Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News பற்றி உங்கள் கருத்து
#1
நான் இங்கே செய்திகளை போடுவதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனது நோக்கம் நாம் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் பார்க்காமல் அனைத்து பக்க செய்திகளையும் பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதுதான். நாம் எதை ஆதரிப்பதாக இல்லை எதிர்பதாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் கருத்தாக முன்வைக்க வேண்டும்.ஆனால் சிலர் இந்த கருத்தை மூடவேண்டும் என்றும் சிலர் வாயை பொத்தி கொண்டு இருக்கவேண்டும் சொல்கின்றார்கள். இதுதவிர மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இவை அனைத்தையும் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன். உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள். பகிரங்கமாக எழுத விரும்பாதவர்கள் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அதுவரை தற்காலிகமாக ஒரு நாளுக்கு கருத்து எழுதுவதையோ செய்தியை பிரசுரிப்பதையோ மனவருத்தத்துடன் நிறுத்துகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
வணக்கம்
பிபிசி உங்கள் முயற்சியால்தான் எனது அலைச்சல் குறைந்து ஓரே இடத்திலேயே எல்லா செய்திகளையும் பார்க்க முடிகின்றது. நேரத்தை மிச்சப்படுத்த முடிகின்றுது. அந்தவகையில் உங்களிற்கு நன்றி
இடைநிறுத்தம் இல்லாமல் தொடருங்கள் உங்கள் பணியை
[b] ?
Reply
#3
அடிச்சா மற்ற கன்னத்தையும் கொடு என்பதல்ல எனது இயல்பு. திருப்பி பளார் என கொடு என்பது தான் எனது பண்பு.உதுக்கெல்லாம் பயந்தா இதுக்குப்போய் கருத்து கேட்டுக்கொண்டு.என்ன நீங்கள்...!? நல்ல உயர்ரக கைகீல் வைச்சிருக்கிறியள் அதொண்டே போதும்.மதவிலை இருந்து போறவாற பெண்களோடு சேட்டை விடுறவையை சமாளிக்க.

இதுகளுக்கெல்லாம் மனசு நொந்தா எப்பிடி? நோ நெவர்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#4
இந்தாங்கொ மதித்தாத்தாவும் எழுதி இருக்கிறார் தனது கருத்தை.செய்திகள் பிரிவில் இருந்தது.

[quote=Mathivathanan][size=18]BBC.. ஓடுவதால் பயனில்லை.. நின்று பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள்..எத்தனையோ மிரட்டல்கள் அவதூறுகளை பொய்ப்பிரச்சாரங்களையும் தவிடுபெடியாக்கித்தான் இதுவரை காலூன்றி நிக்க முடிந்தது.. உங்களில் முழு நம்பிக்கை வைத்து உண்மையான பக்க சார்பற்ற இருபக்கக்கருத்துக்களையும் வையுங்கள்.. அது எப்போதும் வெற்றியைத்தரும்.. குறிப்பிட்ட ஒருவரல்ல.. இங்கு பலரும் கோழைத்தனமான தனிப்பட்ட தாக்குதல் பிரச்சாரத்தை கையாள்பவர்கள்.. தற்போது நடக்கும் பிளவு பெருத்தமைக்கான காரணமும் பொய்ப்பிரச்சாரத்தால் விரைவாக வெண்றுவிடலாம் என்று போட்ட தப்புக்கணக்குத்தான்.. மிரட்டல் உருட்டல்..பொய்ப்பிரச்சார கணிப்பை களமாடும் வாசகர்களிடம் விட்டுவிட்டு தெடர்ந்து எழுதுங்கள்.. செய்திகள் கொண்டுவந்து போடுங்கள்..
நன்றி..
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#5
பலதரப்பட்ட செய்திகளை இங்கு கொண்டுவருவது வரவேற்கத்தக்கது....ஆனால் சிலரது செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது...இங்கு நம்பகத்தன்மை என்பது நீங்கள் என்ன கண் கொண்டு பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது
Reply
#6
நண்பரே

பலதரப்பட்ட ஊடகங்களிலிருந்தும் நீங்கள் கொண்டு வந்து தரும் செய்திகளால் கடந்த ஒரு வாரமாக களத்தில் சலசப்பு ஏற்பட்டது உண்மைதான் ஆனால் அது இவ்வாறு தனிப்பட்ட மிரட்டலாக அல்லது கேவலமான அவதூறாக வெளிப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதோ ஏன் எதிர்ப்பதோ உங்கள் இஷ்டம் அதை யாரும் தடை சொல்ல முடியாது தமிழ்த் தேசியம் பற்றிய தெளிவு உள்ளவர்கள் அதற்குப் பதிலளிக்கலாம் செய்திகளின் உண்மைத் தன்மை பொய்த்தன்மையை எடுத்துக்கூறலாம் அதன் மூலம் செய்திகள் வெளிவந்த ஊடகங்கள் பற்றிய தெளிவு கூட வாசகர்களுக்கு ஏற்படலாம்

இவற்றையெல்லாம் விடுத்து உங்களை அல்லது நீங்கள் ஆரம்பித்த கருத்துப்பக்கத்தை தடை செய்யும்படி கோரும் உரிமை யாருக்கும் கிடையாது பொறுப்பாளர் தடை செய்வாராக இருந்தாலும் தகுந்த விளக்கமளிக்கப்படவேண்டும்

அவர்களே உங்கள் செய்திச்சேவைக்கு பாராட்டுக்கூடத் தெரிவித்திருக்கிறார்கள் அப்பிடியிருக்க நீங்கள் வீணாக மனவருத்தம் அடைவது ஏனோ

கள நேயர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் நாம் இங்கே எமது கருத்துகள் மூலம் காட்டிக் கொள்வது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற முகங்களையென்றாலும் அதை சொல்வதற்கு நாம் எம்மை புனை பெயர்கள் என்ற முகமூடிகளுக்குள் மறைத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது

அப்பிடியிருக்க இந்த முகமூடி சரி அந்த முகமூடி பிழை என்று கூறும் அருகதை யாருக்கும் இல்லை உங்கள் முகமூடிகளுக்கு பரிசில்களும் கிடைக்கப் போவதில்லை

மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் கொடுங்கள் அவை குழப்பம் விளைவிப்பனவாக இன்றி உண்மையிலேயே இந்த தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு மாற்று எற்பாடான கருத்துகளாக இருக்கும் பட்சத்தில் நான் எனது உண்மையான பெயருடனும் அறிமுகத்துடனும் கருத்தை எழுதுவதற்கு தயார்

வேண்டுமானால் மாற்றுக்கருத்து அனுமதிக்கப்படவேண்டும் என்று சொல்பவர்கள் கூட அதற்காக கருத்துக்களத்தை ஆரம்பியுங்கள் பதில் சொல்ல நான் மட்டுமல்ல பலர் முன் வருவார்கள்

இவ்வாறு ஆக்கபூர்வமாக ஒரு விடயத்தை அணுகுவதை விடுத்து குழப்பம் விளைவிப்பதும் தனிப்படத் தாக்குவதும் கோழைகள் செயலன்றி வேறில்லை

நட்புடன்
ஈழவன்
\" \"
Reply
#7
[quote=Kanthar][quote=BBC]நான் இங்கே செய்திகளை போடுவதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனது நோக்கம் நாம் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் பார்க்காமல் அனைத்து பக்க செய்திகளையும் பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதுதான். நாம் எதை ஆதரிப்பதாக இல்லை எதிர்பதாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் கருத்தாக முன்வைக்க வேண்டும்.ஆனால் சிலர் இந்த கருத்தை மூடவேண்டும் என்றும் சிலர் வாயை பொத்தி கொண்டு இருக்கவேண்டும் சொல்கின்றார்கள். இதுதவிர மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இவை அனைத்தையும் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன். உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள். பகிரங்கமாக எழுத விரும்பாதவர்கள் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அதுவரை தற்காலிகமாக ஒரு நாளுக்கு கருத்து எழுதுவதையோ செய்தியை பிரசுரிப்பதையோ மனவருத்தத்துடன் நிறுத்துகின்றேன்.[/quote]

[quote=Mathivathanan]BBC.. ஓடுவதால் பயனில்லை.. நின்று பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள்..எத்தனையோ மிரட்டல்கள் அவதூறுகளை பொய்ப்பிரச்சாரங்களையும் தவிடுபெடியாக்கித்தான் இதுவரை காலூன்றி நிக்க முடிந்தது.. உங்களில் முழு நம்பிக்கை வைத்து உண்மையான பக்க சார்பற்ற இருபக்கக்கருத்துக்களையும் வையுங்கள்.. அது எப்போதும் வெற்றியைத்தரும்.. குறிப்பிட்ட ஒருவரல்ல.. இங்கு பலரும் கோழைத்தனமான தனிப்பட்ட தாக்குதல் பிரச்சாரத்தை கையாள்பவர்கள்.. தற்போது நடக்கும் பிளவு பெருத்தமைக்கான காரணமும் பொய்ப்பிரச்சாரத்தால் விரைவாக வெண்றுவிடலாம் என்று போட்ட தப்புக்கணக்குத்தான்.. மிரட்டல் உருட்டல்..பொய்ப்பிரச்சார கணிப்பை களமாடும் வாசகர்களிடம் விட்டுவிட்டு தெடர்ந்து எழுதுங்கள்.. செய்திகள் கொண்டுவந்து போடுங்கள்..
நன்றி..

மேனை பிபிசி உதுக்கெல்லாம் சோரக்கூடாது
தாத்தா சொல்லுறது மெய் கண்டியளோ
அந்தாள் இந்த களத்திற்கு ஒரு பழையகட்டை
எத்தினை பேரை பாத்திருக்கும் இங்கை...
உவையின்ற கதையொண்டும் எடுபடல்லை எண்டவுடன தொடங்கிடுவினம் 'துரோகி' எண்டு.
உதை விட்டால் அவையளுக்கும் வேறவழி தெரியாது....
இல்லாத ஊருக்கு போய்காட்டுறன் எண்டினம்.
சிவ... சிவா..
Reply
#8
ஈழவன் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்
அதுசரி ஈழவன் மாற்றுகருத்து கதைப்பவர்கள் எல்லாம் உண்மை பேர் போட்டு கதைக்கவேண்டி வந்தால் இப்படி எல்லாம் மாற்றுகருத்து பற்றியே கதைக்கார் ஆகமூடிதான் அப்படி கதைப்பதற்கும் மற்றவர்களை இங்கு மறைமுகமாகவோ ஈமெயில் முலமாகவே தேவைஇல்லாத மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன
உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பதில்லை
Idea :wink: 8)
Reply
#9
இங்கு சில கேள்விகளை நான் முன்வைக்கின்றேன். இந்த கேள்விகளுக்கு ஆம் என்ற விடை உங்களிடம் இருந்தால் மேலே செல்லுங்கள் இல்லை என்ற விடை உங்களிடம் இருக்குமாயின்................????????

முதலாவது தமிழர்களாகிய நாம் இலங்கையில் உரிமைமறுக்கப்பட்டவர்களாக வாழுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த உரிமைகளை வென்றெடுப்பதுதான் இன்று எங்களின் முன்னுள்ள பிரதான இலக்கு, நோக்காக இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த உரிமைகளை காந்தீய வழிமுறைமூலம் வென்றெடுக்கப்பட முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா
ஆம் என்றால்

அந்த காந்தீயவழிமூலம் வென்றெடுக்கப்படமுடியாத உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமை கொண்ட ஒரே சக்தி விடுதலைப்புலிகள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா
ஆம் என்றால்

அந்த சக்தியையும் அந்தப்போராட்டத்தையும் தாங்கிக்கொள்ளவேண்டிய தார்மீக பொறுப்பு நம் ஈழத்தமிழன் எல்லோருக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

இந்த சக்தியை தாங்கி வைத்திருக்கும் மக்களை குழப்புவதன் மூலம் அந்த போராட்டத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோமா?
ஆம் என்றால

இந்த சக்தியையும் போராட்டத்தையும் அழித்துஒழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏராளமான வெளிச் சக்திகள் அன்றுதொட்டு இன்றுவரை பல்வேறுவழிகளில் முயன்றுகொண்டு வருகின்றன என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த மக்களை கடந்த காலங்களில் பல்வேறுபட்ட திரிபட்ட செய்திகளை பலவழிகளிலும் வழங்கி பல குழப்பங்களை விளைவிக்க முயன்றதை நாம் அறிவோமா
ஆம் என்றால்

அவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் மேலும் பலகுழப்பங்களை விளைவிக்க முயல்கின்றார்கள், முயல்வார்கள் என்பதை எம்மால் காண முடிகின்றதா?
ஆம் என்றால்

அந்த சக்திகளை இனங்கண்டு அவர்களின் நோக்கம்களை இனங்கண்டு அவர்கள் செய்திகளை இனங்கண்டு கொள்ளாது அவர்கள் செய்திகளை மீளபிரசுரித்து அவர்களுக்கு மேலும் வாசகர்களைத் தேடிக்கொடுப்பது நமது உரிமைகளை வென்றெடுக்க எந்த விதத்திலாவது உதவுமா?

இதற்குரிய விடையை நீங்களே சொல்லுங்கள்.
Reply
#10
உலகின் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்று அறிமுகப்படுத்தியவர்களே தங்களின் கொள்கைகள் தவறோ சரியோ என்பதை அலசி ஆராய்ந்து சிந்திக்கும் வகையில் மக்களுக்குச் செய்தி வழங்கியதாக வரலாறு இன்று வரை சொல்லவில்லை...அவர்கள் தங்களின் சிந்தனைகளுக்கு வடிகட்டல்கள் மூலமான செய்தி வடிவம் தந்து நியாயம் கற்பித்து மக்களிடம் திணிப்புச் செய்துள்ளனர்...!

ஆனால் ஈழத்தில் தமிழ் தேசியமும் தமிழ் தேசத்தின் தேவையும் யார்த்தத்தில் வாழ்ந்த வாழும் சூழல் நிகழ்வுகள் மூலம் தெளிவாக மக்களால் தலைவர்களால் உணரப்பட்டு அவற்றின் மூலமான மக்களின் விடிவுக்காக அவை பல்லாயிரம் இன்னுயிர்களை பல கோடி சொத்துக்களை இழந்து பல்வேறுபட்ட துன்பங்களைச் சுமந்து கொண்டு.... இன்றும் சிதைவுகள் இன்றி கனவுகளோடு கருக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சுயநலவாத சந்தர்ப்பவாத பேரினவாத ஏகாதபத்தியவாத சக்திகளுக்காக விலை போனவர்களினால் தர்மத்தின் வழி நிற்கும் மக்களின் அக் கரு சிலாகித்து சின்னாபின்னப்பட எவருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு....!

பல இலட்சம் மக்களின் ஒரு தெளிவான சிந்தனையோடு ஒன்றிப்போக முடியாதவர்களால் ஒரு வளமான கருத்தியல் செய்தியை தேர்ந்தெடுத்து எப்படி வழங்க முடியும்....???!

இங்கு நடுநிலைமை கருத்தியல் அலசல் என்ற போர்வையில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் ஏன் விதைக்கப்படுகின்றன....??!

அதுவும் தெளிவாக அக்கருத்துக்கள் தமிழ் தேசியத்திற்கும் தேசத்திற்கும் எதிரானது என்பதை அறிந்திருந்தும்....அதை ஏன் செய்கிறார்கள்...அப்படி என்றால் இவர்கள் தமிழ் தேசியத்திற்கு தேசத்திற்கு எதிரானவர்களா....???!
அப்படி எதிரானவர்கள் என்றால் இவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.....??!
தமிழ் தேசியத்தின் தேசத்தின் விரோத சக்திகளின் அருவருடிகளாக தமிழ் மக்களின் விதிவிலக்குகளாகத் தான் இருக்க முடியும்...!!!

இப்படியானவர்களின் சிந்தனைகளும் பார்வைகளும் எமக்குத் தேவையா.....???! அதனால் தமிழ் மக்களாகிய நாம் இத்தனை துன்பங்களுடனும் சுமக்கும் இனிய கனவு நனவாகும் நாளை விரைவு படுத்தத்தான் முடியுமா....???!

<span style='color:red'><b>எமக்குத் தேவை 500 பேரின் அற்ப சிந்தனைகள் அல்ல 5 இலட்சம் பேரின் இலட்சியத்தின் வாழ்வுக்கான வழியே.....!</b>

யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் எமது இலக்கு என்பது....எமக்கு இக்கருத்துக்களத்தில் உள்ள விதிகளுக்குள் நின்று தமிழ் மக்களாகிய நாம் சுமக்கும் கனவை நனவாக்கும் நாளை விரைவுபடுத்தும் வகையிலும்
மக்கள் தாம் இத்தனை இடர்களின் மத்தியிலும் சுமந்து கொண்டிருக்கும் இலட்சியத்தின் உறுதியையும் வலிமையையும் அதிகரிக்கச் செய்து மாபெரும் மக்கள் சக்தியின் மூலமாக அவ்விலட்சியத்தை விரைந்து எட்ட முனையும் அனைத்துத் தரப்புடனும் கருத்துக்களாலேனும் கைகோர்த்து நிற்பதே ஆகும்....!

எம்மைப் பொறுத்தவரை எமது கருத்துக்களுக்குள் சுயநலத்துக்கோ சுய விளம்பரத்துக்கோ இடமில்லை...தர்மத்தின் பாலான உயரிய இலட்சியத்தின் வழி நிற்போரை பின்பற்றி அவர் வழி செல்வதே எமது இலக்கு....! அதேவேளை அதர்மத்தின் பக்கம் நிற்போருக்கும் அவர்களின் நிலையின் தவறை உணர்த்த முயலுவோம்.....ஆனால் திணிக்க மாட்டோம்....! அவர்கள் உணர்வதும் உணராமல் விடுவதும் அவரவர் விருப்பம்....!

ஆனால் --Breaking News--- Breaking News part 2... இத்தலைப்புகளின் கீழான கருத்துக்கள் செய்திகள் யாவும் யாருக்கும் தனித்துச் சொந்தமானதல்ல....என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...அப்படி..Breaking news... இத்தலைப்பை ஒரு குறிப்பிட்ட தனி நபரின் முயற்சியாக தனித்துக் காட்ட விரும்பினால்...Breaking News பகுதியில் நமது முயற்சிகளால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் கள நிர்வாகம் அகற்ற வேண்டும்...அதுதான் நீதியும் கூட...அப்போதான் குறிப்பிட்ட தனிநபரின் தனிச் செல்வாக்கை, முயற்சியை பறை சாற்ற உதவ முடியும்....! அதற்கு நாம் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டோம்....!

அது மட்டுமன்றி Breaking News பூட்டப்படாத நிலையிலும் Breaking News part 2 (Created by Kanthar) வந்து தமிழ் தேசியம் தமிழ் தேச விரோதக் கருத்துக்களை சாடைமாடையாக நிலை நிறுத்த முயலும் வரை மெளனமாக இருந்தவர்கள் Flash News வந்ததும் பொங்கி எழுந்ததன் மர்மம் என்ன...????!

Flash News களவிதிகளுக்குட்டப்பட்ட காரணங்களுடன் கள நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டால் அன்றி அது தன் வரையப்பட்ட இலக்கு நோக்கி தொடரும்....எமது கருத்தை, விருப்பச் செய்திகளை எமது வடிவத்தில் களவிதிக்குள் நின்று சொல்ல எமக்கு உரிமை உண்டு...அதை யாரின் கொக்கரிப்புகளும் எதுவும் செய்துவிட முடியாது...!</span>

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
kuruvikal Wrote:Flash News களவிதிகளுக்குட்டப்பட்ட காரணங்களுடன் கள நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டால் அன்றி அது தன் வரையப்பட்ட இலக்கு நோக்கி தொடரும்....எமது கருத்தை, விருப்பச் செய்திகளை எமது வடிவத்தில் களவிதிக்குள் நின்று சொல்ல எமக்கு உரிமை உண்டு...அதை யாரின் கொக்கரிப்புகளும் எதுவும் செய்துவிட முடியாது...!
அடடே.. Breaking News Breaking News 2 தலைப்பை நிறுத்தக்கோரி அறிக்கை சமர்ப்பித்தது இவர்தானே.. மேலும் Flash News தலைப்பைப்பற்றி எவரும் ஆட்சேபனை செய்யாதவிடத்து கற்பனைசெய்து கொக்கரிப்பதேனோ..?
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
#12
[size=16]<b>எமது கருத்தின் கடைசி வரிகள் சுட்டுவது களத்தில் நாம் ஈழத் தமிழர்களின் தமிழ் தேசியம் தேசம் தொடர்பான மாற்று ஊடகச் செய்திகளை எதிர்காலத்தில் தெரிவு செய்வதும் மறுபிரசுரம் செய்வதும் தொடர்பானது...!

எமது கருத்துக்கள் எக்கருத்துப் பகுதியையும் தடை செய்ய வேண்டும் என்பதாக அல்லாமல் (அங்கு நாமும் செய்திகளை இடுகின்றோம்) திட்டமிட்டு தமிழ் தேசிய தேச விரோதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது...அதற்கான உதாரணங்களும் களத்தில் நேரத்துக்கு நேரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....எமது கருத்து எதுவும் கற்பனையில் எழுந்ததல்ல இங்கு நிகழ்கின்ற சம்பவங்களின் வெளிப்பாடே ஆகும்....!</b>

இதற்குமேல் இவ்வெட்டி ஒட்டுதல் தொடர்பான விடயங்களில் எமக்கு கருத்துரைக்க வேண்டிய அவசியம் ஏதும் எவருடனும் இல்லை....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
Mathivathanan Wrote:
kuruvikal Wrote:Flash News களவிதிகளுக்குட்டப்பட்ட காரணங்களுடன் கள நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டால் அன்றி அது தன் வரையப்பட்ட இலக்கு நோக்கி தொடரும்....எமது கருத்தை, விருப்பச் செய்திகளை எமது வடிவத்தில் களவிதிக்குள் நின்று சொல்ல எமக்கு உரிமை உண்டு...அதை யாரின் கொக்கரிப்புகளும் எதுவும் செய்துவிட முடியாது...!
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அடடே.. Breaking News Breaking News 2 தலைப்பை நிறுத்தக்கோரி அறிக்கை சமர்ப்பித்தது இவர்தானே.. மேலும் Flash News தலைப்பைப்பற்றி எவரும் ஆட்சேபனை செய்யாதவிடத்து கற்பனைசெய்து கொக்கரிப்பதேனோ..?</span>
kuruvikal Wrote:எமது கருத்தின் கடைசி வரிகள் சுட்டுவது களத்தில் நாம் ஈழத் தமிழர்களின் தமிழ் தேசியம் தேசம் தொடர்பான மாற்று ஊடகச் செய்திகளை எதிர்காலத்தில் தெரிவு செய்வதும் மறுபிரசுரம் செய்வதும் தொடர்பானது...!

எமது கருத்துக்கள் எக்கருத்துப் பகுதியையும் தடை செய்ய வேண்டும் என்பதாக அல்லாமல் (அங்கு நாமும் செய்திகளை இடுகின்றோம்) திட்டமிட்டு தமிழ் தேசிய தேச விரோதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது...அதற்கான உதாரணக்களும் களத்தில் நேரத்துக்கு நேரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....எமது கருத்து எதுவும் கற்பனையில் எழுந்ததல்ல இங்கு நிகழ்கின்ற சம்பவங்களின் வெளிப்பாடே ஆகும்....!

இதற்குமேல் இவ்வெட்டி ஒட்டுதல் தொடர்பான விடயங்களில் எமக்கு கருத்துரைக்க வேண்டிய அவசியம் ஏதும் எவருடனும் இல்லை....!
Truth 'll prevail
Reply
#14
இந்தக் கருணா என்கின்ற முன்னைய நாள் தமிழ்ப் போராளி, இன்றைய தினம் பேசுகிற விடயங்கள் குறித்தும், காட்டுகின்ற காட்சிகள் குறித்தும் சில ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து உற்சாகமாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. சிங்கள பேரினவாத ஊடகங்களும், தமிழ்த் தேசிய விரோத தமிழ் ஊடகங்களும் இதில் பெரும் பங்கினை வகிப்பதில் முன்னிற்கின்றன. கருணாவின் காரணமாக எழுந்துள்ள இந்தத் தற்காலிக நெருக்கடிý குறித்துப் ப10தாகரமான செய்திகளை வெளியிட்டு வரும் இந்தத் தமிழ் விரோத சக்திகளின் ஆழ்மனத்து ஆசைத்தான் என்ன?

நன்றி தினமுரசு.

சிங்கள பேரினவாத ஊடகங்களும், தமிழ்த் தேசிய விரோத தமிழ் ஊடகங்களும் இதில் பெரும் பங்கினை வகிப்பதில் முன்னிற்கின்றன. இவ்முன்னணி ஊடகங்களில் இருந்தே பல ஆங்கில செய்திகள் இங்கு பி.பி.சியால் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன. இவரால்ஒட்டப்பட்ட செய்திகள் பொய்யான தகவல்களையும் கொண்டுள்ள நச்சுக்கருத்துக்கள். அவைகளை மெள்ள மெள்ள பி.பி.சி விதைப்பதை அவர் இங்கு இணைத்திருக்கும் கருத்துக்களை உற்றுப்பார்த்தால் புரியும். பி.பி.சி புலி ஆதரவுக் கருத்துக்களை வைத்திருக்கின்றாரே என்று கூறுபவர்களுக்கு இது வெறும் கண்துடைப்புக்காக வைக்கப்படுகின்றது. முன்னைய ஆங்கில செய்திகளை நியாயப்படுத்தும் முயற்சிக்காக சில ஆதரவுச் செய்திகளும் வைக்கப்பட்டுள்ளன.

நான் இதைச் சொல்ல மாற்றுக்கருத்து என்பார்கள். இவர்களிடமே கேள்வியை விடுகின்றேன். மாற்றுக்கருத்து என்றால் என்ன? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
#15
kuruvikal Wrote:அது மட்டுமன்றி Breaking News பூட்டப்படாத நிலையிலும் Breaking News part 2 (Created by Kanthar) வந்து தமிழ் தேசியம் தமிழ் தேச விரோதக் கருத்துக்களை சாடைமாடையாக நிலை நிறுத்த முயலும் வரை மெளனமாக இருந்தவர்கள் Flash News வந்ததும் பொங்கி எழுந்ததன் மர்மம் என்ன...????!
...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இங்கை ஒருத்தரும் ஒண்டும் சொல்லேல்ல குருவி
பொங்கி எழும்பினம் எண்டுறியள் ஆர் எழும்பினது,,, என்னத்தை எழுப்பினது
Flash News விடுங்கோ இல்லாட்டில் News Flash விடுங்கோ
நல்லாத்தான் இருக்கும் ஆர் வேண்டாம் எண்டது.
Reply
#16
கருத்துக்கள், தனிப்பட்ட அஞ்சல்கள் மற்றும் ஆதரவிற்கும் நன்றி. அனைத்திற்கும் உடன் பதில் எழுதமுடியவில்லை பின்பு எழுதுகின்றேன். நான் படிக்கும் செய்திகளை மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து எழுதுங்கள். மீண்டும் நன்றிகள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#17
தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.....
Reply
#18
தொடர்ந்து எழுதுங்கள். நிறைய ..விடயங்களை அறியத்தரும் உங்கள் பணியை கைவிட வேண்டாம்.
Reply
#19
இந்த "இஷ்வரி" யைப்பார்க்க எனக்கு வதனாக்கா ஞாபகம் வருகிது.. உங்கள் யாராவதுக்கும் அப்படித் தோணுதோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)