Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரிகாரம்
#1
நிறைய பாவம் பண்ணின ஒருத்தன், சாமியார் ஒருத்தரைத் தேடிப் போய் ""சாமி! இத்தனை நாளா வதந்திகளைப் பரப்பி நிறைய பேரை கெடுத்திருக்கேன். அந்தப் பாவங்களிலிருந்து விடுதலை பெற ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்''னு கேட்டான்.

""உன் வீட்டில் தலையணை இருக்கா?''ன்னு கேட்டாரு சாமியார்,

இருக்கு சாமின்னான் வந்தவன். அதைக் கொண்டு வரச் சொன்னாரு சாமியார். அவனும் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்தான்.

இந்த தலையணையை எடுத்துப் போய் ஊர் நடுவில் வைத்து பிரித்து பஞ்சை நாலா பக்கமும் பறக்க விட்டுட்டு வா''ன்னாரு சாமியார்.

வந்தவனும் தலையணையை பிரிச்சு, பஞ்சை பறக்க விட்டுட்டு திரும்பவும் சாமியார்கிட்ட வந்தான். சாமி! நீங்க சொன்ன மாதிரியே செய்துவிட்டேன்.

இப்ப நீ செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் சொல்றேன். தீ பறக்க விட்டுட்டு வந்த பஞ்சையெல்லாம் பொறுக்கி பழையபடி தலையணையில் அடைத்துவிட்டால் போதும். அதுதான் பரிகாரம்.

வந்தவன் அதிர்ச்சியடைஞ்சான். ""சாமி! அது எப்படி முடியும்? காத்துல பறந்த பஞ்சை நான் öப்படி சேகரிக்கிறது?''ன்னு கேட்க,

நீ செய்த பாவத்துல பாதிக்கப்பட்டவங்களோட மனச்சுமையையும் சரி செய்ய முடியாது. அதை சரி செய்ய முடியாதபோது பரிகாரம் மட்டும் எப்படி செய்ய முடியும். அதனால இனிமேலாவது பாவம் செய்றதை விட்டுட்டு எப்பவும் தர்ம வழியில் நடப்பதுதான் நல்லது.''
[i][b]
!
Reply
#2
நான் என்னமோ பணியாரம் என்று வாசிக்க, அது பரிகாரம் என்று பிறகுதான் தெரிஞ்சது.

நீங்க தினமலருக்கு சொந்தமா?
சொந்தமா ஒன்றுமே எழுதாமல், துாக்கிறதும் வைக்கிறதுமா இருக்கிறீங்கள்.

சொந்தமா ஏதாவது எழுதினால், உங்கள் கருத்துகளையும் பார்க்கலாமே?

அதுக்காக ஓடிடாதேங்க,நல்லதுகளையும், பயனுள்ளதுகளையும் கொண்டு வாரீங்க. நன்றி.
Reply
#3
சாமி நீங்கள் சொன்ன சிறிய கதை சிந்திக்க வைத்தது. இப்படியான கதைகளை அவ்வப்போது தருவதற்கு நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)