Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம்
#1
<span style='color:red'>கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம்</span>

<b> உங்களின் கீழிருந்து வளர்ந்து வருவதாகக் கனவுகண்டு படுகுழிக்குள் வீழ்ந்திருக்கும் முன்னாள் போராளி எழுதுவது,</b>


நான் இப்போது தாயகத்தில் இல்லை. ஆனால் உங்களை நம்பி போராட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பலர் இன்று தாயகத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். அவர்களை விட என் வாழ்க்கை கடினமானதல்ல. உங்கள் வழிகாட்டலை நம்பி தேசியத் தலைமையைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டதால் எங்களால் மீண்டும் எங்கள் போராளிச் சகோதரர்களின் முகத்தில் விழிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மட்டு. அம்பாறை மாவட்டத்தில் இருக்க முடியாமல் வெளிநாடொன்றில் வாழ்கிறேன். தாய் நாட்டிற்கும் என்னோடிருந்து போராடி, என் பயிற்சியிலும் வழிகாட்டலிலும் களமிறங்கி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன். துரோகியின் வழிகாட்டலில் தவறு செய்தவனின் பிள்ளை என்று என் அடுத்த தலைமுறை அவமானப்படக் கூடாது என்பதற்காகவும், தக்க தருணத்தில் என் பிள்ளைகளாவது தாய்நாட்டிற்கான முழுச்சேவையைச் செய்யும் பேறு பெற்றிட வேண்டும் என்பதற்காகவுமே இந்த அஞ்ஞாத வாசம்.

அது நிற்க, இப்போது விடயத்திற்கு வருவோம். நீங்கள் கட்சியொன்றை ஆரம்பித்திருப்பதாகத் தகவல். அரசியல்வாதிகளைப் பற்றிய உங்கள் மட்டரகமான விமரிசனங்கள் நமது படையணியில் மிகவும் பிரசித்தம். அதுவும் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றிய உங்களின் பிரசித்தமான 'அந்த" விமர்சனத்தை நானும் பலரிடம் சொல்லியிருக்கிறேன். இப்போது நீங்கள் அதே டக்ளசோடு அரசியல் பாணி வேட்டி சட்டை அணிந்து மாலை போட்டு வரும்போது நான் முன்னே வந்து அந்த வசனத்தை ஞாபகப்படுத்தினால் உங்கள் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். வேதனையை மீறி கொஞ்ச நேரம் வயிறுகுலுங்கச் சிரிக்க முடிந்தது.

அரசியல் என்பது உங்களைப் பொறுத்தளவில் ஒரு வியாபாரம். அங்கே வசனங்களை விற்று வாழ்க்கையை நடத்தலாம் என்பது உங்களின் நப்பாசை. அதுவும் நீங்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் பரந்தன் ராஜனும் சும்மா லேசுப்பட்ட ஆள் இல்லை. மாடு கடத்தி விற்றவர், ஆனந்தசங்கரியோடு சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரை எழுபதுகளின் நடுப்பகுதியில் சுட்டுக்கொன்றவர். சகோதரியின் கணவரையே காசுத் தகராறில் சீவி எறிந்தவர் என்று அவருக்கும் ஏகப்பட்ட விருதுகள். அவரின் தம்பியே உங்கள் கட்சியின் 'செயலாளர் நாயகமாக" இருப்பது உங்களுக்கு மிகப்பெரும் பேறு. சபாஷ்! பலே! சரியான கூட்டணி என்று கூவவேண்டும் போல் இருக்கிறது.

தவிர பரந்தன் ராஜனுக்கு ஊட்டியிலே ஏகப்பட்ட அசையாச் சொத்துக்கள் இருப்பதாகப் பேசிக்ககொள்கிறார்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு அந்தப்பக்கம் 'உல்லாசப்பயணம்" போகும் நோக்கமும் இருக்கலாம். எதற்கும் பார்த்து நடவுங்கள் அம்மான்.

இப்போது உங்களைப் பீடித்திருக்கும் நோய்க்கு என்ன மருந்து தேவை என்பது யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் நோயாளி என்பதில் எனக்குக் கிஞ்சித்தேனும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த நாட்களில் நாங்கள் பார்த்த கருணா வேறு. இப்போது அறிக்கைகள் மூலமும் கட்சியமைத்துக் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஆட்களின் மூலமும் வெளிப்படும் கருணா வேறு. முன்பொரு நாள் முல்;லைத்தீவுக் கடற்பரப்பில் ஏழு கடற்கலங்களின் அணிவகுப்பில் நீங்கள் பயணிக்கிறீர்கள். உங்கள் பயணத்திற்குக் காவலாக இரண்டு கரும்புலிப் படகுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கரும்புலி வீரர்கள் மட்டும் அன்று தங்களின் உயிர்களைத் தாரை வார்த்திருக்கா விட்டால் இன்று இந்த மண்ணில் ஒரு துரோகியின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அன்று தப்பிவந்த நீங்கள் கரையை அடைந்ததும் சொன்ன வாக்கியத்தை என்னால் மறக்க முடியவில்லை. 'இன்று இந்தப் பயணத்தில் வந்த எவரும் உயிருள்ளவரை தமிழீழ இலட்சியத்திற்காக போராட வேண்டும்" என்பதே அந்த வசனம். அதைக் கேட்டிருந்த பலர் இன்று மாவீரராகி விட்டார்கள். ஆனால் அதைச் சொன்ன நீங்கள் இன்று உயிரோடிருந்து தமிழீழத்திற்கு மாபெரும் துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அன்று அந்தத் தியாகத்தைச் செய்தவர்களி;ல் ஒருவர் வாழைச்சேனையைச் சேர்ந்த கண்ணாளன். மற்றவர் நகுலன். வடபகுதியைச் சேர்ந்தவர். பிற்பட்ட நாட்களில் வட தமிழீழம் பற்றி வாய் கிழியப் பிரதேசவாதம் பேசித்திரிந்த போது அந்தத் தியாக நிமிடத்தை ஒரு பொழுதாவது சிந்தித்திருந்தீர்களா? அல்லது உங்களுக்குப் பிடித்த நோயின் காரணமாக அப்போதே அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?

மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்படும் முன்னான நாற்பத்தியொரு நாட்களில் நீங்கள் கக்கிய பிரதேசவாத விஷத்தையும் வடபகுதித் தமிழர்களைக் விரட்டுவோம் என்ற நிலைப்பாட்டையும் இப்போது திடீரென்று கைவிட்டு விட்டீர்கள். பெரிய நாயைக் கண்டதும் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலைக்குப் போகும் சிறிய நாயின் நிலைப்பாட்டை அங்கே காண்கிறேன்.

உங்கள் கட்டளையில் பல நு}று போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் கரிபூசியதைப் போல் போராளிகளைக் கொன்ற சிங்களப் படைகளின் கொல்லைப்புறத்தில் குறுகிக் கிடக்கிறீர்கள். உங்களின் உணர்வுகள் கூடக் காயடிக்கப்பட்டே இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. இல்லாவிட்டால் மட்டக்களப்பில் எண்ணிலடங்காத மௌனப் புதைகுழிகளை விதைத்த சிங்களக் கரங்களிடம் சோற்றுப்பிச்சை கேட்பீர்களா?

இன்று வெளியிலே தலை காட்ட முடியாத தலைவருடனும் இந்தியாவில் தஞ்சம் புகுந்து கிடக்கும் செயலருடனும் தோன்றிய ஒரு கட்சிதான் தமிழருக்கு விடிவு தேடித்தரும் என்று உலகத்தை நம்பச் சொல்கிறீர்கள். புதிதாகப் பிறக்கும் துரோகிகள் முந்திய துரோகிகளை விட பெரிதாக ஏதாவது செய்து தங்கள் எஜமானர்களின் அபிமானத்தைப் பெற விரும்புவார்கள். அந்த இயல்பான உளவியல் உங்களிடமும் வெளிப்படுவது ஆச்சரியமில்லை. நீங்களும் என்னதான் செய்வீர்கள்! போட்டிருப்பது நாய் வேஷம் அல்லவா? குரைக்காது இருந்தால் விடுவார்களா? உங்கள் பார்வையைச் சூழ்ந்திருக்கும் மாயையை விலக்கிவிட்டுப் பாருங்கள் அம்மான், உங்களின் நிருவாணம் புரியும். பல உளவியல் உண்மைகள் விளங்கும். அடங்காத மனைவியை அடக்கமுடியாத ஆற்றாமையை நீங்கள் சுய பச்சாத்தாபமாகப் பார்த்து ஏமாந்தது விளங்கும். அதனால் நீங்கள் பட்டமிழந்து பதவியிழந்து உலகின் முன் ஈனப்பயலாகி இழிந்து நிற்பது தெளிவாகும்.

தமிழீழத்தின் பெரிய தளபதியொருவர் தங்கள்வசம் இருப்பதாக சிங்களப்படை எண்ணக்கூடும். ஆனால், பின்புறம் எதிரி இருக்கும் நிலையில் அந்தத் தளபதி ஒருபோதும் களத்தில் கால் வைத்ததில்லை என்பது எனக்கல்லவா தெரியும்? முன்னுக்கும் பின்னுக்கும் எதிரி இருக்கத்தக்கதாக நீங்கள் ஒரு சண்டையாவது பிடித்திருக்கிறீர்களா என்பதை அப்போது ஒருவரும் யோசித்துப் பார்த்ததில்லை. நான் யோசித்தேன். மற்றத் தளபதிகளுக்கும் உங்களுக்கும் அதுதான் பெரிய வித்தியாசம். சண்டையில் காயப்படாத எந்தத் தளபதியையாவது இந்த இயக்கத்தில் காட்டமுடியுமா? ஆனால் அதற்கு விதிவிலக்காக இருந்த அந்த ஒரேயொரு அற்புத மனிதர் தாங்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். கேவலம் கம்பி றோல் கீறிய தழும்பாவது... என்ன சங்கடமான இடமொன்றில் கைவைத்து விட்டேனா? அப்போது சொல்லத் துணியவில்;லை. இப்போது சொல்கிறேன். தமிழீழத் தளபதிகளில் மிகப்பெரி;தாகப் பேசப்பட்டவரும் மிகப்பயந்தவரும் நீங்கள்தான். உங்களோடு நின்ற எவராவது இதை வாசித்தால் இந்த உண்மை அவர்கள் மனதில் சட்டென்று உறைக்கும்.

துரோகம் என்பது தமிழனுக்கும் புதிதல்ல. ஆனால் அதையே வாழ்க்கை முறையாகக் கொண்டு துரோகத்தை நியாயப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் தமிழர்கள் இலங்கையில் மட்டுமே உண்டு. அதில் பட்டறிவு பெற்ற பலர் உங்களுக்கு பால பாடம் சொல்லித் தந்திருப்பார்கள். நீங்களும் கெட்டிக்காரன் தானே. சுலபமாகக் கற்றுவிட்டீர்கள். ஒரு கையில் ஒலிவாங்கியையும் மறுகையில் கொலை வாளுமாகக் களத்தில் இறங்கி விட்டீர்கள். நீங்கள் எதைப் பேசினாலும், எதைச் சேர்த்து வைத்தாலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்திருப்பது துரோகியின் பிள்ளை என்ற சொத்தை மட்டும்தான். தமிழர் வாழும் எந்த இடத்திலும் நாளைய உணவிற்கு நாதியற்ற பிள்ளைக்கு இருக்கும் கௌரவம் கூட உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல, சந்ததிக்கே இருக்கப் போவதில்லை. தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக உங்கள் பிள்ளைகள் உங்கள் பெயரை முன்னெழுத்தாகப் போடாது விடும் காலம் து}ரத்தில் இல்லை. அந்தப் பிள்ளைகளைத் து}க்கித் திரிந்தவன் என்ற வகையில் அவர்களுக்கு என் அனுதாபங்கள்.

உங்களால் உங்கள் குடும்பம் பெற்றதுதான் என்ன? உங்கள் அண்ணனையும் சுயமுடிவு எடுக்கவிடாது துரோகியாக்கி விட்டீர்கள். உங்களின் அண்மைக்கால அறிக்கையிலும் நடத்தையிலும் கூட முதிர்ச்சியைக் காணமுடியவில்லை. நீங்கள் அமைக்கும் வியூகங்கள் உங்களையே இடறிவிடக் கூடியதாகவே இருக்கின்றன. உங்களோடு சேர்ந்துள்ளவர்கள் அன்றாட வியாபாரிகளின் தன்மையுடையவர்கள். நீங்களோ நீண்ட காலத்திற்கு இருக்கலாம் என்ற விதத்தில் அறிக்கை விடுகிறீர்கள். அந்த அறிக்கைகளில் அவலத்தின் ஓலமும் மரண பயத்தின்; நடுக்கமும் இருப்பது உங்களோடு நெருங்கிப் பழகிய எனக்குக் கேட்காமல் போகவில்லை. மொத்தத்தில் பயன்படுத்தப்படுகிறீர்கள், பரிதாபகரமான முறையில். தற்போது நீங்கள் நடத்திவரும் கொலைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் நான் நம்பவில்லை. உங்களின் ஆட்களை நீங்கள் அதற்குப் பயன்படுத்தினாலும் நீங்கள் சேர்ந்துள்ள அணியில் இருக்கும் வேறு சிலருக்கே அதனால் அதிக நன்மைகள். உதாரணமாக நமது பற்பொடிக் கொம்பனிக் கொலை வீடுகள் து}சு தட்டப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கிருந்து வெளியே வரும் எவரையும் எதனையும் மட்டக்களப்பு வாசிகள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதற்குள் கால் வைக்கிறீர்கள் என்றால் நீங்கள் எங்கோ போய்விட்டீர்கள் என்று பொருள்.

சரியம்மான். உங்கள் அடுத்த நகர்வுகளைப் பார்த்து அடுத்த மடலை எழுதுகிறேன். அதுவரை நீங்கள் நலமாயிருந்தால்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.

<b>-அருகிலிருந்தவன் (The man who was nearby)</b>
நன்றி தமிழ்நாதம்
Reply
#2
ஹரி... இதுபோன்ற மடல்களைத் தொடர்ந்‌தும் எமக்குத் தருவீர்கள் என நம்புகிறோம்....
Reply
#3
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அய்யோ அய்யய்யோ ஓஓஓஓஓ.....

இந்த உண்மையெல்லாம் என் முன்னால் ஸ்போக்ஸ்மன் "***" மாஸ்ரர்தான் எழுதியிருக்க வேண்டும். அந்தாளுக்குத்தான் என்னைப்பற்றி, என்ரை கடைசிக்காலம் கூத்து முழுக்க தெரியும். அய்யோ இன்னும் கனக்க வெளியிலே சொல்லப் போறாரே?

சுத்துப்போடுவன் தெரியுமோ! வாறன் என்னத்திற்கும் பிரபல மாட்டுக்கள்ளன் "பரந்தன் ராசன்", சூளை மேட்டுப் புகழ் "டக்லூசு", மாமோய் "சங்குறி".. .. கேட்டுட்டு?

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#4
கடிதத்தை இங்கு இட்டதற்கு நன்றிகள் ஹரி....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம்

கடிதம் - 2 http://www.tamilnatham.com/letter/karuna20041104.htm

கடிதம் - 3 http://www.tamilnatham.com/letter/karuna20041215.htm

தமிழ்நாதம்
Reply
#6
http://www.tamilnatham.com/letter/karuna20041215.htm
Reply
#7
சிறுமையின் சின்னமாய் மாறியுள்ள அம்மானிற்கு!


உங்களைப் பற்றி நான் எழுதிய இரண்டாவது கடிதத்திற்கு வழக்கம் போலவே வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், கருத்துக்களுமாக ஏராளமான மின் அஞ்சல்கள் வந்திருந்தன. சில மின் அஞ்சல்கள் மிரட்டல்களாகவும் வந்தன. அத்தோடு சில ஆலோசனைக் கடிதங்கள் போராளிகளிடம் இருந்து வந்தவை போல இருந்தன. உள்விடயங்கள் வெளியாவதில் சங்கடங்கள் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்கள். ஆனால், இன்னொரு பிழையைத் தவிர்ப்பதற்காகச் சிலதைச் சொல்லியே ஆகவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. நான் ஏன் தொடர்ந்து எழுதவில்லையென்று கேட்டும் சில கடிதங்கள் வந்திருந்தன. புனிதத் திருநாட்களான மாவீரர் வாரத்தை அவர்களை நினைப்பதிலேயே செலவழித்தேன். அதனால் தான் இந்தத் தாமதம்.

நிற்க, நமது பிரச்சனைக்கு வருவோம், அம்மான். உங்கள் ~பேச்சைக்| கேட்டேன், பார்த்தேன். உச்சமான பயத்தில் நீங்கள் இருப்பதை உங்கள் தோற்றம் படம்பிடித்துக் காட்டியது. ஓடி ஒளிவதற்கு இடம் தேடுகிறவனைப் போல நீங்களும் கூனிக்குறுகிப் போயுள்ளீர்கள். தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டப்பட்டு அது இழுப்பதற்குத் தயாரான நிலையிலுள்ள கைதி மாதிரி உங்கள் முகம் சரியாக வெளிறிப் போயுள்ளது. ~நல்ல பாம்பு ஆடுதெண்டு நாக்கிழியாம்புளுவும் ஆடியதாம்| என்பது போல ஒரு கேலிக்கூத்து செய்திருக்கிறீர்கள். என்ன செய்வது, சிங்களப்படைகளும், உங்களால் ஒரு காலத்தில் (-----) என்று கேலியாகப் பேசப்பட்ட துரோகிகளும் சொல்வதை செய்ய வேண்டியது தானே இப்போது உங்களின் கடமை.

அடுத்து உங்களின் பெயரில் வெளியிட்டதாக சில பக்கங்களை மின்னஞ்சலில் நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். அதிலுள்ளவை பல எனக்கு நகைப்பையே கொடுத்தன. ஏனென்றால் சிங்கள அரசாங்கம் செய்ய வேண்டியதையே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தான் அவை காட்டின. முக்கியமாக பொறியில் அகப்பட்டுப் பீதியில் அலறுவது போன்ற உங்களின் சின்னம் உங்கள் பேயறைந்த நிலையைப் பிரதிபலிப்பது போலவே இருந்தது. சிங்களப்படைகள் தருவதைத் தானே நீங்கள் பாவிக்க முடியும்.

இருந்தாலும்ää சிங்களப் படைகளுக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லாதது போலக் காட்ட முனைந்திருக்கிறீர்கள். ஏரிக்கரைச் சாலையென்று முகவரி போட்டீர்கள். இதை ரவுனுக்குள் உள்ள நண்பனிடம் கேட்டேன். வருவானா பார்ப்போம் என்று அவன் தொலைபேசியில் கறுவினான். எனக்குத்தெரியும். நீங்கள் அங்கே ஒருபோதும் போகமாட்டீர்கள். இப்போது நீங்கள் இருக்கிற சிங்கள படைக் குகையில் கூடக் காலைக்கடன் கழிக்க துணையில்லாமல் போக மாட்டீர்கள். புலிப்பரம்பரையில் வந்த எங்கள் போராளிகள் எங்குமே புகுந்து விளையாடுவார்கள் என்றதைக் கண்கூடாகக் கண்டவர் தானே நீங்கள்!.

என்ன அம்மான்! எங்கள் மாவட்டங்களின் போராளிகளை வன்னிக்கு அழைத்தார்கள் என்ற பழைய பல்லவியைப் பாடியிருக்கிறீர்கள். கிழக்கிற்கான யுத்தம் எங்கே புரியப்படவேண்டும் என்பது உங்களைத் தவிர சிங்களப்படை உள்ளிட்ட அனைவருக்கும் விளங்கியே இருந்தது. ஆனால் உங்களிற்கு சிங்களப் படைகளிடம் போன பின்பும் கூட இது விளங்க மாட்டேன் என்பதை நினைக்க வேதனையாக இருக்கு. இதில் சிரிப்பு என்னவென்றால் வடக்கைச் சேர்ந்த டக்ளசும், ஞானராஐhவும் உங்களின் தோழர்கள். அவர்களுடன் இருந்து கொண்டே நீங்கள் நன்றாக பிரதேசவாத மட்டையடிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து பிரதேசவாதத்தைப் பேசப் பேச அது நாற்றமெடுக்கிறது. கடலளவு அத்தர் ஊற்றினாலும் இனி உங்களின் செயற்பாட்டு நாற்றத்தை மறைக்க முடியாது. அந்தளவு நாற்றமானது உங்களின் செயற்பாடுகள். இப்போதைக்கு அதைவிடுவோமே.

அதுசரி அம்மான், என்ன எக்கச்சக்கமான பொடியள் உள்ளதாக உங்களுடன் சேர்ந்தவர்களிடம் ஐ_வாலாகக் கதை விட்டு மாட்டுப்பட்டீர்களாமே? தந்த காசைத் திருப்பிச் தரச் சொல்லிக் கேட்கிறார்களாமே? இனியபாரதியைத் தவிர ஒருவரையுமே இப்ப நீங்கள் சந்திப்பதில்லை என்று தானே கேள்விப்பட்டேன். அந்தளவிற்கு நம்மடை பொடியள் உள்ளுக்குள் புகுந்து இருந்தவர்களையெல்லாம் இல்லாது செய்து உங்களையும் நித்திரை கொள்ளமுடியாத அளவிற்குச் செய்து விட்டார்கள். என்ன அம்மான் செய்வது? யாரை நம்புவது என்ற பயம் உள்ள உங்களிடம், யாருமே இல்லை என்ற உண்மையும் இப்போது வெளியே வந்துவிட்டது.

இருந்தாலும் உங்களுடன் கூட்டுச் சேர்ந்து உங்களிற்கு செயலாளர் என்று நீங்கள் அறிவித்தவரும் காணாமல் போய்விட்டாராமே? மெய்தானா? பிரதேசவாதம் பேசுகிற உங்களிற்கு வடக்கைச் சேர்ந்த செயலாளர் என்றவுடன் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இப்ப அவருடைய மர்ம மறைவும் விளங்கவில்லை! என்ன செய்வது! நீங்கள் இன்னுமொருவரைச் செயலாளர் வேலைக்கு அழைக்க வேண்டும். --- என்று நீங்கள் முன்னர் திட்டித் தீர்க்கும் அந்தமாதிரிப் பிறந்தவர்கள் யாரும் இருப்பார்கள். விடாமல் முயற்சியுங்கள்.

முஸ்லிம்களின் மேல் உங்களுக்கு திடீர் அனுதாபம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் காட்டுவதாகத் தகவல். அம்மான்! 2001 இல் முள்ளியவளை உதயம் முகாமில் நடந்த நிகழ்வின்போது முஸ்லிம் சகோதரர்களோடு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று தேசியத் தலைவர் ஆலோசனை தர நீங்கள் தேள்கொட்டிய திருடனாக விழித்ததை அவ்வளவு அவசரப்பட்டு மறந்திருந்தாலும் கூட அதன் ஒளிப்பதிவுப் பேழைகள் எங்களுடன் இருந்த பலரிடமும் இப்போதும் இருக்கும். முடிந்தால் அதில் தலைவர் உங்களுக்கு எப்படிப் புத்தி சொல்லியிருக்கிறார் என்று ஒருமுறை நினைவை மீட்டுப்பாருங்கள்.

அதன்பிறகு எங்களுக்கே எத்தனை முறை தலைவர் விடுகிறார் இல்லை இல்லையென்றால் உவங்களை... என்று கூறியிருப்பீர்கள். இப்போது அதே பிளேற்றை மாற்றி உங்களை நல்ல பிள்ளையாக காட்ட முனைகிறீர்களே அம்மான். அதுதவிர ஓட்டமாவடி முஸ்லிம் மக்களும் நீங்கள் தொலைத்தொடர்பு சாதனத்தில் திருவாய் மலர்ந்த சிலவற்றின் ஒலிப்பதிவுகளை வைத்திருக்கிறார்களாம். தேவையேற்பட்டால் நசலைப்பிரட்டுவதற்கு அவர்களும் தயாராகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனம்மான் காசைக்கொடுத்து குத்துமாடு வாங்குகிறீர்கள்.

அடுத்து உங்களைத் தமிழீழப் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது என்றொரு கருத்தை அள்ளி வீசியிருக்கிறீர்கள். அது மிகச்சரி. தமிழீழப் போராட்டத்திற்கு துரோகம் செய்யப் புறப்பட்டு முடியாமல் சிங்களவரின் காலில் விழுந்து மடிந்த ஒரு நயவஞ்சகன் என்று தமிழீழ வரலாற்றின் எங்காவது ஒரு பக்கத்தில் உங்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும். எனவே உண்மையில் உங்களைத் தமிழீழப் போராட்ட வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது தான்.

நீங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தீர்கள். அது உண்மை அம்மான். நீங்கள் இப்போது ஒரு சோரம்போன பிரேதம். யோசித்துப் பாருங்கள். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த பெடியள் ஒருவருடன் கூட நம்பிப் பழக முடியாத நிலை. தங்களுக்குத் தேவையானதை உங்களின் பெயரில் சிங்களப்படை துண்டுப் பிரசுரமாக வெளியிடுகிறது. எழுதித் தருவதை, வாசி என்றவுடன் வாசிக்கிற கீழ்நிலைச் சீவியம் என்று இருப்பதும் ஒன்று தான். உண்மையில் இறந்துபோவதும் ஒன்றுதான். உங்கள் முடிவு எதுவானாலும் உங்களுக்கு இனி உயிர்ப்பு ஏற்படப்போவதில்லை. செத்துப் போனவற்றை உடன் எரிப்பதோ அல்லது புதைப்பதோ தான் மனித வழக்கு. மறுபடியும் சந்திப்போம்.

-அருகிலிருந்தவன்
Reply
#8
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அம்பிடுகிறதுகளை நக்க வெளிக்கிட்டுட்டுட்டன்! இனி உதென்ன எத்தனை எழுதினாலும், எச்சிலிலைகலையோ? குப்பை கூழங்களையோ? கக்கூசுகளையோ நக்கிற ருசியயை மேலே அனுப்புமட்டும் விடேலாதுதான்!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#9
என்ன கருனா கன நாட்களுக்கு பின் வந்துள்ளீர்கள்? உங்கள் நண்பன் டக்கிளஸ் அடிக்கடி இங்கு வருவார்!
Reply
#10
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

உதுகளை எழுதுவதால், எச்சிலிலை, கக்கூசுகளை நக்கித்திரியும் எனக்கு ஏரப்போகுது எண்டு நினைக்கிறீர்கள் போலும்????? ம்ம்ம்ம்ம்ம்ம் நான் வந்து நாயல்ல?? சொறிநாய்!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#11
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அப்பு கறீஸ்!

என்ன, என்ரை கீ வைன்டரைப் பிடித்து இந்தியாவில் உள்ளை போட்டுட்டாங்கள்? ம்ம்ம்ம்ம்ம் அவனை உள்ளதான் போட்டங்கள்? என்னை ஒரெயடியாகவல்லோ போடப் பாக்கிறாங்கள்!!! அதுதான் ஒழிச்சொழித்திருந்து போட்டு, கொஞ்சம் மூ**** முட்டு வைக்கேக்குள்ளே மட்டும் வெளிலே வரேக்க இதையுமொருக்கா எட்டிப் பார்க்கிறது!!!

கோதாரி யார்? எங்கே? எப்படி? போடுவாங்கலெண்டு தெரியாமல் செத்துக் கொண்டிருக்கிறன்! உங்களுக்கு நெடுக உதுக்குள்ளெ வர .... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)