12-08-2005, 08:02 AM
ஒரு வீட்டிற்கு அத்தியவசிய தேவைகளாக கிணறு, மலசலகூடம், சமயலறை போன்றவற்றோடு ஈழத்தமிழர் வாழ்வில் ஒன்றிப் போன இன்றுமொன்று பங்கர் எனப்படும் பதுங்குகுழியாம். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கு எமக்கு அது தேவையானதாக ஒன்றாக இருந்தே வந்திருக்கின்றது.
90ம் ஆண்டு காலப்பகுதியில் தான் பதுங்குகுழி எனக்கு அறிமுகம் அல்லது நினைவில் நிற்கின்றது. கோட்டை சமர் நடைபெற்ற காலமாதலால், அந்த நேரத்தில் இராணுவம் பலாலியில் இருந்து தாக்குதல் நடத்துவான் என அஞ்சி, நாமும் எமது உறவுகளும் சாவகச்சேரிக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அப்போதைய தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்து, புூநகரி சமரில் வீரச்சாவடைந்த குணா அண்ணாவின் உறவினர் ஒருவர் தான் எமக்கு வாழ்விடம் தந்திருந்தார். மொத்தம் 9 குடும்பங்கள் தங்கியிருந்தோம். கிட்டத்தட்ட 40 பேர் அளவில் வரும்.
அக்காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் பொம்மர் வகை விமானங்களே இருந்தன. தொடந்து பத்து, இருபது விமானங்கள் ஒரே வரிசையில் வந்து குண்டு போடும் பார்க்க அழகாக இருந்தாலும் ஈனத்தனமாக எம் உறவுகளின் உயிரை குடித்தது. அப்போதைய பங்கர்கள் ஒரு சிறிய அறையின் தோற்றத்தை கொண்டிருந்தன. பொதுவான நீள-அகலத்தை கொண்டமைக்கப்பட்டிருந்தன. மேலே பனைமரக்குற்றிகள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கும். வாசல் பகுதியில் நீர் உள்வராத வகையில் கூரை போடப்பட்டு மேயப்பட்டிருக்கும். எம்மோடு இருந்த 40 பேரும் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறான பதுங்குகுழி அது.
அங்கேயும் நம் கலையுணர்வு குன்றி விடவில்லை. சகோதரிமார்கள் கீழே மெழுகி, மேலே மட்டைகளை அழகாக அடித்து ஒரு அறைக்கு ஏற்ற புதுப்பொழிவை கொடுத்திருந்தனர். பிற்பட்ட காலப்பகுதியில் அங்கே சுவாமிப்படம் வைத்து, புூப்போட்டு வழிபட்டதும் உண்டு. உயி;ர்காத்த தெய்வமல்லவா. 2003 ஆண்டு சமாதான காலத்தில் யாழ் சென்றபோது அது சிதைவடைந்து மண்ணால் மூடப்பட்டு இருந்தாலும் பழைய நினைவுகள், சுகமாக தட்டிச் சென்றன.
பிற்பட்ட காலப்பகுதியில் பொம்மர் போய் கிபிர், சுப்பசோனிக் ஆட்சிக்கு வந்தன. எனவே பதுங்குகுழிகளின் கட்டுமானங்களிலும் மாற்றம் ஏற்பட்டன. கிபிர் போடும் குண்டுகள் மண்ணை ஆழமாகத் தோண்டியதால் சிலவேளைகளில் பங்கர் மீது விழுந்தால் அதனுள்ளவர்கள் யாவரும் பலியாவதுடன், சிலவேளைகளில் வாசல்புறம் மூடப்பட்டு, உள்ளுள் பலர் மாட்டுப்பட்டு காற்றோட்டம் இன்றி சாவார்கள் என்பதை கொண்டு, திறந்த பங்கர்கள் அமைக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.
திறந்த பங்கர்கள் ஒரு மனிதனின் இரண்டு தோள்பட்டைகள் அளவு அகலத்தேயே கொண்ட ஒடுங்கிய வடிவமாகும். பெரும்பாலும் நிற்கக்கூடிய அளவு ஆழத்தில் தான் அமைக்கப்பட்டது. மேலும் ஒரே நேராக அமைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, "ட" வடிவில் தான் அமைக்கப்படும். இதனால் அங்கே குண்டு விழுந்தாலும் இழப்புக்கள் குறைக்கப்படும் என்ற நப்பாசை தான்.
96ம் ஆண்டு இடப்பெயர்வில் நாம் கடைசி நேரம் தான் வன்னிக்கு போனோம். கடைசி வள்ளங்களில் நாம் போனதும் ஒன்று. அப்போது கிளாலிக்கடற்கரையில் சில பொழுதுகள் கழிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போதெல்லாம் து}ங்கும்போது காலை பங்கருக்கு மேல் வைத்து தான் து}ங்குவோம். ஆனையிறவிலோ, புூநகரியிலோ செல் அடிக்கும் சத்தம் மெதுவாக கேட்டாலே நித்திரையில் கூட தானாகவே பதுங்குகுழியில் இறங்கும் அளவுக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம்.
பின் வன்னி வாழ்வில் முள்ளியவளை தான் தங்குமிடம். அங்கே முல்லைத்தீவில் இராணுவம் இருந்ததால் அவனின் தொல்லைகளுக்கு குறை இருக்கவில்லை. தினமும் மாலை 6.00- 7.00 மணிவரை செல் அடிப்பதால், அவ் நேரத்தை பதுங்குகுழி நேரமாக பதிந்து வைத்திருந்தோம். தினமும் 5.45 இற்கே அதற்குள்ளோ, அல்லது அதற்கு அருகாமையிலோ ஆஜர் ஆகிவிடுவோம். "செல்" அடிக்கும்போது அனுப்பும் பொது சத்தம் தெளிவாக எமக்கு கேட்டுவிடும் அளவு து}ரத்திலேயே வசித்தால் உடனே பதுங்குகுழிக்குள் பாய்ந்து விடுவோம்.
வன்னியில் பங்கர்கள் தொடராக தான் அமைக்கப்படும். ஒரு பக்கத்தில் குதித்தால் வேறு எங்காவது போய் எழூந்து கொள்ளமுடியும். மேலும் தண்ணீர்பாயும் வாய்க்காலும் இருந்தால் அதுவும் ஒரு பதுங்குகுழி மாதிரி அவசரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. படித்த முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லு}ரியி;ல் கூட தொடரான பதுங்குழி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. சிலவற்றின் வடிவம் பாடசாலைப் பெயரைக் குறிக்கும் வண்ணம். MVC என்று அமைக்கப்பட்டும் இருந்தன.
பின் முல்லைச்சமர் நேரம் நாம் கனகராயன்குளத்துக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அதன் நிறைவின் பின் திரும்பி வீடு வரும்போது நாம் வெட்டிவைத்த பதுங்குகுழிகள் மீதும் மணலாற்றில் இருந்து அடித்த செல்கள் விழுந்திருந்தன. நாங்கள் அங்கு இருந்திருப்பின் அது புதைகுழிகளாகத் தான் இருந்திருக்கும் என்பதில் ஜயமில்லை. மேலும் நாம் அவதானித்த விடயம் யாதெனில் இராணுவம் செல் அடிக்கும் அதிகூடிய வீச்சு என்பது எமது வீட்டை அண்டியதாகத் தான் இருக்கவேண்டும். ஏனென்றால் எமது வீட்டிற்கு நேர் ஒத்த திசைகளில் தான் நிறைய வெடித்திருந்தன. அப்பால் ஒன்றும் இல்லை. பதுங்குகுழி வாழ்வு என்பது 97ம் ஆண்டு கார்த்திகை மாதம் வன்னியை விட்டு நாம் வெளியேறியவுடன் நிறைவுக்கு வந்து விட்டாலும் நினைவுகளின் ஒன்றித்தே இருக்கின்றது
90ம் ஆண்டு காலப்பகுதியில் தான் பதுங்குகுழி எனக்கு அறிமுகம் அல்லது நினைவில் நிற்கின்றது. கோட்டை சமர் நடைபெற்ற காலமாதலால், அந்த நேரத்தில் இராணுவம் பலாலியில் இருந்து தாக்குதல் நடத்துவான் என அஞ்சி, நாமும் எமது உறவுகளும் சாவகச்சேரிக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அப்போதைய தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்து, புூநகரி சமரில் வீரச்சாவடைந்த குணா அண்ணாவின் உறவினர் ஒருவர் தான் எமக்கு வாழ்விடம் தந்திருந்தார். மொத்தம் 9 குடும்பங்கள் தங்கியிருந்தோம். கிட்டத்தட்ட 40 பேர் அளவில் வரும்.
அக்காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் பொம்மர் வகை விமானங்களே இருந்தன. தொடந்து பத்து, இருபது விமானங்கள் ஒரே வரிசையில் வந்து குண்டு போடும் பார்க்க அழகாக இருந்தாலும் ஈனத்தனமாக எம் உறவுகளின் உயிரை குடித்தது. அப்போதைய பங்கர்கள் ஒரு சிறிய அறையின் தோற்றத்தை கொண்டிருந்தன. பொதுவான நீள-அகலத்தை கொண்டமைக்கப்பட்டிருந்தன. மேலே பனைமரக்குற்றிகள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கும். வாசல் பகுதியில் நீர் உள்வராத வகையில் கூரை போடப்பட்டு மேயப்பட்டிருக்கும். எம்மோடு இருந்த 40 பேரும் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறான பதுங்குகுழி அது.
அங்கேயும் நம் கலையுணர்வு குன்றி விடவில்லை. சகோதரிமார்கள் கீழே மெழுகி, மேலே மட்டைகளை அழகாக அடித்து ஒரு அறைக்கு ஏற்ற புதுப்பொழிவை கொடுத்திருந்தனர். பிற்பட்ட காலப்பகுதியில் அங்கே சுவாமிப்படம் வைத்து, புூப்போட்டு வழிபட்டதும் உண்டு. உயி;ர்காத்த தெய்வமல்லவா. 2003 ஆண்டு சமாதான காலத்தில் யாழ் சென்றபோது அது சிதைவடைந்து மண்ணால் மூடப்பட்டு இருந்தாலும் பழைய நினைவுகள், சுகமாக தட்டிச் சென்றன.
பிற்பட்ட காலப்பகுதியில் பொம்மர் போய் கிபிர், சுப்பசோனிக் ஆட்சிக்கு வந்தன. எனவே பதுங்குகுழிகளின் கட்டுமானங்களிலும் மாற்றம் ஏற்பட்டன. கிபிர் போடும் குண்டுகள் மண்ணை ஆழமாகத் தோண்டியதால் சிலவேளைகளில் பங்கர் மீது விழுந்தால் அதனுள்ளவர்கள் யாவரும் பலியாவதுடன், சிலவேளைகளில் வாசல்புறம் மூடப்பட்டு, உள்ளுள் பலர் மாட்டுப்பட்டு காற்றோட்டம் இன்றி சாவார்கள் என்பதை கொண்டு, திறந்த பங்கர்கள் அமைக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.
திறந்த பங்கர்கள் ஒரு மனிதனின் இரண்டு தோள்பட்டைகள் அளவு அகலத்தேயே கொண்ட ஒடுங்கிய வடிவமாகும். பெரும்பாலும் நிற்கக்கூடிய அளவு ஆழத்தில் தான் அமைக்கப்பட்டது. மேலும் ஒரே நேராக அமைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, "ட" வடிவில் தான் அமைக்கப்படும். இதனால் அங்கே குண்டு விழுந்தாலும் இழப்புக்கள் குறைக்கப்படும் என்ற நப்பாசை தான்.
96ம் ஆண்டு இடப்பெயர்வில் நாம் கடைசி நேரம் தான் வன்னிக்கு போனோம். கடைசி வள்ளங்களில் நாம் போனதும் ஒன்று. அப்போது கிளாலிக்கடற்கரையில் சில பொழுதுகள் கழிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போதெல்லாம் து}ங்கும்போது காலை பங்கருக்கு மேல் வைத்து தான் து}ங்குவோம். ஆனையிறவிலோ, புூநகரியிலோ செல் அடிக்கும் சத்தம் மெதுவாக கேட்டாலே நித்திரையில் கூட தானாகவே பதுங்குகுழியில் இறங்கும் அளவுக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம்.
பின் வன்னி வாழ்வில் முள்ளியவளை தான் தங்குமிடம். அங்கே முல்லைத்தீவில் இராணுவம் இருந்ததால் அவனின் தொல்லைகளுக்கு குறை இருக்கவில்லை. தினமும் மாலை 6.00- 7.00 மணிவரை செல் அடிப்பதால், அவ் நேரத்தை பதுங்குகுழி நேரமாக பதிந்து வைத்திருந்தோம். தினமும் 5.45 இற்கே அதற்குள்ளோ, அல்லது அதற்கு அருகாமையிலோ ஆஜர் ஆகிவிடுவோம். "செல்" அடிக்கும்போது அனுப்பும் பொது சத்தம் தெளிவாக எமக்கு கேட்டுவிடும் அளவு து}ரத்திலேயே வசித்தால் உடனே பதுங்குகுழிக்குள் பாய்ந்து விடுவோம்.
வன்னியில் பங்கர்கள் தொடராக தான் அமைக்கப்படும். ஒரு பக்கத்தில் குதித்தால் வேறு எங்காவது போய் எழூந்து கொள்ளமுடியும். மேலும் தண்ணீர்பாயும் வாய்க்காலும் இருந்தால் அதுவும் ஒரு பதுங்குகுழி மாதிரி அவசரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. படித்த முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லு}ரியி;ல் கூட தொடரான பதுங்குழி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. சிலவற்றின் வடிவம் பாடசாலைப் பெயரைக் குறிக்கும் வண்ணம். MVC என்று அமைக்கப்பட்டும் இருந்தன.
பின் முல்லைச்சமர் நேரம் நாம் கனகராயன்குளத்துக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அதன் நிறைவின் பின் திரும்பி வீடு வரும்போது நாம் வெட்டிவைத்த பதுங்குகுழிகள் மீதும் மணலாற்றில் இருந்து அடித்த செல்கள் விழுந்திருந்தன. நாங்கள் அங்கு இருந்திருப்பின் அது புதைகுழிகளாகத் தான் இருந்திருக்கும் என்பதில் ஜயமில்லை. மேலும் நாம் அவதானித்த விடயம் யாதெனில் இராணுவம் செல் அடிக்கும் அதிகூடிய வீச்சு என்பது எமது வீட்டை அண்டியதாகத் தான் இருக்கவேண்டும். ஏனென்றால் எமது வீட்டிற்கு நேர் ஒத்த திசைகளில் தான் நிறைய வெடித்திருந்தன. அப்பால் ஒன்றும் இல்லை. பதுங்குகுழி வாழ்வு என்பது 97ம் ஆண்டு கார்த்திகை மாதம் வன்னியை விட்டு நாம் வெளியேறியவுடன் நிறைவுக்கு வந்து விட்டாலும் நினைவுகளின் ஒன்றித்தே இருக்கின்றது
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->