Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது
#1
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது: உணர்ந்து செயற்படுவது சர்வதேச சமுகத்தின் பொறுப்பு - விடுதலைப் புலிகள்

இலங்கையின் தற்போதைய அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு இனப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் காண முடியாது என்பதே பொதுக்கட்டமைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு காண்பிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் திரு. தயா மாஸ்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

பொதுக்கட்டமைப்பில் நாம் கைச்சாத்திட்டிருந்தாலும், அது அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து ஆரம்பம் முதலே கேள்வியெழுப்பி வந்தோம். ஏதோ ஒரு வழியில் இதனைத் தடுத்தே ஆவார்கள் என்றும் எமக்கு தெரியும்.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பானது ஈழத்தமிழர்களுக்கு எதுவித தீர்வையும் பெற்றுத் தராது. இதனால்தான், சமாதான பேச்சுக்களின்போது நிரந்தரத் தீர்வு குறித்து விடுதலைப் புலிகள் பேசுவதற்கு முன்வரவில்லை. தெற்கில் இதற்கான ஒரு அரசியல் சூழ்நிலை இல்லாததுடன் இந்த அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு நிரந்தர தீர்வு பற்றி ஒருபோதும் பேச முடியாதென்பதை எமது அரசியல் ஆலோசகர் முனைவர் ஆன்ரன் பாலசிங்கம் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளார்.

நிரந்தர தீர்வென்பதை விட போரினாலும், கடல்கோள் அனர்த்தத்தினாலும், பாதிக்கப்பட்ட பல இலட்சம் தமிழ் மக்கள் தொடர்ந்து இன்னமும் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கக்கு எதுவுமே வழங்கக்கூடாது என்பதில் சிங்கள பேரினவாதம் தனது அனைத்து துறைகளையும், பயன்படுத்தியுள்ளமை இந்த தீர்ப்பின் மூலம்தெளிவாகியுள்ளது.

மனிதாபிமானம் இந்த நாட்டில் செத்துவிட்டதென்றாலும், இன்றைய யதார்த்த நிலையை என்றாவது இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கிளிநொச்சியில் தான் உள்ளது.

புலிகளுடன் எவ்வித உடன்பாட்டை ஏற்படுத்தினாலும் அதில் கிளிநொச்சியும் இன்றி அமையாததென்ற யதார்த்தத்தை சிங்கள பேரினவாதம் புரிந்து கொள்ளவி;லை.

இந்த தீர்ப்பின் மூலம் பொதுக்கட்டமைப்பு முக்கப்பட்டு விட்டது. இனி இது பற்றி கதைப்பதில் அர்த்தமில்லை. இது பற்றி இனி சர்வதேச சமுகம் தான் உணர்ந்து செயற்படவேண்டும். எனவும் குறிப்பிட்டு;ள்ளார்.
http://www.sankathi.net/index.php?option=c...=1619&Itemid=41
Reply
#2
ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கான முகாமைத்துவ அமைப்பிற்கான ஒரு கட்டமைப்பிற்கே இந்தக் கதி என்றால்,
சிறி லங்கா அரசுடன் சமாதான பேச்சுவாற்த்தைகள் மூலம் தீர்வொன்றைக் காணலாம் என்று பரப்புரை செய்வோரே ,இனி என் சொல்வீர்.
Reply
#3
http://www.eelampage.com/?cn=18626
சமாதானப் பேச்சுக்களின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது: இரா. சம்பந்தன்
[ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2005, 17:11 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தென்னிலங்கை அரசியல் நிலைமைகளால் சமாதான பேச்சுக்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்புக்குப் பிறகு ஊடகவியலாளர்களுக்கு இரா. சம்பந்தன் அளித்த நேர்காணல்:

தென்னிலங்கையின் இன்றைய அரசியல் நிலமை தமிழ்த் தேசிய இனத்திற்கு பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றது.

கடந்த மூன்றரை வருடங்களாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் பிறகு அரசியல் ரீதியாக எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இடைக்கால நிர்வாகம், பொதுக்கட்டமைப்பு யாவும் முடக்கப்பட்டு ஒருவிதமான முன்னேற்றமும் உருவாகவில்லை.

இப்படியான நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலமாக தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படலாம் என்பதில் நாங்கள் எல்லோரும் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அவ்விதமான ஒரு நிலையை நாங்கள் விரும்பவில்லைதான். ஆனால் அந்த நிலைமைக்கு நாங்கள் எல்லோரும் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இது தொடர்பாக மக்கள் சகல விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நாங்கள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றோம்.

எல்லா மக்களுக்கும் நிகழ்வுகள் புரியமால் இருக்கலாம். மக்கள் அனைவரும் உண்மையை அறிய வேண்டும். மக்களும் தங்களுடைய எதிர்ப்புக்களை, தங்களுடைய அதிருப்திகளை தெரிவிக்கக்கூடிய வகையில் சகல விடயங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காக நாங்கள் மக்கள் மத்தியில் சென்று விளக்கங்களை கொடுக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.

அதேபோல் சர்வதேச சமூகத்தினருக்கும் விளக்கங்களை கொடுக்க உள்ளோம். அவர்களுக்கு நிலைமை தெரியாமல் இல்லை. இருப்பினும் தற்போதைய அரசியல் நிலைமைகளால் பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை சுட்டிக்காட்ட உள்ளோம்.

ஏனெனில் ஒரு சமாதானத்தை முன்னெடுப்பது என்ற அடிப்படையில் யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்திய பிறகு ஒரு நாடு- ஒரு அரசாங்கம் மூன்றரை வருடமாக அதனை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமாக எதனையும் செய்யமுடியாது இருக்குமாக இருந்தால் அதனைப்பற்றி நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டியதொரு கடமைப்பாடு இருக்கின்றது. அந்த விளக்கத்தை நாங்கள் நிச்சயமாக கொடுப்போம்.

பொதுக்கட்டமைப்பு என்பது தற்போது உயிரிழந்து போய் உள்ளது. அது தொடர்பாக பேசுவதில் எதுவிதமான பிரயோசனமும் இல்லை.

திருமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடைசியாக புலிகள் மீதான தாக்குதல் திருகோணமலையில்தான் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலையைப் பொறுத்தவரை அது தமிழர் தாயகத்தின் ஒருபகுதியே என்றார் அவர்.
Reply
#4
பொதுக்கட்டமைப்புக்கு தடை குறித்து

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இத் தீர்ப்பு துரதிர்ஸ்டவசமானது. ஏனெனில் கடந்த காலங்கள் போலவே தமிழ்மக்களுக்கு எந்தவித நன்மைகளும் சென்றுவிடக்கூடாது- தீர்வு முயற்சிகள் எதுவும் வெற்றி பெறக்கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதத் தலைமைகள் வழிமுறைகளை கையாண்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக மதப் பீடங்களைக்கொண்டோ அப்படி இல்லாத நிலையில் நீதித் துறையினைக் கொண்டோ பேரினவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். முன்னெடுக்கப்பட்ட பல தீர்வு முயற்சிகளை சீர்குலைத்துள்ளார்கள். இதுதான் பொதுக்கட்டமைப்பிற்கும் ஏற்பட்டுள்ளது.

பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு மனிதாபிமான நெருக்கடிக்கு உதவும் ஒரு சாதாரண கட்டமைப்பு. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவதற்கான இந்த சாதாரண கட்டமைப்பையே ஆட்டம் காணச்செய்துள்ளார்கள் பேரினவாதிகள்.

சிறிலங்கா நீதித்துறையே இவ்வாறான முடிவை எடுத்ததில் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

சிறிலங்கா நீதித்துறை தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதில் கடந்த காலங்களில் விரோதமாகவே செயற்பட்டுள்ளது.

சிறிலங்கா சிறையிலேயே தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் படுகொலை செய்தவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்ட போதிலும் படுகொலை செய்தவர்களை பிழை செய்யவில்லையெனக் கூறி அண்மைக்காலத்தில் கூட விடுதலை செய்துள்ளனர்.

வரலாற்று ரீதியாகவும் பார்ப்போமானால் தமிழ்மக்களுக்கு எதிரான சட்டங்கள் கூட சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டு தமிழ்மக்கள் பெரும் அநீதிக்கு உட்படுத்தப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் தான் பொதுக்கட்டமைப்பு தொடர்பான தீர்ப்பையும் கருத வேண்டியுள்ளது.

தீவிராமாகும் நிழல் யுத்தம்- இனியும் பொறுப்பதற்கில்லை

தென்தமிழீழத்தில் அண்மையில் திருகோணமலையில் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிறிலங்கா படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

போர்ச் சூழலை உருவாக்கும் நோக்குடனும் தமிழ்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களது செயற்பாடுகள் அமைந்து வருகின்றன. ஏதாவது ஒருவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை போருக்குள் தள்ளிவிடும் ஒரு போக்கைத்தான் சிறிலங்கா படைத்தரப்பு செய்து வருகிறது. இதிலும் குறிப்பாக தென்தமிழீழத்தில்தான் இவ்வாறான நிலைமைகள் உள்ளன.

போராளிகளுக்கான அச்சுறுத்தல் கூடுதலாக உள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டின் படி நிராயுதபாணிகளாகத்தான் போராளிகள் அரசியல் பணியை செய்யவேண்டியுள்ளது. இந்நிலையில் போராளிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசபடைகள் நிழல் யுத்தம் ஒன்றினை தீவிரமாக்கியுள்ளது என்பதைத்தான் கூறமுடியும்.

போர்நிறுத்த உடன்பாடு, அமைதி முயற்சிகள் ஆகியவற்றை குழப்பிக்கொண்டு முறித்துக்கொண்டு செல்ல எமது தலைப்பீடம் விரும்பாது.

தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பொறுத்தவரையில் அமைதி வழியில் தீர்வுகளுககான முயற்சிகளை முயன்று பார்த்திருக்கின்றோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். மிகப் பொறுமையையும் விட்டுக்கொடுப்பையும் எமது தலைவர் செய்து இருக்கிறார். சமாதானச் சூழலில்தான் பல போராளிகளையும் தளபதிகளையும், மக்களையும் இழந்து இருக்கிறோம்.

நீண்டதொரு பொறுமையுடன் காத்திருக்கிறோம். ஆனால் தற்போது நிலைமைகள் மோசமாக்கப்பட்டுள்ளது. போராளிகளது பயணங்கள் முடக்கப்பட்டு நிழல் யுத்தம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இராணுவகட்டுப்பாட்டு பகுதிகளில் இராணுவமும் ஆயுதக்குழுக்களும் போராளிகளை படுகொலை செய்தவண்ணமுள்ளனர். இந்நிலைமைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார் அவர்.

தமிழ் மக்களின் நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
http://www.eelampage.com/?cn=18630
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)