09-16-2005, 03:47 AM
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.
சென்ற முறை கதிர்காமரை அனுரத்த ரத்வத்தையும், அவர்களின் விசுவாசிகளும் ஏன் கொலைசெய்திருக்கக்கூடாதெனப் பார்த்தோம். இப்போ ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷா ஏன் கதிர்காமரை கொன்றிருக்கூடாதென நோக்குவோம். பொதுஜன ஐக்கிய முன்னணிக் கட்சிக்குள் ஆழமாக துவேசங்களும், அதிகாரப்போட்டிகளும் அன்று தொடக்கம் இன்றுவரை மேலோங்கியிருப்பதை வாசகர்கள் சாதாரணமாகவே பார்க்கின்றீர்கள். அதன் உச்சக்கட்டமே கதிர்காமர் என்னும் சிங்கள விசுவாசியின் கொலை. மகிந்த ராஜபக்ஷா இப்போ பொதுஜன ஐக்கிய முன்னணித்தலைவராக வந்து ஜனாதிபதி வேட்பாளராகவும் பதவி வகிக்கின்றார். அவரின் பதவி இவ்வளவு காலமும் பிந்திப்போனதற்கு கதிர்காமரும் ஒருவிதத்தில் காரணமாகின்றார். ஏனெனில் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராகவிருந்து சந்திரிகாவிற்கு விசுவாசமாகவிருந்து இந்த இடத்தைப்பிடித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷா கதிர்காமர் இல்லாதிருந்திருந்தால் பத்து வருடங்களுக்கு முன்னரே சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் இருந்திருப்பார். அத்துடன் அவர் ஓர் சிங்கள வெறியர் எனக்கூடச் சொல்லலாம். ஜே.வி.பியினரை நம்பிக்கெட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு இப்போ மீண்டும் அவர்களின் காலடியில் போய் விழுந்ததன் காரணமும் மகிந்த ஓர் சிங்கள வெறியர் என்பதைக்கட்டியம் கூறுகின்றதல்லவா? பதவிவெறிபிடித்து தான் எப்படியும் ஆட்சியைப்பிடித்தே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயத்தின் பேரில் யாருடன் கூட்டுச்சேர்வது என்பது தெரியாது, ஜே.வி.பியினருக்கு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக எண்ணி அவர்களுடன் சேர்ந்திருக்கின்றார்கள். ஆனால் ஜே.வி.பியினர் பொதுஜன ஐக்கியமுன்னணியினரின் தாய் அமைப்பான சுதந்திரக்கட்சி ஆட்சியில் தமது கட்சியின் பல உறுப்பினர்களை பலிகொடுத்ததையும் மறந்திருக்கமாட்டார்கள். இருப்பினும் தமக்கும் ஏதாவதோர்வகையில் அரசில், அரசியலில் இடம் பிடிப்பதற்காக இவர்களுடன் சேர்ந்திருக்கின்றார்கள். கூடவே பன்னிரெண்டு கோரிக்கைகளை வைத்து அவையாவையும் மகிந்த ஏற்றுக்கொண்டு அவர்களுடன் சேர்ந்திருக்கின்றார். கொசுறுத்தகவலாக இவர்களின் கூட்டை சந்திரிகாவே ஏற்காமல் மகிந்தாவை சாறுசாறென சாறியிருப்பதாகவும், அவரின் வேட்பாளர் பதவியை பறிப்பதாகவும், கட்சித்தலைமையில் இருந்து விலத்தப்போவதாகவும் பயமுறுத்துகின்றாராம். அவை உண்மையாகவிருப்பின் இனிவரும் காலங்களில் பண்டாரநாயக்காவின் குடும்ப அரசியல் கேள்விக்குறியாகும் என்பது நு}று வீதம் உண்மையாகிவிடும். பதவிமோகம் கொண்டு அலையும் சந்திரிகா அப்படிச்செய்ய வாய்ப்பில்லை. அதற்கான காரணம் பற்றி பின்னர் விபரிக்கின்றேன். அதற்கு முன்னர் மகிந்தாவின் பேரில் உள்ள சந்தேகத்தை பார்ப்போம். மகிந்த ராஜபக்ஷா பிரதமமந்திரியாவதற்கு முன்னர் கதிர்காமரின் பெயர் அப்பதவிக்கு முன்மொழியப்பட்டு தமிழர் என்னும் ஒரேயொரு காரணத்திற்காக அப்பதவி மகிந்தாவிற்கு போய்ச்சேர்ந்தது. நீண்டகால கட்சியுறுப்பினராகவிருந்தும் தனக்கு அப்பதவி கிடைக்காது கதிர்காமருக்கு அப்பதவி போகவிருந்ததை எண்ணியும், அத்துடன் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் கதிர்காமரின் பெயர் கட்சிக்குள் உயர்ந்ததையும் ஜீரணிக்கமுடியவில்லை மகிந்தாவால். கூடவே சந்திரிகா எண்ணாதவகையில் புலிகளுக்கு எதிராக செயற்படுவதாக எண்ணி, தமிழருக்கு எதிராக திறம்பட உழைத்தமையால் சிங்களவரும் கட்சிக்குள் கதிரை உயர்த்தியதன் வெளிப்பாடாக சந்திரிக்காவிற்கு அடுத்த நிலை கதிருக்கு போய்விடும் என்கின்ற நிலையில் அக்கொலையை மகிந்த செய்யவாய்பிருக்கின்றது. ஜே.வி.பியினர் அமைச்சரவையில் இருந்து விலகியவுடன் ஆட்டம் காணத்;தொடங்கிய அவர்கள் ஆட்சியை கதிர்காமரின் இராஜதந்திர நகர்வுகளால் சற்றேனும் நின்று நிலைக்கக்கூடியவகையில் நிறுத்தியமையாலும், இதன் காரணமாக கதிர் கட்சிக்குள் உயர்ததன் வெளிப்பாட்டாலும் மகிந்தவினால் அக்கொலை நடக்க வாய்பாகின்றது. கதிர் இன்னும் உயிருடன் இருந்தால் தனது பிரதம மந்திரிபதவி தன்வசம் நின்று நிலைக்காது என்னும் வகையில் கதிரைக்கொல்லவேண்டிய தேவை மகிந்த ராஜபக்ஷாவிற்கு ஏற்பட்டிருக்கும். தான் பிரதமராகவிருக்கையில் ஜே.வி.பியினர் பொதுக்கட்டமைப்பிற்கு முட்டுக்கட்டையாகவும், முரண்பாடாகவும் செயற்படுவதாக குற்றம்சுமத்தி சந்திரிகாவிற்கு ஜால்ரா அடித்து, சந்திரிகாவின் நன்மதிப்பைப்பெற்ற மகிந்த ராஜபக்ஷாவால் எப்படி இப்போ அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கக் கூடியதாகவிருக்கின்றது. அதாவது சந்திரிகாவிற்கு ஜால்ரா போட்டபடி தனது பதவிக்காக இவ்வளவு காலமும் ஓடுமீன் ஓட உறுமீன் வருமட்டும் காத்திருந்திருக்கின்றார் பார்த்தீர்களா? வாசகர்களே! ஜே.வி.பியினரையும், சிங்கள கெல உறுமயாவையும் பொதுக்கட்டமைப்பிற்கு எதிரானவர்கள் என குற்றம்சாட்டிய மகிந்த இன்று அவர்களின் பன்னிரென்டு கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அதை நிறைவேற்றப்போகின்றார் எனில் அவர் எப்படிப்பட்ட இனத்துவேசமானவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இனத்துவேசமானவராகிய மகிந்தா, ஓர் தமிழன் வெளிநாட்டமைச்சராகவும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையிலும் போற்றப்படும் இடத்தில் இருக்கின்றார் எனில் ஏன் அவரை மகிந்த கொன்றிருக்கக்கூடாது எனப்புரிகின்றதல்லவா? இவர்கள் மூலம் தமிழருக்கான நிரந்தரத்தீர்வை தரமுடியுமா? என்கின்ற கேள்விக்கான விடையை வாசகர்கள் உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.
அடுத்து நாம் பார்க்கப்போவது இக்கொலையால் இலங்கை அரசியலில் மாற்றம் வருமா? என்பதே. அவ்வாறு மாற்றம் வருவதற்கான எதுவிதமான சந்தர்ப்பமும் கிடையாது. அன்றைய ஜனாதிபதியான பிரேமதாசா ஜே.வி.பியினரால் கொல்லப்படுகையில் பழியை புலிகள் மேல் போட்டு அதன் உண்மையான குற்றவாளிகளை தப்பவைத்தவர்கள், அதேபோன்று காமினியையும், லலித் அத்துலத் முதலியையும் கொன்று உண்மையைப்புதைத்தார்கள். பின் லலித்தை கொன்றவர் ஒரு தமிழர் எனச்சொல்லியும், அவர் கிருலப்பனையில் கடையொன்றின் முன் தற்கொலை செய்து கிடந்தார் என்றும் கதைகட்டியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஜனாதிபதி சந்திரிகாவின் காய்நகர்த்தலானது நல்லபிள்ளையாய் நடித்த மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதியாக்கி அவர் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி மீண்டும் தானே பிரதமமந்திரியாகலாம் என்கின்ற நினைவை இப்போ மகிந்த இல்லாது செய்ய எத்தனித்திருப்பதானது அவர்கள் இருவரினதும் அதிகார வெறியையே காட்டிநிற்கின்றது. ஆட்சியில் நானா? அன்றி அவரா? என்கின்ற இழுபறி நிலையை இப்போ இலங்கையில் ஏற்படுத்தியிருக்கின்றது. வரும் மாதத்தில் சிலவேளைகளில் மகிந்தாவின் ஆசையில் மண்போடப்படலாம். அத்துடன் அரசியல் கோமாளி அனுராவிற்கு யோகமாகவும் அமையலாம். அதன் மூலம் சந்திரிகா மீண்டும் தன்னை இலங்கை அரசியலில் நிலைநிறுத்த முற்படலாம். அவருக்கு யார் போனால் என்ன? கிடைப்பது இலாபமாக இருக்கும் பட்சத்தில் இலாபமே என்னும் கருத்திலேயே அவர் இருப்பார். இவரை நம்பி அரசியல் நடத்தும் தமிழின துரோகிகளுக்கு கதிர்காமரின் நிலை ஒரு படிப்பினையாகும். ஆனால் எங்கே புரியும் அவர்களுக்கு?. கெடுகுடி சொல்கேளாது என்பது போன்று இப்போ யார் என்ன நன்மை சொன்னாலும் அவர்களுக்கு அது புரியாது? நு}று பேர்கள் ஆயுதத்துடன் காவலிருக்கும் போதே கதிர்காமரை சுட்டவர்கள் சில பத்துப்பேர்களுடன் இருக்கும் கூலிக்குழுக்களை ஏன் சுடமுடியாது. எப்போ அவர்களில் ஒருவர் மண்டையைப்போடுகின்றார்களோ? அப்போ புரிந்து கொள்வார்கள் சிங்களத்தை. கதிர்காமரின் கொலையைவைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் இப்போ ஓர் நல்ல இராஜதந்திரியை இழந்து (தமிழர்கள் இல்லை. சிங்களம் மட்டுமே) நிற்கின்றார்கள். தமிழருக்கு எதிராக கதிர்காமரை செயற்பட்ட வைத்து பஞ்சதந்திரக்கதையில் வரும் கதைபோன்று சிங்கமும் எருதும் சண்டைசெய்ய இரத்தம் குடிக்க காத்திருந்து உயிர்விட்ட கதையாகிவிட்டிருக்கின்றது சிங்களத்தின் கதை. கதிர்காமரின் கொலையால் சந்திரிகாவின் நிலை! திரிசங்கு நிலையிலேயே உள்ளது.!
முற்றும்
நன்றி
மலரினி மலரவன்
www.tamilkural.com
சென்ற முறை கதிர்காமரை அனுரத்த ரத்வத்தையும், அவர்களின் விசுவாசிகளும் ஏன் கொலைசெய்திருக்கக்கூடாதெனப் பார்த்தோம். இப்போ ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷா ஏன் கதிர்காமரை கொன்றிருக்கூடாதென நோக்குவோம். பொதுஜன ஐக்கிய முன்னணிக் கட்சிக்குள் ஆழமாக துவேசங்களும், அதிகாரப்போட்டிகளும் அன்று தொடக்கம் இன்றுவரை மேலோங்கியிருப்பதை வாசகர்கள் சாதாரணமாகவே பார்க்கின்றீர்கள். அதன் உச்சக்கட்டமே கதிர்காமர் என்னும் சிங்கள விசுவாசியின் கொலை. மகிந்த ராஜபக்ஷா இப்போ பொதுஜன ஐக்கிய முன்னணித்தலைவராக வந்து ஜனாதிபதி வேட்பாளராகவும் பதவி வகிக்கின்றார். அவரின் பதவி இவ்வளவு காலமும் பிந்திப்போனதற்கு கதிர்காமரும் ஒருவிதத்தில் காரணமாகின்றார். ஏனெனில் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராகவிருந்து சந்திரிகாவிற்கு விசுவாசமாகவிருந்து இந்த இடத்தைப்பிடித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷா கதிர்காமர் இல்லாதிருந்திருந்தால் பத்து வருடங்களுக்கு முன்னரே சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் இருந்திருப்பார். அத்துடன் அவர் ஓர் சிங்கள வெறியர் எனக்கூடச் சொல்லலாம். ஜே.வி.பியினரை நம்பிக்கெட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு இப்போ மீண்டும் அவர்களின் காலடியில் போய் விழுந்ததன் காரணமும் மகிந்த ஓர் சிங்கள வெறியர் என்பதைக்கட்டியம் கூறுகின்றதல்லவா? பதவிவெறிபிடித்து தான் எப்படியும் ஆட்சியைப்பிடித்தே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயத்தின் பேரில் யாருடன் கூட்டுச்சேர்வது என்பது தெரியாது, ஜே.வி.பியினருக்கு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக எண்ணி அவர்களுடன் சேர்ந்திருக்கின்றார்கள். ஆனால் ஜே.வி.பியினர் பொதுஜன ஐக்கியமுன்னணியினரின் தாய் அமைப்பான சுதந்திரக்கட்சி ஆட்சியில் தமது கட்சியின் பல உறுப்பினர்களை பலிகொடுத்ததையும் மறந்திருக்கமாட்டார்கள். இருப்பினும் தமக்கும் ஏதாவதோர்வகையில் அரசில், அரசியலில் இடம் பிடிப்பதற்காக இவர்களுடன் சேர்ந்திருக்கின்றார்கள். கூடவே பன்னிரெண்டு கோரிக்கைகளை வைத்து அவையாவையும் மகிந்த ஏற்றுக்கொண்டு அவர்களுடன் சேர்ந்திருக்கின்றார். கொசுறுத்தகவலாக இவர்களின் கூட்டை சந்திரிகாவே ஏற்காமல் மகிந்தாவை சாறுசாறென சாறியிருப்பதாகவும், அவரின் வேட்பாளர் பதவியை பறிப்பதாகவும், கட்சித்தலைமையில் இருந்து விலத்தப்போவதாகவும் பயமுறுத்துகின்றாராம். அவை உண்மையாகவிருப்பின் இனிவரும் காலங்களில் பண்டாரநாயக்காவின் குடும்ப அரசியல் கேள்விக்குறியாகும் என்பது நு}று வீதம் உண்மையாகிவிடும். பதவிமோகம் கொண்டு அலையும் சந்திரிகா அப்படிச்செய்ய வாய்ப்பில்லை. அதற்கான காரணம் பற்றி பின்னர் விபரிக்கின்றேன். அதற்கு முன்னர் மகிந்தாவின் பேரில் உள்ள சந்தேகத்தை பார்ப்போம். மகிந்த ராஜபக்ஷா பிரதமமந்திரியாவதற்கு முன்னர் கதிர்காமரின் பெயர் அப்பதவிக்கு முன்மொழியப்பட்டு தமிழர் என்னும் ஒரேயொரு காரணத்திற்காக அப்பதவி மகிந்தாவிற்கு போய்ச்சேர்ந்தது. நீண்டகால கட்சியுறுப்பினராகவிருந்தும் தனக்கு அப்பதவி கிடைக்காது கதிர்காமருக்கு அப்பதவி போகவிருந்ததை எண்ணியும், அத்துடன் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் கதிர்காமரின் பெயர் கட்சிக்குள் உயர்ந்ததையும் ஜீரணிக்கமுடியவில்லை மகிந்தாவால். கூடவே சந்திரிகா எண்ணாதவகையில் புலிகளுக்கு எதிராக செயற்படுவதாக எண்ணி, தமிழருக்கு எதிராக திறம்பட உழைத்தமையால் சிங்களவரும் கட்சிக்குள் கதிரை உயர்த்தியதன் வெளிப்பாடாக சந்திரிக்காவிற்கு அடுத்த நிலை கதிருக்கு போய்விடும் என்கின்ற நிலையில் அக்கொலையை மகிந்த செய்யவாய்பிருக்கின்றது. ஜே.வி.பியினர் அமைச்சரவையில் இருந்து விலகியவுடன் ஆட்டம் காணத்;தொடங்கிய அவர்கள் ஆட்சியை கதிர்காமரின் இராஜதந்திர நகர்வுகளால் சற்றேனும் நின்று நிலைக்கக்கூடியவகையில் நிறுத்தியமையாலும், இதன் காரணமாக கதிர் கட்சிக்குள் உயர்ததன் வெளிப்பாட்டாலும் மகிந்தவினால் அக்கொலை நடக்க வாய்பாகின்றது. கதிர் இன்னும் உயிருடன் இருந்தால் தனது பிரதம மந்திரிபதவி தன்வசம் நின்று நிலைக்காது என்னும் வகையில் கதிரைக்கொல்லவேண்டிய தேவை மகிந்த ராஜபக்ஷாவிற்கு ஏற்பட்டிருக்கும். தான் பிரதமராகவிருக்கையில் ஜே.வி.பியினர் பொதுக்கட்டமைப்பிற்கு முட்டுக்கட்டையாகவும், முரண்பாடாகவும் செயற்படுவதாக குற்றம்சுமத்தி சந்திரிகாவிற்கு ஜால்ரா அடித்து, சந்திரிகாவின் நன்மதிப்பைப்பெற்ற மகிந்த ராஜபக்ஷாவால் எப்படி இப்போ அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கக் கூடியதாகவிருக்கின்றது. அதாவது சந்திரிகாவிற்கு ஜால்ரா போட்டபடி தனது பதவிக்காக இவ்வளவு காலமும் ஓடுமீன் ஓட உறுமீன் வருமட்டும் காத்திருந்திருக்கின்றார் பார்த்தீர்களா? வாசகர்களே! ஜே.வி.பியினரையும், சிங்கள கெல உறுமயாவையும் பொதுக்கட்டமைப்பிற்கு எதிரானவர்கள் என குற்றம்சாட்டிய மகிந்த இன்று அவர்களின் பன்னிரென்டு கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அதை நிறைவேற்றப்போகின்றார் எனில் அவர் எப்படிப்பட்ட இனத்துவேசமானவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இனத்துவேசமானவராகிய மகிந்தா, ஓர் தமிழன் வெளிநாட்டமைச்சராகவும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையிலும் போற்றப்படும் இடத்தில் இருக்கின்றார் எனில் ஏன் அவரை மகிந்த கொன்றிருக்கக்கூடாது எனப்புரிகின்றதல்லவா? இவர்கள் மூலம் தமிழருக்கான நிரந்தரத்தீர்வை தரமுடியுமா? என்கின்ற கேள்விக்கான விடையை வாசகர்கள் உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.
அடுத்து நாம் பார்க்கப்போவது இக்கொலையால் இலங்கை அரசியலில் மாற்றம் வருமா? என்பதே. அவ்வாறு மாற்றம் வருவதற்கான எதுவிதமான சந்தர்ப்பமும் கிடையாது. அன்றைய ஜனாதிபதியான பிரேமதாசா ஜே.வி.பியினரால் கொல்லப்படுகையில் பழியை புலிகள் மேல் போட்டு அதன் உண்மையான குற்றவாளிகளை தப்பவைத்தவர்கள், அதேபோன்று காமினியையும், லலித் அத்துலத் முதலியையும் கொன்று உண்மையைப்புதைத்தார்கள். பின் லலித்தை கொன்றவர் ஒரு தமிழர் எனச்சொல்லியும், அவர் கிருலப்பனையில் கடையொன்றின் முன் தற்கொலை செய்து கிடந்தார் என்றும் கதைகட்டியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஜனாதிபதி சந்திரிகாவின் காய்நகர்த்தலானது நல்லபிள்ளையாய் நடித்த மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதியாக்கி அவர் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி மீண்டும் தானே பிரதமமந்திரியாகலாம் என்கின்ற நினைவை இப்போ மகிந்த இல்லாது செய்ய எத்தனித்திருப்பதானது அவர்கள் இருவரினதும் அதிகார வெறியையே காட்டிநிற்கின்றது. ஆட்சியில் நானா? அன்றி அவரா? என்கின்ற இழுபறி நிலையை இப்போ இலங்கையில் ஏற்படுத்தியிருக்கின்றது. வரும் மாதத்தில் சிலவேளைகளில் மகிந்தாவின் ஆசையில் மண்போடப்படலாம். அத்துடன் அரசியல் கோமாளி அனுராவிற்கு யோகமாகவும் அமையலாம். அதன் மூலம் சந்திரிகா மீண்டும் தன்னை இலங்கை அரசியலில் நிலைநிறுத்த முற்படலாம். அவருக்கு யார் போனால் என்ன? கிடைப்பது இலாபமாக இருக்கும் பட்சத்தில் இலாபமே என்னும் கருத்திலேயே அவர் இருப்பார். இவரை நம்பி அரசியல் நடத்தும் தமிழின துரோகிகளுக்கு கதிர்காமரின் நிலை ஒரு படிப்பினையாகும். ஆனால் எங்கே புரியும் அவர்களுக்கு?. கெடுகுடி சொல்கேளாது என்பது போன்று இப்போ யார் என்ன நன்மை சொன்னாலும் அவர்களுக்கு அது புரியாது? நு}று பேர்கள் ஆயுதத்துடன் காவலிருக்கும் போதே கதிர்காமரை சுட்டவர்கள் சில பத்துப்பேர்களுடன் இருக்கும் கூலிக்குழுக்களை ஏன் சுடமுடியாது. எப்போ அவர்களில் ஒருவர் மண்டையைப்போடுகின்றார்களோ? அப்போ புரிந்து கொள்வார்கள் சிங்களத்தை. கதிர்காமரின் கொலையைவைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் இப்போ ஓர் நல்ல இராஜதந்திரியை இழந்து (தமிழர்கள் இல்லை. சிங்களம் மட்டுமே) நிற்கின்றார்கள். தமிழருக்கு எதிராக கதிர்காமரை செயற்பட்ட வைத்து பஞ்சதந்திரக்கதையில் வரும் கதைபோன்று சிங்கமும் எருதும் சண்டைசெய்ய இரத்தம் குடிக்க காத்திருந்து உயிர்விட்ட கதையாகிவிட்டிருக்கின்றது சிங்களத்தின் கதை. கதிர்காமரின் கொலையால் சந்திரிகாவின் நிலை! திரிசங்கு நிலையிலேயே உள்ளது.!
முற்றும்
நன்றி
மலரினி மலரவன்
www.tamilkural.com

