08-04-2004, 04:04 AM
<b>சீறுகிறார் சேரன்!</b>
<img src='http://www.vikatan.com/av/2004/aug/08082004/p13.jpg' border='0' alt='user posted image'>
டைரக்டர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் மீது கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்டதில், தமிழ் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஃபிலிம் சேம்பர் தியேட்டரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு புறப்பட்ட சேரனை ஓரங்கட்டினோம். குமுறலும் கொந்தளிப்புமாகச் சீறித் தள்ளிவிட்டார்.
தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், துளியும் சம்பந்தமில்லாத என்னைக் குற்றம் சாட்டிக் கதை கட்டியது என்ன நியாயம்?
அந்த திருச்சி பொண்ணு எங்க மேல அநாவசியமா ஏன் சேத்தை வாரி இறைக்கணும்..? இதுக்கு என்ன பின் னணினு எங்களுக்கு எதுவும் புரியலை. நாங்க விசாரிச்சவரை, சரியான பதிலும் கிடைக்கலை. இந்த விஷயத்தில் திருச்சி மாதர் சங்கமும் அவசரப்பட்டிருக்காங்க. இதிலே பாதிக்கப்பட்டது எங்க தனிப்பட்ட வாழ்க்கைதான்.
தெளிவா... சந்தோஷமா குடும்பம், குழந்தைனு போய்ட்டிருந்த வாழ்க்கை யில சூறாவளி கிளப்பி விட்டுட்டாங்க. தமிழ் சினிமாவின் போக்கை, திசை மாற்றி நல்ல பாதைக்குக் கொண்டுபோன என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா? அதுவும் மிகப்பெரிய குற்றமான, கற்பழிப்புப் புகாரா? என்னால இன்னமும் ஜீரணிக்கவே முடியலை. நெஞ்சை அடைக்குது!
எங்கம்மா ஊரிலிருந்து போன் பண்றாங்க... இரண்டு வார்த்தை பேச றாங்க... அப்புறம் அவங்களுக்கு வார்த் தையே வரலை. பேச முடியாம தாரை தாரையா அழறாங்க... அவங்க எவ் வளவு உடைஞ்சு போயிருக்காங்கன்றது அந்த அழுகையிலேயே தெரியுது. எனக் கும் என்ன பதில் சொல்றதுனு தெரி யலை. வர்ற செய்திகளை நம்பாதே... எம்மேல தப்பில்லேம்மானு சொல் லிட்டு போனை வெச்சிட்டேன்.
வீட்லயும் நிம்மதி இல்லை. போன் வந்தாலே திரும்பத் திரும்ப அதுபத்தியே பேசி விளக்கம் குடுக்க வேண்டியிருக்கு. இரண்டு குழந்தைகள், மனைவி என்று அழகான குடும்பம், இப்போ குழம்பிக் கிடக்கு. என் மனைவியோட கண்ணீர், குழந்தைகளோட தடுமாற்றம்... பார்க்கப் பார்க்க அப்படியே நொறுங்கிப் போய்க் கிடக்கிறேன்.
ஆட்டோகிராஃப்Õ படம் ஜெயிச்ச சந்தோஷத்தில் இருக்கும்போது, இப்படி ஒரு களங்கம்... மனச்சுமை! நான் போற பாதையில நிறையப் பேர் பள்ளம் தோண்டி வெச்சிருக்காங்க. அதையெல்லாம் சரிபண்ண வேண்டியதும் என் வேலைனு இப்பதான் எனக்குப் புரியுது. அய்யோ, இப்படி நம்மளை சொல்லிட்டாங் களேன்னு உட்கார்ந்து கவலைப்பட்டுட்டு இருந்தா அடுத்த ஸ்டெப் நகர முடி யாது. இதுவும் ஒரு சவால் தான். நான் சமாளிப்பேன்.
<b>இப்படி புகார் வர யார் காரணம்னு ஏதாவது தோணுதா? </b>
முதல் தகவல் அறிக்கை, அடுத்த அறிக்கை இதில் இல்லாத எங்கள் பெயர்களைப் பிறகு சேர்த்திருக் கிறார்கள். எங்கள் மேல் புகார் சொன்ன அந்தப் பெண்ணின் கடந்த காலப் பின்னணியை முழுக்க விசாரித்து வைத்திருக்கிறோம். வேடிக்கையும் விநோதமும் நிறைந்த இந்த ஜோடிப்பு வழக்கில் என்னைச் சேர்க்க என்ன காரணம்னு தேடிட்டு இருக்கேன். ஒரு ஆட்டோகிராஃப் வெற்றிக்கு கொடுக்க வேண்டிய விலையா இது?
எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினவங்களைக் கண்டுபிடிக்காம விடப்போறதில்லை. சதிக்குப் பின்னால் இருக்கிறவங்களைக் கண்டுபிடிச்சு, அவங்களை மக்கள் முன் நிறுத்தறதுதான் என் முதல் வேலை என்று சூடாகச் சொன்னவர் தொடர்ந்தார்...
போலீஸ் விசாரித்தவரை எனக்கோ தங்கர்பச்சானுக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்கு கதை தேட, பெரிய போலீஸ் அதிகாரிகள் களமிறங்க வேண்டிய அவசியம் என்ன? எவ்வளவோ முக்கியமான வேலைகள் அவர்களுக்கு இருக்கும். அதையெல்லாம் விட்டுட்டு அவங்க உழைப்பை வீணாக்க வேண்டிய அவசியம் என்ன? கொஞ்ச நாள் கழிச்சு எங்க மேலே சுமத்தப்பட்ட இந்தக் களங்கம் பொய் என்றுஆகும் போது, இதுவரை சுமந்த சுமைக்கு, இந்த வலிக்கு, மன உளைச்சலுக்கு என்ன நிவாரணம்?
இப்படியான குற்றச்சாட்டை யார்மேலயும் சொல்லலாமே? நாளைக்கே ஒரு பெரிய நடிகர் மீதோ அரசியல்வாதி மீதோ இதே ஸ்டைல் குற்றச்சாட்டு சுமத்தப்படலாமே? என்னங்க நடக்குது இங்கே..?
என்னை நம்புகிற தமிழ் மக்களுக்கு கரம் கூப்பிச் சொல்கிறேன்... நான் குற்ற மற்றவன். என் படங்களில் கூட ஆபாசத்தை அனுமதிக்காத மனது என்னுடையது. நான் எடுத்த பாரதி கண்ணம்மா படம் பார்த்துட்டு பலபேர் தங்கள் பிள்ளைகளை ஸ்கூல்ல சேர்க்கும்போது சாதியைச் சொல்லாம சேர்த்திருக்காங்க. பொற்காலம் பார்த்துட்டு, ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கேங்க!னு எனக்கு எத்தனை பேர் கல்யாணப் பத்திரிகைகள் அனுப்பி னாங்க தெரியுமா? வெற்றிக்கொடி கட்டு பார்த்துட்டு கால்காசானாலும் நம்ம ஊர் மாதிரி வராதுனு, வெளிநாட்டு மோகத்தை விட்டு இங்கேயே பிழைத்தவர்கள் இருக்கிறார்கள். பாண்டவர் பூமி பார்த்துட்டு கை நழுவிப் போய்க்கொண்டிருக்கும் கிராமத்துப் பாசத்தை அதிகரித்துக் கொண்டவர்கள் அதிகம்.
இப்படி நான் என் படங்களின் மூலமா மனுஷங்ககிட்டே அன்பு, பாசம், பண்பாடு, கலாசாரம்னு பேசிட்டிருக்கேன். அப்படிப்பட்ட நானே இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்திருப்பேனா... சொல்லுங்க..?
ஐந்து படங்கள் சம்பாதித்துத் தராத புகழையும் பணத்தையும் ஆட்டோகிராஃப் தந்திருக்கலாம். ஆனாலும் அதுவே நிறைய பேர் கண்ணை உறுத்தி இப்படி ஒரு களங்கம் வந்திருக்கிறது. இந்தத் துயரத்திலும், கனடா மாண்ட்ரீல் பட விழாவில் பங்கேற்கிற ஒரே தமிழ்ப்படமாக ஆட்டோகிராஃப் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவின் சிறந்த படம் என்ற தகுதியில் போகிறது. ஆனா, இந்த சந்தோஷத்தை என்னால முழுசா அனுபவிக்க முடியலை.
<b>அடுத்த படங்கள் என்ன?</b>
இன்னும் கதை, தலைப்பு முடிவுக்கு வரவில்லை. ஆட்டோகிராஃப்க்கு அடுத்த கட்டத்தைத் தாண்டணும்னா ஏராளமான உழைப்பு வேண்டி இருக்கு. இந்தியன் தியேட்டருக்கும் பஞ்சு அருணாசலம் சாருக்கும் படம் பண்றதுங்கிறது மட்டும் முடிவாகியிருக்கு.
<b>நடிகர், இயக்குநர்... எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?</b>
இயக்குநர் பதவி ரொம்பப் பெரிசு. மனசுக்குப் பிடிச்சது. கிட்டத்தட்ட படைக்கிற பிரம்மா மாதிரி. நான் டைரக்ஷ னைப் பாடமா படிச்சது இல்லை. வாழ்க்கை தெரியும். அனுபவங்கள்தான் எனக்கு தியரி. நாம சந்திக்கிற மனிதர்கள்தான் என் கதாபாத்திரங்கள். வாழ்க்கையைவிட சிறந்த வாத்தியார் எங்கே இருக்கிறார் சொல்லுங்கள்!
வாழ்க்கைதான் எல்லாமே கத்துக் கொடுக்குது. நான் புத்தகம் படிக்கிறவன் இல்லை. ஒரு வாரத்துக்கு முன்னாடி கும்பகோணம் போயிருந்தேன். அந்த ஸ்கூலில் போய்ப் பார்த்தால், மனசே பாரமாகிப் போச்சு. ஆட்டோகிராஃப் 150 நாள் விழாவை கொண்டாடவே இல்லை. அதற்காக வெச்சிருந்த மூன்று லட்சத்தையும் இறந்து போன குழந்தைகளோட குடும்பத்துக்குக் கொடுத்துட்டேன்...மேலே பேச முடியாமல் கண்கள் கலங்க நகர்கிறார் சேரன்.
http://www.vikatan.com/
<img src='http://www.vikatan.com/av/2004/aug/08082004/p13.jpg' border='0' alt='user posted image'>
டைரக்டர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் மீது கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்டதில், தமிழ் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஃபிலிம் சேம்பர் தியேட்டரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு புறப்பட்ட சேரனை ஓரங்கட்டினோம். குமுறலும் கொந்தளிப்புமாகச் சீறித் தள்ளிவிட்டார்.
தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், துளியும் சம்பந்தமில்லாத என்னைக் குற்றம் சாட்டிக் கதை கட்டியது என்ன நியாயம்?
அந்த திருச்சி பொண்ணு எங்க மேல அநாவசியமா ஏன் சேத்தை வாரி இறைக்கணும்..? இதுக்கு என்ன பின் னணினு எங்களுக்கு எதுவும் புரியலை. நாங்க விசாரிச்சவரை, சரியான பதிலும் கிடைக்கலை. இந்த விஷயத்தில் திருச்சி மாதர் சங்கமும் அவசரப்பட்டிருக்காங்க. இதிலே பாதிக்கப்பட்டது எங்க தனிப்பட்ட வாழ்க்கைதான்.
தெளிவா... சந்தோஷமா குடும்பம், குழந்தைனு போய்ட்டிருந்த வாழ்க்கை யில சூறாவளி கிளப்பி விட்டுட்டாங்க. தமிழ் சினிமாவின் போக்கை, திசை மாற்றி நல்ல பாதைக்குக் கொண்டுபோன என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா? அதுவும் மிகப்பெரிய குற்றமான, கற்பழிப்புப் புகாரா? என்னால இன்னமும் ஜீரணிக்கவே முடியலை. நெஞ்சை அடைக்குது!
எங்கம்மா ஊரிலிருந்து போன் பண்றாங்க... இரண்டு வார்த்தை பேச றாங்க... அப்புறம் அவங்களுக்கு வார்த் தையே வரலை. பேச முடியாம தாரை தாரையா அழறாங்க... அவங்க எவ் வளவு உடைஞ்சு போயிருக்காங்கன்றது அந்த அழுகையிலேயே தெரியுது. எனக் கும் என்ன பதில் சொல்றதுனு தெரி யலை. வர்ற செய்திகளை நம்பாதே... எம்மேல தப்பில்லேம்மானு சொல் லிட்டு போனை வெச்சிட்டேன்.
வீட்லயும் நிம்மதி இல்லை. போன் வந்தாலே திரும்பத் திரும்ப அதுபத்தியே பேசி விளக்கம் குடுக்க வேண்டியிருக்கு. இரண்டு குழந்தைகள், மனைவி என்று அழகான குடும்பம், இப்போ குழம்பிக் கிடக்கு. என் மனைவியோட கண்ணீர், குழந்தைகளோட தடுமாற்றம்... பார்க்கப் பார்க்க அப்படியே நொறுங்கிப் போய்க் கிடக்கிறேன்.
ஆட்டோகிராஃப்Õ படம் ஜெயிச்ச சந்தோஷத்தில் இருக்கும்போது, இப்படி ஒரு களங்கம்... மனச்சுமை! நான் போற பாதையில நிறையப் பேர் பள்ளம் தோண்டி வெச்சிருக்காங்க. அதையெல்லாம் சரிபண்ண வேண்டியதும் என் வேலைனு இப்பதான் எனக்குப் புரியுது. அய்யோ, இப்படி நம்மளை சொல்லிட்டாங் களேன்னு உட்கார்ந்து கவலைப்பட்டுட்டு இருந்தா அடுத்த ஸ்டெப் நகர முடி யாது. இதுவும் ஒரு சவால் தான். நான் சமாளிப்பேன்.
<b>இப்படி புகார் வர யார் காரணம்னு ஏதாவது தோணுதா? </b>
முதல் தகவல் அறிக்கை, அடுத்த அறிக்கை இதில் இல்லாத எங்கள் பெயர்களைப் பிறகு சேர்த்திருக் கிறார்கள். எங்கள் மேல் புகார் சொன்ன அந்தப் பெண்ணின் கடந்த காலப் பின்னணியை முழுக்க விசாரித்து வைத்திருக்கிறோம். வேடிக்கையும் விநோதமும் நிறைந்த இந்த ஜோடிப்பு வழக்கில் என்னைச் சேர்க்க என்ன காரணம்னு தேடிட்டு இருக்கேன். ஒரு ஆட்டோகிராஃப் வெற்றிக்கு கொடுக்க வேண்டிய விலையா இது?
எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினவங்களைக் கண்டுபிடிக்காம விடப்போறதில்லை. சதிக்குப் பின்னால் இருக்கிறவங்களைக் கண்டுபிடிச்சு, அவங்களை மக்கள் முன் நிறுத்தறதுதான் என் முதல் வேலை என்று சூடாகச் சொன்னவர் தொடர்ந்தார்...
போலீஸ் விசாரித்தவரை எனக்கோ தங்கர்பச்சானுக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்கு கதை தேட, பெரிய போலீஸ் அதிகாரிகள் களமிறங்க வேண்டிய அவசியம் என்ன? எவ்வளவோ முக்கியமான வேலைகள் அவர்களுக்கு இருக்கும். அதையெல்லாம் விட்டுட்டு அவங்க உழைப்பை வீணாக்க வேண்டிய அவசியம் என்ன? கொஞ்ச நாள் கழிச்சு எங்க மேலே சுமத்தப்பட்ட இந்தக் களங்கம் பொய் என்றுஆகும் போது, இதுவரை சுமந்த சுமைக்கு, இந்த வலிக்கு, மன உளைச்சலுக்கு என்ன நிவாரணம்?
இப்படியான குற்றச்சாட்டை யார்மேலயும் சொல்லலாமே? நாளைக்கே ஒரு பெரிய நடிகர் மீதோ அரசியல்வாதி மீதோ இதே ஸ்டைல் குற்றச்சாட்டு சுமத்தப்படலாமே? என்னங்க நடக்குது இங்கே..?
என்னை நம்புகிற தமிழ் மக்களுக்கு கரம் கூப்பிச் சொல்கிறேன்... நான் குற்ற மற்றவன். என் படங்களில் கூட ஆபாசத்தை அனுமதிக்காத மனது என்னுடையது. நான் எடுத்த பாரதி கண்ணம்மா படம் பார்த்துட்டு பலபேர் தங்கள் பிள்ளைகளை ஸ்கூல்ல சேர்க்கும்போது சாதியைச் சொல்லாம சேர்த்திருக்காங்க. பொற்காலம் பார்த்துட்டு, ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கேங்க!னு எனக்கு எத்தனை பேர் கல்யாணப் பத்திரிகைகள் அனுப்பி னாங்க தெரியுமா? வெற்றிக்கொடி கட்டு பார்த்துட்டு கால்காசானாலும் நம்ம ஊர் மாதிரி வராதுனு, வெளிநாட்டு மோகத்தை விட்டு இங்கேயே பிழைத்தவர்கள் இருக்கிறார்கள். பாண்டவர் பூமி பார்த்துட்டு கை நழுவிப் போய்க்கொண்டிருக்கும் கிராமத்துப் பாசத்தை அதிகரித்துக் கொண்டவர்கள் அதிகம்.
இப்படி நான் என் படங்களின் மூலமா மனுஷங்ககிட்டே அன்பு, பாசம், பண்பாடு, கலாசாரம்னு பேசிட்டிருக்கேன். அப்படிப்பட்ட நானே இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்திருப்பேனா... சொல்லுங்க..?
ஐந்து படங்கள் சம்பாதித்துத் தராத புகழையும் பணத்தையும் ஆட்டோகிராஃப் தந்திருக்கலாம். ஆனாலும் அதுவே நிறைய பேர் கண்ணை உறுத்தி இப்படி ஒரு களங்கம் வந்திருக்கிறது. இந்தத் துயரத்திலும், கனடா மாண்ட்ரீல் பட விழாவில் பங்கேற்கிற ஒரே தமிழ்ப்படமாக ஆட்டோகிராஃப் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவின் சிறந்த படம் என்ற தகுதியில் போகிறது. ஆனா, இந்த சந்தோஷத்தை என்னால முழுசா அனுபவிக்க முடியலை.
<b>அடுத்த படங்கள் என்ன?</b>
இன்னும் கதை, தலைப்பு முடிவுக்கு வரவில்லை. ஆட்டோகிராஃப்க்கு அடுத்த கட்டத்தைத் தாண்டணும்னா ஏராளமான உழைப்பு வேண்டி இருக்கு. இந்தியன் தியேட்டருக்கும் பஞ்சு அருணாசலம் சாருக்கும் படம் பண்றதுங்கிறது மட்டும் முடிவாகியிருக்கு.
<b>நடிகர், இயக்குநர்... எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?</b>
இயக்குநர் பதவி ரொம்பப் பெரிசு. மனசுக்குப் பிடிச்சது. கிட்டத்தட்ட படைக்கிற பிரம்மா மாதிரி. நான் டைரக்ஷ னைப் பாடமா படிச்சது இல்லை. வாழ்க்கை தெரியும். அனுபவங்கள்தான் எனக்கு தியரி. நாம சந்திக்கிற மனிதர்கள்தான் என் கதாபாத்திரங்கள். வாழ்க்கையைவிட சிறந்த வாத்தியார் எங்கே இருக்கிறார் சொல்லுங்கள்!
வாழ்க்கைதான் எல்லாமே கத்துக் கொடுக்குது. நான் புத்தகம் படிக்கிறவன் இல்லை. ஒரு வாரத்துக்கு முன்னாடி கும்பகோணம் போயிருந்தேன். அந்த ஸ்கூலில் போய்ப் பார்த்தால், மனசே பாரமாகிப் போச்சு. ஆட்டோகிராஃப் 150 நாள் விழாவை கொண்டாடவே இல்லை. அதற்காக வெச்சிருந்த மூன்று லட்சத்தையும் இறந்து போன குழந்தைகளோட குடும்பத்துக்குக் கொடுத்துட்டேன்...மேலே பேச முடியாமல் கண்கள் கலங்க நகர்கிறார் சேரன்.
http://www.vikatan.com/
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->