Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் திரை துளிகள்
#1
தீவிரவாதியுடன் தொடர்பு: நக்மா, மும்தாஜிடம் நேரில் விசாரணை- மும்பை போலீசார் சென்னை வருகை

மும்பை, பிப். 22-

நடிகை நக்மாவுக்கு மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதியின் கூட்டாளியான ஜம்போ ரூ. 10 லட்சம் கொடுத்ததாக அளித்த வாக்குமூலம் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தாபூத்இல்ராகிம் தம்பி அனீசுக்கும் நக்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும் அவன் கூறியுள்ளான்.

ஐம்போ குறிப்பிட்ட நக்மா யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

ஜோதிகாவின் அக்காவும் நடிகையுமான நக்மா தான் அவள் என்று முதலில் கூறப் பட்டது. ஆனால் நக்மா அதை மறுத்தார். தீவிரவாதியுடன் தனக்கு தொடர்பு கிடையாது அவன் பணம் கொடுத்ததாக சொல்லும் நக்மா நான் அல்ல. வேறு பெண் என்று அவர் கூறினார். தீவிரவாதி பணம் கொடுத்ததாக சொல்லும் பந்தரா பகுதியில்தான் வசிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேகப் பார்வை கவர்ச்சி நடிகை மும்தாஜ் பக்கம் திரும்பியது. இவர் டி.ராஜேந்தரின் மோனிசா என் மோனலிசா படம் மூலம் தமிழுக்கு அறி முகமானவர்.

மும்தாஜுக்கும் நக்மா என்று இன்னொரு பெயர் இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மும்பையில் பிறந்து வளர்ந்த மும்தாஜ் பிரபல தயாரிப்பாளர் தபாசு கானின் மகள் ஆவார். பூண்ட் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.

மும்தாஜுன் தாயார் 2000_ம் ஆண்டில் மும்பை தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. அவர் தற்போது லண்டனில் வசிக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகளை மும்தாஜ் மறுத்தார். எனக்கு நக்மா என்று இன்னொரு பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் ஜம்போ வாக்கு மூலத்தில் கூறி உள்ள காலகட்டத்தில் நான் சிறுமி அவன் சொல்லி இருப்பதுபோல பந்த்ரா பகுதியில் நான் வசிக்க வில்லை. என்தாயுடன் வெர்சோ என்ற பகுதியில் வசித்தேன். பந்த்ராவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தேன்.

போலீசார் ஆயுதம் வைக்திருந்ததாக என் தாயாரை கைது செய்யவில்லை. என் தாய் பெயர் தபசும்கான் என்பதும் தவறு. அவர் பெயர் ருபினாகான் லண்டனில் வசிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

நக்மா, மும்தாஜின் முரண்பட்ட தகவல்கள் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரில் தீவிரவா தியுடன் தொடர்பு வைத்திருந்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறு கிறார்கள்.

நக்மா தற்போது மும்பை யில் உள்ளார். சென்னைக்கும் அவ்வப்போது வந்து செல்கிறார். இங்கு அவருக்கு சொந்த வீடு உள்ளது. சில நேரம் அபிராம புரத்தில் உள்ள தங்கை ஜோதிகா வீட்டிலும் தியாகராஜ நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலிலும் தங்குவார்.

அந்த இடங்களை போலீசார் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

மும்தாஜ் சென்னையிலே தங்கி படங்களில் நடித்து வருகிறார்.

தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருந்தது நக்மாவா, மும்தாஜா என்று நேரில் விசாரணை நடத்த மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் அவர்கள் சென்னை வர இருப்பதாக கூறப்படுகிறது.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நடிகை சிம்ரன் இடுப்பு மெலிய ஆபரேஷன் - லண்டனில் நடக்கிறது

சிம்ரன்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/22/cinema/C11_Simran3.jpg' border='0' alt='user posted image'>

சென்னை, பிப். 22- நடிகை சிம்ரன் லண்டன் ஆஸ்பத்திரியில் தன் இடுப்பு மெலிய ஆபரேசன் செய்கிறார்.

தமிழில் கடந்த 5 வருடமாக கொடி கட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். வி.ஐ.பி. படம் மூலம் அறிமுகமான சிம்ரன் தமிழில் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். அவரது இடையழகு ரசிகர்களை மயக்கியது. திடீரென்று சிம்ரன் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகு விஜய்யுடன் நடிக்க வேண்டியிருந்த -உதயா என்ற படத்தை மட்டும் நடித்துக்கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கலாமா, ரசிகர்கள் மீண்டும ;கதாநாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்று பல தயாரிப்பாளர்களிடம் சிம்ரன் கருத்து கேட்டார். அப்போது அவர்கள் உடம்பை கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள். அதனால் கதாநாயகியாக தொடர்ந்து நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்கள்.

ஆனாலும் தனது உடற்கட்டை இன்னும் கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சிம்ரன் விரும்பினார். அதுபற்றி டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் உங்கள் இடையை மெலிவடைய ஆபரேஷன் செய்துகொண்டால் மிகவும் கவர்ச்சியாக இருப்பீர்கள் என்று யோசனை கூறினார்கள். இதையடுத்து ஆபரேஷன் செய்துகொள்வது என்று முடிவு செய்தார். -கிச்சா வயது 16 என்ற படத்தில் சிம்ரன் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதில் ஜெய்ஆகாஷ், மணிகண்டன் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். ராஜகோபால் டைரக்டு செய்கிறார். இப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சிம்ரன் தற்போது இடை மெலிவு ஆபரேஷனுக்காக லண்டன் சென்றிருக்கிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டு சென்ற அவருக்கு அங்குள்ள பிரபல மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடக்கிறது.

புத்தம்புது தோற்றத்தில் சிம்ரன் திரையுலகில் நுழைந்து புது நடிகைகளுக்கு ஒரு சவாலாக இருப்பார் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே நடிகைகள் ரம்பா, மும்தாஜ் சங்கவி போன்ற நடிகைகள் உடல் மெலிவதற்கான ஆபரேஷன் செய்துகொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று வந்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
மும்பை, பிப். 22- சர்ச்சையில் சிக்கியுள்ள சின்ஸ் படத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கெடி தூக்கியுள்ளன.

பிரபல இந்தி பட இயக்குநர் வினோத்பாண்டே. இவர் …சின்ஸ் (பாவங்கள்) என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 25-ந்தேதி இந்தியா முழு வதும் திரையிடப்படுகிறது. ஆனால் இந்த படத்தை திரை யிடக்கூடாது என்று கத்தோ லிக்க கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள் ளன.

சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள …சின்ஸ் படம் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரை பின் னணியாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இறை பணியில் ஈடுபட்டு உள்ள அந்த பாதிரியார், தன்னை விட பாதிவயது குறைந்த இளம் பெண் ஒருவரு டன் காதல் வயப்படுகிறார். அந்த பெண்ணு டன் தகாத உற விலும் ஈடுபடு கிறார். இதுதான் படத்தின் கதை. படத்தில், இளம்பெண்ணாக பிரபல இந்தி நடிகை சீமா ரமணியும், பாதிரியாராக ஷைனி அகுஜாவும் நடித்து உள்ளனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சிகள் வடஇந்தியா முழு வதும் போஸ்டர்களாக ஓட்டப் பட்டு உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தை திரையிடக் கூடாது என்று படத்தின் தயாரிப்பாள ரும், இயக்குநருமான வினோத் பாண்டேவிடம் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத் து உள்ளன. ஆனால் அவர் அதை ஏற்க தயாராக இல்லை. இதையடுத்து மும்பையில் நாளை மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த கிறிஸ்தவ அமைப்புகள் ஏற்பாடு செய்து உள் ளன.

இது குறித்து படத்தின் இயக்கு நர் வினோத் பாண்டே கூறுகை யில், 1988-ம் ஆண்டு கேரளா வில் ஒரு பாதிரியாரின் வாழ்க்கை யில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு படத்தை எடுத்து உள்ளேன். இந்த படத்தின் டிரையிலரை வெளி யிட கூட டி.வி. சேனல்கள் மறுத்து விட்டன. ஆனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அதை தாண்டி எனது படம் வெளி வரும் என்று கூறினார்.

படத்தின் கதாநாயகி சீமா ரமணி கூறுகையில், ஒரு உண்மை சம்பவம் படமாக எடுக் கப்பட்டு உள்ளது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு ஆசைகள் இருக்ககூடாது என்று சொல்வது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்புகிறார்.

படத்தின் கதாநாயகன் ஷைனி அகுஜா கூறுகையில், படத்தின் கதைக்கேற்ப சில காட்சிகள் விரசமாக இருக்கும். எனது கேரக்டர்படி, படத்தின் முதல்பாதியில் நான் பக்தியுள்ள ஒரு பாதிரியாராக வருவேன். மீதி பாதியில் ஒரு இளம் பெண் ணோடு காதல்வயப் பட்டு உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையில் போராட்டம் நடத்தும் ஒரு கேரக்டராக வருகிறேன் என்று கூறினார்.

சர்ச்சைக்குரிய …சின்ஸ் படத்திற்கு தணிக்கை குழு …ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கிறிஸ் தவ அமைப்புகள் தணிக்கை குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளன. 23-ந்தேதி (நாளை) போராட்டத்திற்கு பின்னரும் படம் வாபஸ் பெறப்படா விட் டால் எங்கள் போராட்டம் கடுமையாக வலுவடையும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.
தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இந்தூர், பிப். 22- பிரபல சினிமா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மத்திய பிரதேச அரசு லதா மங்கேஷ்கர் விருது வழங்குகிறது. அவருக்கு ரூ.1லட்சம் ரொக்க பரிசு கிடைக்கும்.

இந்தி சினிமா பின்னணி பாடகி லதாமங்கேஷ்கர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். அதையொட்டி அவரது பெயரில் மத்திய பிரதேச அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

மத்திய பிரதேச அரசின் கலாச்சார துறை உருவாக்கிய இந்த விருதுக்கு 2004-ஆம் ஆண்டில் சினிமா இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரூ.1லட்சம் ரொக்க பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும்.

இதற்கான விழா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. அதில் கலந்துகொண்டு விருதை பெரும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடத்துவார்.

22-ந்தேதியில் இருந்தே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் பிரபல பின்னணி பாடகர், பாடகிகள் இசை விருந்து அளிப்பார்கள்.

மத்திய பிரதேச அரசு இந்தூர் ஸ்டேட்வங்கி, இந்தூர் வளர்ச்சி ஆணையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளன.
தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
இந்திய நடிகருக்கு முத்தம் கொடுத்த பாகிஸ்தான் நடிகைக்கு அபராதம்: முஷரப் அரசு நடவடிக்கை

இஸ்லாமாபாத், பிப். 23-

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மீரா. இவர் நஜர் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அஷ்மித் படேல் நடிக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த படத்துக்கான சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

படத்தில் அஷ்மித் படேலுடன் மிக நெருக்கமாக மீரா நடித்துள்ளார். சில காட்சிகளில் உணர்ச்சிமயமான முத்தங்களையும் மீரா கொடுத்துள்ளார். அந்த காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

இது பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பழமைவாதி களுக்கும், தீவிரவாதிகளுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நடிகை, இந்திய நடிகருக்கு எப்படி முத்தம் கொடுக்கலாம்? என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் முதல் அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி அவர் மும்பை போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் இந்திய நடிகருக்கு முத்தம் கொடுத்ததற்காக மீரா மீது முஷரப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அங்குள்ள கலாச்சார அமைச்சகம் மீராவுக்கு கடுமையான அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராத தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் நடிகர்களை மற்ற நாட்டுக்கு நல்லெண்ண தூதர்களாக அனுப்புவதை பாகிஸ்தான் வழக்கத்தில் வைத்துள்ளது. எனவே முத்தக் காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்திய படங்களில் பாகிஸ் தானியர்கள் நடிப்பதை தடை செய்யவும் முஷரப் அரசு பரிசீலித்து வருகிறது.

மாலைமலர்

படம் நீக்கப்பட்டுள்ளது -- யாழினி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/23/others/C11_nagma.jpg' border='0' alt='user posted image'> நடிகைகள் மும்தாஜ்-நக்மா
சென்னை, பிப். 23- மும்பை தாதாவுடன் தொடர்புடையவர் ஒரே நக்மா தான். எந்த குழப்பமும் இல்லை. இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கும் தான் தயார் என்று நடிகை மும்தாஜ் உறுதியுடன் கூறியுள்ளார்.

மும்பை குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஜம்போ மும்பை போலீசிடம் சிக்கினான். அவன் தனது வாக்கு மூலத்தில் நடிகை நக்மாவுக்கு மும்பையில் உள்ள பந்த்ரா இல்லத்துக்கு சென்று அனீஸ் கொடுத்த ஹவாலா பணம் ரூ. 10 லட்சத்தை நக்மாவிடம் கொடுத்தேன் என்று குறிப்பி;ட்டிருந்தான். இதனை நடிகை நக்மா மறுத்ததுடன் தமிழில் நடித்து வரும் மும்தாஜ; பெயர்தான் நக்மா, தீவிரவாதிகள் அவரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றார்.

இதற்கு நடிகை மும்தாஜ; கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் -எனது நிஜப் பெயர் நக்மாகான். 1988ம் ஆண்டு நான் பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமி. பள்ளி சிறுமியை யாராவது தீவிரவாதிகளுடன் தொடர்பு படுத்துவார்களா? என்றார். மேலும் மும்தாஜின் தாயார் தபசுகான் கடந்த 2 வருடத்துக்கு முன்பு தாவூத் இப்ராகிம் வழக்கில் கைது செய்யப்பட்டார் தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார் என்றும் நடிகை நக்மா குறிப்பிட்டிருந்தார். அதற்கும் மும்தாஜ் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறம்போது, -எனது தாயார் பெயர் தபசுகான் இல்லை. ரூபினாகான் என்பதுதான் எனது தாயார் பெயர். அவர் தற்போது லண்டனில்தான் வசிக்கிறார். அவர் அங்கு அமைதியாக நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

மேலும் மும்தாஜ; கூறும்போது, -தீவிரவாதி பந்த்ரா வீட்டில்சந்தித்து 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறி உள்ளான். எனது வீடு பந்த்ராவில் கிடையவே கிடையாது. நான் மல்லாடு பகுதியில் வசித்தேன். இந்த இரண்டு ஊருக்கும் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஒரு சதவீதம் கூட உண்மை இல்லாத இந்த விஷயத்தில் எனது பெயரை வேண்டுமென்றே இழுக்கிறார்கள். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நக்மா யார் என்பதில் மும்பை போலீசார் குழப்பம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நக்மா யார் என்பதில் தெளிவாக உறுதியாக இருக்கிறார்கள். வட நாட்டு பத்திரிகைகள் கூட நக்மா யார் என்பதை தெளிவாக எழுதுகின்றன. சார்ஜாவில் நடந்த கிரிக்கெட் விளையாட்டின்போது அதனை பார்த்தவர் நக்மாதான் என்பது பத்திரிகைகளிலும், தொலைகாட்சியிலும் வெளியானது. அது ஒன்றே யாரை போலீசார் குறிப்பிடுகிறார்கள் என்பதற்கு சான்றாகும். இந்த விஷயத்தில் போலீஸ் விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.

தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)