03-03-2005, 10:48 AM
கருணாகுழுவுக்கு வக்காலத்து வாங்குகிறார்
விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி
அதன் பலமும் ஆதரவும் பெருகி வருகின்றதாம்
கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பெரியசக்தியாக கருணாகுழு வளர்ந்து வருகிறது. தமிழ்மக்களின் ஆதரவு அதற்கு பெருகிவரு கிறது.
இவ்வாறு கருணா குழுவிற்காக வக்காலத்து வாங்குகிறார் விசேட அதிரடிப் படையின் தளபதியும் பிரதி பொலீஸ் மா அதிபருமான நிமால் லிவ்கே.
கிழக்கில் தமது பிடிதளர்ந்து வருவதால் தமது இயலாமையை மறைத்து விசேட அதிர டிப்படையினர் மீது குற்றம் சாட்டுகின்றனர் புலிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு அதிரடிப் படையி னரே பின்னணி என்ற சாரப்பட புலிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை மறுத்துரைக்கும் வகையில் நேற்றுமுன் தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன் றிலேயே புலிகள் பலம் கிழக்கில் குன்றிவரு வதாகவும் கருணா குழுவிற்கான மக்கள் ஆத ரவும்ää அனுதாபமும் பெருகிவருவதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.
தமக்கு எதிர்த்தரப்பில் கருணாகுழு பல மடைந்துவரும் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ள முடியாத புலிகள் குற்றச்சாட்டை வேறுபுறம் திருப்புவதன் மூலம் அதைமறைக்கப் பார்க்கி றார்கள் என்று அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
Uthayan
விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி
அதன் பலமும் ஆதரவும் பெருகி வருகின்றதாம்
கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பெரியசக்தியாக கருணாகுழு வளர்ந்து வருகிறது. தமிழ்மக்களின் ஆதரவு அதற்கு பெருகிவரு கிறது.
இவ்வாறு கருணா குழுவிற்காக வக்காலத்து வாங்குகிறார் விசேட அதிரடிப் படையின் தளபதியும் பிரதி பொலீஸ் மா அதிபருமான நிமால் லிவ்கே.
கிழக்கில் தமது பிடிதளர்ந்து வருவதால் தமது இயலாமையை மறைத்து விசேட அதிர டிப்படையினர் மீது குற்றம் சாட்டுகின்றனர் புலிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு அதிரடிப் படையி னரே பின்னணி என்ற சாரப்பட புலிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை மறுத்துரைக்கும் வகையில் நேற்றுமுன் தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன் றிலேயே புலிகள் பலம் கிழக்கில் குன்றிவரு வதாகவும் கருணா குழுவிற்கான மக்கள் ஆத ரவும்ää அனுதாபமும் பெருகிவருவதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.
தமக்கு எதிர்த்தரப்பில் கருணாகுழு பல மடைந்துவரும் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ள முடியாத புலிகள் குற்றச்சாட்டை வேறுபுறம் திருப்புவதன் மூலம் அதைமறைக்கப் பார்க்கி றார்கள் என்று அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

