Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பதிவுத் திருமணம் அவசியமா?
#1
சில அனுபவங்கள் சில கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில்.. ஆண்களும் பெண்களும் சமத்துவம் வேண்டி ஏதேதோ செய்ய முற்படும்வேளையில் பதிவுத் திருமணம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்பற்றி கருத்துக்களைப் பகிர்வோமே!
.
Reply
#2
[quote=sOliyAn]சில அனுபவங்கள் சில கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில்.. ஆண்களும் பெண்களும் சமத்துவம் வேண்டி ஏதேதோ செய்ய முற்படும்வேளையில் பதிவுத் திருமணம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்பற்றி கருத்துக்களைப் பகிர்வோமே!

[Image: feature_one_pic1.jpg]
Living together என்று ஒன்றாக வாழத் தேவையில்லை.
ஆனால் சட்டரீதியான ஒரு பதிவுக்கு தேவைப்படுகிறது.

முன்னையது தேவைப்பட்ட போது பிரிந்து போகலாம்.
பின்னையது நீதிமன்ற ஆணை பெற்றே பிரிந்து போக முடியும்.

வெளிநாடுகளில் பேப்பர்களுக்காவே சில பதிவுத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

தேர்வு செய்வதற்கு சம்பந்தப்பட்டோருக்குத்தான் உரிமை இருக்கிறது.

சிலர் தாலியை மட்டுமே நம்பி 2ம் 3ம்..................தாரங்களாக வாழ்வோர் நிலை?
Reply
#3
நீங்க வேற.. ஒரு பெண்ணானவள் இல்லறத்துள் நுழையும்போது பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அதனால் அவள் நினைத்தவுடன் பிரிந்து செல்ல இந்த பதிவு தடைபோடுகிறதே என கூறுகிறார்களே?!
.
Reply
#4
வணக்கம் சோழியான் அவர்களே...

இந்தத் தலைப்பை கருத்தாடலுக்குக் கொண்டுவரவேண்டும் என்று எண்ணி யாழ் களத்தைத் திறந்தபோது, நீங்கள் முந்திவிட்டது தென்பட்டது. <b>பதிவுத் திருமணம் அவசியமா?</b> என்ற தலைப்பு, யாழ் இணையத்தின் முன்னைய கருத்துக்களத்தில் கருத்தாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட <b>தாலி அவசியமா?</b> என்ற தலைப்பை நினைவுபடுத்துகிறது. அதனைப்போல் இதுவும் நல்ல பல கருத்துக்களை (தனிப்பட்ட மோதல்கள் அல்லாத) வெளிக்கொணர வாழ்த்துக்கள்.

திருமண முறை:
> காதலித்து மாலை மாற்றிக் கொண்டு கூடி வாழ்வது. (காந்தர்வ முறை -- தமிழர் கலாச்சாரமாகக் கருதப்படுகிறது)

> பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றித் தாலி கட்டிக் கூடி வாழ்வது. (ஆரியர் வருகையின் பின் தொடரப்பட்டது)

> நாட்டின் சட்ட ஒழுங்கைப் பின்பற்றி இருபாலாரும் கையொப்பமிட்டு பதிந்து பின் கூடி வாழ்வது. (ஆங்கிலேயர் வருகையின் பின் தொடரப்பட்டது)

இன்று:
> பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றித் தாலி கட்டி, மாலை மாற்றி ஒருமுறையும், பின் கையில் மோதிரங்கள் மாற்றி இரண்டாம் முறையும், அதன் பின் நாட்டின் சட்டத்தைப் பின்பற்றிக் கையொப்பமிட்டு பதிந்து மூன்றாம் முறையும் திருமணங்கள் நடக்கிறது.

> காதலித்து இல்லறத்தில் இணைபவர்கள் மேற்கூறிய மாதிரியோ அல்லது தனியே பதிந்தோ திருமணம் செய்கிறார்கள்.

நிலைப்பாடு:
> மாலைமாற்றி வாழ்ந்தவர்கள் நீண்ட காலம் பிரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம் காதல். ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள நம்பிக்கை. அதுதவிர இன்னுமொரு காரணம் எழுதப்படாத சமுதாயச் சட்டம் - பண்பாடு/கலாச்சாரம்.

> தாலிகட்டி இணைந்தவர்களும் நீண்ட காலம் பிரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம், எழுதப்படாத சமுதாயச் சட்டம் - பண்பாடு/கலாச்சாரம். பெண்ணே இதன்மூலம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இது வரலாறு, உண்மை,

> பதிவுத்திருமணம் இணைந்தவர்கள் புரிந்துணர்வு இல்லாதபட்சத்தில் பிரிவதற்குரிய வாய்பளித்திருக்கிறது. மேற்குலகத்தவரைப் பொறுத்தளவில் பெரும்பாலும் பிரச்சினைகள் இல்லை.
ஆனால் தமிழர்களைப் பொறுத்தமட்டில் பதிவுத் திருமணம் என்பது வெறும் போலிதான், தாலிதான் அவர்க்கு வேலி. <b>அதனால் பதிவுத் திருமணம் அவசியமற்றதாகிறது.</b>

* பதிவுத் திருமணம் சட்டத்துக்காகவும், சலுகைகளுக்காகவுமே ஒழிய, இணைந்த வாழ்வுக்கானது அல்ல! இல்லற பந்தத்தில் இணைந்து வாழ நினைப்பவர்க்கு தாலியும் தேவயில்லை, பதிவும் தேவையில்லை.

* பதிவுத் திருமணம் பாதுகாப்புக்காக என்று கருதின், இணைபவர் இருவருக்குள்ளும் நம்பிக்கை இல்லை என்றே பொருள். அப்படி நம்பிக்கையில்லா துணை எதுக்கு? அவரோடு இணைந்த வாழ்க்கை எதுக்கு?

* பதிந்து திருமணம் செய்தாலும் புரிந்துணர்வு இல்லாத கட்டத்தில் பிரிவதற்கு வழியிருக்கும் பொழுது, அதைப் பயன்படுத்திப் பிரிவதைவிட, பதியாமல் வாழ்ந்து பிரிவது பிரச்சினையில்லாதது அல்லவா?

* பதிவுத் திருமணம் மூலம் பெண்கள்தான் பாதுகாக்கப் படுகிறார்கள் என்றால் அது இன்றைய நிலையில் அடிபட்டுப் போகிறது. காரணம் பெண்கள் இன்று ஆண்களில் தங்கியிரா நிலையுள் வந்துகொண்டிருக்கிறார்கள். பிரிந்து செல்லும்போது அவர்களுக்கு சட்டத்தின் சலுகைகள் தேவைப்படாது.

+ பண்பட்ட, தம்மிடைய நம்பிக்கையைக் கொண்டுள்ள சமுதாய அங்கத்துவருக்கு, துணையோடு சேர்ந்துவாழப் பதிவுத் திருமணம் அவசியமல்ல!
+ பண்படாதவர்களாக, தன்னுடைய துணையை நம்பாதவர்களாக வாழ்பவர்களுக்கு மட்டுமே பதிவுத் திருமணம் அவசியம்!

உங்கள் கருத்துக்கள் கண்டு மிகுதி...


Reply
#5
திருமணத்தைப் பதிவு செய்யத் தேவையில்லையென்றால்,

குழந்தையொன்று பிறந்தால்,
பிறப்பு சான்றிதழும் தேவையில்லை.

பிறப்பு சான்றிதழ் ஒன்று தேவையானால்,
குழந்தைகளுக்கு தந்தையாய் யார் பெயரை வைப்பது?
தந்தையின் சொத்துரிமையை எப்படிப் பெறுவது?
இப்படி பல சிக்கல்கள் உண்டு என்று நினைக்கிறேன்.
இதற்கு வழி என்ன?
Reply
#6
[quote=AJeevan]திருமணத்தைப் பதிவு செய்யத் தேவையில்லையென்றால்,

குழந்தையொன்று பிறந்தால்,
பிறப்பு சான்றிதழும் தேவையில்லை.

<b>பிறப்பு சான்றிதழ்</b> ஒன்று தேவையானால்,
குழந்தைகளுக்கு தந்தையாய் யார் <b>பெயரை</b> வைப்பது?
தந்தையின் <b>சொத்துரிமையை</b> எப்படிப் பெறுவது?
இப்படி பல சிக்கல்கள் உண்டு என்று நினைக்கிறேன்.
இதற்கு வழி என்ன?

* பதிவுத் திருமணம் <b>சட்டத்துக்காகவும், சலுகைகளுக்காகவுமே</b> ஒழிய, இணைந்த வாழ்வுக்கானது அல்ல! இல்லற பந்தத்தில் இணைந்து வாழ நினைப்பவர்க்கு தாலியும் தேவயில்லை, பதிவும் தேவையில்லை.

* பிள்ளையின் பெயருக்கு முன் தந்தையின் பெயர் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

* அப்ப உடலுறவு கொள்வதற்குத் தானா பதிவுத் திருமணம்? DNA என்று ஒன்று உள்ளதாய்க் கேள்விப்படுகிறேன்.


Reply
#7
இளைஞன் Wrote:* பதிவுத் திருமணம் <b>சட்டத்துக்காகவும், சலுகைகளுக்காகவுமே</b> ஒழிய, இணைந்த வாழ்வுக்கானது அல்ல! இல்லற பந்தத்தில் இணைந்து வாழ நினைப்பவர்க்கு தாலியும் தேவயில்லை, பதிவும் தேவையில்லை.

* பிள்ளையின் பெயருக்கு முன் தந்தையின் பெயர் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

* அப்ப உடலுறவு கொள்வதற்குத் தானா பதிவுத் திருமணம்? DNA என்று ஒன்று உள்ளதாய்க் கேள்விப்படுகிறேன்.
நீங்கள் மக்டொனால்டு காரர்.. கலர்கலரா சிக்கன் சாப்பிடுபவர். உங்களுக்கு எதுவும் தேவையில்லை தெரியும்.
நன்றி வணக்கம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பதிவுத்திருமணம் மிகவும் அவசியம்.
Reply
#9
அப்படியான நடைமுறை தேவையா? அன்புக்குப் பதிலாக பத்திரங்களின் பதிவுக்காக மனிதர்கள் வாழ்கிறார்களா என்ற கேள்வி எழுகிறதே?
.
Reply
#10
நடைமுறை என்ற ஒன்று இருப்பதால்தானே... அதன் தேவையும் புலப்படுகிறது.
பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமாக இதற்குள் அடங்குகிறது. புலம் பெயர்ந்து வந்துவிட்டோம் என்பதற்காக living together எல்லாம் தற்போதைய வாழ்க்கைக்கு ஒத்து வராது.
அன்புக்குப் பதிலாக பத்திரங்களின் பதிவுக்காக மனிதர்கள் வாழ்கிறார்களா ?
காதலிப்பார்கள் கைவிடுவார்கள். அங்கே... அன்பு காதல் தோற்றுப்போகிறது. பெண்ணை அடிமைப்படுத்துவது எல்லா நாட்டிலும் இருக்கின்றது. மேற்கு நாடுகளைப் பொருத்தமட்டில் குறைவாகவே தென்படுகிறது.
பெண்ணின் வாழ்க்கையைப் பொருத்தமட்டில் பதிவுத் திருமணம் மிக மிக அவசியம்.
Reply
#11
இப்பிடி சொன்னா அப்பிடி சொல்லுவினம் அப்பிடி சொன்னா இப்பிடி சொல்லுவினம். இது தான் உலகமப்பா. இது தான் நான் யாழ் களத்தில் கண்டுணர்ந்த புது அனுபவம். :|
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#12
பத்திரம் என்ன
சித்திரம் குலைந்தால்
பத்திரம் கோட்டில் பறக்கும்...!
நிரத்தரமில்லாப் பத்திரமும்
தங்கத்தாலான தடையமும்
மனத்துக்கெங்கே தடை போடும்...?!
சிந்தனை இப்படியும் எழலாம்...!

விவாகரத்து என்று
நேற்றுவரை இருந்த உறவு
அறுத்து விடப்படும்...
மனங்கள் அறுமோ..??!
நினைவுகள் அழியுமோ...??!
மனிதனால் ஆகா ஒன்று உண்டு
நினைவை நிரந்தரமாய் அழிப்பது...!
மனதால் கல்லானால்
அவன் மனிதனில்லை
இதற்குமேல் விளக்கம் வேண்டுமோ....!

மனத்தை அடக்க
பத்திரமும் தடையமும் உதவியென்றால்
அவையும் கருவியாக இருக்கட்டுமே...!
அழியாத அன்பு
உள்ளத்தால் வலுவானால்
உறவுமங்கே நிலைக்கும்...ஆனால்
அன்பை அளக்க வழியில்லையே...!
ஆதலால்
சாட்டுக்கேனும் கருவி கொண்டு
வேலிபோடுதல் அன்பும்
படிதாண்டாது வட்டமடிக்க
உதவலாம்....!

திருடனும் திருடியும்
வேலிகண்டு மிரளுதல் இயல்பு...!
அதற்காய் வேலி அறுத்தல்
தோல் இன்றி
ஊனுடல் உயிர் கொள்ள
நினைத்தற்கு ஈடாகும்
சாத்தியமோ....?!

மேற்கில் அலையும்
அன்பற்ற மனிதக் கூடுகள் கண்டுமா
இப்படி ஒரு சிந்தனை...!
மேற்கே வியக்குது
கீழைத்தேயக் குடும்ப பலம் கண்டு
ஆனால்
கீழை இன்று மேற்கை விரும்புது...?!
மனிதன் வாழ்வானா வீழ்வானா...???
நாளை
ஆயுதங்களும் சட்டமும்
வலுவான கைவரிசை காட்டவே
மனமென்ன
ஊனே அடங்கி ஒடுங்குவீர் ...!
நாளைய சந்ததிக்காய்
நாமதைச் செய்வோம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
இல்லை நளா.. சில திருமணமாகாத தமிழ் இளைஞர்களுடன் (ஆண் பெண் இருபாலாரும்) உரையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களில் பெரும்பாலானவர்களின் எண்ணம் பதிவுத் திருமணம் அவசியமில்லை என்பதாகும். அது ஏற்படுத்திய தாக்கத்தில் யாழ் அங்கத்தினரின் கருத்தை அறியவே இந்தத் தலைப்பு. இங்கே நான் எழுப்பும் கேள்விகளும் அவர்கள் எழுப்பிய வினாக்களே.. எனது சுய சிந்தையில் எழுந்த கேள்விகள் அல்ல.. ஆகவே.. நளா உட்பட யாபேரும் இதைப் பார்வையிடும் இளைஞர்களுக்கு தமது அபிப்பிராயங்களைக் கூறவேண்டும் என்பதுதான் எனது அவா.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)