Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சக்திக்கு மீறி செய்யும் காரியங்கள், அதிகநாள் தாக்குப் பிடிக்
#1
ஒரு ராஜகுமாரனுக்கு அரசவை நடனக்கலைஞர்கள் அலுத்துப்போய், சில குரங்குகளை நடனமாடப் பழக்கினான். அவைகள் அரசு கலைஞர்களைவிட சிறப்பாக நடனமாடின. மக்கள் கண்டுகளித்தனர். ராஜகுமாரன் தன் அவைக்கலைஞர்களைப் பார்த்து, ''நீங்களும் இருக்கிறீர்களே! தெண்டச்சோறு. வேஸ்ட்! இந்தக் குரங்குகளைப் பாருங்கள். எப்படி நடனமாடுகின்றன! அடுத்த மாதத்திலிருந்து உங்கள் எல்லோருக்கும் ஒருமாத நோட்டீஸ் கொடுத்து, சீட்டு கிழிக்கப் போகிறேன்'' என்றான்¢.

அவன் சொன்னதுபோல் குரங்குகள் ஒரேசீராக அழகாக 'முக்காலா முக்காபுலா! ஓ லைலா' ஆடிக்கொண்டிருக்கையில் அரசவைக் கலைஞர்களில் ஒரு கோமாளிக்கு ஒரு யோசனை தோன்றியது. ''கொஞ்சம் பொறிகடலை, பட்டாணி கொண்டு வாப்பா'' என்று தன் உபகலைஞரிடம் சொன்னார். அவன் கொண்டுவர, மேடையில் பொறிகடலை பட்டாணியை இறைத்தார்.

அவ்வளவுதான். குரங்குகள் தம் நடனத்தைத் துறந்து, இரண்டு கையாலும் கடலையைப் பொறுக்கி வாயில் அடைத்துக்கொள்ள.., அடித்துக் கொள்ள ஆரம்பித்தன. மேடையில் குழப்பம். நடன நிகழ்ச்சிக்காக தைத்திருந்த பட்டுக்குல்லாய், சட்டையெல்லாம் பிய்த்துக் கிழித்துக்கொண்டன.

மக்கள், 'என்ன இருந்தாலும் குரங்கு புத்தி மாறுமா?' என்றார்கள்.

நீதி :- சக்திக்கு மீறி செய்யும் காரியங்கள், அதிகநாள் தாக்குப் பிடிக்காது.

நன்றி ambalam.com
<b>
?

?</b>-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)