11-22-2003, 11:52 PM
சோ.வெ.ரமணன், கருங்குழியிலிருந்து எழுதுகிறார்: "உங்கள் வீட்டில் இருக்கும் டெலிவிஷன் உங்கள் எதிர்காலத்தை நாசமாக்குகிற குட்டிச் சாத்தான். உங்கள் பெற்றோர் "டிவி'யை பார்க்கும் போது, சிவனுக்கு பாடம் சொன்ன முருகன் போல் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு அறிவுரை கூற வேண்டும்' இது, பா.ம.க., ராமதாசின் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய சமீபத்திய பேச்சு.
"தமிழினத் தலைவரு நம்ம ஐயா; நாளைய தலைமுறைக்கு வழிகாட்ட வாரார் ஐயா...' இது, தொலைக்காட்சி ஒன்றில் அவரையும், அவரது மகனையும் காட்டி அறைகூவல் விடுத்து பாடப்படும் பாடல் வரிகள்.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் மகனை அழைத்து வந்து, "ஐயா, இவன் நிறைய இனிப்பு சாப்பிடுகிறான். நான் சொன்னால் கேட்காமல், நிறுத்தாமல், அடம் பிடிக்கிறான். நீங்கள் அறிவுரை சொல்லி திருத்துங்கள்' என்று கூறுவார்.
அதற்கு பரமஹம்சர், "அம்மா நீங்கள் சென்று இரு வாரங்கள் கழித்து வாருங்கள்' என்று அனுப்பி விடுவார். அந்த தாய் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இரண்டு வாரம் கழித்து விடாப்பிடியாக மீண்டும் வருவார்.
அப்போது ராமகிருஷ்ணர் அந்த சிறுவனை அன்போடு ஆசிர்வதித்து, "தம்பி, இனிப்பு சாப்பிடாதே' என்று அறிவுரை கூறுவார். அந்தத் தாய் ஆச்சரியத்தோடு, "நான் முதலில் வந்த போதே இதை நீங்கள் கூறி இருக்கலாமே' என்று வினவுவார். அதற்கு அந்த ஞானி, "அம்மா முன்பு நீ வரும்போது நானும் நிறைய இனிப்பு சாப்பிட்டு கொண்டு இருந்தேன்; முதலில் அதை நான் நிறுத்த வேண்டும். பிறகு அதை நீடித்து கடைபிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். பிறகுதானே நான் அவனுக்கு உபதேசம் செய்ய வேண்டும்' என்று கூறி அனுப்புவார்.
முதலில் தன் முதுகில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தான் மற்றவர்களின் அசுத்தத்தைப் பற்றி குறை கூறி அறிவுரை சொல்ல வேண்டும் என்பது மகான்களின் கருத்து. இதை அரசியல்வாதிகள் கடைப்பிடிக்காவிட்டாலும், கொச்சைப்படுத்தாமல் இருந்தால் நல்லது.
ஒரு சில நிகழ்ச்சிகளை தவிர, பெரும்பாலும் அபத்தமான தொலைபேசி உரையாடல்கள், அரைகுறை போலி வைத்தியர்களுக்கான விளம்பரம் இவற்றுடன் ஒளிபரப்பாகும் தமிழன் தொலைக்காட்சியை சரிசெய்து, முன் உதாரணமாக்கி விட்டு, இதுபோன்ற விமர்சனங்களை எடுத்து விடுவது ராமதாஸ் போன்றவர்களுக்கு நல்லது.
நன்றி: தினமலர்
"தமிழினத் தலைவரு நம்ம ஐயா; நாளைய தலைமுறைக்கு வழிகாட்ட வாரார் ஐயா...' இது, தொலைக்காட்சி ஒன்றில் அவரையும், அவரது மகனையும் காட்டி அறைகூவல் விடுத்து பாடப்படும் பாடல் வரிகள்.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் மகனை அழைத்து வந்து, "ஐயா, இவன் நிறைய இனிப்பு சாப்பிடுகிறான். நான் சொன்னால் கேட்காமல், நிறுத்தாமல், அடம் பிடிக்கிறான். நீங்கள் அறிவுரை சொல்லி திருத்துங்கள்' என்று கூறுவார்.
அதற்கு பரமஹம்சர், "அம்மா நீங்கள் சென்று இரு வாரங்கள் கழித்து வாருங்கள்' என்று அனுப்பி விடுவார். அந்த தாய் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இரண்டு வாரம் கழித்து விடாப்பிடியாக மீண்டும் வருவார்.
அப்போது ராமகிருஷ்ணர் அந்த சிறுவனை அன்போடு ஆசிர்வதித்து, "தம்பி, இனிப்பு சாப்பிடாதே' என்று அறிவுரை கூறுவார். அந்தத் தாய் ஆச்சரியத்தோடு, "நான் முதலில் வந்த போதே இதை நீங்கள் கூறி இருக்கலாமே' என்று வினவுவார். அதற்கு அந்த ஞானி, "அம்மா முன்பு நீ வரும்போது நானும் நிறைய இனிப்பு சாப்பிட்டு கொண்டு இருந்தேன்; முதலில் அதை நான் நிறுத்த வேண்டும். பிறகு அதை நீடித்து கடைபிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். பிறகுதானே நான் அவனுக்கு உபதேசம் செய்ய வேண்டும்' என்று கூறி அனுப்புவார்.
முதலில் தன் முதுகில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தான் மற்றவர்களின் அசுத்தத்தைப் பற்றி குறை கூறி அறிவுரை சொல்ல வேண்டும் என்பது மகான்களின் கருத்து. இதை அரசியல்வாதிகள் கடைப்பிடிக்காவிட்டாலும், கொச்சைப்படுத்தாமல் இருந்தால் நல்லது.
ஒரு சில நிகழ்ச்சிகளை தவிர, பெரும்பாலும் அபத்தமான தொலைபேசி உரையாடல்கள், அரைகுறை போலி வைத்தியர்களுக்கான விளம்பரம் இவற்றுடன் ஒளிபரப்பாகும் தமிழன் தொலைக்காட்சியை சரிசெய்து, முன் உதாரணமாக்கி விட்டு, இதுபோன்ற விமர்சனங்களை எடுத்து விடுவது ராமதாஸ் போன்றவர்களுக்கு நல்லது.
நன்றி: தினமலர்
[i][b]
!
!

