாகவும் இல்லை.

குறுகிய கால "சலுகைகளுக்காக" "உரிமைகளை" விட்டுக்கொடுத்தால் இறுதியில் நீ "சலுகைகளையும்" இழந்துவிடுவாய் என்பதுதான் ரணிலுக்கு வாக்களிக்காத தமிழ் மக்களின் கருத்து.

சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் தமிழ் பேசும் வாக்குகள். இவர் என்ன தமிழரின் பிரதிநிதியா? எங்களுடைய குரலை ஒலிக்கா இவர் இருக்கிறார்? அல்லவே..அல்ல.

எதற்காக நாங்கள் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும்?

48 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற படுகொலைகள், மிக மோசமான எதிர்ப்பு நடவடிக்கைகள், தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழித்த அனைத்து சர்வதேச சதி வலைப்பின்னல் தொடர்பான வேதனை எல்லாவற்றுக்கும் நாம் கொடுக்க வேண்டிய தண்டனை என்பது வரலாற்றின் தீர்ப்பாக இருக்கும்.

நாளாந்த வாழ்க்கைக்கான அற்ப சலுகைகளுக்காக இனத்தின் உரிமைகளை பணயம் வைப்பது என்பது எப்போதும் முடியாது.

மற்ற நாடுகளில் போராடுகிற சக்திகளை ஒடுக்குவதற்காக இணைந்து செயற்பட்டு மிக இலாவகமாக ஒடுக்குவார்கள். ஆனால் இங்கே அந்த செயற்பாட்டைக் கூட செய்ய அவர்களால் முடியவில்லை என்பதை அந்த மக்கள் மகிந்தரை வாக்களிப்பினூடாக தெரிவு செய்துள்ளதன் மூலம் நோர்வே என்ன செய்ய முடியும்?

இனி நோர்வே அற்புதங்களையும் மந்திரங்களையும் இங்கே நிகழ்த்த வேண்டும்.
இராணுவத்தில் ஊருவல், ஆட்சிக் கவிழ்ப்பு, புரட்சி என்று சிங்கள தேசம் நாசமாகப் போகிறது. அதைத் தடுக்கிற ஆற்றல் எங்களிடம்தான் உள்ளது. ஆகவே பிரபாகரன் வெல்ல வேண்டும் என்று சிங்கள மக்களே விரும்புவார்கள். இதைத்தான் மகிந்தவின் வெற்றி...பிரபாகரனின் வெற்றியின் தொடக்கம் என்று கூறியிருந்தேன் என்றார் க.வே. பாலகுமாரன்.
http://www.eelampage.com/?cn=21897
Reply
#4
மகிந்தாவின் வெற்றி எண்டு நாங்கள்தான் கூறினாலும் ஜே.வி.பியின் தொண்டர்கள் எண்டு கூறிக்கொள்பவர்கள் இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி எண்டுதான் சொல்கிறார்கள் மகிந்தாவால் தங்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு காரியமும் செய்யமுடியாதாம் அதில் வேடிக்கையான பேச்சு என்னவெண்டால் இவர்களின் பிரச்சாரத்தில் புலி உறுப்பினர் போல உடையணிந்த இருவர் ரணிலின் படத்தை ஒட்டுவதைக் காட்டி வடக்கில் ரணிலை ஆதரிக்கும்படி புலிகள் கேட்டாதகவும் ஆனால் மக்கள் அவர்களின் சொல்லைக் கேளாமல் ரணிக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டார்கள் எண்டும் கூறி இங்கு பெரிய கதைகள் இப்படி போராட்ட வரலாறுகள் தெரியதுகளுக்கு எப்பிடிச் சொல்லி புரிய வைப்பது எங்களுக்குத்தான் சும்மா ரத்தம் சூடாகுது ...............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
முகத்தார் நீங்கள் ஏன் காரியத்தை கெடுக்க நிக்குறியள். ஜேவிபி சொல்லுறது தான், புலிகள் ஆதரவளிச்சும் ரணில் தோத்துப்போனார். இலங்கையில இருக்கிற பயங்கரவாதப்பிரச்சனைக்கு தீர்வு காண மகிந்தவுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள்.
Reply
#6
எல்லாம் ஆறுதலா இருங்கோ முகத்தார். என்ன நடக்குது எண்டு விளக்கம் இல்லாததுகள் இப்படித் தான், நீங்கள் ஓம் தம்பி நீங்கள் சொல்லுறது சரிதான் எண்டு போட்டு இருங்க.மிச்சம் மாவீரர் தின உரயோட தெரிய வரும்.போகப் போக அவைக்குத் தெரியவரும் யாற்ற கையில இலங்கயிண்ட எதிர்கால அரசியல் தலை விதி எண்டு.
Reply
#7
மகிந்த இதுவரை கடும்போக்காளாராக அறியப்பட்டவர். மகிந்த வென்றதும் கடும்போக்காளர் வென்றார் என்றே மேற்குலக ஊடகங்கள் குறிப்பிட்டன. மேற்குலக அரசுகளின் பார்வையும் அப்படியே இருந்தது. இதனை தொடர்ந்து இன்னொரு கடும் போக்காளரான ரத்னசிறி விக்கரமநாயக்கா பிரதமர் பதவியேற்றது தற்போதைய இலங்கை அரசு கடும் போக்குடையது என்ற தோற்றத்தை வலுப்படுத்தி இருக்கின்றது. இனிமேல் மகிந்த எவ்வளவு தூரம் கடுமையாக நடந்து கொள்கிறாரோ அது அந்த அளவுக்கு புலிகளுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை புலிகளுக்கு உருவாக்கும். அதையே புலிகள் விரும்புகின்றார்கள். ஆனால் அதை விடுத்து மகிந்த தளர்வு போக்கையோ அல்லது இழுத்தடிக்கும் தந்திரத்தையோ மேற்கொண்டால் அது புலிகளுக்கு நன்மை பயக்காது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
ஜனாதிபதி தேர்தல் முடிவு வழங்கிய பெரு வீழ்ச்சி ரணிலுக்கல்ல, உண்மையில் மகிந்தவுக்கே உரியது

க.வே.பாலகுமாரன்

தொடர்புடைய அனைவரும் அதிர்ச்சியால் உறைந்து போயுள்ளார்கள். இப்படியும் நடக்குமா என ஏங்கித்தான் போய்விட்டார்கள். அடக்குமுறையாளர் கையிலிருக்கும் அனைத்து ஆயுதங்களும் ஒன்றில் பயனற்றுப் போகச் செய்யப்படுகின்றன; அல்லது அடக்குமுறையாளருக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. வரலாற்றின் அபூர்வ கணங்களாக இவை பதிவாகின்றன. மானிட விடுதலையின் பால் பற்றுக்கொண்டோர் மகிழ்வடையும் காலமிது. சனநாயகம் என்பது பெரும்பான்மையோர் முடிவு என்கிற நிலைக்கப்பாலும் சென்று நாடாளுமன்றத்தையே இணக்கப்பாட்டிற்குப் பதிலாக அடக்குமுறைக்கு பயன்படுத்தியோர் தமது செயற்பாடுகள் செல்லாக்காசாகிவிட்டது கண்டு அச்சமடைகின்றனர். தீவிரவாதம், பயங்கரவாதம் எனத் தந்திரமாக வடிவமைத்து விடுதலைப் போராட்டங்களை திசை திருப்ப அல்லது மென்மைப்படுத்த சனநாயக வழி முறைகளை நம்பிய மேற்குலகிற்கோ இதுவொரு சவாலாகிவிட்டது.அடைந்த அனை த்து அவமானங்களையும் துடைத்தெறிந்து சம்பந்தப்பட்டோருக்கு கடும் தண்டனையும் பாடங்களையும் வழங்கிவிட்டார்கள். ரணிலுக்கு மட்டுமல்ல, மகிந்தருக்கும் தோல்வியையே எம் மக்கள் தம் வாக்குகளால் வாக்களியாது வாக்களித்துவிட்டார்கள். எனவே, வென்றவரும் எம் மக்கள் முன் தோற்றவராகிவிட்டார். எவ்வாறு நோக்கினும் வரலாற்றில் முதன்முறையாக தமிழீழ மக்களே இத்தேர்தல் முடிவுகளை தீர்மானித்துள்ளனர்.


வாக்களிக்காமலே ஒரு வாக்களிப்பு

ஒருமுறை மேலோட்டமாக சிறீலங்காவின் ஐந்தாவது சனாதிபதித் தேர்தல் முடிவுகளை நோக்கலாம். 1 கோடியே 33 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களில் 73.74 விழுக்காடு அதாவது, 98 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வாக்களித்தனர். மகிந்தர் 50.29 விழுக்காடு வாக்குகளையும் ரணில் 48.40 விழுக்காட்டளவு வாக்குகளையும் பெற்றனர். வெற்றியின் மயிரிழை இடைவெளி வெறுமனே ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மட்டுமே. (இதுவரை நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்களில் மிகக் குறைவாகப் பெறப்பட்ட பெரும்பான்மையிது) யாழ். தேர்தல் மாவட்ட வாக்களிப்பு 1.21 விழுக்காடு, முல்லைத்தீவில் எவரும் வாக்களிக்காத போதும் வெலிஓயா சிங்களவர் வாக்கும் சேர்க்கப்பட்டதால் 891 வாக்குகள் பதிவாகின. வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு 34.30 விழுக்காடாகவும், மட்டக்களப்பில் 48.51, திருமலையில் 63.84, திகாமடுல்ல எனச் சிதைக்கப்பட்ட அம்பாறையில் 72.70 விழுக்காடாகவுமுள்ளன. திருமலையிலும் அம்பாறையிலும் தமிழ்மக்கள் வாக்களிக்காத நிலையிலும் வாக்களிப்பு விழுக்காடு கூடுதலாக இருப்பதற்குக் காரணம் தெரிந்ததே. சிங்களக் குடியேற்றங்களால் சிதைந்த தமிழரின் சனத்தொகைப் பரம்பலின் பாதக நிலையிது.

ஒரு சாதாரணமான சனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வரலாற்றினையே திருப்பிப் போடுமளவிற்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் நிலையில் மிக நீண்டகாலத்திற்கு எதிரொலிக்கப்போகும் முடிவிது. அக்கனவை நனவென நினைத்து புலிக்கும் யானைக்கும் இரகசிய தொடர்பென கதைவிட்டார் மகிந்தர். (எது எப்படியானாலும் சென்ற சனாதிபதி தேர்தலில் (1999) 36 இலட்சம் வாக்குகள் (42.71%) பெற்ற ரணில் இம்முறை அதிகமாக மடக்களப்பில் 79.51%, அம்பாறையில் 55.81%, திருமலையில் 61.33%, கண்டியில் 54.33%, நுவரெலியாவில் 70.37% எனப் பெற்றதற்கு யார் காரணம் என்பது புள்ளிவிபரம் தரும் தகவல்) இவ் வாக்குகளும் கிடைக்காவிட்டால் ரணிலின் வீழ்ச்சி எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும். இருந்தும் இத் தேர்தல் தனக்கு மணிமகுடம் சூட்டும் என எதிர்பார்த்தவருக்கு கிட்டியது முட்கிரீடமே. அவரது அரசியல் வாழ்வு மட்டுமல்ல, சேனநாயக்க/ ஜே.ஆர். குடும்ப ஆட்சியும் அஸ்தமனமாகிவிட்டது. உடனடியாகவே ரணிலின் கையாளான கட்சித் தலைவர் மலிக் பதவி விலகிவிட்டார். இனி பதவி விலகல் அங்கு தொடர்கதை. ஆகவே, ரணிலின் வீழ்ச்சியென்பது குறிப்பதென்ன?

சமாதானம், இயல்பு நிலையென கதையளந்து மேற்குலகம் என் பக்கம், இந்தியப் பின்புல ஆதரவென பயம் காட்டி மிக நவீன அரசியலுதவிகள்/ அழுத்தங்கள் என்பவற்றினைப் பிரயோகித்து மேட்டிமைக் குடும்பத்தின் வலுவாக்கல் கோட்பாட்டிற்கு வீழ்ச்சி- எமது தாயகத்தின் அரிய வளமிக்க தாய் நிலங்களை விழுங்கி ஏப்பமிட்டு சிங்கள மயமாக்கிய நில அபகரிப்பிற்கும், தந்திரத்திற்கும் இனப்படுகொலைகளை மகிழ்ச்சியோடு ஏவி வெலிக்கடையில் குட்டிமணியின் தமிழ்க் கண்களை குதறி, இந்தியப் படைகளை ஏவி எம் மக்களை கொன்றொழித்து குமரப்பா, புலேந்திரன் தொட்டு ஈழத்தின் இமயம் திலீபன் வரை தேசிய விடுதலை வீரரின் வீரச்சாவுகளுக்கு வினை விதைத்து வெறியாட்டம் போட்ட கொடுமைக்கும் குரூரத்திற்கும் வீழ்ச்சி என நீளும் இவ் வீழ்ச்சிக் கதை முடிவிலி.

ஒரு கணக்கு- நெடுநாள் கணக்கு எம் மக்களால் தீர்த்தாகிவிட்டது. இன்னொரு கணக்குத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இத் தேர்தல் முடிவு உண்மையில் வழங்கியது ரணிலுக்கல்ல பெரு வீழ்ச்சி. அது மகிந்தருக்கே உரியது. இற்றைவரையான எம் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளினதும் திரட்சியின் பிணச்சுமையைத் தாங்கத் தாமாகவே முன்வந்த மகிந்தர் இவற்றிற்கான கணக்குகளைத் தீர்க்கும் போது அதனையேற்கப் போகின்றார். அதாவது, தன் முன்னோர் விதைத்த வினைகள் யாவற்றிற்குமான மொத்த அறுவடையைச் செய்ய ஆயத்தமாகின்றார். அவசரம், அவசரமாக எங்கே பதவி பறிபோய்விடுமோ என்கிற அச்சத்தில் பதவியேற்று மகிந்த அப் பதவியை மாதக்கணக்கிலல்ல, நாட்கணக்கிலல்ல மணித்துளிக் கணக்கில் காக்கும் நிலையிலுள்ளார். ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்றது போல அவரது கட்சியின் ஆட்களே விரட்டப்படுகின்றனர். நாம் ஏலவே விடுதலைப்புலிகள் ஏட்டில் குறிப்பிட்டது போலவே பண்டா குடும்பத்திற்கெதிரான ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை முன்னிறுத்த வந்தவர் "சேனா"க்கள் நாயக்க, "பண்டாக்கள்" நாயக்க குடும்ப ஆட்சிக்கு குழி தோண்டிய பின் செய்யப்போவதென்ன?

சிங்களத்திலே தனது குடும்ப ஆட்சியைத் தொடங்கும்போதே அதன் வீழ்ச்சியையும் கூடவே உறுதிப்படுத்திய மகிந்தர் எப்படியான அரசியல்வாதி? அவரது தளம், பலம், வெற்றி எல்லாமே அவருக்கு மட்டுமே உரியதல்ல. அது ஜே.வி.பி.யினருக்கும் பொதுவானது. ஒரு உறையில் இரு வாட்களா? முதலில் எவர் வாளை உருவக்கூடும்? அவ்வாறு உருவும் போது உருவாகப்போகும் கொந்தளிப்பிற்கு வரலாறு பின்னால் என்ன பெயர் சூட்டும்? கிளர்ச்சியா? புரட்சியா? சதிப்புரட்சியா? உள்நாட்டுப் போரா? மூன்றாவதும் இறுதியுமாக தன் புதல்வர்களான ஜே.வி.பி. மீதான சிங்கள ஆட்சியமைப்பின் பலியெடுப்பா? ஜே.வி.பி.யினரின் கதை முடிவா? புதிய தொடக்கமா? சிங்களத்தில் அமைதி காக்கவென தலையீடுகள் நிகழுமா? நாமொன்று மட்டும் கூறமுடியும். ராஜபக்ஷ குடும்ப வீழ்ச்சியாக மட்டும் இந் நிகழ்வு அமையப்போவதில்லை. முழுச் சிங்களக் குடும்பங்களுக்குமே இது வீழ்ச்சியாகும். இங்கே நாம் சாபமூட்டவில்லை. கலம்பகமும் பாடவில்லை, வரலாற்றின் தருக்க விதிகளின் இயக்கத்தை உணர்த்தி மட்டும் நிற்கின்றோம்.

இரு வேறு தேசங்களின் அடிப்படைப் பகை முரண்பாடுகள் உச்ச அளவிற்குக் கூர்மையடைகின்றன. அவை முற்றி வெடிக்கும் போது விளையும் விளைபொருட்கள் வெவ்வேறாகின்றன. சிங்களத்தில் அது வேறாகவும் தமிழீழத்திலோ அது வேறாகவும் அமையும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமது அடிப்படை பகை முரண்பாடுகளை இன்னமும் சிங்களம் சரியாக இனங்காணவில்லை. மகிந்தர் எவ்வாறு வென்றார்? சிங்கள மக்களின் கும்பி கொதிக்கின்றது. அதனைத் தணிவிக்க வேண்டும் என்கிற உண்மையையும் (இந்தளவில் இது முற்போக்கான தேசியமே) ஆனால், அதேவேளை பேரினவாத, அடிப்படைவாத சிந்தனைகளின் விளைவாக தமது இயலாமையை, பதவியாசையை மறைக்க, திசை திருப்ப தமிழரை பகடையாக அவர் பயன்படுத்தியது வரலாற்றின் மிகப் பாரிய தவறாகப் போகின்றது. (மகிந்தரது வாக்கு வங்கி- கம்பஹாவில் 54.70%, காலியில் 58.41%, மொனறாகலையில் 57%, மாத்தறையில் 61.85%, அம்பாந்தோட்டையில் 63.43%) இந்தளவில் அவர் "தவறான சுவரில் சாத்தி வைக்கப்பட்டுள்ள ஏணி." இப் பாரிய சிக்கலை ஆய்வாளர் மு.திருநாவுக்கரசின் வார்த்தைகளில் சொல்ல விரும்புகின்றோம். மிக விரைவில் வெளிவந்து மிகப் பரபரப்பைத் தோற்றுவிக்கப் போகும் "இலங்கை - 2007" என்கிற நூலிலிருந்து அவரது அனுமதியோடு சில வரிகள், "காலத்திற்குக் காலம் இலங்கை அரசியலானது நரபலியெடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அந்த நரபலி ஒரு பொருளாதாரப் பொறிமுறையிலிருந்து பிறக்கின்றது." இங்கேயுள்ள முக்கிய பட்டறிவு என்னவென்றால், அது தமிழரை பலியெடுக்க முடியாவிட்டால் சிங்களவரை பலியடுக்கும் என்கிற முக்கிய தகவலை நூலாசிரியர் விளக்கியமை தான். இங்கே பல வினாக்கள் வாசகர் மனதிலே எழும். சிங்களத்திற்கும் தமிழீழத்திற்குமான அடிப்படை பகை முரண்பாடு எப்போது தீர்க்கப்படும்? அதேபோல் சிங்களவரும் சிறீலங்கா ஆட்சியாளர்க்குமான முரண்பாடு எப்போது தீர்க்கப்படும்? எது முந்தும்? எது பிந்தும்? இரண்டும் சம காலத்திலா? இக் கேள்விகளுக்கான விடை அனைத்தையும் இலங்கைத்தீவின் தீர்மானிப்பாளரும் தமிழீழத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளருமான ஒருவரிடம் விட்டு விடுகின்றோம். <span style='font-size:25pt;line-height:100%'>\"எல்லோருக்கும் விழிகள் உண்டு உலகினைப் பார்க்க, ஆனால், ஒரு சிலருக்கு தரிசனமுண்டு காலத்தினைக் கடந்து உலகினைப் பார்க்க.\" எனக் கவிஞர் மு.பொ. பாடிய அந்த ஒருவரின் (நன்றி:விடுதலைப் பேரொளி) முடிவுகளை அறிய முயல்வதே எம்மாலியன்றது.</span>
அதுபோலவே ஏனைய எம் தமிழ் பேசும் மக்களின், மலையக மக்களின் தலைமைகளுக்கு தமிழ்மக்கள் கொடுக்கும் வாக்கு சற்றுக் கடுமையானது. எமக்குமான உங்கள் எல்லாருக்குமான பொது எதிரியை பலமிழக்கச் செய்து வீழ்த்தும் போது முண்டுகொடுக்க முற்படாதீர். உங்கள் சூழல், இருப்பு, சனநாயக செயற்பாட்டில் வேறு தெரிவின்மை என்பதை நாம் புரிந்தாலும் இலக்குகளைக் கைவிட்டும் சொந்தநலன் கருதியும் தடம்புரள்வது இறுதியில் கசப்பான பாடங்களையே கற்றுத்தரும். இனிமேல் நிகழவிருக்கும் புதிய பரிமாணத்தினைப் புரிந்து கொள்ளுங்கள்; அரசியல் நுண்ணுணர்வுடன் நிகழ்வதை அவதானியுங்கள். தன்னலமின்றி பொறுமையுடன் செயற்படுங்கள்.

இறுதியாக சர்வதேசத்திற்கும் எம் மக்கள் வாக்கொன்று சொல்கிறார்கள். ஆளும் தரப்பு ஒத்துழைக்காத அபூர்வமான அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் முன்னர் இந்தியாவினை/ அதன் படையை ஜே.ஆர். கையாண்ட கதை (நடுவரை ஆடும் தரப்பாக மாற்றிய கதை)யை அறியுங்கள். தமிழ் மக்களை கொன்றொழிக்கவும், அவர்கள் அடிப்படை உரிமைகளைப் பயங்கரவாதத்தின் பெயரால் உங்களைக் கொண்டுவித்து மறுக்கவும் பயன்படும் பகடையாகாதீர். போகிற போக்கில் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் சிங்களத்தில் உருவாகும் பேரினவாத, இனவெறி பிடித்த, மத அடிப்படைவாதம் வளர்வதை அவதானியுங்கள். இன்றேல் அமைதி முயற்சிகள் இருந்த அமைதியினையும் குலைத்தன என்கிற பழியே மிஞ்சும்.

இவை தான் வாக்குகள். எங்கள் அன்பிற்குரியவர்களே, தேர்தல் புறக்கணிப்பென தமிழீழ மக்கள் வீசிய சாட்டை எவரெவர் முதுகில் பட்டதோ அவரவர் உணரவேண்டியது;

வலியையல்ல

வரலாற்றின் தீர்ப்பை.

http://www.thinakural.com/New%20web%20site...3/Article-1.htm
Reply
#9
இன்னொரு போருக்கான இறுதி வேளை நெருங்குகிறது- தாயக, புலம்பெயர் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?: கா.வே.பாலகுமாரன் விளக்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 05:41 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப்போருக்கான இறுதிவேளை நெருங்கும் நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிற தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அரசியல் அரங்கம் பகுதியில் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

பிரபாகரனது மாவீரர் நாள் உரை என்ன மாதிரியான தாக்கத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ளது?

பயங்கரவாதம்-தொழில்நுட்பம் என விரிந்த இந்தக் காலத்திலே நடைபெறுகிற ஒரு விடுதலைப் போராட்டம் எப்படியாக முகம் கொடுத்து நிற்கிறது?

இதை சர்வதேச சமூகம் எப்படி எதிர்கொள்ளும்?

சிங்கள தேசம் மேற்கொள்ளப் போகும் சதிவலைகள் என்ன?

சதிவலைகளை தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் எப்படி எதிர்கொள்வது?

என்பது உள்ளிட்ட விடயங்களை பாலகுமாரன் தனது உரையில் விளக்கி உள்ளார்.

கா.வே.பாலகுமாரன் பேசியதாவது:

மாவீரர் நாளில் ஏதோ புதிய பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று கூறப்பட்ட எதிர்பார்ப்பிற்கு அப்பால் மிக வித்தியாசமான ஒரு சூழல் ஒன்று மாவீரர் நாளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நிகழ்த்தப்பட்டது போன்ற மாவீரர் நாள் உரை அல்ல அது. நம்பிக்கைக்குரிய ஒரு பொறுப்பாளரின் அறிக்கை என்று அதனை சுருக்கமாக கூறலாம். தமிழீழ மக்களுக்கு என்பதை விட சிங்களத் தேசத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சமர்பிக்கப்பட்ட அறிக்கை அது. அல்லது வினா-விடை என்று சொல்லலாம்.

காரல் மார்க்ஸ் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்கிய கால கட்டங்களில் வினா-விடையை வெளியிட்டது போல தலைவரின் மாவீரர் நாள் உரையானது எல்லாவித கேள்விகளுக்குமான விடையை தன்னகத்தேக் கொண்டுள்ளது.

உண்மையில் அந்த உரை என்பது பட்டயம் போல், பிரகடனம் போல் ஆகிவிட்டது. உரைக்குப் பின்னால் என்ன நிகழப் போகிறது, என்ன திசையில் செல்லப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

நாங்கள் முன்னர் கூறியது போலவே தமிழீழத்தில் அரங்கேறுகிற ஒவ்வொரு பெரிய காட்சியும் ஒரு ஒத்திகைபோல அல்லது பின்னாடி நிகழப்போகிற சம்பவங்களுக்கு முன்னோடி போல- நிகழ் தகவு போல தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஒரு வித்தியாசமான செய்தியை கூறிவருகிறது.

தேர்தலுக்கு முன்பாக அல்லது தேசியத் தலைவரது உரைக்கு முன்பாக சிங்களத்திலே என்ன குதியாட்டம்..வெறியாட்டம் நடந்தது.....

ஆனால்

இப்போது சிங்களத்திலே ஒரு பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்.

எல்லோரும் மெளனித்துப் போய்விட்டார்கள். அந்த அளவுக்கு இந்த உரையினது தாக்கம், நீண்டகாலத்துக்கு வேலை செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.

எல்லோருடைய மனசாட்சியையும் மனதையும் இறுகப் பிளக்கும் பாறையைப் போல பிளந்து அவர்களுக்கு உள்ளே சென்று மனசாட்சியையும் மனதையும் குழப்பும் வகையிலே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லோரும் எதிர்பார்த்தார்கள்...மகிந்தர் வந்த உடனேயே ஏதோ பூதாககாரமாக வெட்டி பிடுங்கப் போகிறார் என்று எதிர்பார்த்தார்கள்.

முன்னர் இருந்த தலைவர்களைப் போலவே சிங்களப் பெருந்தேசிய இனவாதத்துக்கு தீனி போடவும்

ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சமநிலையைப் பேணுகிற வகையிலுமாக அறிக்கைகளை வெளியிட முற்படுகிறார்.

இருப்பினும் எங்களது செயற்பாடுகள் இன்று மகிந்தருக்கு ஒரு சிக்கலைக் கொடுத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

அவர் நினைத்திருந்தால் இவ்வளவு கடுமையான நிலைப்பாடுகளை மேற்கொண்டதற்குப் பின்னாலே புலிகளைத் தூண்டி அல்லது சீண்டி, சமநிலையை தவறச் செய்து சிக்கலான சூழலை உருவாக்கி அதை தலைவரனது அறிக்கை ஊடாகப் பெற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஒடுக்கியிருக்கலாம்.

ஆனால் மிக குறுகியதும் நீண்ட ஆழமானதுமான வல்லுநரின் ஆராய்ச்சியிலேயே உருவாக்கப்பட்ட மகிந்தரின் சிந்தனைகளோ இன்று சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

இன்று தலைவரது உரைக்குப் பின்னால் அதை வழிமொழிந்து பின்பற்றி நடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது.

அதுபோலவே ஜே.வி.பி.யும் தான்....தேசியத் தலைவரது உரை அவர்கள் அனைவருக்குமே சாட்டையடியாக மாறி இருக்கிறது.

ஜே.வி.பி.யினது உபாயங்களும் உத்திகளும் தூக்கி எறியப்பட்டிருப்பதால் அது தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இப்போது ஜே.வி.பி.க்கும் மகிந்தருக்குமான உறவுகள் முட்ட வேண்டிய காலம் தோன்றிவிட்டது. இவ்வளவு விரைவில் அது வரும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சூழல் தேசியத் தலைவரது உரைக்கு ஊடாக வெளிப்பட்டுள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் மிக நுட்பமாக, எதையும் வீணாக்காமல் கடந்த 4 ஆண்டுகாலம் அவர் மேற்கொண்ட முயற்சியினது வெளிப்பாட்டை, தொனியை எள்ளளவும் குறைக்க விரும்பாமல் அதன் தொடர்ச்சியாக பெரிய அடியை தலைவர் இறக்கி உள்ளார்.

தலைவரின் உரையூடாக சிங்கள தேசம் மட்டுமல்ல உலகமே இன்று கலகலத்துப் போய்விட்டது.

தமிழ் மக்கள், சிங்கள தேசம் என்பதற்கு அப்பால் சர்வதேச கொள்கை வகுப்பாளர்களை நோக்கி எழுதப்பட்டதாக இந்த உரை அமைந்துள்ளது.
உலக வரலாற்றில் குடியேற்ற கால கட்டத்தைத் தாண்டி, உலகப் போர்களைத் தாண்டி, பனிப்போர்களைத் தாண்டி ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு பொதுவான தன்மைகள் இருந்தன.

ஆனால் இந்த புதிய ஒழுங்கிலே நாம் செயற்படுகிற விதம் பார்த்து உலகமே மிகப் பெரிய திகைப்புக்குள்ளாகி இருக்கிறது. எங்களை எந்த வழியிலும் எந்த நுணுக்கத்திலும் சென்று கையாள முடியாது என்ற நுணுக்கமான நிலைப்பாட்டை தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.
<span style='font-size:30pt;line-height:100%'>தலைவர் கூறியதில் முக்கியமானது என்பது \"குறுகிய கால இடைவெளி\" என்பது. </span>இந்தக் குறுகிய கால இடைவெளி என்ற சொல் மிகப் பெரிய இடைவெளியை நீண்டகாலத்துக்கு சிங்களத் தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் கொடுக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

இந்த குறுகிய கால இடைவெளியை என்ன மாதிரி நிரப்ப முடியும் என்பது உலகத்துக்குச் சொல்லப்பட்ட கேள்வியாக அமைந்துள்ளது.

இந்த உரையானது சர்வதேச ரீதியில் அறிவார்ந்த, ஒரு விடுதலைப் போராட்டத்தினது உச்சமான வெளிப்பாடாக மாறி இருக்கிறது. தேசியத் தலைவரது உரையை எவரேனும் கண்டனம் செய்திருக்கிறார்களா? கண்டனம் செய்கிற துணிவற்று இருக்கிறார்கள். ஒரு கண்டனமும் கூட தெரிவிக்க இயலாத வகையிலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தின் உச்ச வெளிப்பாடாக தலைவரின் மாவீரர் நாள் உரை அமைந்துள்ளது.

தலைவரின் உரையூடாக நிகழப்போகிற விபரீதங்கள் அல்லது மாற்றங்கள் என்பன மெல்ல மெல்ல உலகத்துக்கு உரைக்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய முடியாமல் தயங்கி, தயக்கம் காட்டி நிற்கிறார்கள்.

இப்போது இந்திய மாநாடு, இணைத் தலைமை நாடுகளின் மாநாடு, சொல்ஹெய்ம் மாநாடு என்று கூட்டப்பட்டு வருகின்றன...தலைவரது உரைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது சர்வதேசத்துக்கு உள்ள சிக்கலாக இருக்கிறது.

இப்படியான ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்குவதனூடாகத்தான் எமது விடுதலை வென்றெடுக்கப்படும் என்பது தெளிவான செய்தி.
[size=18]செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னால், ஈராக் படையெடுப்புக்குப் பின்னால் புலிகள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருவருடத்துக்கு அமெரிக்கா செலவழிக்கிற தொகை 450 பில்லியன் டொலர். இந்தத் தொகையில் 15-ல் ஒரு பங்கு டொலரினால் உலகத்தினது வறுமைப் பிரச்சனைக்கே தீர்வு கண்டுவிடலாம்.இப்படியான அச்சத்தை உற்பத்தி செய்கிற ஒரு காலகட்டத்தில் முதன் முறையாக தனியனாக எவருடைய முன்உதாரணமும் அற்று எங்களுடைய விடுதலைப் போராட்டம் முகம் கொடுத்துள்ளது.

புதிய உலக ஒழுங்கினது 2 ஆம் கட்ட நிகழ்ச்சி நிரலுக்கு நேரடியாக முகம் கொடுக்கிற வகையில் இனிவரும் சம்பவங்கள் அமையப் போகிறது.

நாங்கள் அதற்கான வழிமுறையை வகுத்திருக்கிறோம்.

எவ்வாறு வகுத்திருக்கிறோம் எனில்

எது பயங்கரவாதம்?

எங்களுடைய நிலை என்ன?

எவ்வளவு காலம் நாங்கள் பேசியிருக்கிறோம்?

எங்களுடைய உட்பொருள் என்ன?

என எல்லாவற்றையும் விளக்கி உள்ளோம்.

இதனூடாக எங்களைக் கையாள இனி உலகம் ஏதேனும் புதிய யுத்திகளைக் கையாளுமா என்பது குறித்து எமக்குத் தெரியாது.

ஏனெனில் இதுவரை உலகம் கடைபிடித்த உத்திகள் அனைத்துமே உச்ச உத்திகள்தான்.

ரஸ்ய புரட்சி, சீன விடுதலைப் போராட்டம், கியூபா விடுதலைப் போராட்டம், வியட்நாம் விடுதலைப் போராட்டம் போன்ற காலகட்டங்களில் உலகத்திலே எப்படி மிகப் பெரிய சூழல் உருவானதோ உலகத்திலே மிகப் பெரிய வியப்பும் அதிசயமும் உருவானதோ அதைப் போல்..

இப்போதும் அதாவது

தொழில்நுட்பம் வளர்ந்து,

உலகம் சுருங்கி

ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் வேறுவிதமாக மாற்றப்பட்டு

எது புரட்சி? எது கிளர்ச்சி என்று தெரியாத அளவிற்கு

நாடுகள் எல்லாம் தலைகீழாக மாறி

எல்லைகள் எல்லாம் சுருங்கி இருக்கிற இந்த காலகட்டத்தில்-

முதன் முறையாக

புதிய பாதையை இந்த உரை ஊடாக உலகத்துக்குக் காட்டியிருக்கிறோம்.அதே நேரத்தில் மகிந்தரது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச ராசந்தந்திரப் போரிலே பயன்படுத்த வேண்டிய உத்திகளையும் இந்த உரையில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இதற்கு அப்பால் மாவீரர் நாள் உரையை நீங்கள் பார்த்தால்..

முதலில் முடியாது என்றும்

இடையில் முடியுமா என்று பார்ப்பதாகவும்

இறுதியில் முடியாது என்றும் முடிந்திருக்கிறது.

அப்படியானால் மகிந்தரின் காலத்தை நாம் எப்படி அணுக வேண்டும்? இது தொடர்பான பார்வை எங்கள் மக்களிடையே எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டிய காலமாக இந்தக் காலம் அமைகிறது.

மகிந்தர் முதலில் என்ன செய்யப் போகிறார் எனில் மிக இரகசியமான ஒரு சதிவலைப் பின்னலை மிக இரகசியமாகச் செய்யப் போகிறார். ரணில் இதனை பகிரங்கமாக செய்தார்.

மகிந்தர் தன்னிடம் உள்ள முஸ்லிம் கைக்கூலித் தலைமைகளையும் தமிழ்த் துரோகக் குழுக்களையும் வைத்துக் கொண்டு எங்கள் தமிழீழப் பகுதிகளிலே குறிப்பாக தென் தமிழீழத்திலே முஸ்லிம்-தமிழ் உறவுகளுக்கு இடையேயான உறவை சிதைக்கக் கூடிய செயற்பாடுகள் போன்ற சதிப்பின்னலை ஒரு பக்கமாகவும்,

உலக நாடுகளில் தங்களது செயற்பாடுகளை விரிவடையச் செய்து சில முறைகளைக் கையாண்டு பயங்கரவாதிகள் என்று எம்மை சொல்ல வைக்கிற நிலையை உருவாக்கி அண்மையிலே அவுஸ்திரேலியாவில் நடந்தது போன்ற சில சம்பவங்கள் போன்ற சதிவலைப் பின்னலை ஒருபக்கமாகவும் பின்னக் கூடும்.

இதை மகிந்தர் செய்யாவிட்டால் அவர் ஒருநாள் கூட பதவியில் இருக்க முடியாது. ஜே.வி.பி.யினர் ஒருநாள் கூட அவரை பதவியில் இருக்கவிடமாட்டார்கள்.

இந்தச் சூழலில் தமிழீழ மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழீழத் தலைமையினது நிலைப்பாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏதோ ஆறப்போடப்பட்டு இருக்கிறது. கஞ்சி ஆறிய பின்னர் குடிக்கலாம் என்று நாம் நினைக்கவில்லை.

நாங்கள் சர்வதேசத்துக்கு கூறுகிற செய்தி வேறு.

எங்கள் தாயகத்திலே வாழ்கிற மக்களுக்குச் கூறுகிற செய்தி

தமிழீழத்திலே இப்படியாக வருகிற இந்தச் சிக்கலைப் புரிந்து கொண்டு நம்முடைய ஒற்றுமையை நாம் உள்ளகச் சிக்கல் இல்லாமல் வளர்த்தெடுத்த வேண்டும்.புலம்பெயர் நாடுகளிலே வாழ்கிற தமிழர்கள் செய்ய வேண்டியது,

தலைவரது உரையூடாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் சிங்களத்தை முழுமையாக அம்பலப்படுத்துகிற சகல செயற்பாடுகளையும் முழு அளவில் தொடர்ந்து விரைந்து செய்ய வேண்டும்.

வியட்நாம் விடுதலைப் போராட்டத்தில் 10 வருடம் பேசினார்கள். அதற்கு அப்பாலும் அவர்கள் போராடி வென்றார்கள்.

வென்ற போது கடைசியாக கூறினார்கள், இந்த பேச்சுவார்த்தை-இராஜதந்திரம்-அரசியல் நிலைப்பாடுகள் என்பது எல்லாமே இராணுவ ரீதியான வெற்றிக்குத் துணைக் காரணியாகச் செயற்பட்டதே அல்லாமல் பிரதான காரணிகள் அல்ல என்று தெரிவித்திருந்தார்கள்.
தாயகம் மற்றும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களே!

காலம் கனிந்துவிட்டது. இன்னொரு போருக்கான இறுதி வேளை நெருங்கி விட்டது. அதை வெல்ல நாம் ஆயத்தப்பட வேண்டியிருக்கிறது.

இந்தப் போர்க் களங்களில் மட்டுமல்ல..களங்களிலும் மனங்களிலும் செய்யப்பட வேண்டிய போர்.

இந்தப் போரானது எல்லா முனைகளிலும் ஒருமித்துச் செயற்படக் கூடிய போராக மாறும்.

அதுவே விடுதலைப் போராட்டத்தின் கடைசி நாளாக அமையும்.
அந்த நாளில் நம் வெற்றிக் கொடியேறுவதை பார்ப்பதற்காக நாம் எல்லோரும் காத்திருக்கிறோம் என்றார் பாலகுமாரன்.

http://www.eelampage.com/index6.php?cn=22226
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)