01-10-2006, 10:56 AM
<b>நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம்: மக்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு!</b>
puthinam
நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர்.
புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியாஇ பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை:
சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசவிக்இ பொஸ்னியாவில் கொடூரமான மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கு உத்தரவிட்ட கொடூர மிலேச்சத்தனமான இராணுவத் தளபதி இன்னமும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் ராட்கோ மிலேடிக் போன்றோர் வரிசையில் இலங்கையில் இடம்பெறக் கூடிய அரசியல் இராணுவத் தலைமைகள் பற்றியும் நாம் பேச உள்ளோம்.
சாமியே சரணம் ஐயப்பா என்று இந்தியாவுக்கு காவடி எடுத்துவிட்டு அது பயனளிக்காத நிலையில் மகிந்தரால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மங்கள என்று சொல்லக்கூடிய அமங்களமான ஒருவருடைய வாய் வார்த்தைகள் பற்றியும் அவரது அமெரிக்க செயற்பாடு பற்றியும் சொல்ல உள்ளோம்.
எவருடைய நலனுக்கும் இருப்புக்கும் கேடு விளைவிக்காமல் எங்களுடைய நலன்களை முன்னிறுத்தி எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறோம் என்பதுதான் எங்களின் செய்தி.
நாங்கள் தேவையற்ற எதிர்ப்புகளை இராஜசதந்திர வழிகளுடாக மென்மைப்படுத்தி எங்களது விடுதலைப் பாதையை நாங்கள் வேகப்படுத்த முயலுகிறேமே அல்லாமல் எந்தவிதமான சர்வதேச மற்றும் இந்திய அரசியலில் எதிலும் தலையிடாமல் நாங்கள் செல்லும் புதிய பாதையில் எங்களைச் செல்ல விடுங்கள் என்பதுதான் எங்களது கருத்து.
பயங்கரவாதம் என்ற சொல் இன்று உலகத்தைப் பிடித்து பேயாக ஆட்டிக் கொண்டு இருக்கிறது. இம்முறை மாவீரர் நாளில் தலைவர் அவர்கள் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்து இருந்தார்கள்.
"பயங்கரவாதம் என்ற சொற்பதத்துக்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழியில் நடத்தப்படுகிற நியாயமான அரசியல் போராட்டங்களும் பயங்கரவாதமாக திரிபுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கவராத சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறைக்கு அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது" - என்று தலைவர்கள் அவர்கள் கூறியிருந்த கருத்தின் விளைவை சொல்ல விரும்புகிறேன்.
அண்மைக்காலத்தில் உலகத்திலே இந்தக் கருத்துகள் உக்கிரமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த வகையில் தென் அமெரிக்காவிலே ஏற்பட்டிருக்கிற புதிய மாற்றங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
2005 ஆம் ஆண்டு யூன் மாதம் கியூபாவிலே உள்ள ஹவானாவின் மாநாட்டு மண்டபத்தில் 700-க்கும் மேற்பட்ட அறிஞர்கள்இ ஆய்வாளர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். அந்த இடத்தில் லத்தீன் அமெரிக்காவில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பும் தங்களுடைய சான்றுகளை முன்வைத்து எது பயங்கரவாதம் என்று பேசினார்கள்.
அங்கே முக்கியமாகச் சொல்லப்பட்டக் கருத்து என்னவென்று சொன்னால்இ அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு மக்கள் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டி இருக்கிறார்கள் என்ற செய்தியை நாங்கள் அறிந்தோம். அந்த முன்னணி இன்று தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
யார் பயங்கரவாதி என்ற கருத்தை அந்த முன்னணிக்கு ஊடாக நாம் அறியலாம். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்...லத்தீன் அமெரிக்காவின் பின்லேடன் என்று சொல்லப்படக் கூடிய ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை இன்று அமெரிக்கா தன்னுடைய நகரங்களிலே வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
வெனிசூலாவில் பல பயங்கரவாதச் செயல்களைச் செய்து அங்கிருந்து தப்பியோடி அமெரிக்காவில் இன்று இருக்கக் கூடிய அந்தப் பயங்கரவாதியை தங்கள் நாட்டுக்குத் தருமாறு வெனிசூலா அதிபர் அமெரிக்காவைக் கேட்டிருக்கின்றார்கள். அவர் பெயர் லூயிஸ் பொசாடா கர்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.
அவர் 1976 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கியூபாவின் விமானம் ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்து 73 பொதுமக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். அவர் பயங்கரவாதி.
யார் பயங்கரவாதி என்று தோலுரிக்கிற கனி ஒன்று உலகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதை நாங்கள் கவனத்திலே கொள்கிறோம்.
அந்த வகையில் இந்தத் தொடர்பாடல் துறையும் வல்லாண்மை சக்திகளால் திரிபுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுடைய விடுதலைப் போராட்டம் மிக நீண்டகாலமாக உரிய இடத்தை அடையாமல் இருப்பதற்கு இந்தத் தடைகளே காரணமாக இருந்தது.
இன்று தென் அமெரிக்காவில்- டெலி சவுத் என்று சொல்லக் கூடிய தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளினுடைய ஒரு அணியாக அர்ஜென்ரீனாஇ கியூபாஇ வெனிசூலா போன்ற நாடுகள் தங்களுக்கான தொலைக்காட்சியை அதாவது தென் அமெரிக்காவின் சி.என்.என். என்று சொல்லக் கூடியதை உருவாக்கி இருக்கிறார்கள். இதை புதிய செய்தியாக நாம் பார்க்கிறோம்.
இந்த அணியில் கியூபாஇ வெனிசூலாஇ அர்ஜென்ரினா இறுதியாக பொலிவியா சேர்ந்திருக்கிறது. பொலிவியா பற்றி ஒரு சில விடயங்கள் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.
பொலிவியாவின் வரலாறு ஒரு அதியசமான வரலாறு. மூன்றில் இரண்டு பகுதி மக்கள் செவ்விந்திய மக்கள். அவர்கள் நீண்டகாலமாக அடிமைப்பட்ட நிலையே வாழ்ந்தார்கள். 70 வீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நபரின் கைகளில் சிக்கி எண்ணெய் வளமெல்லாம் அவர்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டன.
இன்று தென் அமெரிக்காவின் 12 நாடுகளிலே பாரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுவருவதை உலகம் கவனித்துக் கொண்டு வருகிறது. தேர்தலுக்கு ஊடாகவே மாற்றங்களைச் செய்கிறார்கள். எந்த வகையிலும் பயங்கரவாதச் செயல் என்று அமெரிக்கா சொல்ல முடியாத வகையில் தேர்தலுக்கு ஊடாக மாற்றங்களைச் செய்து வருகிறார்கள்.
யூவோ மார்ஸ் என்று சொல்லக் கூடிய இன்று கூட வாடகை வீட்டு அறையில் வாழ்கிறஇ எந்தவிதமான வங்கிக் கணக்கும் இல்லாத ஒரு சாதாரணமான செவ்விந்திய மனிதர் இன்று பதவிக்கு வந்திருக்கிறார்கள். தென் அமெரிக்காவில் 200 வருடத்துக்குப் பின்னர் வந்திருக்கக் கூடிய ஒரு செவ்விந்திய ஜனாதிபதி என்று அவர் அழைக்கப்படுகிறார்.
அவர் சார்ந்த அய மாரா என்ற குடியினுடைய கொள்கைகளை அவர் முன்னால் வைத்துப் பேசுகிற போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவர் சொன்னார்இ
"என்னுடைய கோட்பாடு திருடக் கூடாதுஇ பொய் சொல்லக் கூடாதுஇ சோம்பி இருக்கக் கூடாதுஇ அதேவேளை அடிமையாக இருக்க கூடாது" என்று சொல்லி கருத்தை முன்வைத்திருக்கிறார்.
வெனிசூலாஇ கியூபாஇ பொலிவியா நாடுகளுக்கு ஊடாக ஒரு புதிய கீழைத்தேய தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு புதிய அணியை அவர்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் எவருக்கும் எதிராக என்று இல்லாவிட்டாலும் தங்கள் நாடுஇ தங்கள் வளங்கள் தங்களுக்கு உரியது என்ற அடிப்படையிலே உருவாகி வருகிறார்கள்.
வெனிசூலாவில் 1998 ஆம் ஆண்டிலிருந்து மிகப் பெரிய புரட்சியே நடந்து கொண்டு வருகிறது. அங்கே ஒரு சாதாரண இராணுவ உத்தியோகத்தராக இருந்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற சாவோசினுடைய நடவடிக்கைகள் மிகப் பெரிய எழுச்சியை உலகம் முழுக்க உருவாக்கி இருக்கின்றன.
உலகத்திலே மிகக் கூடிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடு- மிக அற்புதமாக அந்த எண்ணெய் வளத்தை தமது வறுமையான மக்களுக்காக- அந்த எண்ணெய் வளத்தின் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்து மிக அற்புதமாக ஒரு பொருண்மியத்தை அவர் உருவாக்கிக் கொண்டு வருகிறார்.
ஏழை நாடுகளுக்கு எண்ணெய்யை அவர் குறைந்த விலையில் விற்பதற்குக் கூட முன்வந்திருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கியூபாவுக்கு எண்ணெயை மிகக் குறைந்த விலைக்கு விற்றுக் கொண்டு வருகிறார்கள். இப்படியாக அந்த நாடுகள் எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லக் கூடிய ஒரு நாடாக இன்று வெனிசூலா மாறியிருக்கிறது.
கியூபாப் புரட்சி நடந்தது 1959 ஆம் ஆண்டு. தொடக்கத்திலே அந்தப் புரட்சியை நசுக்குவதற்கு இராணுவ ரீதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு பே ஓப் பிக்ஸ் என்று சொல்லக் கூடிய அந்த வளைகுடா படையெடுப்புக்குப் பின்னால் இராணுவ ரீதியான செயற்பாடுகள் தோற்றதற்குப் பின்னால் பொருண்மிய ரீதியான முற்றுகை ஒன்று இடப்பட்டு பல்வேறு வகையிலே சொல்லப்படமுடியாத தாக்குதல்களை மேற்கொண்டு இலக்குகள் பொருண்மிய ரீதியாக அடையாளம் காணப்பட்டு 40 வருட காலமாக- உலகத்திலே மிக நீண்ட பொருண்மிய முற்றுகைக்குள்ளே அகப்பட்ட கியூபா நாடுஇ இன்று மெல்ல மெல்ல தலைநிமிர்ந்து ஒரு காலத்திலே சய தேசிய உற்பத்தியைக் கொண்டிருந்த நாடு இன்றைக்கு 7 விழுக்காடு அளவிற்கு வருட உற்பத்தி வளர்ந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
கியூபா எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கிற. நாளை நாங்கள் விடுதலை பெற்றாலும் கூட தொடக்கத்திலே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக்கூடும். இவற்றைத் தாண்டுவதற்காக வெறுமனே ஆர்வம் மாத்திரமல்லாமல் ஆக்கபூர்வமாகச் செயற்படக் கூடிய அணியே உலகத்தில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.
கியூபாவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது எங்களுக்கு அதிசயமாக இருக்கிறது.
கியூபாவில் ஒரு அற்புதமான மக்கள் நலன் சார்ந்த பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
தங்களது வரவு - செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 68 விழுக்காட்டுக்கு மேல் கல்விஇ சுகாதாரம்இ சமூக நலன் மற்றும் விஞ்ஞான நலன்களுக்காக ஒதுக்குகிறார்கள்.
அதனுடைய விளைவாக உலகத்திலே இன்றைக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம் மிகுந்த ஒரு அற்புதமான மருத்துவத் துறை கியூபாவிலே இருப்பதை உலகம் முழுமைக்கும் ஏற்றுக் கொள்வார்கள். 165 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற அளவிலே கியூபாவில் இன்றைய நிலை இருக்கிறது.
ஏறத்தாழ 12 ஆயிரம் விஞ்ஞானிகள்- அவர்களிலே 15 விழுக்காடு கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்; 210 ஆய்வு நிறுவனங்கள். ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் மேலானோர் அங்கே பணி செய்கிறார்கள் என எண்ணிப் பாருங்கள்.
அதைவிட முக்கியமானது உலகத்திலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைந்த- சிறுவர் இறப்பு விகிதம் 6.2 விழுக்காடு உடைய அந்த நிலையும் ஆயுள் நிலை வாழ்நிலை எதிர்பார்ப்பு 76 ஆகவும் உள்ள நாடாக கியூபா இருக்கிறது. இலங்கையில் கூட 73 ஆக இருக்கிறது.
இப்படியாக கியூபாவில் புதிய அணியை உருவாக்கி புரட்சியை நடத்தி அற்புதமாக ஒரு மாற்று அணியை உருவாக்கிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.
பொலிவியாவைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய செய்தி போராளிகள்இ பொதுமக்களுக்கு உள்ளது.
1967 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் நாள்தான் கொலைக் குழுக்களால் சே கொல்லப்பட்டார். இந்த உலகத்திலே நாங்கள் இப்போது தனித்துவிடப்படவில்லை.
எங்களுடைய அற்புதமானஇ அன்புக்குரிய பொதுமக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்- நாங்கள் தனித்துவிடப்படவில்லை. உலகமே தன்னுடைய வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் போராடிக் கொண்டு இருக்கிறது.
அங்கே புதிய புதிய அணிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. நாளை நாங்களும் விடுதலைப் பெற்றுச் செயற்படும்போது எங்களுக்கு உதவ- கரங்களைக் கொடுப்பதற்கு- எங்கள் மனங்களைத் தொடுவதற்கு- எங்கள் பசியைத் தீர்ப்பதற்கு நாடுகள் உலகிலே உள்ளன.
நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை. வாழ்வின் இருப்புக்காக வரலாற்றை எங்களின் மக்களுக்காக நாம் முன்வைக்கிறோமே அல்லாமல் வேறு எந்த வகையான அரசியலும் இந்த இடத்திலே இங்கே இல்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.
அதேவேளையில் இன்னொரு முக்கிய செய்தியை இங்கே சொல்ல வேண்டும்.
அண்மையிலே இந்தியாவுக்குப் பயணம் செய்து அங்கே உறங்கிக் கிடந்த தமிழ் மக்களின் உணர்வைத் தட்டிவிட்ட பணியைத் தவிர வேறு எதையும் மகிந்தர் செய்யவில்லை. அது தோல்வியில் முடிந்ததுக்குப் பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக- மப்பு பிடித்த மந்தி மரத்துக்கு மரம் தாவுவது போல- இப்போது அவர் தான் போகவில்லை. ஏனென்றால் இவர் போனால் வரவேற்க அங்கே யாரும் தயாராக இல்லை.
இவரைச் சந்திப்பதற்கு புஸ் தயாராக இருப்பார் என்று நான் நம்பவில்லை.
தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் என்று சொல்லக் கூடிய ஒரு கத்துக்குட்டி அமைச்சர்- வெளிநாடு என்றால் என்னவென்று அரசியல் ரீதியாக-இராஜதந்திர ரீதியாக எந்தவிதமான அனுபவமும் அற்ற- உள்நாட்டிலே கீழ்நிலை அரசியல் நடத்தி அந்த செல்வாக்கின் பயனாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீரவைஇ அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே அவர் கடந்த சில நாள்களாக திருவாய் மலர்ந்து பல செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார்.
அந்தச் செய்திகளைக் கேட்கிறபோது எங்களுடைய இரத்தம் கொதிக்கிறது என்று சொல்லவில்லை. எங்களுடைய மனங்களிலே மிகப் பெரிய சோகமும் மிகப் பெரிய சினமும் கிளர்ந்தெழுகின்றன.
மங்கள சமரவீர- முக்கியமாக அமெரிக்காவில் உள்ள புலனாய்வு அமைப்புகளையும்இ பயங்கரவாத எதிர்ப்பு இயக்கங்களையும் பல்வேறு இயக்கங்களையும் சந்தித்தது மட்டுமல்லாமல்
அவர் அண்மையில் "வாசிங்டன் போஸ்ட்" பத்திரிகைக்கும் மிகப் பெரிய செய்தி ஒன்றை அளித்திருக்கிறார்கள்.
2 நாட்களுக்கு முன்னர் மங்கள சமரவீர சொல்லியிருக்கும் கருத்துகளை எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
"நவீன பயங்கரவாத உலகத்தின் தந்தையாக" எமது விடுதலைப் போராட்டத்தை மங்கள சமரவீர வர்ணித்திருக்கிறார். அதைப் போல்
"மிகக் கொடிய கொலைகார பொருள்முறை அமைப்பைக் கொண்ட அல்-கொய்தா அமைப்பைவிட மிக பாரதூரமான ஒரு இயக்கம்"
என்று அமெரிக்காவில் போய் சொல்லி கோள் மூட்டுகிற வேலையைப் பார்த்து இருக்கிறார்.
எங்களைப் பற்றி பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசாங்கம் சொல்லக் கூடிய இறுதி செய்தியாக இருக்கிறது- இதுதான் உண்மையான செய்தி என்பதையும் எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
அமெரிக்காவில் சொல்லி இருக்கிறார்
"எங்களுக்குத் தேத்தண்ணி தந்தால் போதாது. ஆதரவு தந்தால் காணாது. நாங்கள் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நீங்கள் செய்ய வேண்டும்" என்று கேட்பதற்காக இங்கே இருந்து அமெரிக்காவுக்குப் போயிருக்கிறார்.
அங்கே என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாவிட்டாலும் கூட இப்போது சில செய்திகளை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
எங்கள் மக்களின் வாழ்வும் இருப்பும் தொடர்பான முக்கியமான செய்தி என்று நினைக்கிறேன்.
இந்தச் செய்தியை மக்கள் முன்னிலையில் தெளிவாக வைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அண்மைக்காலமாக எங்கள் பகுதிகளில் கொலைகள் அரங்கேறிக் கொண்டு வருகின்றன. முக்கியமாக இளைய தலைமுறைஇ அறிவாளர்கள் குறிபார்த்து இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
இந்தத் தேசத்தினது குருத்துகளைக் கருக்குவதிலே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த மாதிரியான செயற்பாடுகளுக்குக் காரணமாக இருக்கக் கூடிய கொலைக் குழுக்கள் பற்றி உலகத்திலே மிக சோகமான அவலமான வரலாறு ஒன்று இருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளிலே குறிப்பாக கொலம்பியாஇ வெனிசூலாஇ சிலிஇ கியூபா போன்ற நாடுகளிலே 19 ஆம்இ 20 ஆம் நூற்றாண்டுகளிலே அமெரிக்க சி.ஐ.ஏ. துணையோடு அமெரிக்க இராணுவ நிலைகளிலே பயிற்றுவிக்கப்பட்ட கொலைக் குழுக்களின் தோற்றங்களைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம்.
வரலாற்றிலே அண்மைக்காலமாக சி.ஐ.ஏ.வின் இரகசியக் கோப்புகள் யாவும் அமெரிக்காவிலே வெளியிடப்பட்டு பல்வேறு செய்திகள் பகிரங்கமாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஏதோ கண்டுபிடித்த செய்திகள் அல்ல.
உதாரணமாக 70 ஆம் ஆண்டுகளில் கொண்டோர் பிளான் என்று சொல்லக் கூடிய கேசிங்கரின் அடிப்படையில் தென் அமெரிக்காவில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களைக் கொல்வதற்கான பாரிய திட்டம் ஒன்று குழுக்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாற்றை நாங்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
அந்த வரலாற்றை அமெரிக்கா இப்போது கைவிட்டதாக நாங்கள் நம்பிக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது மங்கள சமரவீர அங்கே போய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்-
எங்கள் மண்ணிலே கொலைக் குழுக்களினது கைங்கர்யங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
இந்தக் கைங்கர்யங்களை தொடர்ந்து நிகழ்த்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற அந்த நிலையிலேயும்
ஒருகால கட்டத்தில் சமூக நீதியைக் கதைக்கிற இந்த உலகம்இ நிச்சயமாக இந்த கொலைகாரக் குழுக்களைச் செயற்படுத்தி அனுமதித்திருக்கக் கூடிய சரத் பொன்சேகா அல்லது மகிந்த ராஜபக்ச போன்றவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தோற்றுவித்து- சிறைப்பிடித்து- விசாரிக்கப்பட வேண்டிய கட்டத்துக்கு தள்ளபடப் போகிறார்கள் என்பதையும் அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
ஆகவே இந்த முறை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லுவது போல்-
மங்கள சமரவீர எந்த வகையான கோள்மூட்டலை அமெரிக்காவில் செய்தால் என்ன? எங்கு செய்தால் என்ன?
ஒரு புதிய நிலைப்பாடு இன்றைக்கு எங்கள் போராட்டம் பற்றி உலகத்திலே உருவாகிக் கொண்டு இருக்கிறது.
அந்த நிலைப்பாடு என்னவென்று சொன்னால்-
போதும் போதும் என்றாகிவிட்ட இந்த வன்முறைக்கு வழியாக ஒரு புதிய தீர்வை இந்த உலகம் முன்வைக்காவிட்டால்- அந்தத் தீர்வை நாங்களாக ஏற்படுத்திக் கொள்வதை உலகம் தடுக்க மாட்டார்கள் என்ற நிலையிலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செய்தி.
ஆகஇ இந்த கொலைக் குழுக்களினது அரங்கேற்றங்கள் எங்களுக்கு லத்தீன் அமெரிக்கச் சம்பவங்களை உணர்த்துகின்றன.
அதே லத்தீன் அமெரிக்க நாடுகள்தான் இந்தக் கொலைக் குழுக்களை எல்லாம் விரட்டி புரட்சிகளை நடத்தி ஒரு புதிய அணியை உருவாக்கி இன்று உலத்திலே ஒரு புதிய சக்தியாக மாறியிருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
அண்மைக்காலத்திலே அரசியல் ரீதியான மாற்றங்களை தென் அமெரிக்கா நாடுகள் நிகழ்த்துவதை உலகம் பதிவு செய்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் நாங்கள் பார்க்கும் போது நிச்சயமாக ஆசியாவில் கூட இந்த அடக்குமுறையாளர்களுக்கு வல்லாண்மை நாடுகள் தொடர்ந்து உதவி செய்தால் அதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வுகள் நடந்திருப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.
ஆகவே அன்பிற்குரியவர்களே!
நாங்கள் தனித்துவிடப்படவில்லை.
ஆனால் எங்களை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சேகுவேராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
40 வருடகாலமாக மிகப் பெரிய நீண்ட பொருண்மிய அடக்குமுறைகளுக்கு உள்ளே இருந்தும் ஒரு நாட்டால் வாழமுடியும் என்று சொன்னால்-
அதன் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்த முடியாது-
அதன் கடல் போக்குவரத்து மிகக் கூடுதலான செலவைக் கொடுக்கிறது-
இப்படி எந்த வகையான உறவும் உதவியும் இல்லாத நிலையில் கியூபாவுக்கு
இன்றைக்கு சீனா உதவி செய்கிறது- வெனிசூலா உதவி செய்கிறது. இன்னும் பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன.
ஆகவேஇ நீடித்து நிற்கும் விடுதலைப் போராட்டத்துக்கு உதவிகள் தாமாக வந்து சேரும் என்பதைத்தான் இன்று நாம் முக்கிய செய்தியாக கூறுகிறோம் என்றார் <b>கா.வே.பாலகுமாரன்....</b>
puthinam
நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர்.
புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியாஇ பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை:
சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசவிக்இ பொஸ்னியாவில் கொடூரமான மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கு உத்தரவிட்ட கொடூர மிலேச்சத்தனமான இராணுவத் தளபதி இன்னமும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் ராட்கோ மிலேடிக் போன்றோர் வரிசையில் இலங்கையில் இடம்பெறக் கூடிய அரசியல் இராணுவத் தலைமைகள் பற்றியும் நாம் பேச உள்ளோம்.
சாமியே சரணம் ஐயப்பா என்று இந்தியாவுக்கு காவடி எடுத்துவிட்டு அது பயனளிக்காத நிலையில் மகிந்தரால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மங்கள என்று சொல்லக்கூடிய அமங்களமான ஒருவருடைய வாய் வார்த்தைகள் பற்றியும் அவரது அமெரிக்க செயற்பாடு பற்றியும் சொல்ல உள்ளோம்.
எவருடைய நலனுக்கும் இருப்புக்கும் கேடு விளைவிக்காமல் எங்களுடைய நலன்களை முன்னிறுத்தி எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறோம் என்பதுதான் எங்களின் செய்தி.
நாங்கள் தேவையற்ற எதிர்ப்புகளை இராஜசதந்திர வழிகளுடாக மென்மைப்படுத்தி எங்களது விடுதலைப் பாதையை நாங்கள் வேகப்படுத்த முயலுகிறேமே அல்லாமல் எந்தவிதமான சர்வதேச மற்றும் இந்திய அரசியலில் எதிலும் தலையிடாமல் நாங்கள் செல்லும் புதிய பாதையில் எங்களைச் செல்ல விடுங்கள் என்பதுதான் எங்களது கருத்து.
பயங்கரவாதம் என்ற சொல் இன்று உலகத்தைப் பிடித்து பேயாக ஆட்டிக் கொண்டு இருக்கிறது. இம்முறை மாவீரர் நாளில் தலைவர் அவர்கள் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்து இருந்தார்கள்.
"பயங்கரவாதம் என்ற சொற்பதத்துக்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழியில் நடத்தப்படுகிற நியாயமான அரசியல் போராட்டங்களும் பயங்கரவாதமாக திரிபுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கவராத சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறைக்கு அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது" - என்று தலைவர்கள் அவர்கள் கூறியிருந்த கருத்தின் விளைவை சொல்ல விரும்புகிறேன்.
அண்மைக்காலத்தில் உலகத்திலே இந்தக் கருத்துகள் உக்கிரமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த வகையில் தென் அமெரிக்காவிலே ஏற்பட்டிருக்கிற புதிய மாற்றங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
2005 ஆம் ஆண்டு யூன் மாதம் கியூபாவிலே உள்ள ஹவானாவின் மாநாட்டு மண்டபத்தில் 700-க்கும் மேற்பட்ட அறிஞர்கள்இ ஆய்வாளர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். அந்த இடத்தில் லத்தீன் அமெரிக்காவில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பும் தங்களுடைய சான்றுகளை முன்வைத்து எது பயங்கரவாதம் என்று பேசினார்கள்.
அங்கே முக்கியமாகச் சொல்லப்பட்டக் கருத்து என்னவென்று சொன்னால்இ அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு மக்கள் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டி இருக்கிறார்கள் என்ற செய்தியை நாங்கள் அறிந்தோம். அந்த முன்னணி இன்று தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
யார் பயங்கரவாதி என்ற கருத்தை அந்த முன்னணிக்கு ஊடாக நாம் அறியலாம். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்...லத்தீன் அமெரிக்காவின் பின்லேடன் என்று சொல்லப்படக் கூடிய ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை இன்று அமெரிக்கா தன்னுடைய நகரங்களிலே வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
வெனிசூலாவில் பல பயங்கரவாதச் செயல்களைச் செய்து அங்கிருந்து தப்பியோடி அமெரிக்காவில் இன்று இருக்கக் கூடிய அந்தப் பயங்கரவாதியை தங்கள் நாட்டுக்குத் தருமாறு வெனிசூலா அதிபர் அமெரிக்காவைக் கேட்டிருக்கின்றார்கள். அவர் பெயர் லூயிஸ் பொசாடா கர்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.
அவர் 1976 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கியூபாவின் விமானம் ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்து 73 பொதுமக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். அவர் பயங்கரவாதி.
யார் பயங்கரவாதி என்று தோலுரிக்கிற கனி ஒன்று உலகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதை நாங்கள் கவனத்திலே கொள்கிறோம்.
அந்த வகையில் இந்தத் தொடர்பாடல் துறையும் வல்லாண்மை சக்திகளால் திரிபுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுடைய விடுதலைப் போராட்டம் மிக நீண்டகாலமாக உரிய இடத்தை அடையாமல் இருப்பதற்கு இந்தத் தடைகளே காரணமாக இருந்தது.
இன்று தென் அமெரிக்காவில்- டெலி சவுத் என்று சொல்லக் கூடிய தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளினுடைய ஒரு அணியாக அர்ஜென்ரீனாஇ கியூபாஇ வெனிசூலா போன்ற நாடுகள் தங்களுக்கான தொலைக்காட்சியை அதாவது தென் அமெரிக்காவின் சி.என்.என். என்று சொல்லக் கூடியதை உருவாக்கி இருக்கிறார்கள். இதை புதிய செய்தியாக நாம் பார்க்கிறோம்.
இந்த அணியில் கியூபாஇ வெனிசூலாஇ அர்ஜென்ரினா இறுதியாக பொலிவியா சேர்ந்திருக்கிறது. பொலிவியா பற்றி ஒரு சில விடயங்கள் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.
பொலிவியாவின் வரலாறு ஒரு அதியசமான வரலாறு. மூன்றில் இரண்டு பகுதி மக்கள் செவ்விந்திய மக்கள். அவர்கள் நீண்டகாலமாக அடிமைப்பட்ட நிலையே வாழ்ந்தார்கள். 70 வீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நபரின் கைகளில் சிக்கி எண்ணெய் வளமெல்லாம் அவர்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டன.
இன்று தென் அமெரிக்காவின் 12 நாடுகளிலே பாரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுவருவதை உலகம் கவனித்துக் கொண்டு வருகிறது. தேர்தலுக்கு ஊடாகவே மாற்றங்களைச் செய்கிறார்கள். எந்த வகையிலும் பயங்கரவாதச் செயல் என்று அமெரிக்கா சொல்ல முடியாத வகையில் தேர்தலுக்கு ஊடாக மாற்றங்களைச் செய்து வருகிறார்கள்.
யூவோ மார்ஸ் என்று சொல்லக் கூடிய இன்று கூட வாடகை வீட்டு அறையில் வாழ்கிறஇ எந்தவிதமான வங்கிக் கணக்கும் இல்லாத ஒரு சாதாரணமான செவ்விந்திய மனிதர் இன்று பதவிக்கு வந்திருக்கிறார்கள். தென் அமெரிக்காவில் 200 வருடத்துக்குப் பின்னர் வந்திருக்கக் கூடிய ஒரு செவ்விந்திய ஜனாதிபதி என்று அவர் அழைக்கப்படுகிறார்.
அவர் சார்ந்த அய மாரா என்ற குடியினுடைய கொள்கைகளை அவர் முன்னால் வைத்துப் பேசுகிற போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவர் சொன்னார்இ
"என்னுடைய கோட்பாடு திருடக் கூடாதுஇ பொய் சொல்லக் கூடாதுஇ சோம்பி இருக்கக் கூடாதுஇ அதேவேளை அடிமையாக இருக்க கூடாது" என்று சொல்லி கருத்தை முன்வைத்திருக்கிறார்.
வெனிசூலாஇ கியூபாஇ பொலிவியா நாடுகளுக்கு ஊடாக ஒரு புதிய கீழைத்தேய தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு புதிய அணியை அவர்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் எவருக்கும் எதிராக என்று இல்லாவிட்டாலும் தங்கள் நாடுஇ தங்கள் வளங்கள் தங்களுக்கு உரியது என்ற அடிப்படையிலே உருவாகி வருகிறார்கள்.
வெனிசூலாவில் 1998 ஆம் ஆண்டிலிருந்து மிகப் பெரிய புரட்சியே நடந்து கொண்டு வருகிறது. அங்கே ஒரு சாதாரண இராணுவ உத்தியோகத்தராக இருந்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற சாவோசினுடைய நடவடிக்கைகள் மிகப் பெரிய எழுச்சியை உலகம் முழுக்க உருவாக்கி இருக்கின்றன.
உலகத்திலே மிகக் கூடிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடு- மிக அற்புதமாக அந்த எண்ணெய் வளத்தை தமது வறுமையான மக்களுக்காக- அந்த எண்ணெய் வளத்தின் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்து மிக அற்புதமாக ஒரு பொருண்மியத்தை அவர் உருவாக்கிக் கொண்டு வருகிறார்.
ஏழை நாடுகளுக்கு எண்ணெய்யை அவர் குறைந்த விலையில் விற்பதற்குக் கூட முன்வந்திருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கியூபாவுக்கு எண்ணெயை மிகக் குறைந்த விலைக்கு விற்றுக் கொண்டு வருகிறார்கள். இப்படியாக அந்த நாடுகள் எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லக் கூடிய ஒரு நாடாக இன்று வெனிசூலா மாறியிருக்கிறது.
கியூபாப் புரட்சி நடந்தது 1959 ஆம் ஆண்டு. தொடக்கத்திலே அந்தப் புரட்சியை நசுக்குவதற்கு இராணுவ ரீதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு பே ஓப் பிக்ஸ் என்று சொல்லக் கூடிய அந்த வளைகுடா படையெடுப்புக்குப் பின்னால் இராணுவ ரீதியான செயற்பாடுகள் தோற்றதற்குப் பின்னால் பொருண்மிய ரீதியான முற்றுகை ஒன்று இடப்பட்டு பல்வேறு வகையிலே சொல்லப்படமுடியாத தாக்குதல்களை மேற்கொண்டு இலக்குகள் பொருண்மிய ரீதியாக அடையாளம் காணப்பட்டு 40 வருட காலமாக- உலகத்திலே மிக நீண்ட பொருண்மிய முற்றுகைக்குள்ளே அகப்பட்ட கியூபா நாடுஇ இன்று மெல்ல மெல்ல தலைநிமிர்ந்து ஒரு காலத்திலே சய தேசிய உற்பத்தியைக் கொண்டிருந்த நாடு இன்றைக்கு 7 விழுக்காடு அளவிற்கு வருட உற்பத்தி வளர்ந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
கியூபா எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கிற. நாளை நாங்கள் விடுதலை பெற்றாலும் கூட தொடக்கத்திலே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக்கூடும். இவற்றைத் தாண்டுவதற்காக வெறுமனே ஆர்வம் மாத்திரமல்லாமல் ஆக்கபூர்வமாகச் செயற்படக் கூடிய அணியே உலகத்தில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.
கியூபாவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது எங்களுக்கு அதிசயமாக இருக்கிறது.
கியூபாவில் ஒரு அற்புதமான மக்கள் நலன் சார்ந்த பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
தங்களது வரவு - செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 68 விழுக்காட்டுக்கு மேல் கல்விஇ சுகாதாரம்இ சமூக நலன் மற்றும் விஞ்ஞான நலன்களுக்காக ஒதுக்குகிறார்கள்.
அதனுடைய விளைவாக உலகத்திலே இன்றைக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம் மிகுந்த ஒரு அற்புதமான மருத்துவத் துறை கியூபாவிலே இருப்பதை உலகம் முழுமைக்கும் ஏற்றுக் கொள்வார்கள். 165 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற அளவிலே கியூபாவில் இன்றைய நிலை இருக்கிறது.
ஏறத்தாழ 12 ஆயிரம் விஞ்ஞானிகள்- அவர்களிலே 15 விழுக்காடு கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்; 210 ஆய்வு நிறுவனங்கள். ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் மேலானோர் அங்கே பணி செய்கிறார்கள் என எண்ணிப் பாருங்கள்.
அதைவிட முக்கியமானது உலகத்திலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைந்த- சிறுவர் இறப்பு விகிதம் 6.2 விழுக்காடு உடைய அந்த நிலையும் ஆயுள் நிலை வாழ்நிலை எதிர்பார்ப்பு 76 ஆகவும் உள்ள நாடாக கியூபா இருக்கிறது. இலங்கையில் கூட 73 ஆக இருக்கிறது.
இப்படியாக கியூபாவில் புதிய அணியை உருவாக்கி புரட்சியை நடத்தி அற்புதமாக ஒரு மாற்று அணியை உருவாக்கிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.
பொலிவியாவைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய செய்தி போராளிகள்இ பொதுமக்களுக்கு உள்ளது.
1967 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் நாள்தான் கொலைக் குழுக்களால் சே கொல்லப்பட்டார். இந்த உலகத்திலே நாங்கள் இப்போது தனித்துவிடப்படவில்லை.
எங்களுடைய அற்புதமானஇ அன்புக்குரிய பொதுமக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்- நாங்கள் தனித்துவிடப்படவில்லை. உலகமே தன்னுடைய வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் போராடிக் கொண்டு இருக்கிறது.
அங்கே புதிய புதிய அணிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. நாளை நாங்களும் விடுதலைப் பெற்றுச் செயற்படும்போது எங்களுக்கு உதவ- கரங்களைக் கொடுப்பதற்கு- எங்கள் மனங்களைத் தொடுவதற்கு- எங்கள் பசியைத் தீர்ப்பதற்கு நாடுகள் உலகிலே உள்ளன.
நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை. வாழ்வின் இருப்புக்காக வரலாற்றை எங்களின் மக்களுக்காக நாம் முன்வைக்கிறோமே அல்லாமல் வேறு எந்த வகையான அரசியலும் இந்த இடத்திலே இங்கே இல்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.
அதேவேளையில் இன்னொரு முக்கிய செய்தியை இங்கே சொல்ல வேண்டும்.
அண்மையிலே இந்தியாவுக்குப் பயணம் செய்து அங்கே உறங்கிக் கிடந்த தமிழ் மக்களின் உணர்வைத் தட்டிவிட்ட பணியைத் தவிர வேறு எதையும் மகிந்தர் செய்யவில்லை. அது தோல்வியில் முடிந்ததுக்குப் பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக- மப்பு பிடித்த மந்தி மரத்துக்கு மரம் தாவுவது போல- இப்போது அவர் தான் போகவில்லை. ஏனென்றால் இவர் போனால் வரவேற்க அங்கே யாரும் தயாராக இல்லை.
இவரைச் சந்திப்பதற்கு புஸ் தயாராக இருப்பார் என்று நான் நம்பவில்லை.
தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் என்று சொல்லக் கூடிய ஒரு கத்துக்குட்டி அமைச்சர்- வெளிநாடு என்றால் என்னவென்று அரசியல் ரீதியாக-இராஜதந்திர ரீதியாக எந்தவிதமான அனுபவமும் அற்ற- உள்நாட்டிலே கீழ்நிலை அரசியல் நடத்தி அந்த செல்வாக்கின் பயனாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீரவைஇ அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே அவர் கடந்த சில நாள்களாக திருவாய் மலர்ந்து பல செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார்.
அந்தச் செய்திகளைக் கேட்கிறபோது எங்களுடைய இரத்தம் கொதிக்கிறது என்று சொல்லவில்லை. எங்களுடைய மனங்களிலே மிகப் பெரிய சோகமும் மிகப் பெரிய சினமும் கிளர்ந்தெழுகின்றன.
மங்கள சமரவீர- முக்கியமாக அமெரிக்காவில் உள்ள புலனாய்வு அமைப்புகளையும்இ பயங்கரவாத எதிர்ப்பு இயக்கங்களையும் பல்வேறு இயக்கங்களையும் சந்தித்தது மட்டுமல்லாமல்
அவர் அண்மையில் "வாசிங்டன் போஸ்ட்" பத்திரிகைக்கும் மிகப் பெரிய செய்தி ஒன்றை அளித்திருக்கிறார்கள்.
2 நாட்களுக்கு முன்னர் மங்கள சமரவீர சொல்லியிருக்கும் கருத்துகளை எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
"நவீன பயங்கரவாத உலகத்தின் தந்தையாக" எமது விடுதலைப் போராட்டத்தை மங்கள சமரவீர வர்ணித்திருக்கிறார். அதைப் போல்
"மிகக் கொடிய கொலைகார பொருள்முறை அமைப்பைக் கொண்ட அல்-கொய்தா அமைப்பைவிட மிக பாரதூரமான ஒரு இயக்கம்"
என்று அமெரிக்காவில் போய் சொல்லி கோள் மூட்டுகிற வேலையைப் பார்த்து இருக்கிறார்.
எங்களைப் பற்றி பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசாங்கம் சொல்லக் கூடிய இறுதி செய்தியாக இருக்கிறது- இதுதான் உண்மையான செய்தி என்பதையும் எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
அமெரிக்காவில் சொல்லி இருக்கிறார்
"எங்களுக்குத் தேத்தண்ணி தந்தால் போதாது. ஆதரவு தந்தால் காணாது. நாங்கள் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நீங்கள் செய்ய வேண்டும்" என்று கேட்பதற்காக இங்கே இருந்து அமெரிக்காவுக்குப் போயிருக்கிறார்.
அங்கே என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாவிட்டாலும் கூட இப்போது சில செய்திகளை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
எங்கள் மக்களின் வாழ்வும் இருப்பும் தொடர்பான முக்கியமான செய்தி என்று நினைக்கிறேன்.
இந்தச் செய்தியை மக்கள் முன்னிலையில் தெளிவாக வைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அண்மைக்காலமாக எங்கள் பகுதிகளில் கொலைகள் அரங்கேறிக் கொண்டு வருகின்றன. முக்கியமாக இளைய தலைமுறைஇ அறிவாளர்கள் குறிபார்த்து இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
இந்தத் தேசத்தினது குருத்துகளைக் கருக்குவதிலே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த மாதிரியான செயற்பாடுகளுக்குக் காரணமாக இருக்கக் கூடிய கொலைக் குழுக்கள் பற்றி உலகத்திலே மிக சோகமான அவலமான வரலாறு ஒன்று இருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளிலே குறிப்பாக கொலம்பியாஇ வெனிசூலாஇ சிலிஇ கியூபா போன்ற நாடுகளிலே 19 ஆம்இ 20 ஆம் நூற்றாண்டுகளிலே அமெரிக்க சி.ஐ.ஏ. துணையோடு அமெரிக்க இராணுவ நிலைகளிலே பயிற்றுவிக்கப்பட்ட கொலைக் குழுக்களின் தோற்றங்களைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம்.
வரலாற்றிலே அண்மைக்காலமாக சி.ஐ.ஏ.வின் இரகசியக் கோப்புகள் யாவும் அமெரிக்காவிலே வெளியிடப்பட்டு பல்வேறு செய்திகள் பகிரங்கமாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஏதோ கண்டுபிடித்த செய்திகள் அல்ல.
உதாரணமாக 70 ஆம் ஆண்டுகளில் கொண்டோர் பிளான் என்று சொல்லக் கூடிய கேசிங்கரின் அடிப்படையில் தென் அமெரிக்காவில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களைக் கொல்வதற்கான பாரிய திட்டம் ஒன்று குழுக்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாற்றை நாங்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
அந்த வரலாற்றை அமெரிக்கா இப்போது கைவிட்டதாக நாங்கள் நம்பிக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது மங்கள சமரவீர அங்கே போய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்-
எங்கள் மண்ணிலே கொலைக் குழுக்களினது கைங்கர்யங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
இந்தக் கைங்கர்யங்களை தொடர்ந்து நிகழ்த்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற அந்த நிலையிலேயும்
ஒருகால கட்டத்தில் சமூக நீதியைக் கதைக்கிற இந்த உலகம்இ நிச்சயமாக இந்த கொலைகாரக் குழுக்களைச் செயற்படுத்தி அனுமதித்திருக்கக் கூடிய சரத் பொன்சேகா அல்லது மகிந்த ராஜபக்ச போன்றவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தோற்றுவித்து- சிறைப்பிடித்து- விசாரிக்கப்பட வேண்டிய கட்டத்துக்கு தள்ளபடப் போகிறார்கள் என்பதையும் அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
ஆகவே இந்த முறை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லுவது போல்-
மங்கள சமரவீர எந்த வகையான கோள்மூட்டலை அமெரிக்காவில் செய்தால் என்ன? எங்கு செய்தால் என்ன?
ஒரு புதிய நிலைப்பாடு இன்றைக்கு எங்கள் போராட்டம் பற்றி உலகத்திலே உருவாகிக் கொண்டு இருக்கிறது.
அந்த நிலைப்பாடு என்னவென்று சொன்னால்-
போதும் போதும் என்றாகிவிட்ட இந்த வன்முறைக்கு வழியாக ஒரு புதிய தீர்வை இந்த உலகம் முன்வைக்காவிட்டால்- அந்தத் தீர்வை நாங்களாக ஏற்படுத்திக் கொள்வதை உலகம் தடுக்க மாட்டார்கள் என்ற நிலையிலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செய்தி.
ஆகஇ இந்த கொலைக் குழுக்களினது அரங்கேற்றங்கள் எங்களுக்கு லத்தீன் அமெரிக்கச் சம்பவங்களை உணர்த்துகின்றன.
அதே லத்தீன் அமெரிக்க நாடுகள்தான் இந்தக் கொலைக் குழுக்களை எல்லாம் விரட்டி புரட்சிகளை நடத்தி ஒரு புதிய அணியை உருவாக்கி இன்று உலத்திலே ஒரு புதிய சக்தியாக மாறியிருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
அண்மைக்காலத்திலே அரசியல் ரீதியான மாற்றங்களை தென் அமெரிக்கா நாடுகள் நிகழ்த்துவதை உலகம் பதிவு செய்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் நாங்கள் பார்க்கும் போது நிச்சயமாக ஆசியாவில் கூட இந்த அடக்குமுறையாளர்களுக்கு வல்லாண்மை நாடுகள் தொடர்ந்து உதவி செய்தால் அதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வுகள் நடந்திருப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.
ஆகவே அன்பிற்குரியவர்களே!
நாங்கள் தனித்துவிடப்படவில்லை.
ஆனால் எங்களை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சேகுவேராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
40 வருடகாலமாக மிகப் பெரிய நீண்ட பொருண்மிய அடக்குமுறைகளுக்கு உள்ளே இருந்தும் ஒரு நாட்டால் வாழமுடியும் என்று சொன்னால்-
அதன் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்த முடியாது-
அதன் கடல் போக்குவரத்து மிகக் கூடுதலான செலவைக் கொடுக்கிறது-
இப்படி எந்த வகையான உறவும் உதவியும் இல்லாத நிலையில் கியூபாவுக்கு
இன்றைக்கு சீனா உதவி செய்கிறது- வெனிசூலா உதவி செய்கிறது. இன்னும் பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன.
ஆகவேஇ நீடித்து நிற்கும் விடுதலைப் போராட்டத்துக்கு உதவிகள் தாமாக வந்து சேரும் என்பதைத்தான் இன்று நாம் முக்கிய செய்தியாக கூறுகிறோம் என்றார் <b>கா.வே.பாலகுமாரன்....</b>
::

