12-20-2004, 04:49 PM
உங்களைத்தான்................... சித்தார்த்தன் பதில் சொல்லுங்கள்...............
<img src='http://www.yarl.com/forum/files/untitled-1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-4.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-5.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-8.gif' border='0' alt='user posted image'>
தொடரும் உள்முரண்பாடுகளுக்கு முடிவு எப்போது?
தங்கள் நலன் கருதாது உங்களை வளர்த்த, தங்கள் உயிர்களைக் கொடுத்து எமது கழகத்தை வளர்த்த எமது அங்கத்தவர்களின் உயிரா?
தமது சொந்தக் கருத்துக்களை எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எமது கழகத்தினரின் வாசகத்தை வரிக்குவரி கூறும் நீங்கள், கழகத்திற்குள்ளேயே கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்.
உங்கள் அடிவருடிகளால் கடத்திச் செல்லப்பட்ட எமது சக கழக அங்கத்தவர்களான,
வேலாயுதப்பிள்ளை தர்மலிங்கம் (வித்தி)
அங்கமுத்து இராமநாதன் (சுதன்)
செல்லையா செல்வராசா (செல்வம்)
ஆகியோரின் குடும்பங்களுக்கு நீங்கள் சொல்லப்போகும் பதில் என்ன?
இச் செயலின் ஊடாக எமக்கு நீங்கள் கூறவரும் செய்தி தான் என்ன? கழகத்தின் ஆரம்ப நாட்களில் உமாமகேஸ்வரனின் உளவுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கழக உறுப்பினர்கள் மீதான கொலை வேட்டை, இன்று உங்களின் உளவுப் படையினரால் தொடரப்படுகிறது.
வெளியில் போலி முகத்தைக் காட்டிக் கொண்டு, தூள் பவான், பீற்றர், ஆனந்தி போன்ற உங்கள் கூலிப்படையினரை ஏவி நீங்கள் அராஜகம் செய்கிறீர்கள். தமது கணவன்மாரின் வருகையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் அவர்களின் மனைவிமாருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உங்கள் பதில் என்ன?
இராணுவத்தினர் மீதும், புலிகள் மீதும் பழிகளைப் போட்டுவிட்டு, தற்போது அரசியல் செல்வாக்கு இல்லாததால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்கிறீர்கள். ஆனால். உங்களுக்குப் பின்னால் நின்று ஊண் உறக்கமின்றி உங்களுக்காக - கழகத்திற்காக உழைத்தவர்களின் - உங்களை இன்று பலர் பேசும் அரசியல்வாதிகளாக்கியவர்களின் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்க்காது, அவர்களை கடத்திவிட்டு இன்று வேடிக்கை பார்க்கிறீர்கள். கூடவே சொல்கைமிடம் சென்று முறையிட்டு போலி நடிப்பு வேறு!
பேட்டிகளிலும் பேச்சுக்களிலும் மட்டும் ஜனநாயகத்தைப் பற்றிக் கதைத்துவிட்டு உங்கள் கழகத்திற்குள் ஏனோ ஜனநாயகத்தை மறுக்கிறீர்கள். குரோதம் - பழிவாங்கல் - பயம் நிறைந்த வாழ்க்கையை ஒழித்து சுதந்திரமாய் சுற்றித் திரியும் வாழ்க்கை நிறைந்த எம் பூமியை உருவாக்கிட உங்களுடன் கூட நின்று உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு நீங்கள் கொடுத்திருப்பது - அந்த அவலமான வாழ்க்கையைத் தான்.
இனத்தின் உரிமைக்காக எத்தனை உயிர்களை நாம் பறிகொடுத்தோம்.
இயக்க மோதல்களால் பறிக்கப்பட்ட உயிர்கள் தான் எத்தனை?
இவையனைத்திற்கும் அப்பால், கழக உரிமைக்காகவே உயிர்களை இழக்கும் கேவலமான இழிவான நிலை இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது. தமது கணவர்மாரின் வருகையை எதிர்பார்த்து வாழ்க்கையே சூனியமாகிப்போய் செய்வதறியாது ஏங்கித் திகைத்து நின்று கலங்கும் அவர்களின் மனைவிமாருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உங்கள் பதில் என்ன?
உங்களின் நமட்டு விசமப் புன்னகையா?
அல்லது நீங்கள் வைத்திருக்கும் பின் கதவு தொடர்புகளா?
சக்தி மின்னல் நிகழ்ச்சியில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போது உங்களுக்கும்; "PLOTE மோகன்" என்ற துரோகிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று அப்பாவி போலக் கூறினீர்கள். ஆனால் "PLOTE மோகனின்" மரணச் சடங்கில் உங்களின் உதவியாளர் பீற்றர் போன்றோர் கலந்து கொண்டதும், அதை நடத்தி வைத்ததும் நீங்கள் அறியாத ஒன்றல்ல. S.L.குணசேகரா போன்ற தீவிர சிங்கள இனவாதிகள், சிங்கள தேசத்தின் வீரன் என தலையில் வைத்துக் கொண்டாடிய "PLOTE மோகனின்" நீங்கள் "பின்கதவு" தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கழக உறுப்பினர்களிடையே முணுமுணுப்புகள் இருந்ததும் நீங்கள் அறிந்ததொன்று - ஆனால் உங்களைப் பற்றி பிறர் அறிந்ததில் இது அறியாததொன்று.
புலிகளிடமிருந்து ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலுக்கு நீங்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளிடமிருந்து பாதுகாப்புக் கோருகிறீர்கள். ஆனால், எமது கழகத்திற்குள்ளேயே எமக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாம் யாரிடம் பாதுகாப்புக் கோருவது?
உங்களைத் தான் சித்தார்த்தன்....................
பதில் சொல்லுங்கள்...........................
அவலப்படும் கழக அங்கத்தவர்கள்
<img src='http://www.yarl.com/forum/files/untitled-1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-4.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-5.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/untitled-8.gif' border='0' alt='user posted image'>
தொடரும் உள்முரண்பாடுகளுக்கு முடிவு எப்போது?
தங்கள் நலன் கருதாது உங்களை வளர்த்த, தங்கள் உயிர்களைக் கொடுத்து எமது கழகத்தை வளர்த்த எமது அங்கத்தவர்களின் உயிரா?
தமது சொந்தக் கருத்துக்களை எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எமது கழகத்தினரின் வாசகத்தை வரிக்குவரி கூறும் நீங்கள், கழகத்திற்குள்ளேயே கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்.
உங்கள் அடிவருடிகளால் கடத்திச் செல்லப்பட்ட எமது சக கழக அங்கத்தவர்களான,
வேலாயுதப்பிள்ளை தர்மலிங்கம் (வித்தி)
அங்கமுத்து இராமநாதன் (சுதன்)
செல்லையா செல்வராசா (செல்வம்)
ஆகியோரின் குடும்பங்களுக்கு நீங்கள் சொல்லப்போகும் பதில் என்ன?
இச் செயலின் ஊடாக எமக்கு நீங்கள் கூறவரும் செய்தி தான் என்ன? கழகத்தின் ஆரம்ப நாட்களில் உமாமகேஸ்வரனின் உளவுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கழக உறுப்பினர்கள் மீதான கொலை வேட்டை, இன்று உங்களின் உளவுப் படையினரால் தொடரப்படுகிறது.
வெளியில் போலி முகத்தைக் காட்டிக் கொண்டு, தூள் பவான், பீற்றர், ஆனந்தி போன்ற உங்கள் கூலிப்படையினரை ஏவி நீங்கள் அராஜகம் செய்கிறீர்கள். தமது கணவன்மாரின் வருகையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் அவர்களின் மனைவிமாருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உங்கள் பதில் என்ன?
இராணுவத்தினர் மீதும், புலிகள் மீதும் பழிகளைப் போட்டுவிட்டு, தற்போது அரசியல் செல்வாக்கு இல்லாததால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்கிறீர்கள். ஆனால். உங்களுக்குப் பின்னால் நின்று ஊண் உறக்கமின்றி உங்களுக்காக - கழகத்திற்காக உழைத்தவர்களின் - உங்களை இன்று பலர் பேசும் அரசியல்வாதிகளாக்கியவர்களின் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்க்காது, அவர்களை கடத்திவிட்டு இன்று வேடிக்கை பார்க்கிறீர்கள். கூடவே சொல்கைமிடம் சென்று முறையிட்டு போலி நடிப்பு வேறு!
பேட்டிகளிலும் பேச்சுக்களிலும் மட்டும் ஜனநாயகத்தைப் பற்றிக் கதைத்துவிட்டு உங்கள் கழகத்திற்குள் ஏனோ ஜனநாயகத்தை மறுக்கிறீர்கள். குரோதம் - பழிவாங்கல் - பயம் நிறைந்த வாழ்க்கையை ஒழித்து சுதந்திரமாய் சுற்றித் திரியும் வாழ்க்கை நிறைந்த எம் பூமியை உருவாக்கிட உங்களுடன் கூட நின்று உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு நீங்கள் கொடுத்திருப்பது - அந்த அவலமான வாழ்க்கையைத் தான்.
இனத்தின் உரிமைக்காக எத்தனை உயிர்களை நாம் பறிகொடுத்தோம்.
இயக்க மோதல்களால் பறிக்கப்பட்ட உயிர்கள் தான் எத்தனை?
இவையனைத்திற்கும் அப்பால், கழக உரிமைக்காகவே உயிர்களை இழக்கும் கேவலமான இழிவான நிலை இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது. தமது கணவர்மாரின் வருகையை எதிர்பார்த்து வாழ்க்கையே சூனியமாகிப்போய் செய்வதறியாது ஏங்கித் திகைத்து நின்று கலங்கும் அவர்களின் மனைவிமாருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உங்கள் பதில் என்ன?
உங்களின் நமட்டு விசமப் புன்னகையா?
அல்லது நீங்கள் வைத்திருக்கும் பின் கதவு தொடர்புகளா?
சக்தி மின்னல் நிகழ்ச்சியில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போது உங்களுக்கும்; "PLOTE மோகன்" என்ற துரோகிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று அப்பாவி போலக் கூறினீர்கள். ஆனால் "PLOTE மோகனின்" மரணச் சடங்கில் உங்களின் உதவியாளர் பீற்றர் போன்றோர் கலந்து கொண்டதும், அதை நடத்தி வைத்ததும் நீங்கள் அறியாத ஒன்றல்ல. S.L.குணசேகரா போன்ற தீவிர சிங்கள இனவாதிகள், சிங்கள தேசத்தின் வீரன் என தலையில் வைத்துக் கொண்டாடிய "PLOTE மோகனின்" நீங்கள் "பின்கதவு" தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கழக உறுப்பினர்களிடையே முணுமுணுப்புகள் இருந்ததும் நீங்கள் அறிந்ததொன்று - ஆனால் உங்களைப் பற்றி பிறர் அறிந்ததில் இது அறியாததொன்று.
புலிகளிடமிருந்து ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலுக்கு நீங்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளிடமிருந்து பாதுகாப்புக் கோருகிறீர்கள். ஆனால், எமது கழகத்திற்குள்ளேயே எமக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாம் யாரிடம் பாதுகாப்புக் கோருவது?
உங்களைத் தான் சித்தார்த்தன்....................
பதில் சொல்லுங்கள்...........................
அவலப்படும் கழக அங்கத்தவர்கள்
<b>
?
?</b>-
?
?</b>-


hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->