Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகளுடன் மாவோய்ட் அமைப்பினருக்கு தொடர்பு இல்லை:
#1
விடுதலைப் புலிகளுடன் மாவோய்ட் அமைப்பினருக்கு தொடர்பு இல்லை: இந்திய அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் ஏ.கே. மித்ரா கூறியதாவது:

மாவோயிட் ஆயுதக் குழுவினரது பிரச்சனை என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. அது பயங்கரவாதம் மற்றும் மாநிலங்களிடையேயான பிரச்சனையும் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கு மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதக் குழுவினர் வைத்திருந்த 650 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தில் மாவோயிட் ஆயுதக் குழுவினரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் படையணிகளும் குவிக்கப்பட்டுள்ளன என்றார் மித்ரா.

Puthinam.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)