11-19-2005, 01:34 AM
<b>கோப்ராக்களும் அடிக்கப்படுமா?</b>
சில தினங்களுக்கு முன் நடந்த பீகார் சிறை உடைப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நம்பவே முடியவில்லை, நடந்தது இந்தியாவிலா அல்லது நேபாளம்,லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளில் ஏதாவதொன்றா என்று எண்ணுமளவிற்கு நடந்தேறியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சல்கள் நகரில் ஆயுதங்களுடன் ஊடுறுவி நகர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அதன் பின் பொதுமக்களுக்கு வீட்டை விட்டு வெளிவரவேண்டாமென்றும் பொதுமக்கள் எங்கள் குறியல்ல என எச்சரிக்கை கொடுத்து பின் சிறையை தாக்கி சில நக்சல்களை விடுவித்து சில ரன்வீர் சேனா படையை சேர்ந்தவர்களை கடத்தி கொன்றுள்ளனர்
ரன்வீர் சேனா பீகாரில் நக்சல்களை எதிர்கொள்ள நிலப்பிரபுக்களினால் உருவாக்கப்பட்ட கூலிப்படை, அதன் நடுமண்டையில் அடித்துள்ளனர் நக்சல்கள், இனி நக்சல்கள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சில நக்சல்கள் உண்மையிலேயே கொல்லப்படலாம், சிலர் கொல்லப்பட்ட பிறகு நக்சல்களாக மாற்றப்படலாம்.
மக்கள் யுத்தக் குழு என்ற நக்சல் இயக்கம் ஆந்திராவில் மிக பிரபலமானது, பீகாருக்கு சற்றும் குறைந்ததல்ல ஆந்திர மாநிலம்... இன்றும் ஒரு ஊரில் உள்ள நிலங்கள் முழுதும் ஒரே ஆளுக்கு சொந்தமாக பல இடங்களில் உள்ளது, நக்சல்களை எதிர்கொள்ள ரன்வீர் சேனாவைப் போலவே ஆந்திர நிலபிரபுக்களும், காவல்துறையும் சேர்ந்து உருவாக்கிய இயக்கங்கள் தான் கோப்ரா இயக்கங்கள் என சில வாரங்களுக்கு முன் வெளியான ஜீனியர் விகடனில் வெளிவந்த கட்டுரையில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ப்ளாக் கோப்ரா, கிங் கோப்ரா என்ற பெயர்களில் இந்த இயக்கங்கள் நக்சல் ஆதரவு பிரமுகர்களுக்கு (இவர்களில் பலர் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது ஜீவி) பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் எச்சரிக்கை கொடுத்து ஒரே வாரத்தில் சிலர் கொல்லப்பட்டனர், இதற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை என்று கூறினாலும் பலர் கோப்ரா இயக்க செயல்பாடுகளில் காவல்துறையின் பங்கை சந்தேகிக்கின்றனர், பீகாரில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர் சேனாவின் நடு மண்டையில் நக்சல்கள் அடித்தது போல ஆந்திராவிலும் கோப்ராக்களின் பற்கள் பிடுங்கப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ரன்வீர் சேனா, கோப்ரா போன்ற இயக்கங்களை உருவாக்காமல், நில உச்ச வரம்பு சட்டத்தை முறையாக அமல் படுத்துதலும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்குதலும் உயர் சாதி ஆதிக்க வெறி பிடித்த நில பிரபுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்தினாலும் மட்டுமே இனி வரும் காலங்களில் நக்சல்கள் உருவாகாமல் தடுக்க முடியும் இல்லையென்றால் நக்சல்களும், ரன்வீர் சேனாக்களும், கோப்ராக்களும் சிறை உடைப்புகளும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.
http://kuzhali.blogspot.com/2005/11/blog-post_19.html
சில தினங்களுக்கு முன் நடந்த பீகார் சிறை உடைப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நம்பவே முடியவில்லை, நடந்தது இந்தியாவிலா அல்லது நேபாளம்,லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளில் ஏதாவதொன்றா என்று எண்ணுமளவிற்கு நடந்தேறியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சல்கள் நகரில் ஆயுதங்களுடன் ஊடுறுவி நகர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அதன் பின் பொதுமக்களுக்கு வீட்டை விட்டு வெளிவரவேண்டாமென்றும் பொதுமக்கள் எங்கள் குறியல்ல என எச்சரிக்கை கொடுத்து பின் சிறையை தாக்கி சில நக்சல்களை விடுவித்து சில ரன்வீர் சேனா படையை சேர்ந்தவர்களை கடத்தி கொன்றுள்ளனர்
ரன்வீர் சேனா பீகாரில் நக்சல்களை எதிர்கொள்ள நிலப்பிரபுக்களினால் உருவாக்கப்பட்ட கூலிப்படை, அதன் நடுமண்டையில் அடித்துள்ளனர் நக்சல்கள், இனி நக்சல்கள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சில நக்சல்கள் உண்மையிலேயே கொல்லப்படலாம், சிலர் கொல்லப்பட்ட பிறகு நக்சல்களாக மாற்றப்படலாம்.
மக்கள் யுத்தக் குழு என்ற நக்சல் இயக்கம் ஆந்திராவில் மிக பிரபலமானது, பீகாருக்கு சற்றும் குறைந்ததல்ல ஆந்திர மாநிலம்... இன்றும் ஒரு ஊரில் உள்ள நிலங்கள் முழுதும் ஒரே ஆளுக்கு சொந்தமாக பல இடங்களில் உள்ளது, நக்சல்களை எதிர்கொள்ள ரன்வீர் சேனாவைப் போலவே ஆந்திர நிலபிரபுக்களும், காவல்துறையும் சேர்ந்து உருவாக்கிய இயக்கங்கள் தான் கோப்ரா இயக்கங்கள் என சில வாரங்களுக்கு முன் வெளியான ஜீனியர் விகடனில் வெளிவந்த கட்டுரையில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ப்ளாக் கோப்ரா, கிங் கோப்ரா என்ற பெயர்களில் இந்த இயக்கங்கள் நக்சல் ஆதரவு பிரமுகர்களுக்கு (இவர்களில் பலர் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது ஜீவி) பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் எச்சரிக்கை கொடுத்து ஒரே வாரத்தில் சிலர் கொல்லப்பட்டனர், இதற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை என்று கூறினாலும் பலர் கோப்ரா இயக்க செயல்பாடுகளில் காவல்துறையின் பங்கை சந்தேகிக்கின்றனர், பீகாரில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர் சேனாவின் நடு மண்டையில் நக்சல்கள் அடித்தது போல ஆந்திராவிலும் கோப்ராக்களின் பற்கள் பிடுங்கப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ரன்வீர் சேனா, கோப்ரா போன்ற இயக்கங்களை உருவாக்காமல், நில உச்ச வரம்பு சட்டத்தை முறையாக அமல் படுத்துதலும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்குதலும் உயர் சாதி ஆதிக்க வெறி பிடித்த நில பிரபுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்தினாலும் மட்டுமே இனி வரும் காலங்களில் நக்சல்கள் உருவாகாமல் தடுக்க முடியும் இல்லையென்றால் நக்சல்களும், ரன்வீர் சேனாக்களும், கோப்ராக்களும் சிறை உடைப்புகளும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.
http://kuzhali.blogspot.com/2005/11/blog-post_19.html

