Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுூரியரே எங்கள் சொந்தங்களே !
#1
சுூரியரே எங்கள் சொந்தங்களே !
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

(05.10.1987 இந்திய சிறீலங்கா அரசுகள் சதியில் தமிழர் விதியெழுதும் புலிவீரர் வழியெழுந்த பன்னிருவர் நினைவுக்கவியிது.)

தீருவிலில் தீயான திருமுகங்கள்
வஞ்சகர் சதி மூட
நஞ்சிலே உயிர் முடிந்து
பிஞ்சுகள் உதிர்ந்த துயர்
நினைவுகள் எழுதிய நாள்.

சாவில் வாழ்வெய்திய சந்தனங்கள்
சாகடிக்கப்பட்ட சாகாத நாளின்று
நேற்றாய் நினைவெல்லாம்.....
விழி நீர் மாலை கோர்த்து
ஆயார் கடவை வாசலில்
அவர்கள் படுத்திருக்க அழுத நாளின்று....

பலாலி வாசலில் பகைவர் குகையமைத்த
தமிழன் நிலமதிலே உச்சிவெயில் சுட்டெரிக்க
'எங்கள் தோழர்களை எங்களிடம் திருப்பித்தா"
எத்தனை குரல்களின் அதிர்வுகள்.....!
எல்லாமே நினைவெழுந்து
நெஞ்சு கனக்கிறது நினைவு சுடுகிறது.

சுதுமலையில் உரைதந்த எரிமலைகள்
மூச்சழித்து மலர்களின் நடுவே - தம்
தோழர் , தோழியரின் இதய நாளங்களில்
விடுதலைத் தீயெரித்துத் தமிழ் வீடெங்கும்
ஒளிகொடுத்து வந்தவரின் சுயம் தெளித்து
வானுலகம் சென்றவர்கள்.

கடலேறி வந்த பேய்களை
கலங்கள் அள்ளிப்போய்
காலங்களும் கரைந்து விட்டன
இன்னும் சனித்தொல்லை
அகலாத பெருந்தொல்லை
அம்மாக்களின் வடிவில் அலைக்கிறது.

சுூரியரே எங்கள் சொந்தங்களே !
வங்கக்கடல் நடுவில்
வந்த எங்கள் வீரர்கள்
தங்கள் உயிர் தீய்த்துத் தமையழிக்க
உங்களை அழித்தவரே
உறுதுணையாய் நின்றார்கள்.

இன்று சர்வதேசக்கடல் வரையும்
சகுனிகள் சேர்ந்து நின்று
எங்கள் தோழர்கள் உயிர் பறிப்பு
இன்னும் தொடர்கிறது.

ஊர் பறித்தோர் , உயிர் பறித்தோர்
உலகைத் தின்றோரெல்லாம்
ஒன்றாய் வந்து நின்று
உதவுகிறார்களாம்.
சிரிப்பாயில்லை இவையெல்லாம் ?
'பொறுத்தார் புவியாழ்வார்"
ஆம் பொறுத்திருப்போம் நாங்களெல்லாம்.

(உயிர்வாசம் கவிதை நு}லிலிருந்து.......)
Reply
#2
நன்றி
நீண்ட நாடகளின் பின் உங்கள் கவிதை ஆனால் சரியான தருணத்தில்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
நன்றி சாந்தியக்கா கவிதைக்கு.
----------
Reply
#4
காவிய நாயகர்களுக்காக பாடிய கவி நல்லாயிருக்கு

Reply
#5
உயிர்வாசத்தில் இருந்து இங்கு உதிர்த்த கவிதைக்கு நன்றிகள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
Quote:சாவில் வாழ்வெய்திய சந்தனங்கள்
சாகடிக்கப்பட்ட சாகாத நாளின்று
நேற்றாய் நினைவெல்லாம்.....
விழி நீர் மாலை கோர்த்து
ஆயார் கடவை வாசலில்
அவர்கள் படுத்திருக்க அழுத நாளின்று....


கவி அருமை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)