Posts: 91
Threads: 32
Joined: Nov 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'>இந்துநேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
மேலதிக செய்திகளுக்கு
www.tsunamiineelam.com</span>
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>சென்னையில் இன்று மீண்டும் நில அதிர்வு!: அந்தமான் நில நடுக்கத்தின் எதிரொலி!!</b>
சென்னை:
இந்தோனேஷியாவும் அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் பகுதியிலும் இன்று காலை பெரும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆகப் பதிவானது. இதன் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னையில் இன்று காலை 9.46 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
பல பகுதிகளில் இந்த நில அதிர்வை உணர முடிந்தது. இதையடுத்து மக்கள் வீடுகளையும் கட்டடங்களையும் விட்டு அலறியபடி வெளியேறினர்.
டிசம்பர் 26ம்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலுக்குப் பிறகு அந்தமான் தீவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந் நிலையில் இன்று காலை 9.46 மணிக்கு அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் தீவுகளில் 6.5 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் சென்னை மக்களிடையே பீதி ஏற்பட்டது. பலர் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். கடலில் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் மக்களிடம் பரவியுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதியினர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பௌர்னமி தினமான இன்று சுனாமி அலைத் தாக்குதல் ஏற்படும் என்று ஏற்கனவே சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சில தினங்களாக வதந்தி பரவி வந்தது. இந்தப் புரளியை அதிகப்படுத்தும் விதத்தில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
இருப்பினும் இந்த நில அதிர்வுகளால் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு தலைவர் ராவ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 26ம் தேதி சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையொட்டி சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
thatstamil.com
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நில நடுக்கம்; வீடுகள்-கடைகள் இடிந்தன
ஜகார்த்தா, ஜன. 24-
கடந்த மாதம் 26-ந்தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியது.
பூகம்பத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தோனேஷிசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலத்தீவு உள்பட 11 ஆசிய நாடுகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன் 2 லட்சத்துக்கும் அதிக மானவர்களின் உயிர்களை பலி வாங்கியது.
உலகம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 9 புள்ளிகளாக பதிவானது இந்த பூகம்பம் மற்றும் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரண பணி கள் இன்னும் முடிவடைய வில்லை.
பேரழிவில் இருந்து இந்தோனேஷிய மக்கள் இன்னும் மீளாத நிலையில் அங்கு மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள் ளது.
இன்று அதிகாலை 3.10 மணிக்கு இந்தோனேஷியாவின் சுலாவெசி மாகாணத்தின் பாலு நகரத்தில் இருந்து தெற்கே 16 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இடத்தில் இந்த பூகம்பம் தாக்கியது.
ஜகார்த்தாவில் இருந்து இது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
பூகம்பம் ஏற்பட்டபோது மக்கள் வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அலறிஅடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த பூகம்பத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் இடிந்து தரைமட்டமானது.
இதில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த நில நடுக்கம் 6.2 ரிட்டர் அளவாக பதிவாகி இருந்தது.
இதேபோல துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர பகுதியிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள காஸ்நகரம், அந்தல்யா ஆகிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் பெரிய அளவில் சேதம் எதும் ஏற்பட வில்லை.
கடந்த 1999-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத் தில் 17 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40753000/gif/_40753055_indo_palu2_map203.gif' border='0' alt='user posted image'>
Indonesian quake causes panic
A strong earthquake has hit the Indonesian island of Sulawesi, causing panic among thousands of people who fled their homes fearing a tsunami.
The earthquake, measuring 6.2, damaged several buildings in the town of Palu.
One person died after the tremor struck at 0410 (2010 GMT Sunday), but there were no reports of other casualties.
Witnesses said they feared the quake would trigger another tsunami, like the massive sea surge which hit regions around the Indian Ocean last month.
The epicentre of Monday's tremor was reportedly about 20km (12 miles) south-west of Palu.
After the initial quake, there were a series of weaker aftershocks.
"We were afraid there will be a tsunami," Iqbal, a local hotel employee, was quoted as saying by the French news agency AFP.
Police later toured the city, telling residents via loudspeakers that there was no threat of a tsunami.
Sulawesi was untouched by the magnitude 9.0 tremor on 26 December, which triggered a huge tsunami that affected many countries around the Indian Ocean.
Indonesia's Sumatra island was the worst affected region. More than 160,000 people died in Sumatra alone.
Source : BBC