Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புல தமிழர்கள் தொடங்க வேண்டிய யுத்தம்
#1
<b>ஐரோப்பிய தடையும் புலம்பெயர் தமிழர்கள் தொடங்க வேண்டிய 'யுத்தமும்' </b>

உண்மையை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால், பிழையானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற ஆணித்தரமிருந்தால் எவனும் எழுத்தாளனாக, செய்தியாளனாக மாறலாம் என்ற உதாரணம் புதினத்திற்கு மிகப் பொருந்தும்.


குறிப்பாக புதினம் கடந்த ஒரு சில நாட்களில் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட இரண்டு செய்திளும் இவற்றை மாசற விளக்கி நிற்கின்ற செய்திகளும் எனக்கு உந்துதலாயின. முதலாவது ஐரோப்பிய அரசியல்வாதி பற்றிக் குறிப்பிட்டிருந்த ஒரு செய்தி ஆய்வு. மற்றையது லண்டனில் இடம்பெற்ற சிங்களவர்களின் குதூகலக் கொண்டாட்டம் பற்றிய செய்தி.

<b>இரண்டுமே விடுதலைப் புலிகள் ஐரோப்பாவிற்கு பயணம் செய்வதைத் தற்காலிகமாகத் தடைசெய்வதைப் பற்றியன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தவறான தகவல் சென்றடைகிறதே!. தமிழா நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியையே மறைமுகமாக வெளியிட்ட அந்த இரண்டு செய்திகளும் புதிய செய்தியாளர்களின், படைப்பாளர்களின் தகவல்களே என்று அறிந்த போது, தமிழனின் ஆதங்கம் வழிந்தோடி தமிழீழ நதியில் கலக்கும் ஒரு வாய்க்காலாக புதினம் இருக்கிறது என்பதை மட்டும் என்னால் திடமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.</b>

கலப்படமற்ற, எந்தவித பூச்சுமெழுக்குமற்ற அந்த இரு செய்திகளையும் மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். நான் சொல்ல வருகின்ற செய்தி உங்களிற்கும் புரியும். என்றாலும் அந்த இருவருரின் ஆதங்கங்களும் ஐரோப்பாவிற்கு மாத்திரம் பொருந்தவில்லை. மாறாக நான் வசிக்கும் வட அமெரிக்கக் கண்டத்துடனும் அப்படியே பொருந்துகின்றன.

<b>நாங்கள் வசிக்கின்ற நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்ளிற் சிலரும் ஏறக்குறைய அந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரைப் போன்றவர்களே என்பதை நான் நேரடியாகவே உணர்ந்த சம்பவமொன்று கடந்த சில மாதங்களிற்கு முன்பு இடம்பெற்றது</b>.

நான் குடிமகான இருக்கும் இந்த நாட்டில் (ஆம், நான் இந்த நாட்டின் குடிமகன், இந்த குடிபெயர்ந்த நாட்டில் என்னால் நல்ல மாற்றங்களை உண்டு பண்ண முடியும்), எனது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர். நல்ல கல்வியறிவுடைய ஒரு அரசியல்வாதி. சந்தர்ப்பவசமாக சிறிலங்கா சம்பந்தமான அரசியலில் கலந்து விட்டார். காரணம் எமது தொகுதியில் கணிசமான வாக்குகள் தமிழ் வாக்குகள்.

<b>ஆனால் அவரை சிறிலங்காத் தூதுவருக்கு அருகாமையாக கொண்டு சென்று, அவரை இரு நாடுகளிற்குமிடையிலான பாராளுமன்றக் குழவின் உறுப்பினராக்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் நியமிக்கும் அளவிற்கு சிலர் செயற்பட்ட காரணத்தால் அவர் சில வேளைகளில் தாறுமாறாகக் கருத்துச் சொல்வார். ஆனால் அது அளுங்கட்சியின் அக்கறைக்கு எடுபடாமலே பலவேளைகளில் போகும்.</b>

இருந்தாலும் இவர் ஏன் இவ்வாறு செயற்பட்டார் என்பதை அறிவதற்கான ஒரு சந்தர்ப்பம் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஆனால் நான் குடிமகனாக உள்ள இந்த நாட்டில் தேர்தல் நெருங்குகிற படியால் அவர் எனது தொழில்சார் நிறுவனத்தை தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக அணுகியிருந்தார். ஆறுதலாகக் கதைப்பதற்குச் சந்தர்ப்பமும் தந்தார்.

<b>ஏன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய வேறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்று பச்சையாகவே கேட்டேன். அவரும் பச்சையாகவே பதில் சொன்னார். படித்துப் பாருங்கள்... "நான் ஏதோ உலக வரலாற்றில் அல்லது ஏனைய நாடுகளின் விடயங்களில் பூரண அறிவுடையவன் அல்லன், எனக்கு இலங்கைப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல நானும் சும்மா இருந்துவிட்டு, இலங்கையில் இருபகுதியும் சுடுபட்டு செத்துவிட்டு, மிஞ்சுபவர்கள் வரட்டும் என்று இருந்திருக்கலாம். ஆனால் எனது தொகுதியில் கூடுதலான இலங்கையர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் நான் ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன்" என்று கூறினார்.</b>

<b>அப்படியானால் உங்கள் தொகுதியில் உள்ளவர்கள் தமிழர்கள், ஆனால் நீங்கள் சிறிலங்காவின் கருத்துக்களையல்லவா செவி மடுக்கிறீர்கள். அவர்கள் சொல்வது போலல்லவா நடக்கிறீர்கள் என்று கேட்ட போது,

.... உண்மையிலேயே நான் நினைத்தது என்னவென்றால் ஒரு நாட்டின் பிரஜையை அந்த நாட்டு அரசாங்கத்தின் தூதரகமே பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதே... அதையே இந்த விவகாரத்திலும் நான் முற்றாக நம்பியிருந்தேன் ஆனால் போகப் போகத்தான் உண்மை புரிந்தது... என்றார்</b>.

அவரே ஒப்புக்கொள்ளும் போதும், இருக்கின்ற கேள்வியை எறிவதற்கு எனக்குத் தயக்கமில்லை, ஏனென்றால் நான் கேட்கப்போவது நியாயமானது என்பதை விட, நான் கொண்டிருந்த அதே கருத்தைக் கொண்டிருந்த, நான் வதியும் இந்தத் தொகுதியிலேயே வசிக்கின்ற வேறு மூன்று பேரும் அந்தச் சந்திப்பின் போது என்னுடன் இருந்தார்கள்.

...உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் நீங்கள் சிறிலங்காத் தூதுவர் தருகின்ற விருந்துகளில் திளைத்துப் போயல்லவா இவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்ற கருத்து நிலவுகிறேதே... என்று கேட்ட போது,



<b>பாராளுமன்ற அமர்வுகள் உள்ள பொழுதுகளில் இடையிடையே சிறிலங்காத்தூதுவர் தலைநகரிலுள்ள தனது இல்லத்தில் விருந்துபசாரம் வழங்கியது உண்மையே. இதர கட்சிகளிலுள்ள சிறிலங்காப் பிரச்சினையில் அக்கறையுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த இந்தச் சந்திப்புக்களை நாங்களாகவே தவிர்க்குமளவிற்கு அவர்கள் (தூதரகத்தினர்) தங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணித்து அவற்றை செய்யும் படி வேண்டினார்கள். ஆனால் அவை ஏற்புடையதாக இல்லாததை அவர்களிற்கு விளங்கப்படுத்த முயன்ற போது, ஆரோக்கியமாக இருந்த இந்த விருந்துகள் கசப்பாக மாறின என்பதே உண்மை என்றார்.</b>

ஆகமொத்தம், "நக்கினார் நாவிழந்தார்" என்ற தமிழ்ப் பழமொழியைப் பயன்படுத்தி சிறிலங்காத் தூதரகம் எவ்வாறு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு சிறிய உதாரணமே இது. ஆனால் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் போட்ட இன்னொரு குண்டை இனிக் கவணிப்போம்.

நானே தொடர்ந்தேன்... "நல்லது நீங்கள் உணர்ந்து கொண்டுவிட்டீர்கள். இவர்கள் (தூதரகத்தினர்) இப்படித்தான். 1983-இல் அரசமயப்படுத்தப்பட்ட ஒரு இன அழிப்பில் இவர்கள் எங்கள் மக்களின் ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்து, பெண்களின் கற்பைச் சூறையாடி, பலகோடி சொத்தையழித்த போதே நாங்கள் இந்தத் தேசத்திற்குள் காலடி வைத்தோம். இப்போது இங்கேயும் எங்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்க முனைகிறார்கள். பார்த்தீர்களா" என்றேன்.

<b>அவர் என்னைப் புதினமாகப் பார்த்து விட்டுச் சொன்னார்.... "நான் அரசியலிற்கு வந்ததே 1990-க்களின் நடுப்பகுதியில் தான். அதற்கு முன்பு நான் எனது தொழிலில் முனைப்போடு செயற்பட்டு வந்தேன். எனவே எனக்கு நீங்கள் கூறுகிற விடயத்தைப் பற்றித் தெரியாது" என்றார்.

நாங்கள் எதற்காக இங்கே வந்தோம், இந்த நாட்டை இரண்டாவது தாயகமாக ஏற்றோம் என்பது உங்களிற்கு உண்மையிலேயே தெரியாதா என்று கேட்ட போது, அவர் மீண்டும் சொன்னார்.... எனக்குக் கடந்த காலத்தைப் பற்றித் தெரியாது. உண்மையிலே, எனது தொகுதியில் குறிப்பிட்டளவு இலங்கையர்கள் இப்போது இல்லாவிட்டால், இப்போது கூட நான் இதே அக்கறையோடு இருப்பேனோ தெரியாது.... என்றார்.

உண்மையிலேயே அவர் சொன்னவை முத்தான வார்த்தைகள். 22 வருடங்களிற்கு முன் எங்களிற்கு இழைத்த அநியாயங்களை மறைப்பதற்காக இப்போது இடம்பெறுகிற போரை மையப்படுத்தி எங்களைப் பற்றிய தவறான கருத்துரைகளைச் செய்து வரும் சிங்களத்தை விட மீறிய அறிவுப் புலத்தையும், ஆட்பலத்தையும் கொண்டுள்ள நாங்கள் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நாங்கள் ஏன் புலம்பெயர்ந்தோம் என்பது தெரியாத எனது தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரையும் விடக் குறைவான தரவுகளுடனேயே ஏனைய நாடுகளிலுள்ள வெளியுறவுத் துறை சார்ந்தோரும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும் இருப்பார்கள் என்ற உண்மையை இப்போதே நாம் உணர வேண்டும்.</b>

<b>1983-இல் இருந்த மேற்குலக அரசியற் தலைவர்களோ, அல்லது வெளியுறவுத் துறை மற்றும் இராஜதந்திர வட்டாரத்தைச் சேர்ந்தவர்களோ இப்போதும் அங்கே இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போமானால் அது எமது தவறு. இப்போது செய்திகளில் அடிபடுகின்ற, அல்லது இலங்கைத் தீவு சம்பந்தமான விவகாரங்களைக் கையாள்கின்ற இராஜதந்திரிகளை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இச்சேவையில் சேர்ந்து 10 அல்லது 15 வருடங்களிற்குள்ளேயே இருக்கலாம் என்ற நிலையே உள்ளது.

எனவே இவ்வாறானவர்களிற்கு சிங்களர்வர்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக எம்மை விரட்டியடித்தார்கள், எத்தனை இனக்கலவரங்கள் ஏற்பட்ட என்பதையெல்லாம் மீண்டுமொரு முறை அவர்களிற்குப் புரிய வைக்க வேண்டிய விதத்தில் எடுத்தியம்புவது இன்றைய தேவை. நாங்கள் ஏன் புலம்பெயர்ந்தோம் என்பதை விளக்கினாலேயே எல்லாமும் அதனுள் அடங்கி விடும்.</b>

<b>அத்தோடு, புதினம் குறிப்பிட்ட, லண்டன் ஒன்றுகூடல் போன்றவற்றை முறியடிக்க, தேசியத் தலைவரின் வரிகளிகேற்ப, நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ நாமனைவரும் பழகிக் கொள்ள வேண்டும். உள்ளே எத்தனை வேறுபாடிருந்தாலும் எவ்வாறு அவர்கள் செயற்படுகிறாhர்கள் என்பதற்கு உதாரணமே அந்த லண்டன் கூட்டம்.

ஒரு பொய்யை உண்மையாக்க முயலும் அந்தக் கூட்டத்தைப் பார்த்து நாங்கள் எள்ளவும் யோசிக்கத் தேவையில்லை. மாறாக, நாம் ஏன் புலம்பெயர்ந்தோம், எவ்வாறு ஒடுக்கப்பட்டோம் என்பனவற்றோடு, எமது இனம் மொழிவாரியான இனம், நாம் மதவாதிகளல்ல போன்ற விடயங்களையும் கையிலெடுத்து போரைத் தொடங்குவோம். மேற்கத்தைய தேசத்தவர்கள், அவர்களாகவே புரிந்து கொள்வார்கள் என்றிருக்க இது நேரமில்லை. ஏனேன்றால் தேவை எங்களிற்கே தவிர, அவர்களிற்கு அல்ல.</b>தொடர்புபட்ட செய்திகள்:

<b>ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா?

'ஐரோப்பியத் தடைக்கு உழைத்த' சிறிலங்கா அரசின் 'லண்டன் இரகசியக் குழு'</b>!!

www.puthinam.com
Reply
#2
நல்லதொரு ஆக்கம். இணைத்ததிற்கு நன்றி வினித்.
Reply
#3
இலங்கை அரசு பல கோடி செலவழித்து, ஒரு கட்டமைப்பு அமைத்து விடுதலப்புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். இவற்றை முறியடிக்க தனி மனிதனால் முடியாது, இதற்குகென்று ஒர் அணி உருவாக்கி முழு நேரம்மாக செயல்பட வேண்டும், அதற்குரிய செலவை புலம்பெயர்ந்த மக்கள் நிற்சயம் தருவார்கள்.
Reply
#4
ஐரோப்பிய ஒன்றியம் தவறிழைத்து விட்டதென்பதை நாம்
ஒற்றுமையுடன் செயற்பட்டு உலகறியச் செய்ய வேண்டும்

திருமலையில் சம்பந்தன் எம்.பி.திருகோணமலை,

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தவறிழைத்து விட்டது என்பதனை நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டு உலகறியச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விதித்து விட்டு தவறு செய்தவர்களுக்கு நியாயம் வழங்குவதாகக் கூறுவது வேடிக்கையானது. இதனை சர்வதேச சமூகம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய அரசியல் நிலை தொடர்பாகவும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டினை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்ட நிகழ்வு திருகோணமலை விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இளைப்பாறிய உதவிக் கல்விப் பணி ப்பாளர்

. தங்கராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் கூறுகையில்,

இலங்கை அரசு நமக்குத் தரவேண்டியதைத் தராவிட்டால், அதனால் தமிழ் பேசும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்களை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஐ.நா. செயலாளர் நாயகம் தமிழர் பிரதேசங்களுக்கு செல்ல முயன்ற போதும் கூட இந்த அரசு அவர்களை தமிழர் தாயகத்திற்கு வரவிடாது தடை செய்துள்ளது. நிரந்தர சமாதானம் உருவாகத் தடையாக உள்ளவர்கள் சிங்களப் பேரினவாதிகளும் இந்த அரசுமேயொழிய விடுதலைப் புலிகளோ அல்லது தமிழர்களோ அல்ல என்பதனையும் சர்வதேச சமூகம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு வலுவூட்டும் வகையிலேயே திருகோணமலை மாவட்டத்திலும் தமிழீழ எழுச்சி மாநாட்டினை நடத்தவுள்ளோம். சகல தமிழ் பேசும் மக்களும் குறிப்பாக முஸ்லிம் மக்களும், முஸ்லிம் மதப் பெரியார்களும் இங்கு கலந்து கொண்டு இந்த நடவடிக்கைக்கு வலுவூட்ட வேண்டும்.

இதேவேளை, நமக்குத் தரவேண்டியதைத் தராவிட்டால் நாமே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாமாகவே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பதுதான் இன்று எழுப்பப்பட்டுள்ள கேள்வியாகும்.

தந்தை செல்வா என்னுடன் ஒரு கட்டத்தில் பேசும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைக்காண அனைத்து முயற்சிகளும் செய்து விட்டேன். இதனை பக்குவமான முறையில் செய்ய சரியான சிங்களத் தலைவன் எவனும் இல்லை என்று கூறினார். அதேநிலைதான் இன்றும் நிலவுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கடந்த இருபது வருட காலமாக மேற்கொண்ட யுத்தத்தின் விளைவாக 18 ஆயிரம் போராளிகள் பலியாகினர். 70 ஆயிரம் மக்களின் உயிர்களும் காவு கொள்ளப்பட்டன. இவ்வாறான தியாகங்களின் மத்தியிலும் இன்றும் தமிழினம் அகதி முகாம்களில் தவிக்கும் வேதனையான நிலையே உள்ளது. இந்த நிலையிலேயே நமது ஒற்றுமையினையும் கோரிக்கையினையும் உலகறியச் செய்ய வடக்கு கிழக்கின் பாமான திருகோணமலையிலும் தமிழீழ எழுச்சி மகாநாட்டினை வெகு சிறப்பாக நடத்தி நமது வெளிப்பாட்டினையும் பிரகடனப்படுத்த வேண்டும்.

சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இடைக்கால நிர்வாகம், பொதுக் கட்டமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்ட போதும் ஜே.வி.பி. யும் பேரினவாதிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பொதுக்கட்டமைப்பு தளர்வடைந்து விட்டது. தொடர்ந்தும் நமது மக்கள் தற்காலிக கூடாரங்களிலும் அகதி முகாம்களிலுமே வாழும் வேதனையான நிலைதான் நிலவுகின்றது.

இந்த நிலை மாற வேண்டும். இதற்கான பிரச்சினையினையும் பிரகடனத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

விஜயன் வருவதற்கு முன்னரே இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள் என சிங்களப் பேராசிரியர் ஒருவரே கூறியுள்ளார். அந்நியர் ஆட்சியின் போதே இத்தகைய நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனை பேரினவாதிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கதிர்காமரின் மரணம் தொடர்பாக இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இன்றோ திருகோணமலை நகரில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மண் நமது மண். இங்கு மேற்கொள்ளப்படும் தமிழ் தேசிய எழுச்சிப் பிரகடனம் சர்வதேசமெங்கும் ஒலிக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளும் உணர்வலைகளும் உலகறியச் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வி. விக்னேஸ்வரன், சட்டத்தரணி கே. சிவபாலன், திருகோணமலை மாவட்ட மகளிர் பேரவை தலைவி திருமதி கண்மணி, இரத்தினவடிவேல், திருகோணமலை மாவட்ட தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் சதா சண்முகநாதன் உள்ளிட்ட பிரமுகர்களும் இங்கு கலந்து கொண்டு உரையாற்றினர்

http://www.virakesari.lk/VIRA/20051003/hea...dline_news2.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
<img src='http://www.uthayan.com/images/editorialhead.gif' border='0' alt='user posted image'>

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இது இழுக்கன்றி வேறில்லை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் விடுத்த அறிக்கை அறிவிப்பு தமிழர் தரப் பில் எரிச்சலையும் விசனத்தையும் இவற்றுக்கு மேலாக சீற்றத் தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதி முயற்சிகளுக்கான வாய்ப்பு இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய தலையீட்டுக்கு வழி செய் யும் அறிவிப்புகள் அவசியம்தானா என்ற கேள்வி எழுகின்றது.

இதற்குப் பதிலளிப்பதற்குப் பொருத்தமானவர் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம்தான். அமைதி முயற்சி களில் சமாதானப் பேச்சுகளில் தமிழர் தரப்பில் முக்கிய பிரதிநிதி யாகப் பங்குபற்றியவர் அவர். இந்த அமைதி முயற்சிகளுக்கு நடுவே அனுசரணைத் தரப்பு ஊடாக சர்வதேச சமூகம் எமது பிரச் சினையில் எவ்வாறு முறையற்றுத் தலையீடு செய்கின்றது என் பதை நீண்டகாலத்துக்கு முன்னரே அவர் வெளிப்படுத்தியிருக் கின்றார். தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றை "போரும் சமாதானமும்' என்ற நூலில் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். அதன் தமிழ் வடிவமும் தற்போது வெளிவந்துள்ளது. அந்த வரலாற்று ஆவணத்தின் இறுதிப் பக்கங்கள் இந்தச் சர்வதேசத் தலையீட்டை நாசூக்காக வெளிப்படுத்துகின்றன. அது தான் அவரது ஆவணத் தில் முத்தாய்ப்பாக அமையும் அம்சமும்கூட.

"சமாதானப் பேச்சுகளின்போது நோர்வே அரச பிரதிநிதிகள் தமது மத்தியஸ்தப் பணியைத் திறம்படச் செய்தனர்; நடுநிலைப் பண்பை நேர்மையுடன் பேணினர்; பகையுணர்வும் விரோதப் போக்கும் தலைதூக்கா வண்ணம் இரு தரப்பினர் மத்தியிலும் பரஸ் பரம் நல்லெண்ணத்தையும் நல்லுறவையும் பேணி வளர்க்க உத வினர்; தர்க்கீகமான வாதங்களையும் கருத்தாடல்களையும் ஊக்கு வித்து, பரஸ்பர புரிந்துணர்வை ஆழமாக்க உதவினர்; இவ்விதம் மிகவும் நுட்பமாகப் பேச்சுகளை வழிநடத்திச் சென்ற நோர்வே இராஜதந்திரம் படிப்படியாகச் சர்வதேச நாடுகளின் மேலதிக தலை யீட்டுக்கு இடைவெளியை அனுமதித்துத் தவறிழைத்தது. பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல் கேந்திர அபி லாசைகளும் அதிகார வீச்சுகளும் பேச்சில் பங்கு கொண்ட இருதரப் பினரது அதிகாரம் சமவலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தின. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேச சமூகம், ஸ்ரீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நின்றது. இதனால், சம உறவு நிலை எமக் குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக அரசியல் தீர்வுக்கு வரம்பு களைத் திணிக்கத் துணிந்தன. இத்தலையீடானது. எமது அரசி யல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ணயித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. சர்வதேச சமூ கத்தின் தலையீடு மற்றும் நெருக்குவாரம் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி அமுக்கும் (இணிணtச்டிணட்ஞுணt) தனது அந்தரங்கத் திட்டத்தையே "சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். சமாதானத்தின் பெயரால் சர்வ தேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விக்கிரமசிங்க அரசு விரித்து வைத்த சர்வதேச சதிவலைப் பொறிக்குள் சிக்கிவிடாது இருப்ப தில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சமாதானப் பேச்சுகளை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ ரின் தேசிய இனப்பிரச்சினையைச் சர்வதேச மயப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால், அதேவேளை எமது மக்களின் விடுதலைப் போராட்ட இலட்சியத்தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு, தலையீடு செய்வதை நாம் வன்மையாக எதிர்த்தோம். மூன்றாம் தரப்பு அனுசரணையாளரின் மத்தியஸ்தத்துடன் எமது மக்களின் பிரச்சினையை நேர்மையுடன் பேசித் தீர்க்கும் பக்குவ மும் அதிகாரமும் அற்ற விக்கிரமசிங்கவின் நிர்வாகம் அமெரிக்கா வின் தலைமையிலான உலக நாடுகளை அணி சேர்த்துப் புலிக ளைப் பொறியிட முனைந்ததும் பேச்சுகள் முடங்கிப் போனதற்கு இன்னொரு காரணமாகும்.
இவ்வாறு தனது நூலின் இறுதிப் பக்கங்களில் மதியுரைஞர் பாலசிங்கம் குறிப்பிட்ட விடயங்களின் ஒரு தெறிப்புத்தான் ஐரோப் பிய ஒன்றியத்தின் தற்போதைய அறிக்கை.

யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செம்மையாகப் பேணுவது குறித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ள ஸ்ரீலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அந்தப் பேச்சை எங்கு நடத்துவது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் முரண்பட்டு நிற்கின்றனர். இந்த விடயத்தில் விடுதலைப்புலிகள் இணங்காத ஓரிடத்தை கட்டுநாயக்கா விமான நிலையச் சுற்றாடலை பொருத்தமான இட மாகத் தான் சிபாரிசு செய்வதாகத் தெரிவித்து, ஒரு தலைப்பட்ச மாக நோர்வே அனுசரணையாளர்கள் பகிரங்கமாக அறிவித்தமை கூட ஒரு பக்கம் கோடிடும் இந்த வகைச் செயற்பாட்டில்தான் அடங்குகின்றது.

சுமார் இருபது ஆண்டுகள், பதினெண்ணாயிரம் போராளிகளை யும் சுமார் ஐம்பதினாயிரம் பொதுமக்களையும் பலிகொடுத்து, பல்லாயிரம் கோடி ரூபா சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்து, கல்வி முதல் அபிவிருத்திவரை பலதுறைகளிலும் நலன் களைப் பறிகொடுத்து, தாம் நடத்திய விடுதலைப் போராட் டத்தை ஈழத்தமிழர்கள் இன்று இடைநிறுத்தி வைத்துவிட்டு, அமைதித் தீர்வுக்கு இணக்க முடிவுக்கு வாய்ப்பளிப்பதற்கு இட மளித்திருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் தங்களுக்கு நீதியான, நியாயமான தீர்வு ஒன்றைத் தென்னிலங்கை சிங்களத் தலைமைகள் தந்துவிடும் என்ற நம்பிக்கையால் அல்ல. இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் நீதி, நியாயமாக நடந்து கொள் ளும், பக்கம் கோடாமல் செயற்பட்டு, தமிழர்களின் நியாயமான அபிலாசைகளையும் உரிமைகளையும் பெற்றுத்தரும் போக்கில் அது செயலாற்றும் என்ற நம்பிக்கையால்தான்.

ஆனால், விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியமை போல அந்த நடுநிலைப் போக்கிலிருந்து சர்வதேச சமூகம் விலகும்போது தமிழர் தரப்பும் வேறு வழியின்றி விபரீத முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக் குத் தள்ளப்படும் என்பதை, தமது தனிப்பட்ட புவியியல் கேந் திர அபிலாஷைகளுக்கும் அதிகார வீச்சுகளுக்குமாகச் சர்வதேச சமூகத்தைப் பக்கம் சாய்வதற்கு வழி நடத்துகின்ற பலம் பொருந் திய நாடுகளும், அந்த நாடுகளைத் தமது பொய்ப்பிரசார நடவ டிக்கைகள் மூலம் தவறாகத் திசை திருப்புகின்ற ஸ்ரீலங்காத் தரப் பும் சிந்திக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்து அல்லது இலங்கை அரசுத் தரப்பு சமர்ப்பித்திருக்கக் கூடிய உண் மைக்குப் புறம்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் பணிகளுக்குத் தடை விதித்ததன் மூலம், பேச்சு மேசையில் ஸ்ரீலங்கா அரசும் புலிகளும் சமம் என்ற பேச்சுக்கு அடிப்படையான நிலையைச் சீர்குலைத்து, தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி, சிங்களம் விரும்பும் அரைகுறைத் தீர் வைத் தமிழர் மீது திணிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து முயற்சி எடுக்கின்றது. இப்படி பொங்குதமிழை ஒட்டிய பிரகட னம் மூலம் தமிழர்கள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு தன்னை நடுநிலைப் போக்குடைய அமைப்பாகப் பாசாங்கு பண்ணி, அதிகம் பேசும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நல்லதோர் சாட்டை.
பலம் பொருந்திய வல்லாதிக்க நாடுகளின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அபிலாஷைகளைத் தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவற்றின் ஏவல் நாயாக வேலைக்காரனாக கைப் பொம்மையாக ஐரோப்பிய ஒன்றியம் மாறிவருவது அதில் அங் கம் வகிக்கும் இருபத்தைந்துக்கும் அதிகமான நாடுகளின் தனிப் பட்ட பெருமைக்கும், சிறப்புக்கும், தனித்துவத்துக்கும் இழுக்கே யன்றி வேறில்லை.

உதயன் ஆசிரியர் தலையங்கம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)