03-28-2005, 09:22 PM
அந்தப் பச்சைக்கிளிகள் கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை உருசித்து உருசித்து எழுப்பிய கீதத்தாலும் நேர மாற்றத்தாலும் விடிகாலையிலேயே உறக்கம் கலைந்து விட்டது. தோளில் துவாயுடன் பல்துலக்கியபடி பூத்துக் கொட்டியிருந்த நந்தியாவெட்டைப்
பூக்களையும் தங்கியிருந்த இடத்தின் காலை அழகையும் இரசித்த காலை வேளை ஒன்றில்........
வோக்கி அழைக்கிறது.... சொல்லுங்கோ.. கெனடி....
முழக்கம் வானதி அக்காவையும் திரு அண்ணையையும் ஒரு இடமும் இண்டைக்குப் போக வேண்டாம். முக்கிய சந்திப்பு இருக்கெண்டு சொல்லுங்கோ.... என்று அடுத்த முனையில் இருந்து திரு. பேரின்பம் அவர்களது அறிவுறுத்தல் வந்தது...
உற்சாக மேலீட்டாலும் காலைப் பனிக்குளிராலும் உடல் புல்லரித்துப் போயிருந்தது.... அந்தப் பரவிப் பாஞ்சானின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக்கொண்டு வண்டி ஒன்று வாசலை அண்மித்தது....
திரு அண்ணை வாங்கோ போகலாம்.... என்று துடித்தபடி வந்தார் அமல்.
வண்டியில் இலக்கியன்.....
இலக்கியனின் நேற்றைய வண்டி ஓட்டத்தில் சிறுகுடலும் பெருங்குடலும் ஒன்றாகிவிட்டது என்று சொல்லியிருந்தேன்.... அதுதானோ என்னவோ இலக்கியன் ஒருவித சிரிப்போடு ஏறுங்கள் என்றுசொல்ல வாகனம் மீண்டும் வளியைவிட வேகமாக எங்கேயோ பறந்தது......
சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு நாங்கள் விரும்பியவர்களைப் பேட்டி எடுக்க உதவும்படி ஊடகப் பொறுப்பாளர் அறிவுறுத்தப்பட... அவர் நாங்கள் கொடுத்த பட்டியலில் இரண்டாம் நபரைச் சந்திக்க உடனடியாக ஏற்பாடு செய்தார்.
வான் மீண்டும் பரவிப்பாஞ்சானுக்கு வந்து தமிழீழ நீதி நிர்வாகத்துறை வளாகத்தில் நின்றது.
அமல் எங்களை நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் திரு. பரா அவர்களுக்கு அறிமுகம்செய்து வைத்தார்.
தமிழர் பண்பாட்டுடன் பிறந்த விருந்தோம்பலைத் தவிர்ப்பார்களா புலிகள்...? விருந்தோம்பலுக்குப் பின்னர் முழக்கம் படிப்போருக்கான நேர்காணலை ஆரம்பித்தோம்.....
முழக்கம் தரப்பில் பொறுப்பாசிரியர் வானதி ஆசிரியர் திரு நண்பர்களான முருகன் மற்றும் கஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
<b>திரு:</b> தமிழீழ நீதி நிர்வாகத்துறை தமிழீழ அரசுக்கான பயணத்தில் எங்கு நிற்கின்றது...?
<b>திரு.பரா: </b>தமிழீழப் பிரதேசங்களை சிறீலங்கா ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எடுக்கும் அதேவேளை இப்பிரதேசங்களில் சீரான நிர்வாகம் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் தலைவர் அவர்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் தமிழீழ நீதி நிர்வாகத்துறை. காவல் நிலையம் நீதி மன்று மாவட்ட நீதிமன்று மேன்முறையீட்டு நீதிமன்று சட்டக்கல்லூரி சட்டப் படிப்புத் தொடர்பான நூலகம் இவ்வாறாக இங்கு இருக்கக் கூடிய மிகவும் சொற்ப வளங்களை வைத்துக் கொண்டு நாம் முன்னேறி உள்ளோம்.
எமது சட்டக்கல்லூரியில் கல்விபயிலும் மாணவர்களின் அக்கறையையும் அதே வேளை பயிலும் இடங்களின் அசௌகரியங்களையும் பார்த்துவிட்டு பிரித்தானியா வாழ் தமிழ் சட்டத்தரணிகள் சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் எமக்கு ஒரு சட்டக் கல்லூரியைக் கட்டித் தந்து இருக்கின்றார்கள். எமது கல்லூரியில் இரண்டு விரிவுரை மண்டபங்களும் ஒரு நூலகமும் அமைந்திருக்கிறது.
இந்த வளர்ச்சியானது தலைவர் அவர்கள் தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் வைத்திருக்கிற பெரும் விருட்சத்தின் ஒரு படிநிலைதான். இதற்கே பெரும் பாராட்டுக்கள் குவிகின்றன.
நேற்று அமெரிக்காவில் இருந்து சி.என்.என் தொலைக்காட்சி வந்தது. அவர்கள் புலிகள் ஏதோ ஒரிருவர் இருந்துகொண்டு துப்பாக்கியை வைத்துப் பயமுறுத்தி அதிகாரம் பண்ணுறாங்கள் என்ற நினைப்பில் வந்தவர்கள்போல இருக்கின்றது. எங்கள் நிர்வாகக் கட்டமைப்பைப் பார்த்ததும் அசந்துபோனார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் பார்த்தது சட்டக் கல்லூரியையும் நீதிமன்று நடந்து கொண்டிருக்கும் விதத்தையும்தான். அதற்கே பாராட்டுவதற்கு என்ன என்ன வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்குமோ அவ்வளவாலும் பாராட்டினார்கள்.
இந்த நீதிநிர்வாகத்துறையை வழி நடத்துவதற்கு மாதம் 25 இலட்சம் ரூபாய்கள் செலவாகின்றது. இந்தச் சுமையை இயக்கம்தான் சுமக்கிறது.
<b>வானதி:</b> தமிழீழத்தில் பிறந்து வளர்ந்து கனடியக் குடிமகனாக இருக்கும் ஒருவர் செய்யும் குற்றம் ஒன்றுக்காக அவருக்கு தமிழீழத்தில் வழக்குப் போடலாமா?
<b>திரு. பரா:</b> இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆள் இங்கு இருக்கும் என்று சொன்னால் செய்யலாம்.
எடுத்துக் காட்டாக இரண்டு வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. ஒன்று கிளி நொச்சியிலும் ஒன்று முல்லைத்தீவிலும் நடந்து வருகின்றது. கனடாவில் இருந்து வந்து ஒருவர் முன்பு சட்டபூர்வமாகப் பதிவுத்திருமணம் செய்து இருந்திருக்கின்றார். பின்னர் கனடா போய்த் திரும்பி வந்து அந்தப் பெண்ணைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணை பேசித் திருமணம் செய்திருக்கின்றார். இதில் முதலாவது மனைவி வழக்குப் போட்டு இருக் கின்றார்.
இவர் விடுமுறையில் வந்த இடத்தில் தான் நீதிமன்ற ஆணையின் பெயரில் காவல்துறை இவரைக் கைது செய்து விட்டது. இப்போது இவர் 25 இலட்சம் பிணையில் வெளியில் நிக்கிறார். இத்தொகை முதல் மனைவியின் பெயரில் நீதிமன்ற வைப்பில் உள்ளது.
இதே மாதிரி இன்னொரு வழக்கு புதுக்குடியிருப்பில் நடந்து வருகின்றது.. அது என்னண்டா....
திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் கனடாவுக்குப்போய் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர் அங்கே போய் இன்னும் ஒரு திருமணம் முடித்து அங்கேயும் பிள்ளைகள் இருக்கின்றது. இவர் இங்கு இருக்கும் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
இவர் இரு மாவீரர்களின் சகோதரர். தான் மாவீரர் குடும்பம் தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று இவர் இங்கு வந்திருக்கின்றார். முதலாவது மனைவி முறைப்பாடு கொடுத்து அவரைக் காவல்துறை கைது செய்துவிட்டது. பின்னர் வழக்கு நடைபெற்று பிள்ளைகளுக்கு 25 இலட்சம் கொடுக்க வேண்டும். மனைவிக்கு நட்ட ஈடாக 10 இலட்சம் கொடுக்கவேண்டும். வாழ்க்கை முழுக்க பராமரிப்புத்தொகை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
<b>வானதி:</b> இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்கள் மேன்முறையீடு செய்ய லாமா?
<b>பரா:</b> செய்யலாம். மேற்படி நபர் மேன்முறையீடு செய்தார். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முதலாவது மனைவியுடன் தொடர்பு வைத்திராவிடால் சட்டப்படி மணம் முறிவடைந்துவிடும் (விவாகம் ரத்தாகி விடும்) என்று தனது மேன்முறையீட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அனைத்துலகச் சட்டத்தின்படி வெளியில் போனாலும் இவவுடன் இருந்துதான் வெளியில் போயிருக்கின்றார். கடிதத் தொடர்பு வைத்திருந்திருக்கின்றார். இதற்கான ஆதாரத்தை மனைவி நீதிமன்றில் சமர்ப்பித்தார். பின்னர் இம் மேன்முறையீடு தள்ளப்பட்டு இவர் 25 இலச்சம் முதலாவது மனைவிக்குக் கொடுத்து பின்னர் மிகுதிக்கு சகோதரர்கள் இருவரைப் பிணை வைத்தார். நாங்கள் பாஸ் கொடுத்து அவர் கனடாவுக்குப் போய்விட்டார்.
இப்படியாக இங்கு வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். எதிர்காலத்தில் தமிழீழம் நாடாக வந்தபின் என்றால் கனடாவுடன் சட்டரீதியான உடன்படிக்கை கைச்சாத்திட்டுப் பல வேறு விடயங் களையும் நாம் செய்யலாம்....
<b>திரு:</b> கனடாவில் திருமணம் செய்தவர்கள் இங்கும்வந்து மணமுடித்து விட்டுப்போவதுபோன்ற சம்பவங்கள் நிறைய இடம்பெறுவதாக முழக்கத்திற்குப் பல முறைப்பாடுகள் வருகின்றன.... இது குறித்து என்ன செய்யலாம்...
<b>பரா:</b> உலகத்தமிழர் இயக்க விழிப்புக் குழுப் பொறுப்பாளர் இங்கு வந்தபோது இவ்வாறான சிக்கல்கள் குறித்துச் சொன்னார். இது குறித்து ஆலோசனை கள் நடத்திவருகின்றோம்.
எங்களைப் பொறுத்தவரையில் கனடாவில் தமிழ்ப் பண்பாடு சிதைவடைவ தினால்தான் இவ்வாறான சிக்கல்கள் அதிகரிக்கின்றன என்று நினைக்கிறோம். ஆகவே தமிழ்ப்பண்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவை குறையும் என்று நான் நினைக்கின்றேன்.
<b>முருகன்:</b> கனடாவில் இருந்து வந்த ஒருவர் இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும்?
கனடாவில் இருந்து இங்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தப்பிச் சென்றால் நாங்கள் அந்தக் குற்றத் திற்கான தண்டனையை அறிவிப்போம். அதனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். அந்தத் தண்டனையை குறைக்கக் சொல்லிக் கனடிய அரசு எங்களைக் கேட்குமே தவிர அந்தத் தண்டனையை நீக்கச் சொல்லி கேட்க மாட்டாது. அவரைத் தண்டனை அனுப விக்க எங்களிடம் கொடுத்துவிடும்.
<b>வானதி:</b> குடியமர்வு-குடியகல்வு சட்டத்தின்படி கனடாவில் தற்போது வாழும் தமிழீழ மக்களுக்கு தமிழீழக் குடியுரிமையும் வழங்குவீர்களா?
தமிழீழம் கிடைத்தவுடன் வழங்குவோம். இது உறுதி.
எப்படி நோர்வேயில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவுக்குப் போன நான்கு மில்லியன் நோர்வே மக்களுக்கு நோர்வே குடியுரிமை கொடுத்ததோ அதே மாதிரி நாங்களும் கொடுப்போம். எங்கள் மக்கள் எங்கு வெளியில் இருந்தாலும் அவர்களுக்கு தமிழீழக் குடியுரிமை உண்டு. இங்கு சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பால் இருக்க முடியாமல் உயிருக்குப் பயந்துதானே பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். யதர் களுக்கு என்ன நடந்ததோ அதே மாதிரித்தானே....
<b>பொறுப்பாசிரியர் வானதி:</b> வழக்கு நடக்கும்போது ஊடகங்களைப் ஒளிப்படம் எடுக்க வீடியோ எடுக்க அனுமதிக்கின்றீர்களா...?
நாங்கள் ஊடகங்களுக்கு முழு அனுமதி வழங்கி அவர்கள் விரும்பிய கட்டமைப்பை பார்வையிடவோ புகைப்படம் எடுக்கவோ அன்றி வீடியோ எடுக்கவோ அனுமதிக்கின்றோம்.
நாங்களாக கூட்டிக் கொண்டுபோய் காட்டுவதைத் தவிர்த்து அவர்களாகவே வேண்டிய இடங்களுக்குப்போக உதவுகின்றோம். சிறீலங்கா அரசுபோல தாங்கள் தீர்மானிக்கும் இடங்களுக்கு மட்டும் அவர்களைக் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுவதில்லை. அவர்களை சுயாதீனமாக செய்தி சேகரிக்கவோ அன்றி தொலைக் காட்சி ஆவணங்கள் எடுக்கவோ அனுமதிக்கின்றோம் உதவியும் செய்கின் றோம்.
<b>திரு:</b> கனடாவில் இருக்கும் மக்களின் காணிகளுக்கு வீடுகளுக்கு என்ன நடக்கிறது இங்கு?
கனடா அமெரிக்கா இலண்டன் போன்ற நாடுகளில் இருக்கும் மக்களின் காணிகள் தொடர்பான வழக்குகள் ஐம்பதுக்கு மேல் நீதிமன்றில் நடந்து வருகின்றது. கனடாவுக்குப் போனவர்களின் காணிகளுக்கு என்ன நடக்கிறது நடக்கும் என்று சொன்னால்....
அதாவது கனடா என்று மட்டும் இல்லை புலம்பெயர்ந்த மக்களின் காணிகளுக்கு என்ன நடக்கிறது என்று சொன்னால்; இங்கு வீடுகள் இருந்திருக்கிறது சொத்துக்கள் இருந்திருக்கிறது விட்டு விட்டுப் போய் இருக்கின்றார்கள். இப்ப அதனைத் தங்களுக்கு வேண்டும் என்று இங்கு வந்து கேட்கின்றார்கள்.
இவ்வாறான வழக்கு ஒன்று நடந்து முடிந்தும் இருக்கிறது. இலண்டனுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் போன மயில் வாகனம் என்ற ஒருவருக்கு 25 ஏக்கர் காணி இருந்திருக்கிறது. அவர் இலண்டனுக்குப் போனதும் இங்கு அந்தக் காணியை ஒருவர் பிடித்து வைத்திருந்திருக்கிறார். அந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. உறுதி யாருக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் காணி சொந்தம். இவ்வளவு காலமும் பராமரித்தவருக்கு காணி உரிமையாளர் நட்டஈடு கொடுக்கவேண்டும் என்று தீர்ந்து இருக்கிறது.
<b>முருகன்:</b> வெளிநாட்டில் இருப் பவர்கள் தற்போது தமிழீழத்தில் காணி வாங்கலாமா?
வாங்கலாம். இப்ப நாங்கள் அதனை அனுமதித்து இருக்கின்றோம். எங்கள் மூலதனம் எங்கள் மக்கள். இப்போது இங்கு காணி விலை ஏறி விட்டது. முன்பு ஐந்து பத்தாயிரம் போன காணிகள் இப்போ இருபத்தைந்து இலட்சம் எல்லாம் போகிறது. ஒருகோடி ரூபாய்க்கு கூட காணி விலை போயிருக்கிறது....
இந்தக்காணிகள் எல்லாம் நாங்கள் கிளிநொச்சி பிடித்த காலத்தில் பத்தாயிரம் பதினையாயிரம் ரூபாய்க்கு சனங்கள் விற்றது. இந்த விலையேற்றத்திற்கு வெளிநாட்டு ஆட்கள்தான் காரணம். நாங்கள் இதனைக் கட்டுப்படுத்த முனையவில்லை. அவர்கள் வெளிநாட்டில் கஸ்ரப்பட்டு உழைத்து தன்னுடைய நாட்டில் காணி வாங்க ஆசைப்படுவது நல்லது....
<b>வானதி:</b> தமிழீழத்தில் வதியாது வெளிநாட்டில் வசிப்பவர்கள் காணி வாங்கும்போது வரியை உயர்த்தலாம் அல்லவா?
<b>பரா:</b> உயர்த்தி இருக்கிறோம். இருபத்தைந்து வீதம் வரி செலுத்தவேண்டும்.
வளரும் தமிழினத்தில் மிளிரும் தமிழர்
நன்றி முழக்கம்
பூக்களையும் தங்கியிருந்த இடத்தின் காலை அழகையும் இரசித்த காலை வேளை ஒன்றில்........
வோக்கி அழைக்கிறது.... சொல்லுங்கோ.. கெனடி....
முழக்கம் வானதி அக்காவையும் திரு அண்ணையையும் ஒரு இடமும் இண்டைக்குப் போக வேண்டாம். முக்கிய சந்திப்பு இருக்கெண்டு சொல்லுங்கோ.... என்று அடுத்த முனையில் இருந்து திரு. பேரின்பம் அவர்களது அறிவுறுத்தல் வந்தது...
உற்சாக மேலீட்டாலும் காலைப் பனிக்குளிராலும் உடல் புல்லரித்துப் போயிருந்தது.... அந்தப் பரவிப் பாஞ்சானின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக்கொண்டு வண்டி ஒன்று வாசலை அண்மித்தது....
திரு அண்ணை வாங்கோ போகலாம்.... என்று துடித்தபடி வந்தார் அமல்.
வண்டியில் இலக்கியன்.....
இலக்கியனின் நேற்றைய வண்டி ஓட்டத்தில் சிறுகுடலும் பெருங்குடலும் ஒன்றாகிவிட்டது என்று சொல்லியிருந்தேன்.... அதுதானோ என்னவோ இலக்கியன் ஒருவித சிரிப்போடு ஏறுங்கள் என்றுசொல்ல வாகனம் மீண்டும் வளியைவிட வேகமாக எங்கேயோ பறந்தது......
சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு நாங்கள் விரும்பியவர்களைப் பேட்டி எடுக்க உதவும்படி ஊடகப் பொறுப்பாளர் அறிவுறுத்தப்பட... அவர் நாங்கள் கொடுத்த பட்டியலில் இரண்டாம் நபரைச் சந்திக்க உடனடியாக ஏற்பாடு செய்தார்.
வான் மீண்டும் பரவிப்பாஞ்சானுக்கு வந்து தமிழீழ நீதி நிர்வாகத்துறை வளாகத்தில் நின்றது.
அமல் எங்களை நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் திரு. பரா அவர்களுக்கு அறிமுகம்செய்து வைத்தார்.
தமிழர் பண்பாட்டுடன் பிறந்த விருந்தோம்பலைத் தவிர்ப்பார்களா புலிகள்...? விருந்தோம்பலுக்குப் பின்னர் முழக்கம் படிப்போருக்கான நேர்காணலை ஆரம்பித்தோம்.....
முழக்கம் தரப்பில் பொறுப்பாசிரியர் வானதி ஆசிரியர் திரு நண்பர்களான முருகன் மற்றும் கஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
<b>திரு:</b> தமிழீழ நீதி நிர்வாகத்துறை தமிழீழ அரசுக்கான பயணத்தில் எங்கு நிற்கின்றது...?
<b>திரு.பரா: </b>தமிழீழப் பிரதேசங்களை சிறீலங்கா ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எடுக்கும் அதேவேளை இப்பிரதேசங்களில் சீரான நிர்வாகம் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் தலைவர் அவர்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் தமிழீழ நீதி நிர்வாகத்துறை. காவல் நிலையம் நீதி மன்று மாவட்ட நீதிமன்று மேன்முறையீட்டு நீதிமன்று சட்டக்கல்லூரி சட்டப் படிப்புத் தொடர்பான நூலகம் இவ்வாறாக இங்கு இருக்கக் கூடிய மிகவும் சொற்ப வளங்களை வைத்துக் கொண்டு நாம் முன்னேறி உள்ளோம்.
எமது சட்டக்கல்லூரியில் கல்விபயிலும் மாணவர்களின் அக்கறையையும் அதே வேளை பயிலும் இடங்களின் அசௌகரியங்களையும் பார்த்துவிட்டு பிரித்தானியா வாழ் தமிழ் சட்டத்தரணிகள் சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் எமக்கு ஒரு சட்டக் கல்லூரியைக் கட்டித் தந்து இருக்கின்றார்கள். எமது கல்லூரியில் இரண்டு விரிவுரை மண்டபங்களும் ஒரு நூலகமும் அமைந்திருக்கிறது.
இந்த வளர்ச்சியானது தலைவர் அவர்கள் தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் வைத்திருக்கிற பெரும் விருட்சத்தின் ஒரு படிநிலைதான். இதற்கே பெரும் பாராட்டுக்கள் குவிகின்றன.
நேற்று அமெரிக்காவில் இருந்து சி.என்.என் தொலைக்காட்சி வந்தது. அவர்கள் புலிகள் ஏதோ ஒரிருவர் இருந்துகொண்டு துப்பாக்கியை வைத்துப் பயமுறுத்தி அதிகாரம் பண்ணுறாங்கள் என்ற நினைப்பில் வந்தவர்கள்போல இருக்கின்றது. எங்கள் நிர்வாகக் கட்டமைப்பைப் பார்த்ததும் அசந்துபோனார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் பார்த்தது சட்டக் கல்லூரியையும் நீதிமன்று நடந்து கொண்டிருக்கும் விதத்தையும்தான். அதற்கே பாராட்டுவதற்கு என்ன என்ன வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்குமோ அவ்வளவாலும் பாராட்டினார்கள்.
இந்த நீதிநிர்வாகத்துறையை வழி நடத்துவதற்கு மாதம் 25 இலட்சம் ரூபாய்கள் செலவாகின்றது. இந்தச் சுமையை இயக்கம்தான் சுமக்கிறது.
<b>வானதி:</b> தமிழீழத்தில் பிறந்து வளர்ந்து கனடியக் குடிமகனாக இருக்கும் ஒருவர் செய்யும் குற்றம் ஒன்றுக்காக அவருக்கு தமிழீழத்தில் வழக்குப் போடலாமா?
<b>திரு. பரா:</b> இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆள் இங்கு இருக்கும் என்று சொன்னால் செய்யலாம்.
எடுத்துக் காட்டாக இரண்டு வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. ஒன்று கிளி நொச்சியிலும் ஒன்று முல்லைத்தீவிலும் நடந்து வருகின்றது. கனடாவில் இருந்து வந்து ஒருவர் முன்பு சட்டபூர்வமாகப் பதிவுத்திருமணம் செய்து இருந்திருக்கின்றார். பின்னர் கனடா போய்த் திரும்பி வந்து அந்தப் பெண்ணைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணை பேசித் திருமணம் செய்திருக்கின்றார். இதில் முதலாவது மனைவி வழக்குப் போட்டு இருக் கின்றார்.
இவர் விடுமுறையில் வந்த இடத்தில் தான் நீதிமன்ற ஆணையின் பெயரில் காவல்துறை இவரைக் கைது செய்து விட்டது. இப்போது இவர் 25 இலட்சம் பிணையில் வெளியில் நிக்கிறார். இத்தொகை முதல் மனைவியின் பெயரில் நீதிமன்ற வைப்பில் உள்ளது.
இதே மாதிரி இன்னொரு வழக்கு புதுக்குடியிருப்பில் நடந்து வருகின்றது.. அது என்னண்டா....
திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் கனடாவுக்குப்போய் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர் அங்கே போய் இன்னும் ஒரு திருமணம் முடித்து அங்கேயும் பிள்ளைகள் இருக்கின்றது. இவர் இங்கு இருக்கும் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
இவர் இரு மாவீரர்களின் சகோதரர். தான் மாவீரர் குடும்பம் தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று இவர் இங்கு வந்திருக்கின்றார். முதலாவது மனைவி முறைப்பாடு கொடுத்து அவரைக் காவல்துறை கைது செய்துவிட்டது. பின்னர் வழக்கு நடைபெற்று பிள்ளைகளுக்கு 25 இலட்சம் கொடுக்க வேண்டும். மனைவிக்கு நட்ட ஈடாக 10 இலட்சம் கொடுக்கவேண்டும். வாழ்க்கை முழுக்க பராமரிப்புத்தொகை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
<b>வானதி:</b> இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்கள் மேன்முறையீடு செய்ய லாமா?
<b>பரா:</b> செய்யலாம். மேற்படி நபர் மேன்முறையீடு செய்தார். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முதலாவது மனைவியுடன் தொடர்பு வைத்திராவிடால் சட்டப்படி மணம் முறிவடைந்துவிடும் (விவாகம் ரத்தாகி விடும்) என்று தனது மேன்முறையீட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அனைத்துலகச் சட்டத்தின்படி வெளியில் போனாலும் இவவுடன் இருந்துதான் வெளியில் போயிருக்கின்றார். கடிதத் தொடர்பு வைத்திருந்திருக்கின்றார். இதற்கான ஆதாரத்தை மனைவி நீதிமன்றில் சமர்ப்பித்தார். பின்னர் இம் மேன்முறையீடு தள்ளப்பட்டு இவர் 25 இலச்சம் முதலாவது மனைவிக்குக் கொடுத்து பின்னர் மிகுதிக்கு சகோதரர்கள் இருவரைப் பிணை வைத்தார். நாங்கள் பாஸ் கொடுத்து அவர் கனடாவுக்குப் போய்விட்டார்.
இப்படியாக இங்கு வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். எதிர்காலத்தில் தமிழீழம் நாடாக வந்தபின் என்றால் கனடாவுடன் சட்டரீதியான உடன்படிக்கை கைச்சாத்திட்டுப் பல வேறு விடயங் களையும் நாம் செய்யலாம்....
<b>திரு:</b> கனடாவில் திருமணம் செய்தவர்கள் இங்கும்வந்து மணமுடித்து விட்டுப்போவதுபோன்ற சம்பவங்கள் நிறைய இடம்பெறுவதாக முழக்கத்திற்குப் பல முறைப்பாடுகள் வருகின்றன.... இது குறித்து என்ன செய்யலாம்...
<b>பரா:</b> உலகத்தமிழர் இயக்க விழிப்புக் குழுப் பொறுப்பாளர் இங்கு வந்தபோது இவ்வாறான சிக்கல்கள் குறித்துச் சொன்னார். இது குறித்து ஆலோசனை கள் நடத்திவருகின்றோம்.
எங்களைப் பொறுத்தவரையில் கனடாவில் தமிழ்ப் பண்பாடு சிதைவடைவ தினால்தான் இவ்வாறான சிக்கல்கள் அதிகரிக்கின்றன என்று நினைக்கிறோம். ஆகவே தமிழ்ப்பண்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவை குறையும் என்று நான் நினைக்கின்றேன்.
<b>முருகன்:</b> கனடாவில் இருந்து வந்த ஒருவர் இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும்?
கனடாவில் இருந்து இங்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தப்பிச் சென்றால் நாங்கள் அந்தக் குற்றத் திற்கான தண்டனையை அறிவிப்போம். அதனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். அந்தத் தண்டனையை குறைக்கக் சொல்லிக் கனடிய அரசு எங்களைக் கேட்குமே தவிர அந்தத் தண்டனையை நீக்கச் சொல்லி கேட்க மாட்டாது. அவரைத் தண்டனை அனுப விக்க எங்களிடம் கொடுத்துவிடும்.
<b>வானதி:</b> குடியமர்வு-குடியகல்வு சட்டத்தின்படி கனடாவில் தற்போது வாழும் தமிழீழ மக்களுக்கு தமிழீழக் குடியுரிமையும் வழங்குவீர்களா?
தமிழீழம் கிடைத்தவுடன் வழங்குவோம். இது உறுதி.
எப்படி நோர்வேயில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவுக்குப் போன நான்கு மில்லியன் நோர்வே மக்களுக்கு நோர்வே குடியுரிமை கொடுத்ததோ அதே மாதிரி நாங்களும் கொடுப்போம். எங்கள் மக்கள் எங்கு வெளியில் இருந்தாலும் அவர்களுக்கு தமிழீழக் குடியுரிமை உண்டு. இங்கு சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பால் இருக்க முடியாமல் உயிருக்குப் பயந்துதானே பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். யதர் களுக்கு என்ன நடந்ததோ அதே மாதிரித்தானே....
<b>பொறுப்பாசிரியர் வானதி:</b> வழக்கு நடக்கும்போது ஊடகங்களைப் ஒளிப்படம் எடுக்க வீடியோ எடுக்க அனுமதிக்கின்றீர்களா...?
நாங்கள் ஊடகங்களுக்கு முழு அனுமதி வழங்கி அவர்கள் விரும்பிய கட்டமைப்பை பார்வையிடவோ புகைப்படம் எடுக்கவோ அன்றி வீடியோ எடுக்கவோ அனுமதிக்கின்றோம்.
நாங்களாக கூட்டிக் கொண்டுபோய் காட்டுவதைத் தவிர்த்து அவர்களாகவே வேண்டிய இடங்களுக்குப்போக உதவுகின்றோம். சிறீலங்கா அரசுபோல தாங்கள் தீர்மானிக்கும் இடங்களுக்கு மட்டும் அவர்களைக் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுவதில்லை. அவர்களை சுயாதீனமாக செய்தி சேகரிக்கவோ அன்றி தொலைக் காட்சி ஆவணங்கள் எடுக்கவோ அனுமதிக்கின்றோம் உதவியும் செய்கின் றோம்.
<b>திரு:</b> கனடாவில் இருக்கும் மக்களின் காணிகளுக்கு வீடுகளுக்கு என்ன நடக்கிறது இங்கு?
கனடா அமெரிக்கா இலண்டன் போன்ற நாடுகளில் இருக்கும் மக்களின் காணிகள் தொடர்பான வழக்குகள் ஐம்பதுக்கு மேல் நீதிமன்றில் நடந்து வருகின்றது. கனடாவுக்குப் போனவர்களின் காணிகளுக்கு என்ன நடக்கிறது நடக்கும் என்று சொன்னால்....
அதாவது கனடா என்று மட்டும் இல்லை புலம்பெயர்ந்த மக்களின் காணிகளுக்கு என்ன நடக்கிறது என்று சொன்னால்; இங்கு வீடுகள் இருந்திருக்கிறது சொத்துக்கள் இருந்திருக்கிறது விட்டு விட்டுப் போய் இருக்கின்றார்கள். இப்ப அதனைத் தங்களுக்கு வேண்டும் என்று இங்கு வந்து கேட்கின்றார்கள்.
இவ்வாறான வழக்கு ஒன்று நடந்து முடிந்தும் இருக்கிறது. இலண்டனுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் போன மயில் வாகனம் என்ற ஒருவருக்கு 25 ஏக்கர் காணி இருந்திருக்கிறது. அவர் இலண்டனுக்குப் போனதும் இங்கு அந்தக் காணியை ஒருவர் பிடித்து வைத்திருந்திருக்கிறார். அந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. உறுதி யாருக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் காணி சொந்தம். இவ்வளவு காலமும் பராமரித்தவருக்கு காணி உரிமையாளர் நட்டஈடு கொடுக்கவேண்டும் என்று தீர்ந்து இருக்கிறது.
<b>முருகன்:</b> வெளிநாட்டில் இருப் பவர்கள் தற்போது தமிழீழத்தில் காணி வாங்கலாமா?
வாங்கலாம். இப்ப நாங்கள் அதனை அனுமதித்து இருக்கின்றோம். எங்கள் மூலதனம் எங்கள் மக்கள். இப்போது இங்கு காணி விலை ஏறி விட்டது. முன்பு ஐந்து பத்தாயிரம் போன காணிகள் இப்போ இருபத்தைந்து இலட்சம் எல்லாம் போகிறது. ஒருகோடி ரூபாய்க்கு கூட காணி விலை போயிருக்கிறது....
இந்தக்காணிகள் எல்லாம் நாங்கள் கிளிநொச்சி பிடித்த காலத்தில் பத்தாயிரம் பதினையாயிரம் ரூபாய்க்கு சனங்கள் விற்றது. இந்த விலையேற்றத்திற்கு வெளிநாட்டு ஆட்கள்தான் காரணம். நாங்கள் இதனைக் கட்டுப்படுத்த முனையவில்லை. அவர்கள் வெளிநாட்டில் கஸ்ரப்பட்டு உழைத்து தன்னுடைய நாட்டில் காணி வாங்க ஆசைப்படுவது நல்லது....
<b>வானதி:</b> தமிழீழத்தில் வதியாது வெளிநாட்டில் வசிப்பவர்கள் காணி வாங்கும்போது வரியை உயர்த்தலாம் அல்லவா?
<b>பரா:</b> உயர்த்தி இருக்கிறோம். இருபத்தைந்து வீதம் வரி செலுத்தவேண்டும்.
வளரும் தமிழினத்தில் மிளிரும் தமிழர்
நன்றி முழக்கம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

