Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரபா- எம்.ஜி.ஆர் உறவு
#1
<b>மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். அவர் வழங்கிய பேருதவிகள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியிலும் விரிவாக்கத் திலும் என்றுமில்லாத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தின. தமிழீழ விடுதலைக்கு வித்திட்ட மாமனிதராம் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வழிகளில் எப்படியாக உதவினார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் நமக்காக இங்கே தருகின்றார்.(ஆ-ர்) </b>
<img src='http://semparuthi.com/x/images/dec04/mgr.gif' border='0' alt='user posted image'>

பகுதி 12
முதலமைச்சருடன் முடிந்து விடப் பார்க்கிறார் என்பது தெளி வாகியது. எம்.ஜி.ஆர் எதுவுமே பேச வில்லை. என்னைப் பரிதாபமாகப் பார்த்து கொண்டிருந்தார்.

"எண்பத்து மூன்று இறுதிப் பகுதியிலிருந்து பல வருடங்களை பிரபாகரன் இந்தியாவில் கழித்து விட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. இராணுவப் பயிற்சித் திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் தான் அவர் இங்கு வந்தார். இங்கு தங்கியிருந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்ட களத்திற்கு செல்ல வேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டு விட்டது. தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்ல வேண்டி நேர்ந்தது. சென்னை யிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்ல வேண்டும். பிரபாகரனுக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாக பல சக்திகள் செயற் படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழி தீர்ப்பதற்காக வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்புக் கருதியே அவரது பயணத்தை இரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடி வெடுத்தது.ஔ இப்படியாக ஒரு விளக்கம் கொடுத்தேன்.

அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. "சரி, பிரபாகரன் தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, இரகசியமாக யாழ்ப்பாணம் போய் விட்டார். நீங்களாவது முதலமைச் சருக்கு அத்தகவலை தெரி வித்திருக்கலாம் அல்லவா?ஔ என்று கூறி என்னை மடக்க முயன்றார். முதலமைச்சரும் என்னைக் கேள்விக் குறியுடன் நோக்கினார். உண்மையைச் சொல்வது தான் ஒரே வழியாகத் தென்பட்டது.

முதலமைச்சரைப் பார்த்துச் சொன்னேன். "சார், பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும் கூட தெரியப்படுத்த வில்லை. மிகவும் இரகசியமான காரியங்களை இரகசியமாக செய்து முடிப்பது தான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுத்தான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார் பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னராக நீங்கள் என்னை இங்கு அழைத்து விட்டீர்கள்ஔ. என்றேன். சகுனியார் வாயடைத்துப் போய் இருந்தார்.

முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. தலைவர் பிரபாகரன் தாயகம் திரும்பிய தன் அவசியத்தை அவர் உணர்ந்து கொண்டார். அந்தப் பயணம் குறித்து இரகசியம் பேணப்பட்ட தையும் அவர் புரிந்து கொண்டார். மத்திய அமைச்சர் சிதம்பரம் முடிந்து விட முனைகிறார் என்பதையும் விளங்கிக் கொண்டார்.

"பிரபாகரன் செளக்கியமாக இருக்கிறாரா?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர். "ஆமா சார்" என்றேன்.

"அவரைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள்" என்றார். நான் விசாரித்ததாகவும் சொல்லுங் கள் என்றார். சந்திப்பு சுமூகமாக முடிந்தது. முகத்தை தொங்கப் போட்டபடி இருந்தார் சிதம்பரம்.



1987ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத் திடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக நானும் பிரபாகரனும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை புதுடில்லியில் சந்தித்தோம். அதுவே எமது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்ந்த இறுதிச் சந்திப்பிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் எமக்கு அனு சரணையாக நின்று எமது நிலைப் பாட்டை ஆதரித்தார். புதுடில்லியில் நிகழ்ந்த அந்த சந்திப்பின் பின்னணியே ஒரு விசித்திரமான கதை.

1987 ஜூலை மாதம் 24ஆம் திகதி. தலைவர் பிரபாகரன், யோகரத்தினம் யோகி, திலீபன் ஆகியோருடன் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முதற் செயலர் ஹர்தீப் பூரியையும் ஏற்றிக் கொண்டு இந்திய விமானப் படையின் உலங்குவானூர்தி ஒன்று சுதுமலை அம்மன் கோவில் மைதானத்திலிருந்து சென்னை புறப்பட்டது. பிரபாகரனும் அரசியல் துறையைச் சேர்ந்த போராளிகளும் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படு கிறார்கள் என்றும், அங்கு சென்று அவர்களைச் சந்திக்குமாறும் எனக்கு தகவல் தரப்பட்டது. மீனம்பாக்கம் சென்றபொழுது அவர்கள் எனக்காக காத்து நின்றார்கள். நாம் அவசரமாக புதுடில்லி செல்ல வேண்டும் என்றும், ஒரு முக்கிய விடயமாக பிரதமர் ராஜீவ் காந்தி எம்மைச் சந்திக்க விரும்புவதாகக் கூறிய இந்தியத் தூதரக அதிகார திரு.பூரி தம்மைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்த தாகவும் பிரபாகரன் சொன்னார். இதில் ஏதோ தில்லு முல்லு இருப்ப தாக எனக்குத் தோன்றியது. எனினும் இந்தியப் பிரதமர் விடுத்த அழைப்பை நிராகரிப்பது நாகரீகம் அல்ல. எதற்கும் புதுடில்லி சென்று பார்ப்போமே என நினைத்தேன். ஒரு இந்திய விமானப்படை விமானத்தில் புதுடில்லி சென்றோம். அங்கு அசோக்கா விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டோ ம்.

அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி. புதுடில்லியில் மிகவும் பிரபல் யமானது. விமான நிலையத்திலிருந்து ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று கொண்டி ருந்த எமது வண்டி விடுதியின் முன்வாயிலை அடைந்தபோது அங்கு பல நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ அதிரடிப் படையினர் (கறுப்புச் சீருடை அணிந்த கரும் பூனைகள்) விடுதிக் கட்டடத்தைச் சூழ நிற்பதைக் கண்டோம். நாம் சந்தேகத்துடன் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக் கண்டதும், 'உங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப் பட்டிருக்கிறது' என்றார் பூரி.

கரும்பூனைகள் சூழ விடுதியின் அதியுயர் மாடிக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். ஆளுக்கு ஒரு அறையும், கலந்துரையாடு வதற்கு ஒரு கூடமுமாக அந்த மாடியின் ஒரு பகுதி எமக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. எமது அறைகளுக்கு முன்பாகவும் மாடிபூராகவும் ஆயுதம் தரித்த கரும்பூனைகள் பாதுகாப்பாக நிலையெடுத்து நின்றனர். சிறிது நேரத்தில் இந்திய புலனாய்வு உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்தார். எமது பாதுகாப்புக் குறித்து நாம் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருப் பதாகவும் விடுதியை விட்டு வெளியேற எமக்கு அனுமதியில்லை என்றும் தொலைபேசி மூலம் வெளியுலகத் துடன் தொடர்பு கொள்ள முடியாதென்றும் எமது நிலைமையை தெளிவுபடுத்தினார். சற்று நேரத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திரு.டிக்சிட் எம்மை சந்திப்பார் என்றும் நாம் புதுடில்லிக்கு அழைக் கப்பட்டதன் அரசியல் காரணத்தை அவர் விளக்கிக் கூறுவார் என்றும் சொன்னார். இந்திய அரசின் பொறிக்குள் சிக்கி விட்டோம் என்பது புலனாகியது. எதுவுமே செய்ய முடியாத நிர்க்கதியான நிலை. இந்தியத் தூதுவருக்காகக் காத்திருந்தோம்.

ஒரு மணிநேரம் கழித்து, திரு.டிக்சிட் அங்கு வந்தார். முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு, தனது சுங்கானைப்பற்ற வைத்து பின்னர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார். ஓஇந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் மத்தியில் ஒரு ஒப்பந்தம் ஏற் பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி வெகு விரைவில் கொழும்பு சென்று அந்த ஒப் பந்தத்தில் கைச்சாத்திட இருக்கிறார். இந்த ஒப்பந்தம் தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நல்ல, நியாயமான தீர்வை வழங்குகிறது. இவ்வொப்பந்தத்தை நீங்கள் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஔ என்று அடித்துக் கூறினார். பின்பு தனது பைக்குள்ளிருந்து ஒப்பந்தத்தின் பிரதி ஒன்றை எடுத்து என்னிடம் கையளித்து விட்டு, அதனை மொழி பெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இரண்டு மணிநேரத்தின் பின்பு தான் திரும்பி வருவதாகவும் அப்பொழுது ஒரு முடிவுடன் இருக்குமாறும் கூறியவர் எமது பதிலுக்காகக் காத்திராது அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக மொழி பெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப் படுத்தினேன். உப்புச்சப்பற்ற மாகாண சபைத்திட்டம் ஒன்று இனப்பிரச்சினைக்கு தீர்வாக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் அதிகாரங்கள் மத்திய அரசியடம் குவிக்கப்பட்டிருந்தது. வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படுமென விதிக்கப் பட்டிருந்தது. மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரமும் ஜனாதபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட 72 மணி நேரத்திற்குள் எமது ஆயுதத் தளபாடங்கள் இந்திய அமைதிப் படைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டிருந்தது. எமக்குத் தரப்பட்ட இரண்டு மணிநேர கால அவகாசத்தில் ஒரு தீர்க்கமான முடிவைப் பிரபாகரன் எடுத்தார். அதாவது, எந்தக் காரணத் திற்காகவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என உறுதியான தீர்மானம் மேற்கொண்டார்.

<img src='http://semparuthi.com/x/images/jan05/mgr.jpg' border='0' alt='user posted image'>

சரியாக இரு மணிநேரத்தின் பின் திரு.டிக்சிட் திரும்பி வந் தார். வந்ததும் எமது முடிவைக் கேட்டார். இந்த ஒப்பந்தத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது என்றோம். ஏன் ஏற்க முடியாது என்று கேட்டார்.காரணங் களை விளக்கிக் கூறினோம். ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத் திட்டத்திலுள்ள குறை பாடுகளை சுட்டிக் காட்டி இத்திட்டம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யத் தவறிவிட்டது என்றோம். எமது முடிவை மாற்றுமாறு மன்றாட்டமாகக் கேட்டார். பின்பு வற்புறுத்திக் கேட்டார். இறுதியாக மிரட்டத் தொடங்கினார்.

"நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இரு நாடுகள் செய்து கொள்ளும் உடன்பாடு இது. இதனை நீங்கள் எதிர்த்தால் பாரதூரமான விளைவுகளை எதிர் நோக்க நேரிடும்" என்று மிரட்டினார். எப்படியான விளைவுகளை எதிர் நோக்க நேரிடும் என்று கேட்ட பொழுது, "இங்கே தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருக்க வேண்டி நேரிடும். ஒப்பந்தத்தை ஏற்கும் வரை இந்தியாவில் உங்களை தடுத்து வைத்திருக்க எம்மால் முடியும்." என்றார்.

"எத்தனை காலமோ, எத்தனை ஆண்டுகளோ எம்மைத் தடுப்புக் காவலில் வைத்தாலும் நாம் இந்த ஒப்பந்தத்தை ஏற்கப் போவதுமில்லை. ஆயுதங்களை ஒப்படைக்கப் போவது மில்லை.ஔ என்று உரத்த குரலில் சொன்னார் பிரபாகரன். ஆத்திரத்தில் அவரது விழிகள் பிதுங்கின. திரு.டிக்சிட் கேரளத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தமிழ்மொழி நன்கு தெரியும். நான் மொழிபெயர்ப்பதற்கு முன்னரே பிரபாகரன் அடித்துச் சொன்னது அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது.

"ஆயுதங்களை நீங்கள் ஒப்படைக்க மறுத்தால், இந்திய இராணுவத்தைக் கொண்டு உங்களது ஆயுதங்களைப் பறித்தெடுப்போம். இந்திய இராணுவத் திற்கு முன்பாக உங்களது போராளிகள் வெறும் தூசு."என்று ஆவேசத்தில் கூச்சலிட்டவர் தனது சுங்கானை எடுத்து பிரபாகரனிடம் காண்பித்து, இதனை நான் பற்றவைத்து புகைத்து முடிக்கும் நேரத்திற்குள் இந்திய இராணுவம் உங்களது போராளிகள் அனைவரையும் துவம்சம் செய்துவிடும் என்று கூறிவிட்டு ஏளனமாக ஒரு எக்காளச் சிரிப்புச் சிரித்தார். எங்கள் எல்லோரது முகங்களும் கோபத்தினால் சிவந்தது. மிகவும் சிரமப்பட்டு ஆத்திரத்தை அடக்கிய பிரபாகரன், "உங்களால் முடிந்ததைச் செய்து பாருங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை" என்று உறுதிபடக் கூறினார்.

டிக்சிட்டுக்கு கோபத்தால் உதடு கள் நடுங்கின. "மிஸ்டர் பிரபாகரன், நீங்கள் இந்திய அரசாங்கத்தை இத் துடன் நான்கு தடவைகள் ஏமாற்றி விட்டீர்கள்" என்றார். "அப்படியானால், நான்கு தடவைகள் எமது மக்களை இந்திய அரசிடமிருந்து காப்பாற்றயிருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்." என்றார் பிரபாகரன். திடீரென எழுந்த டிக்சிட் அங் கிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இந்தியத் தூதர் டிக்சிட்டின் "மிரட்டல் இராஜதந்திரம்" தோல்வி அடைந்தபோதும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் மீது திணித்துவிடும் முயற்சி தொடர்ந்து. ராஜீவ் நிர்வாகத்தின் உயர் அதிகாரி கள், மாறி மாறி, ஒவ்வொருவராக எம்மைச் சந்தித்து ஒப்பந்தத்தின் முக்கி யத்து வத்தை எடுத்து விளக்கினார்கள். இந்திய உள்ளக புலனாய்வுத் துறையின் (I.<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo--> அதிபர் திரு.எம்.கே நாராயணன், வெளி விவகார அமைச் சரின் கூட்டுச் செயலர் திரு.சகாதேவ், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த திரு.நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாக மாறி மாறி சந்திப்புகளை நிகழ்த்தினர். புதுடில்லியில் அசோகா விடுதியில் இந்தத் திரைமறைவு நாடகம் பல நாட் களாகத் தொடர்ந்தது. திரு.பிரபாகரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உருக்குப் போல உறுதியாக நின்றார். புலிகள் மிகவும் பிடிவாதமாக நிற்கின்றார்கள் என பிரதமர் ராஜீவ்காந்திக்கு அறிவிக் கப்பட்டது. அவர் தனது அதிகாரிகளை அழைத்து மந்திராலோசனை நடத்தினார். இறுதி முயற்சியாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை புதுடில்லிக்கு அழைப்பதென முடிவாகிறது. ஜூலை 26 ஆம் திகதி பிரதமரின் விசேட விமானத்தில் எம்.ஜி.ஆர் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

அன்றிரவே, இந்திய தலை நகரிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரனும் நானும் யோகரத்தினம் யோகியும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப் பட்டோ ம். முதலமைச்சருடன் திரு.டிக்சிட்டும் இருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம்மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவு செய்யப் பட்டுள்ளது என்றும் ஒரு நீண்ட புராணம் பாடிக் கொண்டிருந்தார் டிக்சிட். நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஓதமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப் பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க் கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்கமாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒரு பொழுதும் அனுமதிக்கப் போவ தில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால் பாரதூரமான விளைவு களை சந்திக்க நேரிடும் என்று சீறினார் இந்தியத் தூதுவர்.ஔ

இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாசையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க இத் திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் யோக ரத்தினம் யோகி. இதைத் தொடர்ந்து யோகிக்கும் டிக்சிட்டுக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. ஓசென்ற வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த திரு.பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விபரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்ஔ என்று டிக்சிட் கதற, அதனை மறுத்துரைத்தார் யோகி. ஓயாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லைஔ என்றார் யோகி. "அப்பொழுது என்னை ஒரு பொய்யன் என்ற சொல் கின்றீர்களா?" என்று கேட்டார் டிக்சிட். "நீங்கள் உண்மை பேச வில்லை"என்றார் யோகி. வாக்குவாதம் சூடு பிடித்தது. கோபா வேசம் கொண்டவராக முதலமைச்சரைப் பார்த்து, "பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்" எனக் கதறினார் டிக்சிட். ஒரு ஏளனப் புன்ன கையுடன் மெளனம் சாதித்தார் பிரபாகரன். இந்த விவாதத்தில் நானும் குறுக்கிடவில்லை. இந்தியத் தூதுவர் டிக்சிட் நிதானம் இழந்து உணர்ச்சி வசப்படுகிறார் என்பதை உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். "நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்" என டிக் சிட்டை பண்பாக வேண்டிக் கொண்டார் முதலமைச்சர். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளி யேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத் திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக் கொள்ள நாம் மறுப் பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர் எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கனோம். ஈழத்து அரசியற் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்கு வாரத்திற்கும் மிரட்டலுக்கும் பணிந்து விட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத் தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம். தமிழரின் இனப் பிரச் சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிர மித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச் சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடு களையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர-புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப் பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய-இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபா கரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத் தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை. முதலமைச் சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே திரு.டிக்சிட்டும் ஒரு இந்திய புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், "ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத் தினார் அல்லவா?" என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மெளன மாக நின்றோம். "முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்" என்றார். "அப்படியே செய்வோம்" என்று கூறிவிட்டுச் சென்றோம். முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுடனான கடைசிச் சந்திப்பு அதுதான். இந்திய-புலிகள் போர் தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கடும் சுகவீன முற்றிருந்தார். அப்பொழுது ஒரு நாள் சென்னையில் தங்கியிருந்த கேணல் கிட்டுவைத் தனது வீட்டுக்கு அழைத்து பண உதவி செய்ததுடன், இந்திய இராணுவத்துடன் போர் நிறுத்தம் செய்யுமாறும், இந்திய அரசுடன் பேச்சு வார்ததை நடத்து மாறும் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பயிருந்தார்.

1987ஆம் ஆண்ட நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலமானார். மறுநாள் 24ஆம் திகதி இந்திய தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்றைய நாளில் தமிழீழத்தை ஆக்கிரமித்து நின்ற இந்தியப் படைகள் போர் நிறுத்தம் அறிவித்தனர். வீதிகளில் ரோந்து சென்ற இந்தியத் துருப்புகள் முகாம்களில் முடக்கப் பட்டன. அவ்வேளை யாழ்ப்பாணம் வடமராட்சியில் இந்தியப் படைகளின் கடும் வேட்டைக்கு இலக்காகி பல்வேறு அவலங்களை அனுபவித்து வந்த நானும் எனது மனைவி அடேலும் அன்றைய நாள், எம்.ஜி.ஆரின் நினைவாக அமைதி பேணப்பட்ட அந்த சமூக சூழலைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து தப்பிச் செல்ல முடிந்தது.

தமிழ்நாட்டில் நாம் வசித்தபோது எமது அமைப்பின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்த அந்தப் பெரிய மனிதர் தனது மறைவில் கூட எமக்கு உயிர் அளிப்பதில் பெரும் பங்கு வகித்தார் என அடேல் பாலசிங்கம் "சுதந்திர வேட்கை" என்ற தமது நூலில் எம்.ஜி.ஆர் அவர் களுக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

- முற்றும் -
<img src='http://semparuthi.com/x/images/jan05/mgr1.jpg' border='0' alt='user posted image'>
நன்றி செம்பருத்தி.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி வசிசுதா. ஏற்கனவே வாசித்தது தான்- என்றாலும் கள உறவுகளுக்கு பயன்மிக்க இணைப்பு. எல்லா உறவுகளும் வீட்டில் பாதுகாக்க வேண்டிய புத்தகங்கள் திரு. அன்ரன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோருடைய புத்தகங்கள். இவை எமக்காக அல்ல. இனி வரும் தலைமுறைக்காக.
.
.!!
Reply
#3
பாலசிங்கத்தின் ஞாபக மறதியா அல்லது வசியின் தவறா எம்.ஜி.ஆர் இறந்தது கார்த்திகை 23 அல்ல மார்கழி 24.


:roll: 8) :roll: 8)
Reply
#4
மிக்க நன்றி.

ஒரு இலங்கை நண்பர் வாயிலாக நான் ஏற்கெனவே முனைவர் பாலாசிங்கம் அவர்களின் நூலைப் படித்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் ஒருமுறை அதைப் படிக்கும் போது இன்னும் திருப்தியாகத்தான் இருந்தது. மீண்டும் நன்றி.

திரு. எம். ஜி. ஆர் அவர்கள் ஈழத் தமிழர்பால் கொண்டிருந்த ஈர்ப்பும் அக்கறையும் எங்களுக்குத் தெரியாததல்ல. அத்தோடு, ராஜீவ் அரசாங்கத்தால் பிரபா எத்தனை வஞ்சகமாக வற்புறுத்தப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் பணிக்கப்பட்டார் என்பதும் இந்தியத் தமிழன் ஒவ்வொருவனும் அறிந்ததுதான். ஆனால், திரு. எம். ஜி. ஆர் அவர்கள் அந்த ஈனச் செயலை நியாயப்படுத்தி ஒரு சர்வதேசத்தனமான தமிழ்த்துரோகத்துக்கு உடந்தையாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, இந்தியத் தமிழராகிய எங்கள் மனதில் நிலையாகப் பதிந்துவிட்ட ஒன்று.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எத்துணை தர்மசங்கடமான சூழ்நிலையில் இதற்குச் சம்மதித்தார் என்பதை அறிந்துகொண்ட இந்தியத் தமிழன் ஒவ்வொருவனுக்கும் அந்தத் தருணத்தில் இரத்தம் கொதித்தது. தெரியுமா? சண்டை, தமிழனுக்கும் சிங்களனுக்கும். இதில் சமரசம் செய்துவைக்கப் போன இந்தியா ஏன் கையெழுத்திடுகிறது? அதுவும் ஒரு புகழ்மிக்க போர்ப்படை நாயகனை மிரட்டிப் பணியவைக்க, இந்தியா ஒரு வஞ்சக நாடகமல்லவா நடத்தியிருக்கிறது? சமரசப் பேச்சு என்று எதுவுமே இல்லை: சிங்களனையும் அழைக்கவில்லை. இப்படியொரு துரிதகதியில், "கையெழுத்துப் போடு!" என்று பிரபாவை மிரட்ட தீக்சித்திற்கு என்ன அருகதை இருக்கிறது, என்ன யோக்கியதை இருக்கிறது? சிங்களனை ஏன் கையெழுத்திடச் சொல்லவில்லை? இப்படியொரு கேவலமான கேலிக்கூத்து நடந்துகொண்டிருக்கிற நேரத்தில், இதைத் தடுக்க மாண்புமிகு எம். ஜி. ஆர்;. அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் எங்களுடைய மனக்குறை.

எனினும், இந்திய அரசின் ஒரு மாநில முதலமைச்சர் என்ற நிலையில் திரு. எம். ஜி. ஆர் அவர்கள் மிகமிக சாதுர்யமான முறையில் நடந்துகொண்டார். ஈழத்தமிழர் பிரச்னையில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் அவருடைய செயல்பாடுகளில் நிச்சயமாக இருந்தது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பகிரங்கமாக அதை வெளிப்படுத்தவோ நடைமுறைப் படுத்தவோ எம். ஜி. ஆர் இயலாதவராக இருந்தார் என்பதுதான் உண்மை.

திரு. எம். ஜி. ஆர் அவர்கள் ஓர் இணையற்ற ஏழைப் பங்காளர்: ஆனால் எழுச்சிமிக்க ராஜதந்திரி அல்ல! அடக்கமான பண்பாளர்: ஆனால் அரசியல் சாணக்கியன் அல்ல! மக்கள் பின்பலம் கொண்ட மகா சக்திமான்: ஆனால் மதிநுட்பம் கொண்ட பெருந்தலைவன் அல்ல! தமிழுக்கும் தமிழருக்கும் அவர் தொண்டாற்றியது உண்மை. ஆனால் தமிழ்ப்பகைவர் தலைநாணும் வண்ணம் அவர் எந்தச் சாதனை முத்திரையுமே பதிக்கவில்லை என்பது உண்மையிலும் உண்மை. அப்படிக் கிடைத்த அரிய வாய்ப்புக்களில்கூட அவர் மௌனம் சாதித்து வந்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. திரு. எம். ஜி. ஆர் அவர்களில் நிஜமான முகம் இதுதான்.

கடைந்தெடுத்த ஒரு மாநில அரசியல்வாதியாக விளங்கிக்கொண்டு, இந்தியப் பெருநாட்டு அரசியலையே கலக்கிக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்கள்கூட, விளம்பர லாபம் கருதியேனும் சில தருணங்களில் ஈழத் தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுத்ததுண்டு. ஆனால் எம். ஜி. ஆர் அவர்கள் எந்தவொரு தருணத்திலும் தமிழீழத் தாயகத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டதில்லை. கச்சத் தீவில் எத்தனையோ தமிழ் மீனவர்கள் காடையர்களால் வேட்டையாடப்பட்ட போது, ஒருநாள்கூட எம். ஜி. ஆர். அவர்களின் கண்டனம் வெளிவரவில்லை. இது உலகம் அறிந்த வரலாறு.

சந்திரிகாவின் சர்வகால ஸ்நேகிதி செல்வி ஜெயலலிதா அவர்கள், இந்தியாவில் இருந்துகொண்டே ஈழத்தமிருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடும் கெடுபிடிகள், எல்லார்க்கும் தெரிந்ததுதான். அந்தக் காட்டுத் தர்பார் கதாநாயகிகூட "கச்சத் தீவை மீட்போம்!" என்று ஒருநாள் சத்தம் போட்டதாகப் பேப்பரில் படித்தோம். இது இப்படியிருக்க, மருந்துக்குக்கூட ஈழத்தமிழர்க்கு ஆதரவானதோர் அறிக்கையை எம். ஜி. ஆர் காலத்தில் நாங்கள் பார்த்ததில்லை. கச்சத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்த இந்திராவை "சேலை கட்டிய ஹிட்லர்!" என்று கருணாநிதி வசைபாடிய போதுகூட, திரு. எம். ஜி. ஆர் அவர்களிடமிருந்து சின்னதொரு கண்டனமேனும் கிளம்பவில்லை என்பது எங்களுக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

மொத்தத்தில், ஈழத்தமிழருக்கு எம். ஜி. ஆர் செய்த சில உதவிகளை மட்டும் நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். நன்றி மிகுந்த அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம். அதே நேரத்தில், ஈழத் தமிழர் பிரச்னையில் தைரியத்தோடு செய்திருக்க வேண்டிய பல்வேறு சாதனைகளினின்று அவர் சறுக்கியதை நாம் சுட்டிக்காட்டாமல் இருட்டடிப்புச் செய்துவிடுகிறோம்.

குணக்குன்று திரு. எம். ஜி. ஆர் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்க்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மாறாக, அவர் செய்யத் தவறியவற்றையும் ஈழத் தமிழன் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

எம். ஜி. ஆர் பற்றி ஒட்டியும் வெட்டியும் பேசுதற்கு நூற்றுக்கணக்கான விடயங்கள் உண்டு. அவற்றுள் மோலோங்கி நிற்பதாகச் சொல்ல வேண்டுமானால் அவருடைய பரிவு உள்ளம் ஒன்றுதான். அதற்கான சான்றுகள் ஆயிரக் கணக்கில் உண்டு. ஆனால் நிச்சயமாக அவர் ஒரு சாதனை வீரர் அல்லர். அதாவது, புரட்சித் தலைவர் என்ற பட்டத்திற்குத் தகுதியானவர் அல்லர். இது என்போன்ற இலட்சக் கணக்கான தமிழர்களின் கருத்து என்பதைப் பணிவுடன் இங்கு பதிவுசெய்து கொள்ள விரும்புகிறேன்.

நமக்கு இப்போது வேண்டியது பாரதி போன்ற பொறிபறக்கும் போர்க்கவசங்கள். அறிஞர் அண்ணா போன்ற அச்சமற்ற நல்லறிவுப் பெட்டகங்கள். வைகோ மற்றும் நெடுமாறன் போன்ற வைரம் பாய்ந்த எஃகு உள்ளங்கள். அவ்வளவுதான்.

மீண்டும் பேசுவோம்.

என்றும் அன்புடன்:
தொ. சூசைமிக்கேல்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)