12-30-2004, 03:55 AM
<img src='http://photos.reuters.com/Pictures/galleries/Stories/632176283649218750/Previews/X010530020041228e0cs0002t.jpg' border='0' alt='user posted image'>
An aerial view is seen in Cambellway after a tsunami hit on Sunday in the remote Andaman and Nicobar islands chain, near the epicentre of the quake, December 28, 2004.படம்: றொய்டர்
அந்தமானில் அடுத்தடுத்து 5 முறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விமானங்கள் மூலம் மக்கள் இந்தியாவுக்கு வெளியேற்றப் படுகிறhர்கள்.
சுமத்ரா தீவை மையமாக கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்;கர பூமி அதிர்ச்சி அந்தமான் நிகோபார் தீவுகளை கோரமாக தாக்கியது. கார் நிகோபார் தீவில் இருந்த இந்திய விமானபடை தளமே அழிந்தது. அதில் 100 வீரர்கள் பலியானார்கள்.
இதுவரை 3 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரபூர்வ தகவல் கூறுகிறது. ஆனால் சாவு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுப்படுகிறது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்தமானுக்கும், கார் நிகோபாருக்கும் இடையே உள்ள குட்டி தீவுகளில் வசிக்கும் மக்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
அந்தமானில் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கடற்படை கப்பல்களிலும், விமானப்படை விமானங்களிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவை விமானங்கள், ஹெலி காப்டர்கள் மூலம் தீவுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு போடப்பட்டன.
நிவாரண உதவி கிடைத்தாலும் அந்தமானில் மக்கள் அச்ச மின்றி வாழக்கூடிய நிலைமை இல்லை. ஞாயிற்றுக்கிழமை தாக்கிய பூமி அதிர்ச்சியை தொடர்ந்து ஆப்டர்ஷாக் என்று அழைக்கப்படும் தொடர் நில அதிர்வுகள் அந்தமான் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுவரை 5 முறை தொடர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10.21 மணிக்கு மீட்டர் அளவு கோலில் 5.1 சக்தியுள்ள பூமி அதிர்ச்சி அந்தமானையும், நிகோபார் தீவுகளையும் தாக்கியது.
கடைசியாக நேற்று காலை 7 மணிக்கு 5.7 அளவுள்ள பூமி அதிர்ச்சி அதைத் தொடர்ந்து 10 நிமிடம் கழித்து 6.1 அளவுள்ள பூமிஅதிர்ச்சியும் தாக்கின. 6.1 அளவு என்பது ஓரளவு கடுமையான பூமி அதிர்ச்சி ஆகும். இதனால் ஏற்பட்ட உயிர்சேத விவரம் தெரியவில்லை.
அந்தமானில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக மக்கள் அங்கு தொடர்ந்து வசிக்க அஞ்சுகிறhர்கள். இதனால் அவர்கள் இந்தியன் ஏர் லைன் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கும், சென்னைக்கும் அனுப்பப்படுகிறhர்கள். தினமும் கொல்கத்தாவுக்கு 14 முறையும் சென்னைக்கு 6 முறையும் விமானங்கள் மூலம் அந்தமான் மக்கள் கொண்டு வரப்படுகிறhர்கள்.
சென்னைக்கு கொண்டு வரப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.
அந்தமானில் உள்ள சிறிய தீவுகளில் சிக்கிக்கிடக்கும் சுற்றுலா பயணிகள் கடற்படை கப்பல்கள் மூலம் தலைநகர் போர்ட்பிளேர் கொண்டு வரப்பட்டு பிறகு அங்கிருந்து இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறhர்கள். அந்தமான் நிகோபார் தீவுகள் சோகமயமாக காட்சி அளிக்கின்றன.
20 முறை பறந்த படை விமானங்கள்
இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 2 நாட்களில் 20 முறை அந்தமானுக்கு பறந்து சென்று 1200 பேரை ஏற்றிக்கொண்டு தாம்பரத்தில் இறக்கி உள்ளன. அதில் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் உள்ளனர்.
அவர்களை ஏற்றிவர ஏன-் 32, ஐஎல்-76 ரகத்தை சேர்ந்த ராட்சத விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்கள் அந்தமானுக்கு சென்ற போது மருந்து, உணவு போன்ற நிவாரண பொருட்களை ஏற்றி சென்றன.
பாதி மக்கள் தொகை மாயம்
மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி சுனாமி அலை தாக்கிய அந்தமான் நிகோபார் தீவுகளை பார்வையிட்டார்.
அதன்பிறகு போர்ட் பிளேரில் பேட்டி அளித்த அவர் கார் நிகோபார் தீவில் வசித்த மக்களில் பாதிபேரை காணவில்லை. 7 கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டன என்றhர்.
An aerial view is seen in Cambellway after a tsunami hit on Sunday in the remote Andaman and Nicobar islands chain, near the epicentre of the quake, December 28, 2004.படம்: றொய்டர்
அந்தமானில் அடுத்தடுத்து 5 முறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விமானங்கள் மூலம் மக்கள் இந்தியாவுக்கு வெளியேற்றப் படுகிறhர்கள்.
சுமத்ரா தீவை மையமாக கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்;கர பூமி அதிர்ச்சி அந்தமான் நிகோபார் தீவுகளை கோரமாக தாக்கியது. கார் நிகோபார் தீவில் இருந்த இந்திய விமானபடை தளமே அழிந்தது. அதில் 100 வீரர்கள் பலியானார்கள்.
இதுவரை 3 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரபூர்வ தகவல் கூறுகிறது. ஆனால் சாவு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுப்படுகிறது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்தமானுக்கும், கார் நிகோபாருக்கும் இடையே உள்ள குட்டி தீவுகளில் வசிக்கும் மக்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
அந்தமானில் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கடற்படை கப்பல்களிலும், விமானப்படை விமானங்களிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவை விமானங்கள், ஹெலி காப்டர்கள் மூலம் தீவுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு போடப்பட்டன.
நிவாரண உதவி கிடைத்தாலும் அந்தமானில் மக்கள் அச்ச மின்றி வாழக்கூடிய நிலைமை இல்லை. ஞாயிற்றுக்கிழமை தாக்கிய பூமி அதிர்ச்சியை தொடர்ந்து ஆப்டர்ஷாக் என்று அழைக்கப்படும் தொடர் நில அதிர்வுகள் அந்தமான் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுவரை 5 முறை தொடர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10.21 மணிக்கு மீட்டர் அளவு கோலில் 5.1 சக்தியுள்ள பூமி அதிர்ச்சி அந்தமானையும், நிகோபார் தீவுகளையும் தாக்கியது.
கடைசியாக நேற்று காலை 7 மணிக்கு 5.7 அளவுள்ள பூமி அதிர்ச்சி அதைத் தொடர்ந்து 10 நிமிடம் கழித்து 6.1 அளவுள்ள பூமிஅதிர்ச்சியும் தாக்கின. 6.1 அளவு என்பது ஓரளவு கடுமையான பூமி அதிர்ச்சி ஆகும். இதனால் ஏற்பட்ட உயிர்சேத விவரம் தெரியவில்லை.
அந்தமானில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக மக்கள் அங்கு தொடர்ந்து வசிக்க அஞ்சுகிறhர்கள். இதனால் அவர்கள் இந்தியன் ஏர் லைன் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கும், சென்னைக்கும் அனுப்பப்படுகிறhர்கள். தினமும் கொல்கத்தாவுக்கு 14 முறையும் சென்னைக்கு 6 முறையும் விமானங்கள் மூலம் அந்தமான் மக்கள் கொண்டு வரப்படுகிறhர்கள்.
சென்னைக்கு கொண்டு வரப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.
அந்தமானில் உள்ள சிறிய தீவுகளில் சிக்கிக்கிடக்கும் சுற்றுலா பயணிகள் கடற்படை கப்பல்கள் மூலம் தலைநகர் போர்ட்பிளேர் கொண்டு வரப்பட்டு பிறகு அங்கிருந்து இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறhர்கள். அந்தமான் நிகோபார் தீவுகள் சோகமயமாக காட்சி அளிக்கின்றன.
20 முறை பறந்த படை விமானங்கள்
இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 2 நாட்களில் 20 முறை அந்தமானுக்கு பறந்து சென்று 1200 பேரை ஏற்றிக்கொண்டு தாம்பரத்தில் இறக்கி உள்ளன. அதில் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் உள்ளனர்.
அவர்களை ஏற்றிவர ஏன-் 32, ஐஎல்-76 ரகத்தை சேர்ந்த ராட்சத விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்கள் அந்தமானுக்கு சென்ற போது மருந்து, உணவு போன்ற நிவாரண பொருட்களை ஏற்றி சென்றன.
பாதி மக்கள் தொகை மாயம்
மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி சுனாமி அலை தாக்கிய அந்தமான் நிகோபார் தீவுகளை பார்வையிட்டார்.
அதன்பிறகு போர்ட் பிளேரில் பேட்டி அளித்த அவர் கார் நிகோபார் தீவில் வசித்த மக்களில் பாதிபேரை காணவில்லை. 7 கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டன என்றhர்.

