09-25-2005, 02:42 PM
மீண்டுமொரு தடவை வெளியிடப்பட்ட யாழ்.மாணவர்களின் திறமை
* விடுதலைப்புலிகளைப் பாராட்டும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
* அங்கு ஆள்மாறாட்டம் மோசடி இல்லையாம்
* A/L 2005 ஒரு நோக்கு
-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
கல்வியானது ஒவ்வொரு மனிதனுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பிரதான செல்வாக்குச் செலுத்தி வருகிறது. இதனால் தான் பல்வேறு நாடுகளில் கட்டாயக் கல்வி அமுலில் இருந்து வருகிறது.
இலங்கையில் கூட முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்வியின் அவசியம் பற்றிய பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, பரீட்சைகளுக்கு தோற்றுவோரின் வீதம் மிக அதிகளவில் அதிகரித்திருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தம் காரணமாக இப்பரீட்சை உரிய காலத்தில் நடைபெறாமல் காலம் பிந்தியே நடைபெற்றது.
தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 1,16,506 பேருக்கு பல்கலைக்கழகம் செல்ல தகுதியிருந்தும், 16 ஆயிரத்து 292 பேருக்கு மாத்திரமே பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுவார்கள் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இங்கு நாம் `க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2005' சுருக்கமாக நோக்குவோம்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை - 2005
பாடசாலை சார்பாக பரீட்சைக்கு விண்ணப்பித்தோர் - 1,97,099, பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் விண்ணப்பித்தோர் - 48,604, பரீட்சைக்கு மொத்தமாக விண்ணப்பித்தோர் - 2,45,703, பாடசாலை சார்பாக பரீட்சை எழுதியோர் - 1,73,734, பரீட்சையை தனிப்பட்ட ரீதியில் எழுதியோர் - 30,296, பரீட்சையை மொத்தமாக எழுதியோர் - 2,40,30, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் பாடசாலை - 1,01,092, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் தனிப்பட்ட 15,414, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் மொத்தம் 1,16,506, மூன்று பாடங்களில் 3ஏ பெற்றவர்கள் மாணவர்கள் 2,910, மூன்று பாடங்களில் 3ஏ பெற்றவர்கள் தனிப்பட்ட 258, மூன்று பாடங்களிலும் 3ஏ பெற்றவர்கள் 3,168
மாவட்ட ரீதியாக பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள்
01) அம்பாறை 3,481
02)அநுராதபுரம் 4,240
03)பதுளை 4,851
04)மட்டக்களப்பு 2,211
05)கொழும்பு 13,834
06)காலி 7,630
07)கம்பஹா 9,325
08)அம்பாந்தோட்டை 4,191
09)கண்டி 9,206
10)கேகாலை 5,247
11)யாழ்ப்பாணம் 4,998
12)களுத்துறை 6,663
13)மாத்தறை 6,494
14)மொனராகல 2,251
15)முல்லைத்தீவு 640
16)நுவரெலியா 2,931
17)மன்னார் 606
18)மாத்தளை 2,543
19)கிளிநொச்சி 616
20)குருநாகல் 11,107
21)பொலன்னறுவை 1,731
22)புத்தளம் 3,124
23)இரத்தினபுரி 6,347
24)திருகோணமலை 1,687
25)வவுனியா 829
அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் சிறப்பு பெறுபேறுகளைப் பெற்றவர்கள்.
1. சிவப்பிரகாசம் மயூரன் 3.4102 யாழ். இந்துக்கல்லூரி
2. மேரினேஜ் ஏரங்கி டீ கொஸ்தா 3.1802 கொழும்பு மியுஸியஸ் கல்லூரி
3. ஹன்ஷினி சகுந்தலா சித்தினாமுலுவ 3.0976 கொழும்பு விஸாக்கா பாலிக்கா
4.நாகேந்திரன் பாணுகோபன் 3.0749 யாழ். இந்துக் கல்லூரி
5.சபனாதன் தனீஸன் 3.0602 யாழ்.இந்துக்கல்லூரி
6.சசிதா பன்துக்க குலதர்ம 3.0568 காலி மகிந்த வித்தியாலயம்
7.ஷேயாம் மேஹ்ராஜ் றியாழ் 3.0347 கொழும்பு டி.எஸ். சேனநாயக்கா
8.விக்கிரமசிங்க குணவர்தன 3.0299 அம்பலாங்கொட தர்மசோக்க மகா வித்தியாலயம்
9.சானிக்க நிஸன்சலா விஜயரத்னா 2.9970 நுகேகொட அனுலா வித்தியாலயம்
10.பவானி லக்ஷிகா போறாபஜ் 2.9901 கம்பஹா ரத்னாவாலி பாலிகா மகா வித்தியாலயம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2005
பல்கலைக்கழகம் நுழைய தகுதி பெற்றவர்கள்
1. மருத்துவம் பாடசாலை 11,484 15,173
தனிப்பட்ட 3,680
2.பொறியியல் பாடசாலை 8,470 10,667
தனிப்பட்ட 2,197
3.வணிகம் பாடசாலை 34,251 37,114
தனிப்பட்ட 2,863
4. கலை பாடசாலை 46,887 53,552
தனிப்பட்ட 6,665
இவ்வாறு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் கரங்களை சென்றடைந்த அதேவேளை, சிறந்த பெறுபேறுகள் கிடைத்த மகிழ்ச்சியினால் மாணவன் ஒருவன் மரணமாகிய சம்பவமும் வெளிவந்துள்ளது.
அத்துடன், கடல்கோள் அனர்த்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அம்பாறை கரைதீவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் பிரேமவாஹினி, காரைதீவு - விபுலானந்தர் மத்திய கல்லூரி சார்பாக இப் பரீட்சைக்கு தோற்றி வர்த்தகப் பிரிவில் (3ஏ) க்களைப் பெற்றுள்ளார். தாய் தங்கை உட்பட பல்வேறு உறவினரையும் கடல்கோளுக்கு இறந்த இவர் தற்போது தமது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆள்மாறாட்டம் மற்றும் பல வேறு காரணங்களினால் பரீட்சைக்குத் தோற்றிய 80 இற்கும் மேற்பட்டோரின் பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களம் தடுத்து வைத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.
இவையெல்லாவற்றையும் விட யுத்தம் மற்றும் கடல்கோள் அனர்த்தங்களினால் துவண்டு போன வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சார்ந்த மாணவர்களும் தமது கற்றல் திறமைகளை மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க பகிரங்கமாகவே அங்கீகரித்ததோடு ஆள்மாறாட்டம், மோசடி எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை. தென்னிலங்கையானது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் அண்மையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டார்.
உண்மையில் சம அளவான வளப் பங்கீடு, குண்டுத் சத்தமற்ற அமைதியான சூழல், பொருளாதார தடை நீக்கம் உட்பட தென்னிலங்கை மாணவ சமூகம் அனுபவிக்கும் அதே உரிமைகளையும், வாய்ப்புக்களையும் வட, கிழக்கு மாணவ சமூகம் அனுபவிக்குமாயின், ஆம்; மீண்டும் பல சாதனைகளை அச்சமூகம் கல்வியில் நிலைநாட்டும் என்பது நிதர்சனமே.
http://www.thinakural.com/New%20web%20site.../Article-13.htm
* விடுதலைப்புலிகளைப் பாராட்டும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
* அங்கு ஆள்மாறாட்டம் மோசடி இல்லையாம்
* A/L 2005 ஒரு நோக்கு
-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
கல்வியானது ஒவ்வொரு மனிதனுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பிரதான செல்வாக்குச் செலுத்தி வருகிறது. இதனால் தான் பல்வேறு நாடுகளில் கட்டாயக் கல்வி அமுலில் இருந்து வருகிறது.
இலங்கையில் கூட முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்வியின் அவசியம் பற்றிய பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, பரீட்சைகளுக்கு தோற்றுவோரின் வீதம் மிக அதிகளவில் அதிகரித்திருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தம் காரணமாக இப்பரீட்சை உரிய காலத்தில் நடைபெறாமல் காலம் பிந்தியே நடைபெற்றது.
தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 1,16,506 பேருக்கு பல்கலைக்கழகம் செல்ல தகுதியிருந்தும், 16 ஆயிரத்து 292 பேருக்கு மாத்திரமே பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுவார்கள் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இங்கு நாம் `க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2005' சுருக்கமாக நோக்குவோம்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை - 2005
பாடசாலை சார்பாக பரீட்சைக்கு விண்ணப்பித்தோர் - 1,97,099, பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் விண்ணப்பித்தோர் - 48,604, பரீட்சைக்கு மொத்தமாக விண்ணப்பித்தோர் - 2,45,703, பாடசாலை சார்பாக பரீட்சை எழுதியோர் - 1,73,734, பரீட்சையை தனிப்பட்ட ரீதியில் எழுதியோர் - 30,296, பரீட்சையை மொத்தமாக எழுதியோர் - 2,40,30, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் பாடசாலை - 1,01,092, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் தனிப்பட்ட 15,414, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் மொத்தம் 1,16,506, மூன்று பாடங்களில் 3ஏ பெற்றவர்கள் மாணவர்கள் 2,910, மூன்று பாடங்களில் 3ஏ பெற்றவர்கள் தனிப்பட்ட 258, மூன்று பாடங்களிலும் 3ஏ பெற்றவர்கள் 3,168
மாவட்ட ரீதியாக பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள்
01) அம்பாறை 3,481
02)அநுராதபுரம் 4,240
03)பதுளை 4,851
04)மட்டக்களப்பு 2,211
05)கொழும்பு 13,834
06)காலி 7,630
07)கம்பஹா 9,325
08)அம்பாந்தோட்டை 4,191
09)கண்டி 9,206
10)கேகாலை 5,247
11)யாழ்ப்பாணம் 4,998
12)களுத்துறை 6,663
13)மாத்தறை 6,494
14)மொனராகல 2,251
15)முல்லைத்தீவு 640
16)நுவரெலியா 2,931
17)மன்னார் 606
18)மாத்தளை 2,543
19)கிளிநொச்சி 616
20)குருநாகல் 11,107
21)பொலன்னறுவை 1,731
22)புத்தளம் 3,124
23)இரத்தினபுரி 6,347
24)திருகோணமலை 1,687
25)வவுனியா 829
அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் சிறப்பு பெறுபேறுகளைப் பெற்றவர்கள்.
1. சிவப்பிரகாசம் மயூரன் 3.4102 யாழ். இந்துக்கல்லூரி
2. மேரினேஜ் ஏரங்கி டீ கொஸ்தா 3.1802 கொழும்பு மியுஸியஸ் கல்லூரி
3. ஹன்ஷினி சகுந்தலா சித்தினாமுலுவ 3.0976 கொழும்பு விஸாக்கா பாலிக்கா
4.நாகேந்திரன் பாணுகோபன் 3.0749 யாழ். இந்துக் கல்லூரி
5.சபனாதன் தனீஸன் 3.0602 யாழ்.இந்துக்கல்லூரி
6.சசிதா பன்துக்க குலதர்ம 3.0568 காலி மகிந்த வித்தியாலயம்
7.ஷேயாம் மேஹ்ராஜ் றியாழ் 3.0347 கொழும்பு டி.எஸ். சேனநாயக்கா
8.விக்கிரமசிங்க குணவர்தன 3.0299 அம்பலாங்கொட தர்மசோக்க மகா வித்தியாலயம்
9.சானிக்க நிஸன்சலா விஜயரத்னா 2.9970 நுகேகொட அனுலா வித்தியாலயம்
10.பவானி லக்ஷிகா போறாபஜ் 2.9901 கம்பஹா ரத்னாவாலி பாலிகா மகா வித்தியாலயம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2005
பல்கலைக்கழகம் நுழைய தகுதி பெற்றவர்கள்
1. மருத்துவம் பாடசாலை 11,484 15,173
தனிப்பட்ட 3,680
2.பொறியியல் பாடசாலை 8,470 10,667
தனிப்பட்ட 2,197
3.வணிகம் பாடசாலை 34,251 37,114
தனிப்பட்ட 2,863
4. கலை பாடசாலை 46,887 53,552
தனிப்பட்ட 6,665
இவ்வாறு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் கரங்களை சென்றடைந்த அதேவேளை, சிறந்த பெறுபேறுகள் கிடைத்த மகிழ்ச்சியினால் மாணவன் ஒருவன் மரணமாகிய சம்பவமும் வெளிவந்துள்ளது.
அத்துடன், கடல்கோள் அனர்த்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அம்பாறை கரைதீவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் பிரேமவாஹினி, காரைதீவு - விபுலானந்தர் மத்திய கல்லூரி சார்பாக இப் பரீட்சைக்கு தோற்றி வர்த்தகப் பிரிவில் (3ஏ) க்களைப் பெற்றுள்ளார். தாய் தங்கை உட்பட பல்வேறு உறவினரையும் கடல்கோளுக்கு இறந்த இவர் தற்போது தமது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆள்மாறாட்டம் மற்றும் பல வேறு காரணங்களினால் பரீட்சைக்குத் தோற்றிய 80 இற்கும் மேற்பட்டோரின் பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களம் தடுத்து வைத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.
இவையெல்லாவற்றையும் விட யுத்தம் மற்றும் கடல்கோள் அனர்த்தங்களினால் துவண்டு போன வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சார்ந்த மாணவர்களும் தமது கற்றல் திறமைகளை மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க பகிரங்கமாகவே அங்கீகரித்ததோடு ஆள்மாறாட்டம், மோசடி எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை. தென்னிலங்கையானது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் அண்மையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டார்.
உண்மையில் சம அளவான வளப் பங்கீடு, குண்டுத் சத்தமற்ற அமைதியான சூழல், பொருளாதார தடை நீக்கம் உட்பட தென்னிலங்கை மாணவ சமூகம் அனுபவிக்கும் அதே உரிமைகளையும், வாய்ப்புக்களையும் வட, கிழக்கு மாணவ சமூகம் அனுபவிக்குமாயின், ஆம்; மீண்டும் பல சாதனைகளை அச்சமூகம் கல்வியில் நிலைநாட்டும் என்பது நிதர்சனமே.
http://www.thinakural.com/New%20web%20site.../Article-13.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

