02-10-2006, 11:11 PM
<span style='font-size:25pt;line-height:100%'>நீல நிறக் குழந்தை பிறப்பது எதனால்?</span>
குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும்.
நோய்க்கான அறிகுறிகள்: இருதய உறுப்புக்களான வால்வுகள், தடுப்பு சுவர்களில் நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். சில குழுந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாக பிறக்கும். உடலில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு இருந்தால் இதுபோல பிரச்னை வரும்.
கார்பன்டை ஆக்சைடு அதிகமாகும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும். சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் வேகமாகச் செயல்பட்டு சாதாரணமாக மூச்சு விடும் நிலை அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18, 20 முறை இதயத் துடிப்பும் அதிகமாகி மூச்சிரைப்பு ஏற்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு <உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம்.
குழந்தைக்கு செயற்கை பிராண வாயு கொடுத்து, "இன்டெரால்" என்ற மருந்தை கொடுக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க "பைகார்பனேட்' மருந்தை கொடுக்க வேண்டும். சுவாச மண்டலத்தின் அதிகப்படியான இயக் கத்தை கட்டுப்படுத்த "மார்பியா" தேவைப் படும். மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப் படாமல் அடிக் கடி மூச்சிரைப்பு, அதிகப்படியான இருதய துடிப்பு ஏற் பட்டால் அறுவை சிகிச்சை செய் வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒரு வயதிற்கு முன் அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு சதவீம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி குழந் தைகள் பிறக்கின்றனர். இவர்களில் ஆயிரம் குழந்தைகள் "புளூ பேபி" யாக பிறக்கின்றனர். இதில் 50 சதவீத குழந்தைகள் மட் டுமே முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர்.
நீல நிற இருதய நோயிலும் பல வகைகள் உள் ளன. 85 சதவீத குழந்தைகளுக்கு வருவது "டெட்டாலஜி பேலோஸ்" என்ற வகை. அடுத்து, பல்மனரி அட்ரீசியா. இதில் இருதயத்தின் வலது கீழறையில் இருந்து அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மனரி வால்வு சுருங்கி, தமனியோடு ஒட்டிக் கொள்ளும். இது பிறவியிலேயே உருவாகும் குறை. இதனால் வலது கீழறையில் இருக்கும் அசுத்த ரத்தம் இரண்டு கீழறைக்கும் இடையில் இருக்கும் தடுப்பு சுவரில் ஏற்படும் ஓட்டை வழியாக இடது கீழறைக்கு வந்து விடும்.
மூன்றாவது வகை "டிரைகஸ் அட்ரீசியா." வலது மேலறைக்கும், கீழறைக்கும் இடையில் இருக்கும் வால்வுக்கு பெயர் டிரைகஸ் பி. இந்த வால்வு முழுமையாக உருவாகாமல் இருக்கும். இதனால் வலது மேலறையில் உள்ள அசுத்த ரத்தம் கீழறைக்கு வராது.
இதனால் வலது மேலறைக்கும் இடது மேலறைக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவரில் பெரிய ஓட்டை உண்டாகி, இந்த ஓட்டை மூலம் வலது மேலறை அசுத்த ரத்தம் இடது மேலறைக்கு வந்து அங்கிருந்து சுத்த ரத்தம் இருக்கும் இடது கீழறைக்கு வந்து (இதில் சுத்த ரத்த மட்டுமே இருக்க வேண்டும்) சுத்த ரத்தத்துடன் கலந்து, உடல் முழுவதும் பரவி ஊதா நிற தோற்றத்தை தருகிறது.
இதுதவிர, மிக சிக்கலான பிறவி இருதய நோய்களான டிரான்ஸ்பொசிஷன் டீ மற்றும் எல் ஆகிய பிறவி நீலநிற இருதய நோய்கள் உண்டாகின்றன. இதில் இருதய உறுப்புகளான தமனி, இருதய அறைகள் போன்றவை இயற்கையாக இருக்கும் இடத்திலிருந்து மாறி, வேறு இடங் களில் இருக்கும்.
சமயங்களில் இடது புறம் இருக்க வேண்டிய இருதயம் வலது புறமாக இருப்பதும் உண்டு.
இடது கீழறை இல்லாமல் இருப்பது, மகாதமனி சிறுத்துப்போவது, மகாதமனியே இல்லாமல் இருப்பது போன்ற குறைகளும் ஏற்படும். ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம் என்ற நவீன ஒலி அலை வரைபடம் போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த குறைபாடுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு பிறவியிலேயே வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளால் நீலநிறமற்ற இருதய நோய்களான மேலறை தடுப்பு: சுவரில் ஓட்டை ஏற்படுனது, அதேபோல கீழறை சுவர் களில் ஓட்டை ஏற்படுவது உட் பட பல பிறவி இருதய நோய் கள் குழந்தைகளுக்கு வருகிறது. ஒரு வயதில் இருந்து 12 வயதிற்குள் நோய் தாக்கிய 80 சதவீதம் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடித்துவிட முடியும். சிலருக்கு 30, 40 வயது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து அதன்பிறகு தெரியும். பச்சிளங் குழந்தைகள் பால் சரியாக குடிக்காமல் போனால் அல்லது பால் குடிக்கும்போது அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக புரை ஏறினால், மூக்கில் வழிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். இது பிறவி இருதய நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனிக்காமல் விட்டால் நுரையீர<லுக்குள் பால் சென்று நிமோனியா போன்ற வியாதிகளை உண்டாக்கும்.
வால்வில் ஏதாவது பிரச்னை இருந்தால், படபடப்பு, மயக்கம் அடிக்கடி சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தெரியும்.
எதுவாக இருந்தாலும் குழந்தையின் உடல் மாற்றங்களை கவனத்துடன் பார்த்து, சந்தேகம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்டி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.
-பேராசிரியர் அர்த்தநாரி
குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும்.
நோய்க்கான அறிகுறிகள்: இருதய உறுப்புக்களான வால்வுகள், தடுப்பு சுவர்களில் நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். சில குழுந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாக பிறக்கும். உடலில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு இருந்தால் இதுபோல பிரச்னை வரும்.
கார்பன்டை ஆக்சைடு அதிகமாகும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும். சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் வேகமாகச் செயல்பட்டு சாதாரணமாக மூச்சு விடும் நிலை அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18, 20 முறை இதயத் துடிப்பும் அதிகமாகி மூச்சிரைப்பு ஏற்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு <உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம்.
குழந்தைக்கு செயற்கை பிராண வாயு கொடுத்து, "இன்டெரால்" என்ற மருந்தை கொடுக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க "பைகார்பனேட்' மருந்தை கொடுக்க வேண்டும். சுவாச மண்டலத்தின் அதிகப்படியான இயக் கத்தை கட்டுப்படுத்த "மார்பியா" தேவைப் படும். மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப் படாமல் அடிக் கடி மூச்சிரைப்பு, அதிகப்படியான இருதய துடிப்பு ஏற் பட்டால் அறுவை சிகிச்சை செய் வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒரு வயதிற்கு முன் அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு சதவீம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி குழந் தைகள் பிறக்கின்றனர். இவர்களில் ஆயிரம் குழந்தைகள் "புளூ பேபி" யாக பிறக்கின்றனர். இதில் 50 சதவீத குழந்தைகள் மட் டுமே முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர்.
நீல நிற இருதய நோயிலும் பல வகைகள் உள் ளன. 85 சதவீத குழந்தைகளுக்கு வருவது "டெட்டாலஜி பேலோஸ்" என்ற வகை. அடுத்து, பல்மனரி அட்ரீசியா. இதில் இருதயத்தின் வலது கீழறையில் இருந்து அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மனரி வால்வு சுருங்கி, தமனியோடு ஒட்டிக் கொள்ளும். இது பிறவியிலேயே உருவாகும் குறை. இதனால் வலது கீழறையில் இருக்கும் அசுத்த ரத்தம் இரண்டு கீழறைக்கும் இடையில் இருக்கும் தடுப்பு சுவரில் ஏற்படும் ஓட்டை வழியாக இடது கீழறைக்கு வந்து விடும்.
மூன்றாவது வகை "டிரைகஸ் அட்ரீசியா." வலது மேலறைக்கும், கீழறைக்கும் இடையில் இருக்கும் வால்வுக்கு பெயர் டிரைகஸ் பி. இந்த வால்வு முழுமையாக உருவாகாமல் இருக்கும். இதனால் வலது மேலறையில் உள்ள அசுத்த ரத்தம் கீழறைக்கு வராது.
இதனால் வலது மேலறைக்கும் இடது மேலறைக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவரில் பெரிய ஓட்டை உண்டாகி, இந்த ஓட்டை மூலம் வலது மேலறை அசுத்த ரத்தம் இடது மேலறைக்கு வந்து அங்கிருந்து சுத்த ரத்தம் இருக்கும் இடது கீழறைக்கு வந்து (இதில் சுத்த ரத்த மட்டுமே இருக்க வேண்டும்) சுத்த ரத்தத்துடன் கலந்து, உடல் முழுவதும் பரவி ஊதா நிற தோற்றத்தை தருகிறது.
இதுதவிர, மிக சிக்கலான பிறவி இருதய நோய்களான டிரான்ஸ்பொசிஷன் டீ மற்றும் எல் ஆகிய பிறவி நீலநிற இருதய நோய்கள் உண்டாகின்றன. இதில் இருதய உறுப்புகளான தமனி, இருதய அறைகள் போன்றவை இயற்கையாக இருக்கும் இடத்திலிருந்து மாறி, வேறு இடங் களில் இருக்கும்.
சமயங்களில் இடது புறம் இருக்க வேண்டிய இருதயம் வலது புறமாக இருப்பதும் உண்டு.
இடது கீழறை இல்லாமல் இருப்பது, மகாதமனி சிறுத்துப்போவது, மகாதமனியே இல்லாமல் இருப்பது போன்ற குறைகளும் ஏற்படும். ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம் என்ற நவீன ஒலி அலை வரைபடம் போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த குறைபாடுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு பிறவியிலேயே வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளால் நீலநிறமற்ற இருதய நோய்களான மேலறை தடுப்பு: சுவரில் ஓட்டை ஏற்படுனது, அதேபோல கீழறை சுவர் களில் ஓட்டை ஏற்படுவது உட் பட பல பிறவி இருதய நோய் கள் குழந்தைகளுக்கு வருகிறது. ஒரு வயதில் இருந்து 12 வயதிற்குள் நோய் தாக்கிய 80 சதவீதம் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடித்துவிட முடியும். சிலருக்கு 30, 40 வயது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து அதன்பிறகு தெரியும். பச்சிளங் குழந்தைகள் பால் சரியாக குடிக்காமல் போனால் அல்லது பால் குடிக்கும்போது அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக புரை ஏறினால், மூக்கில் வழிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். இது பிறவி இருதய நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனிக்காமல் விட்டால் நுரையீர<லுக்குள் பால் சென்று நிமோனியா போன்ற வியாதிகளை உண்டாக்கும்.
வால்வில் ஏதாவது பிரச்னை இருந்தால், படபடப்பு, மயக்கம் அடிக்கடி சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தெரியும்.
எதுவாக இருந்தாலும் குழந்தையின் உடல் மாற்றங்களை கவனத்துடன் பார்த்து, சந்தேகம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்டி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.
-பேராசிரியர் அர்த்தநாரி

