Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே
#1
<span style='color:brown'><b>விருதுகளை தேடிப் போகவில்லை....
ஆனால் விருதுகள் தேடி வந்தன!
-ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரேயின் வரலாறு</b>
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/satyajitray01.jpg' border='0' alt='user posted image'>
மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் 1921-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாள் பிறந்தார். தந்தை ரே. தாயார் சுப்ரபா. இவரது குடும்பம் நடுத்தர வகுப்பைச் சார்ந்தது. இவருடைய தாத்தாவும், தந்தையும் வங்க மொழியில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழ்ந்தனர்.

சத்யஜித்ரேவிற்கு இரண்டு வயதாகும்போது இவருடைய தந்தை மரணம் அடைந்தார்.

ரவீந்தநாத் தாகூர் சத்யஜித்ரேயை தனது சாந்திநிகேதனில் கலாபவனில் கலைத்துறையில் சேர்த்து கல்வி கற்பித்தார். இந்திய கலைத்துறையின் ஒப்பற்ற பேராசிரியர் நந்தலால் போஸிடம் மாணவனாக இருந்துகல்வி கற்றார். சாந்தி நிகேதனில் தன்னுடைய கல்வி முடிவடைவதற்கு முன்னரே கொல்கத்தா வந்துவிட்டார்.

1942-ம் ஆண்டு விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆர்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். இசையிலும், சினிமாவிலும் ஆர்வத்துடன் விளங்கினார். மேற்கத்திய இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதிக திரைப்படங்களை பார்த்து தன்னுடைய சினிமா அறிவினை வளர்த்து கொண்டார்.

1947-ம் ஆண்டு கொல்கத்தாவில் முதலாவது பிலிம் சிட்டியை சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து தோற்றுவித்தார்.

1950-ம் ஆண்டு லண்டன் சென்ற அவர் அங்கு ஏராளமான திரைப்படங்களை பார்த்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா திரும்பியதும் பிபூதி பூஜன் பானர்ஜியின் ''பதர் பாஞ்சாலி'' நாவலை குழந்தைகள் இலக்கியமாக எழுதி தருமாறு கொல்கத்தா நகரின் பிரபலமான ஒரு பதிப்பகத்தார் கேட்டு கொண்டனர். பின்னர் இதையே தன்னுடைய முதலாவது திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தை ரே ஸ்டுடியோக்களுக்கு வெளியே தத்ரூபமான இடங்களில் எடுத்தார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பொருளாதார உதவியுடன் படத்தை முடித்து வெளியிட்டார். இந்த படம் மிகச்சிறந்த படமாக அமைந்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.

1959-ம் ஆண்டு ''த அபுடிராய்லசி'' என்ற திரைப்படத்தினை வெளியிட்டார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்களை பெரும்பாலும் ஏதாவது ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து சமுதாய கண்ணோட்டத்துடன் அமைந்திருக்கும்.

1987-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் கவுரவ பரிசுகளில் ஒன்றான ''லிஜியன் டி'' என்ற பரிசினை பெற்றார். இந்த பரிசு பிரெஞ்சு நாட்டின் ஜனாதிபதி ஃபிராங்காய்ஸ் மித்தரண்டு கொல்கத்தா நகரத்திற்கு வந்து வழங்கி கவுரவித்தார்.

இவர் உயிருடன் இருக்கும்போதே இவரைப்பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/sathyaraj03.jpg' border='0' alt='user posted image'>
சத்ஜித்ரே திரைப்பட தயாரிப்பாளர் என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வங்க மொழியில் எழுதப்பட்ட இவருடைய நூல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தனது நாவல்களில் பதினைந்திற்கும் மேலானவற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.

ரேயின் வங்க மொழி காலம், இந்திய திரைப்பட துறையின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.

1967-ம் ஆண்டு ''மகஸாஸே'' விருது வழங்கப்பட்டது. யூகோஸ்லோவியா ''கொடி விருது'' உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1992-ம் ஆண்டு திரை உலகின் மிகச்சிறந்த விருதான ''ஆஸ்கர்'' விருதினை பெற்றார். அதே ஆண்டு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது.

திரை உலக வரலாற்றில் அளப்பறிய சாதனை புரிந்த சத்யஜித்ரே 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாள் தன்னுடைய இன்னுயிரை துறந்தார்.

<img src='http://www.raitre.rai.it/Static/immagine/27/fuoriorario_SatyajitRay.jpg' border='0' alt='user posted image'>

<b>-கேன்ஸ் திரைப்பட விழாவில் சத்யஜித்ரே!</b>


சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் உலகத் திரைப்பட விழா நடந்தது. அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள் இரு ராய்'கள். ஒருவர் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் மாமேதை சத்யஜித்ராய். (விருப்பமுள்ளவர்கள் சத்யஜித்ரே என்றும் அழைத்துக் கொள்க) இன்னொருவர் ஐஸ்வர்யராய். திரைப்படவிழாவில், ரேயின் படைப்புகள் அமோக வரவேற்பு பெற்று நல்ல விலைக்கு விற்கப்பட்டது. மறைந்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாமேதை! (கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இந்திய அரசின் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் கலந்து கொண்டு, அதன் வசமுள்ள திரைப்படங்களின் டி.வி. மற்றும் வீடியோ உரிமைகளை 1,35,000 டாலருக்கு (நம்ம ஊர் மதிப்பில் கணக்கு போட்டால்... அப்பாடியோவ்!) விற்பனை செய்துள்ளது. இதில் 60 சதவீத வருவாய் சத்யஜித்ரே படங்களின் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
சத்யஜித்ரே முதன் முதலாக இயக்கிய பதர் பாஞ்சாலி படத்தின் சர்வதேச உரிமை என்.எப்.டீ.சி.யிடம் உள்ளது. இந்த படம் உள்பட கணஷத்ரூ, காரி, பெய்ரீ மற்றும் அகன்டக் போன்ற என்.எப்.டீ.சி தயாரிப்பில் சத்யஜித்ரே இயக்கிய, காலத்தால் அழியாத காவியங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வீடியோ உரிமை நல்ல அளவில் விலை போயுள்ளது.

இங்கு சத்யஜித்ரே படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவற்றின் டி.வி மற்றும் வீடியோ உரிமைகளை ஃபிரான்ஸ் நாட்டின் ஃபிலிம்ஸ் வித்தவுட் ஃப்ரான்டியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இவை ஃபிரான்ஸ் நாட்டிலும் பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படுமாம்.</span>

நன்றி: செந்தில்.ஆர்.பி (தமிழ்சினிமாவிலிருந்து..........)
Reply
#2
இவரது ஒரு ஆஸ்கார் விருதுப்படம் பார்த்தேன், அருமையான படம், பாசை புரியவில்லை,கீழே ஆங்கில சப்டைட்டில் போட்டார்கள்,ஒரு கிழவி ஒன்று மகளுடன் கோவித்துக்கொண்டு தனியாக போய்வாழ்வதாக, கிழவி நல்லா நடித்திருக்கிறா? ஆனால் அந்தபடம் பார்த்து கானகாலம் ஆகிவிட்டது படத்தின் பிரதி இருந்தது இப்போ எங்கே என்று தெரியவில்லை. கறுப்பு வெள்ளைப்படம்.
.

.
Reply
#3
பாலசந்தர் அரங்கேற்றம் படம் மூலம் புதிய வடிவத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தார்...அக்காலத்தில் தான் தென்னிந்திய சத்யத்ரேய் பாலசந்தர் என குரல்கள் ஒலிக்க தொடங்கின..அக்காலத்தில் நாடகபாணியாலான திரைப்படங்களில் மாற்றம் உருவாக்கி தியேட்டர் ஆர்ட்ஸ் என சொல்லப்படுகின்ற விசயங்கள் இசை கமரா எடிட்டிங் போன்றவை முன் கொணரபட்டன..பாலசந்தருக்கு சத்யத்ரேயின் தாக்கம் இருந்ததாக கூறுவார்கள்.

அந்த காலத்தில் கமராவால் செய்யும் நுணுக்கமான விசயங்கள் பலராலும் வியந்து பேசப்படும்....அரங்கேற்றம் படத்தில் சிறிப்பிரியா ஊஞ்சல் ஆடும் காட்சியை பார்க்கும்போது நாங்கள் ஆடுவது போன்ற பிரமையை உருவாக்கியிருந்தார் இப்பொழுவது இலகுவாக செய்யலாமெனவது வேற விசயம் இப்படி பலகாட்சிகள். பின்னர் அறிந்து கொண்டோம் சத்யரேயின் படங்களிலிருந்து கொப்பி பண்ணி தனது படங்களில் புகுத்தியிருக்கிறாரென்று.....
Reply
#4
<b>ஓரு சிறந்த இந்தியத்திரைப்படம் </b>
<img src='http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b1/SatyajitRay.gif' border='0' alt='user posted image'>
சமீபத்திய ஆனந்தவிகடனில் எழுத்தாளர் சுஜாதா தான் எழுதுகிற 'கற்றதும் பெற்றதும்' தொடரில் சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி' படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்தப் பதிவு, அந்தப்படத்தின் பற்றின மலரும் நினைவுகளை எழுப்பியது.

அப்போது எனக்கு வயது 20 இருக்கலாம். சத்யஜித்ரே என்ற பெயரை மட்டுமே கணையாழி போன்ற பத்திரிகைகளின் மூலமாக அறிந்திருக்கிறேனே ஒழிய அவரின் எந்தவொரு படத்தையும் பார்த்ததில்லை. சத்யஜித்ரே உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தருணமது. வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதும், இந்திய அரசும் தனது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி அந்த விருதை பெருமைப்படுத்தியது. ஆஸ்கார் விருது வழங்குவிழாவில் அவர் கலந்து கொள்ள இயலாமல் தன்னுடைய நன்றியுரையை வீடியோவில் அனுப்பி வைக்க, அந்த விழாவில் அது ஒளிபரப்பப்பட்ட போது ஆலிவுட் மகாஜனங்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். படுக்கையில் படுத்தபடி அவர் சோர்வாக பேசுவதைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது.

அந்த சமயத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசையில் அவரது சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து இரவு நேரங்களில் ஒளிபரப்பியது. அப்போது பார்த்ததுதான் பதேர் பாஞ்சாலி. இந்தப்படம் என்னுள் பலத்த பாதிப்பை எழுதியது. படம் முடிந்த கையோடு அந்த பாதிப்புகளையெல்லாம் கண்ணீருடன் டைரியில் 10 பக்கத்திற்கு எழுதி வைத்தேன். அந்த டைரி தொலைந்து போனதை ஒரு பெரிய இழப்பாகவே கருதுகிறேன்.

பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை ரே மிகுந்த சிரமத்திற்கிடையில்தான் உருவாக்கினார். தன் சொத்துக்களை கொஞ்ச கொஞ்சமாக விற்றுத்தான் இந்தப்படத்தை தயாரித்தார். இனிமேலும் படம் தொடர முடியாத நிலையில் மேற்கு வங்க அரசின் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தது. இது சாத்தியமாகியிருக்காவிட்டால் இந்திய சினிமா ஒரு சிறந்த திரைப்படத்தையும், கலைஞனையும் இழந்திருக்கக்கூடும்.

'இந்தப்படத்தை பார்க்காதவர்கள் வாழ்வில் நிறைவு பெறாதவர்கள்' என்று சுஜாதா கூறியதை நானும் வழிமொழிகிறேன். காட்சிகளை அமைப்பதில் நாடகங்களின் பாதிப்பிலிருந்து மீளாத சினிமாவை தன்னுடைய கேமராவின் வழியாக பார்வையாளர்களை ஒரு புது உலகத்திற்கு அழைத்துச் சென்றார். திரைக்கதையை எப்படி விஷீவலாக சொல்ல வேண்டும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்து இருந்தது. படத்தின் பல காட்சிகள், சிறந்த ஓவியங்களின் சலனமாக தோன்றும். சப்-டைட்டில் இல்லாமல் கூட இந்தப்படத்தை ரசிக்க முடியும் என்பதே இந்தப் படத்தின் பலம்.

இந்தப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்குகிற போது 'இந்தியாவின் வறுமையை வெளிநாட்டிற்கு காட்டி பணம் சம்பாதித்துவிட்டார்' என்கிற மாதிரி பல சர்ச்சைகள் விமர்சகர்களிமிடமிருந்து எழுந்தது. எந்தவொரு கலைஞனின் படைப்பும் அவன் வாழ்கிற சூழ்நிலையை, கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இன்றைய தமிழ்த்திரைப்படங்களைப் பார்க்கும் எந்தவொரு வெளிநாட்டுப் பார்வையாளருக்கும் நம் கலாச்சாரத்தைப் பற்றின தெளிவான பார்வை கிடைக்குமா என்றால் இல்லை.

O

ரேவின் படங்களிலேயே சிறந்ததாக நான் கருதுவது 'சாருலதா'. ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதை ஒன்றை திரைப்படமாக்கியிருந்தார் ரே. அண்ணிக்கும், மச்சினனுக்கும் ஏற்படும் நட்பு ஒரு சூழ்நிலையில் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு முன்னால் அந்த உறவு முறிந்து போகும் கதை. 'பிட்டு' போடுகிற மலையாளப் படங்களுக்கு பிடித்த சப்ஜெக்டான இந்தப் பிளாட்டை எந்தவொரு விரசமுமில்லாமல் மிக கவனமாக படமாக்கியிருந்தார்.

இம்மாதிரியான கலைப்படங்களின் (இந்த வார்த்தை சரியானதுதானா?) மீது சிலருக்கு ஒருவகையான அவர்ஷன் இருப்பதை பார்க்கிறேன். ஒருவர் பீடி புகைப்பதை அரைமணிநேரமும், ஒருவர் நடந்து போவதையே முக்கால் மணிநேரமுமாக காண்பிப்பார்கள் என்று கேலி பேசுவதை கண்டிருக்கிறேன். அம்மாதிரியானவர்களுக்கு ரேவின் திரைப்படங்களை தைரியமாக என்னால் சிபாரிசு செய்ய முடியும். அடிப்படையான கலையுணர்ச்சி இருந்தால் போதுமானது. அவருடைய ஒவ்வொரு படங்களும் வேறு வேறு கதைக்களன்களையும், அடிப்படைகளையும் கொண்டது.
http://pitchaipathiram.blogspot.com/2004/1...og-post_05.html
Reply
#5
"சத்யஜித்ரே" ... இந்திய ஏழ்மையை, வறுமையை, சமூக சீரளிவுகளை மேற்குலகிற்கு விற்று பணங்கள், பட்டங்கள் பெறுபவர்!!!! ... இது இவருக்கெதிராக இந்திய பிரபல பத்திரிகை ஒன்றில் வந்த சர்சைக்குரிய, விவாததிற்குரிய விமர்சனம்!!!!
"
"
Reply
#6
Nellaiyan Wrote:"சத்யஜித்ரே" ... இந்திய ஏழ்மையை, வறுமையை, சமூக சீரளிவுகளை மேற்குலகிற்கு விற்று பணங்கள், பட்டங்கள் பெறுபவர்!!!! ... இது இவருக்கெதிராக இந்திய பிரபல பத்திரிகை ஒன்றில் வந்த சர்சைக்குரிய, விவாததிற்குரிய விமர்சனம்!!!!

இல்லை.
உண்மைகளையும்
இந்திய மண்ணில் தாம் சார்ந்த மக்களின் பிரச்சனைகளையும்
திரையில் செதுக்கிய ஒரு உலக மகா சிற்பி.

இதில் கருத்து வேறுபாடே இல்லை.

1992-ம் ஆண்டு திரை உலகின் மிகச்சிறந்த விருதான ''ஆஸ்கர்'' விருதினை பெற்றார். அதே ஆண்டு <b>இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது</b>.

அப்படியான ஒருவருக்கு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது ஏன்?
Reply
#7
Nellaiyan Wrote:"சத்யஜித்ரே" ... இந்திய ஏழ்மையை, வறுமையை, சமூக சீரளிவுகளை மேற்குலகிற்கு விற்று பணங்கள், பட்டங்கள் பெறுபவர்!!!! ... இது இவருக்கெதிராக இந்திய பிரபல பத்திரிகை ஒன்றில் வந்த சர்சைக்குரிய, விவாததிற்குரிய விமர்சனம்!!!!
ஓம்..மோனை உந்த பிரபல பத்திரிகை காரங்கள் உண்மை உறைச்ச படியால் சொல்றாங்கள் போலை.. இந்தியாவை தாங்கள் நினைக்கிற கற்பனை உலகமாக காட்டணுமெண்டு யோசிக்கிறாங்கள் போலை....

டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் போலை ஜஸ்வராய்காட்டி ஜீன்சும் ரஜனியை வைத்தும் பிளாட்டுனும் எடுத்து பணம் பண்ண யோசிச்சமாதிரி எல்லோரையும் அப்படி நினைக்கிறதே

ரே என்ற கலைஞனை இந்தியாக்காரனை விட சர்வதேச சினிமாஉலகம் நன்கு விளங்கி போற்றுகிறது
Reply
#8
அதே ஆண்டு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது.

:?: அதே ஆண்டு :?: :?: :roll:
.
Reply
#9
<img src='http://web.mid-day.com/ArticleImages/images58/ray811200593245.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>முக்கியமாக ரே தன்னை ஒரு இந்தியன் என்று கூறுவதை தவிர்த்து
தன்னை ஒரு பெங்காலி என்றும்
தன் திரைப்படங்கள் பெங்காலிய திரைப்படங்கள் என்றும் குறிப்பிட்டு வந்தார்.

தன் திரைக் காவியங்கள் பெங்காலி (Calcutta - Bengal ) சூழ்நிலையை படம் பிடித்துக் காட்டியதால் இருக்கலாம்.
இல்லாவிடில்
பெங்கால் முழு இந்தியா அல்ல என்று கூற எத்தனித்ததாகவோ அல்லது இந்தியா தன்னை அங்கிகரிக்கவில்லை என்பதாலாகவோ கூட இருக்கலாம்.

<b>இலங்கைச் சிங்கள சினிமா இவரது சினிமாக்களின் தாக்கத்திலிருந்து பிறந்த சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.</b> </span>
<img src='http://www.telegraphindia.com/1051202/images/02ray2.jpg' border='0' alt='user posted image'>
அவர் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு:-
http://www.upperstall.com/people/satyajitray.html

http://web.mid-day.com/columns/nadita_puri...mber/122766.htm

<img src='http://www.devavision.org/images3/satyajit-ray-oscar-180.jpg' border='0' alt='user posted image'>
மரணப்படுக்கையில் இருந்த ரே அவர்களுக்கு ஒஸ்கார் வழங்கப்பட்டபோது...................
சத்யஜித்ரே உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தருணமது.
வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதும்,
<b>இந்திய அரசும் தனது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு</b> அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி அந்த விருதை பெருமைப்படுத்தியது.
ஆஸ்கார் விருது வழங்குவிழாவில் அவர் கலந்து கொள்ள இயலாமல் தன்னுடைய நன்றியுரையை வீடியோவில் அனுப்பி வைக்க,
அந்த விழாவில் அது ஒளிபரப்பப்பட்ட போது <b>ஆலிவுட் மகாஜனங்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.</b>
படுக்கையில் படுத்தபடி அவர் சோர்வாக பேசுவதைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது.


<b>T h e A r t C i n e m a</b>
<img src='http://www.indembassyhavana.cu/culture/Cinema/sat-ray.gif' border='0' alt='user posted image'>
India's emergent art cinema, led by the <b>Bengali directors Ray</b>, Mrinal Sen and Ritwik Ghatak reacted against such spectacle. Satyajit Ray's world-famous debut, Pather Panchali (1955), is based on many of the themes that engaged contemporary popular film-makers of the time, such as loss of social status, economic injustice, uprootment, but sets them within a naturalistic, realist frame which put a special value on the Bengali countryside, locating it as a place of nostalgia, to which the urban and individualist sensibility of its protagonist, Apu, looked with longing.

In Ray's later work on urban middle-class existence, Mahanagar/Big City (1963), Charulata (1964), Seemabadha/Company Limited (1971), Pratidwandi/The Protagonist (1970), and Jana Aranya/The Middleman (1975), his rational, humanist vision is at the same time at home in the city, and repulsed by it; overarching estrangement is relayed through images of futile job interviews, cynical corporate schemes, murky deals in respectable cafes. Wedded to the traditions of the nineteenth-century intelligentsia, he finds society wanting, vilifies it for its ignorance and corruption, and oversees the malignant terrain below with a lofty disdain. Ray's women, such as the mother, Sarbojaya of Pather Panchali, the tomboy Aparna Sen of Samapti/TheEnd(1961), Madhabi Mukherjee in Charulata and Mahanagar, and Kaberi Bose in Aranyer din Ratri, are splendidly drawn portraits in the realist tradition.

In contrast to Ray, his contemporaries Mrinal Sen and Ritwik Ghatak set out to expose the dark underside of India's lower middle-class and unemployed. Sen, after a phase of uneven, didactic political cinema at the height of the Maoist-inspired Naxalite movement of the early 1970s - marked by the trilogy Interview(1971), Calcutta 71(1972) and Padatik/The Guerrilla Fighter (1973) - made two films, Akaler Sandhane/Search of Famine (1980) and Khandar/Ruins (1983), about film-making itself, exploring its inherent distance and disengagement, and the problems entailed in trying to record "reality".

Perhaps the most outstanding figure of this generation, fulfilling the potential of the radical cultural initiatives of the IPTA, was the great Ritwik Ghatak. Disruption, the problems of locating oneself in a new environment, and the indignities and oppression of common people are the recurrent themes of this poet of Partition, who lamented the division of Bengal in 1947. Disharmony and discontinuity could be said to be the hallmark of Nagarik/Citizen (1952) and Meghe Dhaka Tara/Cloud-capped Star (1960), where studio sets of street corners mingle uneasily with live-action shots of Calcutta. There is something deliberately jarring about the rhythms of editing, the use of sound, and the compositions, as if the director refuses to allow us to settle into a comfortable, familiar frame of viewing. In Aajantrik/Man and Machine (1958) and Subarnarekha (1952, released 1965) he juxtaposes the displaced and transient urban figure with tribal peoples; placing the human figure at the edge of the frame, dwarfed by majestic nature.
Reply
#10
http://tamil.sify.com/uyirmmai/oct04/fulls...php?id=13601817 http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%...%AE%B0%E0%AF%87
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)