01-07-2004, 02:37 PM
சர்க்கரை வியாதியை வேரறுக்கும் மருந்து கண்டுபிடிப்பு!
மருந்தே இல்லாத வியாதி என்றும், விதி இது... சாகும் வரை இத்தோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்று சர்க்கரை வியாதி பீடிக்கப்பட்டோர் தொடர்ந்து வந்த புலம்பலுக்கு பதில் கிடைத்துவிட்டது!
ஆம். நீரிழிவு நோய் என்று கூறப்படும் சர்க்கரை வியாதியை ஒழிக்க மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்!
கொல்கட்டாவில் நடைபெற்ற சர்க்கரை வியாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய இரசாயன உயிரியல் கழகத்தின் தலைவரான டாக்டர் எஸ். பட்டாச்சாரியா இத்தகவலை வெளியிட்டார்.
ஐ.சி.பி. 201 என்றழைக்கப்படும் இந்த மருத்து, மேற்குவங்க மாநிலம் புருளியா மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் செழித்துக் கிடக்கும் மூலிகை இலைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாக டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.
புருளியா மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது தெரிந்தவுடன் இந்த மூலிகை இலைகளை பறித்து தின்று நோயிலிருந்து விடுபட்டதை அறிந்து அந்த இலைகளை ஆய்வு செய்ததாகவும், அதிலிருந்து இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.
இந்த புதிய மருந்து சுண்டெலிகளுக்கு செலுத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது கட்ட ஆய்வு இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் கூறிய பட்டாச்சாரியா, அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்குள் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
சர்க்கரை வியாதிக்கு மருந்தை அளித்த அந்த மூலிகையின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட டாக்டர் பட்டாச்சாரியா, இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவுச் சொத்துரிமைக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
புதிய மருந்தான ஐ.சி.பி. 201-ஐ எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளின் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமில அளவை முழுமையாக நீர்த்துவிடுவதால் டயாபடிஸ் ஒழிந்துவிடும் என்று பட்டாச்சாரியா கூறினார்.
இரத்தத்தில் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது என்றும், அதன் காரணமாகவே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என்றும் கூறிய பட்டாச்சாரியா, குளுக்கோசை விட இந்த கொழுப்பு அமிலமே (Fatty acid) சர்க்கரை வியாதிக்கு மூலமாகிறது என்று கூறினார்.
இரத்தத்தில் உள்ள இந்த கொழுப்பு அமிலம் நீக்கப்படும் பொழுது சர்க்கரை வியாதியும் மறைந்துவிடுகிறது.
---------------
Message from webulagam.com
மருந்தே இல்லாத வியாதி என்றும், விதி இது... சாகும் வரை இத்தோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்று சர்க்கரை வியாதி பீடிக்கப்பட்டோர் தொடர்ந்து வந்த புலம்பலுக்கு பதில் கிடைத்துவிட்டது!
ஆம். நீரிழிவு நோய் என்று கூறப்படும் சர்க்கரை வியாதியை ஒழிக்க மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்!
கொல்கட்டாவில் நடைபெற்ற சர்க்கரை வியாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய இரசாயன உயிரியல் கழகத்தின் தலைவரான டாக்டர் எஸ். பட்டாச்சாரியா இத்தகவலை வெளியிட்டார்.
ஐ.சி.பி. 201 என்றழைக்கப்படும் இந்த மருத்து, மேற்குவங்க மாநிலம் புருளியா மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் செழித்துக் கிடக்கும் மூலிகை இலைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாக டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.
புருளியா மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது தெரிந்தவுடன் இந்த மூலிகை இலைகளை பறித்து தின்று நோயிலிருந்து விடுபட்டதை அறிந்து அந்த இலைகளை ஆய்வு செய்ததாகவும், அதிலிருந்து இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.
இந்த புதிய மருந்து சுண்டெலிகளுக்கு செலுத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது கட்ட ஆய்வு இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் கூறிய பட்டாச்சாரியா, அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்குள் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
சர்க்கரை வியாதிக்கு மருந்தை அளித்த அந்த மூலிகையின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட டாக்டர் பட்டாச்சாரியா, இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவுச் சொத்துரிமைக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
புதிய மருந்தான ஐ.சி.பி. 201-ஐ எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளின் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமில அளவை முழுமையாக நீர்த்துவிடுவதால் டயாபடிஸ் ஒழிந்துவிடும் என்று பட்டாச்சாரியா கூறினார்.
இரத்தத்தில் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது என்றும், அதன் காரணமாகவே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என்றும் கூறிய பட்டாச்சாரியா, குளுக்கோசை விட இந்த கொழுப்பு அமிலமே (Fatty acid) சர்க்கரை வியாதிக்கு மூலமாகிறது என்று கூறினார்.
இரத்தத்தில் உள்ள இந்த கொழுப்பு அமிலம் நீக்கப்படும் பொழுது சர்க்கரை வியாதியும் மறைந்துவிடுகிறது.
---------------
Message from webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

