Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் தமிழன்...
உங்கள் முயற்சி கண்டு மகிழ்ச்சி.
தமிழ் தட்டச்சு முறையினை பழகுவதில், அல்லது எழுத்துக்களின் இருப்பிடத்தினை ஞாபகம் வைத்திருப்பதில் பலருக்கு சிரமம் உள்ளது. அவர்கள் அதனை இலகுவாகப் பழகிக் கொள்ள நீங்கள் உருவமைத்த படம் உதவியாக இருக்கும்.
சரி..அது ஒருபுறம் இருக்க, நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஆங்கில முறையில் தமிழைத் தட்டச்சு செய்வதால் தமிழ் சீரழியும் என்று. அது எவ்வாறு சீரழியும் என்பதைக் குறிப்பிட்டால் நன்று. காரணம், ஒருவரிடம் போய் நீங்கள் "அவர் வீதியில் நடந்து சென்றால் விழுந்துவிடுவார்" என்று சொன்னால் அவருக்கு அது குழப்பமாக இருக்கும். எதனால் எப்படியான சந்தர்ப்பத்தில் விழுவார் என்பதைக் குறிப்பிட்டால் அவர் ஆபத்தை உணர்ந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா. எனவே உங்கள் விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
Posts: 46
Threads: 19
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் இளைஞன் அவர்களே
முதலில் பாராட்டுக்ககு நன்றி, ஆங்கில முறைப்படி தமிழை தட்டச்சு செய்து அதனையே பழக்கமாக கொண்டால் தமிழ் சீர் + அழியும்.... என்பது உண்மைதான் விளக்கமாக சொல்லப்போனால் இங்கு எளிமையாக தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இருப்பினும் அதை அறியாமல் ஒருசிலர் ஆங்கிலமுறைப்படி அடிக்கிறார்கள் அதனையும் விட அதை தமிழுக்கு மாற்றாமல் ஆங்கில வரிவடிவத்திலேயே உபயோகிக்கிறார்கள்.
மேலும் இதுதான் விதியென்று எண்ணி அதனையே தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். இது தொடருமேயானால் தமிழ் வரிவடிவம் ஒன்று தேவையற்றதாகி ஆங்கில வரிவடிங்களிளேயே தமிழை எழுத வெட்கமற்றவர்கள் (சில மேதாவிகள்) தயங்கமாட்டாரகள். இதனால் தமிழை கணனியில் புகுத்த முற்படும் அறிவாளிகளின் ஊக்கமும் தடைபடுகின்றது ஏனெனில் அதை உபயோகிக்க யாரும் இல்லை.
சமீபத்தில் என்தோழி ஒருவர் தான் ஒரு நிகழ்ச்சியில் பாடப்போகிறேன் அற்காக ஒரு குறிப்பிட்ட பாடலின் பாட்டு (lyrics) ஒரு இணையதளத்திலிருந்து அச்சடித்து தரச்சொன்னார் சரியென்று அத்தளத்துக்கு சென்றேன் அங்கிருந்த எண்ணற்ற பாடல்களில் ஒன்று
paadal: adi manjakkezhangae adi manjakkezhangae
varigaL: vairamuththu
movie: TajMahal
adi manjakkezhangae adi manjakkezhangae
thananananaa thanathananaa thananananaa thanathananaa
adi manjakkezhangae adi manjakkezhangae
thananananaa thanathananaa thananananaa thanathananaa
komarippuLLa komarippuLLa kuLikka vaaraanga
aaththukkuLLa aththana meenum kaNNa moodunga
komarippuLLa komarippuLLa kuLikka vaaraanga
aaththukkuLLa aththana meenum kaNNa moodunga
paruvappuLLa paruvappuLLa kuLikkap poaraanga
ada aaththangarap paRavaigaLae angittup poayirunga
தமிழ் எழுத்துரு (fonts) வசதிகள் இருந்தும் இப்படியிருக்க காரணம் என்ன? tamil converter இருக்கிறது அதனையும் உபயோகிக்கவில்லை. இப்படி எழுதினால் சுலபமோ? அல்லது எதிர்கால தமழை வளர்கிறார்களோ? உண்மையில் அந்த இணையத்தில் பங்குபெறும் பெரும்பாலானோர் இளைஞர்கள் (teens) அவர்கள் மனங்களில் இப்படி தமிழைப் பதித்தால் எதிர்காலத்தில் என்ன நிலை? !!!
இறுதியாக, நான் கூறிய கருத்துக்கள் சிலபேருக்கு குழப்பமாகவோ விளங்காமலோ இருக்கலாம். மூல கருத்தை விளங்கிக்கொண்டோருக்கு நன்றி.
என்னிடம் கீமானில்லை.எனக்கும் வீரகேசரி பெட்டிதான்!!!
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் தமிழன்...
தமிழைத் தொழில்நுட்பத்துக்குள்/தொழில்நுட்பத்தோடு அழைத்துச்செல்ல நீங்கள் ஆசைப்படுவது வரவேற்கத்தக்கது.
ஆயினும் நீங்கள் குறிப்பிடுவதில்தான் குழப்பம். நீங்கள் "TSC" எழுத்துருக்களை, அதாவது ஆங்கில முறையில்
தமிழை எழுதுவது பற்றிக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது நேரடியாக ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை எழுதுவதைக்
குறிப்பிடுகிறீர்களா? எதுவென்று குறிப்பிட்டால் உங்களோடு கருத்துப் பரிமாற எனக்கும் சுகமாக இருக்கும்.
உதாரணம்:
TSC முறை ---------------------- <b>ammA</b> = அம்மா
நேரடி ஆங்கிலமுறை ----- <b>ammA</b> = ammA
பாமினி முறை --------------- <b>mk;kh</b> = அம்மா
இதில் எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
இளைஞன் குறிப்பிட்டதில் 3வது முறைப்படி தமிழ் எழுதுவதுதான் எனக்கு நல்ல முறையாகப் படுகிறது. இந்த இங்கிலிசில எழுதி தமிழுக்கு மாத்திற விளையாட்டெல்லாம் சரிவராது . .
நாளைக்கு நாட்டில பாவிக்கிற விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் மாத்திரம்தான் இருக்கும்.
("எம்" இருக்கிற இடத்தில "அ" இருந்தா சரிதானே)
சைளா காரன் என்ன இங்கிலிஸ் பார்த்தே டைப் பண்ணுறான் ???
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இதைக்கூட சொதப்பித்தானே வைத்துள்ளார்கள்.
அமுதம் (தினகரன்) எழுத்துரு,பரணி(வெப்புலகம்) வானவில்(முரசொலி) எல்லாம் எம் அடிக்க அ தான் வருகிறது.
பிறகு வேறு சொற்கள் பாமினியை ஒத்திருந்தாலும் பலதை ஆளாளுக்கு மாற்றி வைத்துள்ளார்கள்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இங்கிலில அடிக்க தமிழ் வாற மாதி Software எது சரி இருக்கா பொஸ்? நா நம்ம சுரதா கொன்வேட்டர் (converterO யூஸ் பண்ணுறன். அது இல்லாம நேர அடிக்க முடியுமா? கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க பொஸ்
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இல்லை மதி .
இலங்கையிலிருந்து ஒரு சில எழுத்தாளர்கள்
அப்படி எழுதமுடியவில்லையே என க்கேட்டார்கள் அதன்பின்தான் அந்த மாற்றம் வந்தது.
அதன் பிறகுதான் எனக்கும் தெரியும் ப எழுதிவிட்டு சுழி போட்டால் பூவன்னாவாக மாறும் என..
பாமுனி புதுசு வந்துவிட்டது.மாற்றுங்கள்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இவ்வளவு நாளும் Suratha Converter வைச்சு ஆங்கிலம் மூலம் தமிழ் டைப் பண்ணி Cut & Paste பண்ணினேன். இப்ப உங்க வன்னியை வைச்சு நேரடியா அதேமாதி ஆங்கிலம் மூலம் தமிழ் டைப்பண்ண முடியுது.
ரொம்ப நன்றி யாழ்.
இதுக்கு நீங்க ரைட்ஸ் (Patent) எடுத்திட்டிங்களா பொஸ்?
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இல்லை இது கீமான் என்னும் அவுஸ்திரேலியர் ஒருவரின் கண்டுபிடிப்பு.
அதற்குள் நாம் எமக்கு தேவையானவற்றை கீ பைலாக செய்து உட்புகுத்துகிறோம் அவ்வளவுதான்.
முதல் இது ஈகலப்பை என வந்தது.அதில் எம்மவர் பாவிக்கும்
எழுத்துருக்கள் இல்லை
இனி வரப்போகும் ஈகலப்பை புதிய வெளியீட்டில் இதனையும் சேர்ப்பார்கள்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஓ சரி சரி. எனக்கு பாமுனி தெரியாது. உங்க பொங்கு தமிழ் கொன்வேட்டர் அப்புறம் நீங்க சொன்ன வன்னி இரண்டும் நா யூஸ் பண்ணி ஆங்கிலத்தில டைப் பண்ணி தமிழ்ல எடுத்தேன். இரண்டுமே உங்களோடது தானே அப்புறம் ஏன் சில எழுத்துங்க வித்தையாசமா வருது?
ஒரு எழுத்து சொல்லுறன் செக்பண்ணி பாக்குறதுக்கு
ஸ் -s இது பொங்கு தமிழ் கொன்வேட்டர்
ஸ் S இது வன்னி
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
தப்புத்தான்
முதல் வழி முதல் வழி
பிறகு மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க முரசு பாணியில் மாற்றியது.
அடுத்ததடவை இரண்டும் வேலைசெய்யுமாறு மாற்றவேண்டும்.