02-08-2005, 12:55 AM
மீண்டும் மீண்டும்
எங்கள்
பொறுமை சீண்டப்படுகின்றது.
மீண்டும் மீண்டும்
கண்மணிகள்
பறிக்கப்படுகின்றது.
சமாதானத்தின் பெயரால்
எங்கள் தலையில்
சோகம் திணிக்கப்படுகின்றது.
எங்கள் பொறுமை
எல்லை கடந்து
எதிரிகளை இல்லாமற் செய்யும்
வெறியாகிறது.
ஆனாலும் ஆனாலும்
தலையை மிஞ்சும் வாலல்லவே
நாங்கள்-
பொறுத்திருக்கின்றோம்
பெருந்திருவே
ஆனாலும்
எங்கள் சின்ன சின்ன
மூளைகளுக்கு
சமாதானம் சமாதானம்
என்று
ஒன்றொன்றாய் இழப்பதிலும்
சண்டையென்று சொல்லி
மொத்தமாய் அழிவதெனிலும்
மானமுள்ளதாய் படுகின்றது.
என்ன செய்வதாய் உத்தேசம்.??
எதுவெனினும்
நாங்கள் தயார்
உன் பின்னால் அணி திரள-
எங்கள் அடலேறுகளை
வீதிகளில் இழக்கின்ற
வேதனைகள் இனியும் வேண்டாம்.
-தயா ஜிப்ரான் -
எங்கள்
பொறுமை சீண்டப்படுகின்றது.
மீண்டும் மீண்டும்
கண்மணிகள்
பறிக்கப்படுகின்றது.
சமாதானத்தின் பெயரால்
எங்கள் தலையில்
சோகம் திணிக்கப்படுகின்றது.
எங்கள் பொறுமை
எல்லை கடந்து
எதிரிகளை இல்லாமற் செய்யும்
வெறியாகிறது.
ஆனாலும் ஆனாலும்
தலையை மிஞ்சும் வாலல்லவே
நாங்கள்-
பொறுத்திருக்கின்றோம்
பெருந்திருவே
ஆனாலும்
எங்கள் சின்ன சின்ன
மூளைகளுக்கு
சமாதானம் சமாதானம்
என்று
ஒன்றொன்றாய் இழப்பதிலும்
சண்டையென்று சொல்லி
மொத்தமாய் அழிவதெனிலும்
மானமுள்ளதாய் படுகின்றது.
என்ன செய்வதாய் உத்தேசம்.??
எதுவெனினும்
நாங்கள் தயார்
உன் பின்னால் அணி திரள-
எங்கள் அடலேறுகளை
வீதிகளில் இழக்கின்ற
வேதனைகள் இனியும் வேண்டாம்.
-தயா ஜிப்ரான் -
.
.!!
.!!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->